Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம்.

45307_3546133226946_1056484947_n.jpg

73857_3546130146869_1946330845_n.jpg

484980_3546131666907_570533919_n.jpg

223997_3546134106968_945402448_n.jpg

149160_3546128746834_566177782_n.jpg

நன்றி முகநூல்.

இதேவேளை கோப்பாயில் வைத்து யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஒரு சிங்கள மாணவர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதை அடுத்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மாணவர் யாழ் வைத்தியசாலையில் சிங்களப் பொல்லிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இதன் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை. ஆனால் இப்படியான தாக்குதல்கள் எம் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான கண்டனங்களை திசைதிருப்ப மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். எனவே இவ்வ்வாறான தாக்குதல்கள் செய்திகள் குறித்து மக்களும் மாணவர்களும் விழிப்போடு இருக்க வேண்டும்..! மக்கள் பொறுமையோடு மதிநுட்பத்தோடு செயற்பட்டு உலக அனுதாபத்தை எமதாக்கிக் கொண்டு அடக்குமுறைகளைத் தகர்க்க வேண்டும்.

  • Replies 110
  • Views 7.6k
  • Created
  • Last Reply

நன்றி நெடுக்ஸ் அண்ணா, இவற்றை பார்க்கும் போது உணர்வுபூர்வமாக இருக்கிறது.

இராணுவ கெடுபிடிகளின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ஏனையோரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உண்மையில் எம்மக்களின் துணிவை காட்டுகிறது.

இதற்கும் புலம்பெயர் தமிழர்கள் காசு கொடுத்தார்கள் என்று யாரும் சொல்லாமல் விட்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிர்மலன் எனும் பெயரில் எழுதுபவர் குமரன் பத்மனாதனூடாக சிங்களப் பேரினவாதம் செய்யும் உளவியல்ப் போரில் ஈடுபட்டிருப்பவர். இதே தளத்தில் முன்னரும் பலமுறை கே. பீ எனும் துரோகியின் நடவடிக்கைகளைப் புகழ்ந்தும் அவன் நடத்தும் சிங்கள அரசின் கண்துடைப்பு செயற்பாடுகளுக்காகவும் நாங்கள் உதவ வேண்டும் என்று நிதி கோரியும் வந்தவர். ஆகவே இவர் எங்கிருந்து வருகிறார், இவரது உண்மையான நோக்கம் என்னவென்பது உறுதியாக விட்ட நிலையிலிருந்துதான் இவர் இந்தத் தலைப்பில் முன்வைக்கும் கருத்துக்களும் பார்க்கப்பட வேண்டும்.

விடுதலைப்போர் ஆரம்பமாக முன்னரும், போர் நடந்த காலத்திலும், போர் முடிந்த இந்தக் காலத்திலும் சிங்களப் பேரினவாதம் என்ன சொல்லி வருகிறது?? அதாவது, "தமிழர்கள் யாரும் தனிநாடோ அல்லது சுதந்திரமோ கேட்கவில்லை, வெறும் ஓரிரு பேர்தான் கத்துகிறார்கள், தமிழர்களுக்குத் தேவையானவற்றை நாம் செய்து கொடுக்கிறோம், இங்கே தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினை. அந்தப் பயங்கரவாதப் பிரச்சினையைக் கூட ஒரு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை மூலம் 2009 இல் நாம் முடிவுக்குக் கொண்டுவந்து தமிழர்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினோம்".

இவர் என்ன சொல்லுகிறார்? "யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. அங்கே மக்கள் அமைதியாகவும் சந்தோசமகாவும் இருக்கிறார்கள். அவர்கள் போர் முடிவடைந்ததற்காகவும், புலிகள் அழிக்கப்பட்டதற்காகவும் சந்தோஷப்படுகிறார்கள். அவர்களுக்கு மாவீரர் தினமென்று ஒன்று இருப்பதே தெரியாது. புலத்திலிருக்கும் சில இனவாதிகள்தான் அங்கே பணம் அனுப்பி அங்கே அமைதியாக இருக்கும் தமிழ் மக்களைக் குழப்புவதற்கு சில புல்லுருவிகளைத் தூண்டுகிறார்கள். இதனால் தேனும் பாலும் ஓடும் தமிழர் இடங்களில் வன்முறை நடைபெறுகிறது. பல்கலைக் கழகத்தில் வெறும் ஒன்று அல்லது இரண்டு மாணவர்களே ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அதைக்கூட காவல்த்துறையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றைச் செய்ததன் மூலம் மக்களுக்கு நடக்கவிருந்த புலம்பெயர் புல்லுருவிகளின் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தில் இரு மாணவர்களால் நடத்தப்பட்டதைத்தவிர வேறு எங்கிலும் நடக்கவில்லை".

