Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சிறிய சிந்தனை

Featured Replies

[size=4]வாழ்க்கையில் சில விடயங்களை/கருத்துக்களை ஆழமாக பற்றியிருப்போம். ஆனால் சில நேரங்களில் அந்த விடயங்களைப் பற்றிய பார்வை மாறுவதுண்டு. திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பார்ப்பனர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம்தான் நேற்று வரை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விடயம் என்னை சிந்திக்க வைத்துவிட்டது.என்னுடன் வேலை பார்க்கும் சக நண்பன் அலுவல் விடயமாக வேறு நாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவனது மேனஜர் "சிறிலங்கா ஏர்லைன்ஸ்"இல் விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார். ஆனால் அவனோ நான் அந்த விமானத்தில் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். பிறகு அதே செலவில் வேறு ஒரு விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். நான் அவனிடம் "ஆன் சைட்" போகும்போது ஏன்டா எந்த பிரச்சனை என்று கேட்டேன். [/size]

[size=1][size=4]அதற்க்கு அவன் "பாஸ் அவனுக நம்ம தமிழனை கொன்றவனுங்க பாஸ் அதனால் தான என்றான்". [/size][/size]

[size=1][size=4]நான் கூட இப்படி சொல்லியிருப்பேனா என்றால் சந்தேகம் தான். அதிலிருந்து அவன்மேல் நான் கொண்டிருந்த மதிப்பு அதிகமாகி விட்டது. அவன் பிறப்பால் ஒரு பிராமணன். மேலும் அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்.அவனிடமிருந் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த விடயத்தை கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மற்ற இரண்டு பேர் தமிழ் இந்துக்கள். இருவரும் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஈழப் பிரச்சனையில் சிறிதும் ஈடுபாடு இல்லாதவர்கள். தமிழனாக இல்லை சக மனிதனாகக் கூட அந்த பிரச்னையை அணுக விரும்பாதவர்கள். அந்த விடயங்களை காது கொடுத்துக் கூட கேட்க விரும்பாதவர்கள். பிராமணன் என்பதால் தமிழ் பற்றுள்ள அவனை தூற்றுவதா இல்லை தமிழ் இந்துக்கள் என்பதால் ஜட உணர்வு கொண்டவர்களை போற்றுவதா? இருவரும் ஒரே சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். பொருளாதார ரீதியாக ஒரே சமூக அந்தஸ்து .இருந்தாலும் புரிதலிலும் அறிதலிலும் ஏகப்பட்ட முரண்பாடு. என்ன காரணமாக இருக்கும் சிந்தித்ததில் இருவருக்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு பிராமணனாக இருந்தாலும் அவன் படித்தது சென்னை மாநகராட்சி பள்ளியில். மற்ற இருவரும் படித்தது கான்வென்டில். [/size][/size]

[size=1][size=4]காலம் கடந்தாலும் அதே திராவிட சித்தாந்தத்தை பிடித்துக் கொண்டு கான்வென்டில் பிள்ளைகளை படிக்க வைத்து இன மொழி உணர்வற்றவர்களாய் ஒரு சந்ததியினரை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலம் கடந்தால் அடுத்த தலைமுறையினர் பார்ப்பன தமிழர்களை விட இன உணர்வற்றவர்களாக இருப்பார்கள். நாம் பார்ப்பனர்களை தூற்ற தூற்ற அவர்கள் நமக்கு ஒருபடி மேலே சென்று நம்மை அழிப்பதிலேயே கவனமாக இருப்பார். தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்லுமாறு ஒரு பொதுக் கருத்தை உருவாக்க தவறி விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படி எழுதுவதினால் நான் ஆரியர்களை ஆதரித்து அவர்கள் செய்த தவறினை மறைக்க முயலுகிறேன் என்று எண்ண வேண்டாம். ஒரு சின்ன சிந்தனை தான்... [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

Super

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நண்பா

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பிராமண பேராசிரியர் கனடாவில் இருக்கிறார். எங்களுக்கு அவர்தான் ஒருமுறை பட்டறையில் ஆரிய ஆதிக்கம் எப்படித் தமிழ் மொழியை அழித்தது என்று விரிவாகக் கூறினார்.அவரைப் போல் பல ஆரிய மொழியியலாளர்கள் தமிழின் தொன்மை கண்டு தமிழை முதல் மொழியென நிறுவியுள்ளனர். தமிழனுக்கு எதிரி தமிழனேயன்ரி வேறு யாரும் இல்லை.

  • தொடங்கியவர்

[size=4]சுண்டல், நந்தன் , சுமேரியர் உங்களது கருத்துகளுக்கு நன்றி. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நல்ல சிந்தனை இளம்பிறையன். ஈழப்பிரச்சினைக்கும் பிராமணர்/திராவிடர் பிரச்சினைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனால் பிராமணத் தலைவர்களில் கணிசமானவர்கள் இந்திய தேசிய அபிமானிகள். தமிழரின் அழிவிலும் அதைப் பேணிக்காக்க நினைப்பவர்கள். மற்றும்படி வேறு ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை, ஆதித்ய இளம்பிறையன்.

இசைக் கலைஞன் கூறியதே... எனது கருத்தாகும்.

உண்மையிலேயே நல்ல சிந்தனை இளம்பிறையன். ஈழப்பிரச்சினைக்கும் பிராமணர்/திராவிடர் பிரச்சினைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனால் பிராமணத் தலைவர்களில் கணிசமானவர்கள் இந்திய தேசிய அபிமானிகள். தமிழரின் அழிவிலும் அதைப் பேணிக்காக்க நினைப்பவர்கள். மற்றும்படி வேறு ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை, ஆதித்ய இளம்பிறையன்.

இசைக் கலைஞன் கூறியதே... எனது கருத்தாகும்.

இதே நிலைதான்

  • தொடங்கியவர்

[size=4]உங்கள் கருத்துகளுக்கு நன்றி இசைக்கலைஞன், தமிழ் சிறி மற்றும் உடையார்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.