Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான பெண்கள் அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான பெண்கள் அச்சம்!

மும்பை: பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர்.

பால்தாக்கரேவை விமர்சித்து கருத்து தெரிவித்த ஷகீன் என்ற அந்த 21 வயது பெண்,போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார்.

அவரது மாமா நடத்தி வந்த கிளினிக் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல் காரணமாக ஷகீன் தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார்.

மேலும் தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அவர்,நடந்த சமபவம் தம்மை மிகுந்த அச்சத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும்,இனி ஃபேஸ்புக்கில் எழுதப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

[size="2"] [/size]

அதே சமயம் தாக்கரே குறித்து தாம் தெரிவித்த கருத்தில் குற்றம் ஏதுமில்லை என்றும், மிகச் சாதாரணமாகத்தான் தாம் அந்த கருத்தை போட்டதாகவும் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷகீன் தெரிவித்தார்.

இதேப்போன்று ஷகீன் கருத்துக்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் இதேப்போன்ற கருத்தையே தெரிவித்துள்ளார்.

முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற ஞாயிறன்று மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.

இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்...இறக்கிறார்கள்...அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த ஷகீனும்,அதற்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.vikatan.com/?nid=11294#cmt241

நமது அரசியல் வாதிகள் இந்த ரவுடி கூட்ட தக்கரேக்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள். மாவீரருக்கு எதாவது செய்ய வென்றால் "ஐயோ நமது சுதந்திரம் என்கிறார்கள்". எதையாவது விளங்கித்தான் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எதையாவது விளங்கி தான் எழுதுகின்றார்களா என்பதும் புரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற ஞாயிறன்று மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.[/size]

[size=4]இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்...இறக்கிறார்கள்...அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த ஷகீனும்,அதற்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.[/size]

பந்த்,கடையடைப்புகள் மூலம் ஒருநாடு எவ்வளவு வருமானத்தை இழக்கின்றது என்பது அடாவடிகளுக்கு தெரியாவா போகின்றது? இப்படியான பெண்கள் ஊருக்கு ஊர் உருவாக வேண்டும்.அதுசரி இயற்கை மரணத்திற்கும் கடையடைப்பு....பந்த் ??????????

  • கருத்துக்கள உறவுகள்

சிவ சேனா கட்சி கேக்க வில்லை மக்களாக மதித்து அதை செய்திருந்தார்கள் shiv seenavil இருந்து அழைப்பு விடப்படவில்லை

எங்களுடைய யாழ் பாண மக்கள் தான் முழு சுயநலமும் நிறைந்த மக்கள் என்பதற்காக மும்பை மக்களை அப்பிடி எண்ணி விடக்கூட மொழிப்பற்றும் மாநிலப்பற்றும் மதப்பற்றும் நிறைந்தவர்கள் யாழ்ப்பான மக்களை போல பதுன்கிற குணம் அவர்களிடம் இல்லை

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மக்களை சீர்திருத்த வேண்டியது சிவ சேனாவின் கடமை....

அடடா சிவசேனைக்கு சுயநலமே இல்லையாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமான சேவையை புறக்கணி என்று சொன்னால் அதில் ஏறிப்பயணம் செய்கின்ற எம்மவர்கள் எங்கே இன உணர்வும் தன்மானமும் ஊட்டி வளர்க்கப்பட்ட சிவ சேனா இளைஞர்களும் அதன் தொண்டர்களும் அவர்களுடன் இணைந்த மகராஷ்டிர மக்களும் எங்கே

  • கருத்துக்கள உறவுகள்

இது மக்களுடைய உணர்வு தங்கள் தலைவனுக்கு இறுதி மரியாதை செய்ய மனதில் வந்த எழுச்சி இது சிவ சேனா உருவாக்கிய புரட்சி.....

இதனால் உங்களுக்கு ஏன் இந்த வெகுட்சி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மக்களுடைய உணர்வு தங்கள் தலைவனுக்கு இறுதி மரியாதை செய்ய மனதில் வந்த எழுச்சி இது சிவ சேனா உருவாக்கிய புரட்சி.....

இதனால் உங்களுக்கு ஏன் இந்த வெகுட்சி?

அப்ப இனிமேல் எதிர்க்கருத்து,பதில்கருத்து ஒண்டுமே சொல்லக்கூடாது......எல்லாத்தையும் பார்த்து ஆமா போட்டுக்கொண்டிருக்கோணும் எண்டுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மகாராஸ்ராவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைக் காங்கிரஸ்அரசு தான் பதிலளிக்க வேண்டும்.

Edited by தூயவன்

இப்போது மகாராஸ்ராவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைக் காங்கிரஸ்அரசு தான் பதிலளிக்க வேண்டும்.

காங்கிரசை நாம் நியாயப்படுத்தவேண்டியதில்லை. காங்கிரசை நாம் நன்கு, தெளிவாக அறிவோம். அரசியல் விபச்சாரி காங்கிரஸ் மத்திய தேர்தல் முடியும் வரை கண்டு கொள்ளாது. தேவைப்பட்டால் வன்முறையாளர்களுடன் சேர்ந்து கொள்ளும்.

காங்கிரஸ், முத்துக்குமாரு இறந்தவுடன், கருணாநிதியை வைத்து அவசகால சட்டம் போடாமல், தமிழ் நாட்டில் அதை நிறை வேற்றுவித்தது. நிச்சயமாக காங்கிரசுக்கு தக்கரே இறந்தால் என்ன நடக்கும் என்பதும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிந்துதான் இருந்தது.

Edited by மல்லையூரான்

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண்கள் விவகாரத்தில் நடவடிக்கை

facebook_girls_001.jpg

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மும்பையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார். சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அச்சத்தினால்தான் இந்த கடையடைப்பு என்றும், மரியாதைக்காக அல்ல எனவும் சஹீன் தாதா என்ற பெண் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது தோழி ரேனு லைக் (LIKE) செய்துள்ளதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால் இருவரையும் விடுவித்தனர்.

இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு, மகாராஷ்டிரா முதல்வர் சவானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எனவே இந்த விவகாரம் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை இன்று தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.

facebook_girls_002.jpg

http://portonovotime...-post_7060.html

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவின் கருத்துச் சுதந்திரம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.