இப்போது புரிகிறதா இவரின் நோக்கமும், இவர் யார் விட்ட அம்பென்பதும்???

[size=4]வலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்[/size]

[size=4][செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-11-29 10:31:34| யாழ்ப்பாணம்][/size]

[size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார். [/size]

[size=4]பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் படையினர் தடுத்து நிறுத்திய வேளை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வலம்புரிச் செய்தியாளர் சாளினை அழைத்த படையினர், அவரிடமிருந்து புகைப் படக் கருவியை கேட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர் வைத்திருந்த செய்தியாளருக்கான அடையாள அட்டையையும் கிழித்தெறிந்தனர். இச் சம்பவத்தின்போது வேறு சில ஊடகவியலாளர்களும் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://valampurii.co...ws.php?ID=35704[/size]

அகோதா,

நீங்கள் இப்படியெல்லாம் ஆதாரத்துடன் கருத்தெழுதினால் அவர் என்னதான் செய்வது. தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதை அவர் அப்படியே இங்கு வந்து ஒப்புவிக்கிறார். அவரால் சொந்தமாக யோசிக்க முடியாது. அப்படி முடிந்தால் அவர் அங்கிருக்க முடியாது. எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு அவர் சிங்கள எசமானர்களுக்காக வக்காலத்து வாங்க நீங்களோ இலகுவாக அவரின் முகத்திரையைக் கிழித்து விடுகிறீர்கள். இனி முடியாது...அழுதுடுவேன்...!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நான் எதிர்பார்த்ததுதான்.

ஏனெனில் நான் பொய்தான் எழுதுகின்றேன் என உங்களில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். அப்படியே நினைத்துக் கொண்டு இருங்கள். அதில் இருந்து இம்மியளவும் பிசகாதீர்கள்.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. இங்கே நான் எழுதுவது அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

துளசி, நான் எழுதியதற்கு தாராளமாக நீங்கள் பதிலடி கொடுக்கலாம். ஏனெனில் நான் கூறுவது பொய் என்றால் என்றோ ஒரு நாளைக்கு அது பொய்தான் என்று நிரூபணம் ஆகும்.

ஏனெனில், உண்மைகள் ஒருபோதும் சாகா வரம் கொண்டவை.

சரி விடுங்கள்,

நீங்கள் சொன்னதுப்போலவே யாழ்ப்பாணத்தில் நடந்ததாகக்ச் சொல்லப்பட்டவையெல்லாம் வெறும் பொய்க்கதைகள். புலம்பெயர் புல்லுருவிகளின் பணத்தால் உந்தப்பட்ட இரு மாணவர்களும், ஒரு ஊடகவியலாளரும் சேர்ந்து போட்ட நடகங்களே அவை. இங்கே இணைகப்பட்டவையெல்லாம் போட்டோ ஷொப்பின் மூலம் வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள். யாழ்ப் பலகலைக் கழகத்தில் மாவீரர் தினம் நடக்கவுமில்லை, பல்கலைக் கழகத்தினுள் பொலீசாரோ அல்லது இராணுவ மனிதாபிமானப் படையோ போகவில்லை என்றே வைத்துக்கொள்லலாம்.

அப்படியானால் இந்த ஊடகவியலாளருக்கும் புலம்பெயர் தமிழ் இனவாதிகள்தான் பணம் கொடுத்தார்களா??

Jaffna University Tamil students boycott classes

[size=3]_60398400_60398399.jpg[size=1]By Charles Haviland[/size]BBC News, Colombo[/size]

[size=3]_64463543_lankaprotest.jpgThe campus was the scene of the worst political disturbances since the war ended in 2009[/size]Continue reading the main story

Related Stories

[size=5]Students at Jaffna University in northern Sri Lanka have started a two-day boycott of classes after clashes with security forces on Wednesday.

