Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு!

Featured Replies

[size=5] இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு![/size]

அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இதுவரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிமாரே கையாண்டு வந்தபோதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களைக் கையாளவுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும்போது இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ள வேளையில் ஆசிய விவகாரங்களை கையாள்வதில் அனுபவமுடையவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை விவகாரங்களை கையாள நியமிக்கப்படும் விசேட குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்குமெனவும், அதற்கமைய அடுத்த வருட முற்பகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவுக்கு அழைத்து பேச்சுகளை நடத்துமென்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதேசமயம், அமெரிக்க அரசின் புதிய மாற்றங்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் இலங்கை அரசும் இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் அமெரிக்க அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புகொண்டு அக்கறையாகச் செயற்பட இலங்கை அரசுதான் காரணம். அதற்காக இலங்கை அரசுக்கு நாம் நன்றி சொல்லவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேணிவரும் தொடர்பாடல்கள் மற்றும் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

அமெரிக்க அரசு எங்களுடன் தொடர்பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பேணி வருகிறது. அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதி எங்களுடன் நடத்திய சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது.

இப்படி எங்களுடன் அமெரிக்க அரசு தொடர்பாடல்களை பேண இலங்கை அரசுதான் காரணம். அதற்காக அவர்களுக்கு நாம் நன்றியைத்தான் சொல்லவேண்டும்.

தமிழர் பிரச்சினை தீர்வில் இந்த அரசு காட்டிவரும் கபடப்போக்கு, நேர்மையற்ற தன்மை என்பவற்றை அமெரிக்கா நன்கு புரிந்து கொண்டுள்ளது.

இன்னும் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அமெரிக்கா எமக்கு ஆதரவாக செயற்படும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசின் ஏமாற்றுப்போக்கை இன்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

11/24/2012 4:47:38 PM

இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அய்யா...உங்கடை குழுவிலை சிங்கள அரசின் சார்பாக சுமந்திரன் அய்யா பங்கு பற்றுறாராமே...

  • கருத்துக்கள உறவுகள்

Barack-Obama_2011_150.jpg

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது இலங்கை விவகாரங்களை கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிகளே கையாண்டு வந்த போதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களை கையாளவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும் போது இராஜாங்கத்திணைக்களத்தின் உயர் மட்டப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ள வேளையில் ஆசிய விவகாரங்களை கையாள்வதில் அனுபவமுடையவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம், அமெரிக்க அரசின் புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசும் இராஜாந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக அறிய முடிகிறது.

தமிழர் பிரச்சனைக்கான தீர்வில் அமெரிக்க அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு அக்கறையாகச் செயற்பட இலங்கை அரசு தான் காரணம். அதற்காக இலங்கை அரசுக்கு தாம் நன்றி சொல்ல வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அமெரிக்கா எமக்கு ஆதரவாக செயற்படும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், அரசின் ஏமாற்றுப் போக்கை இன்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

அப்பாடா இந்த ஒரு புதுகதையோட இன்னும் கொஞ்ச காலத்துக்கு வண்டியை ஓட்டிடலாம்.

[size=5]அமெரிக்கா தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கு முன்பதாக இந்த வருட தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவே கூட்டமைப்புடன் அமெரிக்கா ஆராயவுள்ளது.[/size]

[size=4]2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை இலங்கை பற்றி ஓர் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வருட முற்பகுதியில் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்கா அதிகாரிகளுடனான எமது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இது அமையும் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் கடந்த வருடம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111908

[size=5]முதலில் புலிகள் மீதான தடைகளை நீக்க வேண்டும்![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.