They say they do not feel safe after several were beaten and injured in the worst political disturbances since the civil war ended in 2009.

Security forces entered the university, disrupting students marking a commemoration of dead rebel fighters.

The army said it had to restrain people who were throwing stones.

But some staff at the university accused the security forces of starting the violence, saying they believe the police baton-charged a group of students who had begun a planned march through the streets.

Only after that did some students throw stones, they said.

One staff member told the BBC the aftermath of the clashes was "like a battlefield". And on Thursday, reports said there was little activity on the campus.

There were Sinhala and Muslim as well as Tamil students on the campus, one staff member emphasised.

Tension in the north

Across the former war zone in northern and eastern Sri Lanka there is a higher military presence than usual.

Asked by the BBC why the students in Jaffna should not be allowed to march in the streets, Jaffna's military commander, Maj-Gen Mahinda Hathurusinghe, said the students have been "categorically told not to" because "they would become violent".

He said that "for the betterment of the country", "Martyrs' Day" - which commemorates dead Tamil Tiger fighters - should not be observed by people.

The tensions arose as some students marked the death of Tamil Tiger guerrillas at small candle-lit memorials, while well-produced pro-Tiger posters appeared in various parts of the formerly Tiger-held territory.

Since the end of the war this had hardly happened within Sri Lanka, where the Tigers and their separatist ideology are strictly banned - although Tiger sympathisers in the diaspora call 27 November "Martyrs' Day" and mark it as such.

The clashes point to simmering tensions three-and-a-half years after the mainly Sinhalese security forces crushed the Tamil separatists, and as the army maintains tight control over the whole of the north where the war was fought most bitterly.

In a Jaffna suburb, a petrol-bomb was thrown at the offices of a small Tamil political party on Thursday. There were no reports of injuries. It is unclear who did it or whether it was related to the campus trouble.

Sri Lanka's Jaffna sees clashes over Tamil rebel remembrance

_64447102_jaffna_univ_022.jpgWitnesses says students were attacked by security forcesContinue reading the main story

Related Stories[/size]

[size=5]Students and security forces have clashed in Jaffna in northern Sri Lanka in the worst political disturbances since civil war ended in 2009.

A Tamil politician accused the military of injuring a newspaper editor and several students.

The army said it had to restrain people who were throwing stones.

Security forces had entered Jaffna University, disrupting students who were marking "Martyrs' Day", which commemorates dead Tamil Tiger fighters.

The BBC's Charles Haviland in Colombo says these were the biggest overtly political disturbances in the north since the war ended more than three years ago.

'Hit twice'

A Tamil opposition parliamentarian and newspaper owner, E Saravanapavan, told the BBC the army had attacked Jaffna University students as they tried to emerge from their campus to demonstrate against the security forces, a day after the latter entered the university campus and surrounded hostels.

"Four boys were arrested and the army were hitting others. When professors came out, three were released; one was held till later and the army said he was not a student, but he was part of the university media."

One news website showed a picture of a student lying on the ground, apparently being set upon by the police.

Mr Saravanapavan said that on Tuesday night, the editor of his Jaffna paper was beaten by plain-clothes soldiers while trying to cover the unrest and had to be admitted to hospital.

"Army people in civilian dress were holding a guy by the neck of his shirt, then they punched him against the wall. I saw it was the editor of Uthayan, T Premananth. He was hit twice."

'Good job'

But the Jaffna army commander, Mahinda Hathurusinghe, said the MP had been "paid to spread rumours against the military" and that the security forces had acted to stop students throwing stones and bottles:

"The army is doing a good job. The people are peace-loving but there are some disgruntled elements. We don't have a problem with students, only with a section of the students, people with ulterior motives."

A university teacher said on Twitter that it was the other way round, with students "attacked the moment they stepped out".

The tensions arose as some students marked the death of Tamil Tiger guerrillas at small candle-lit memorials, while well-produced pro-Tiger posters appeared in various parts of the formerly Tiger-held territory.

Our correspondent says since the end of the war this had hardly happened within Sri Lanka, where the Tigers and their separatist ideology are strictly banned - although Tiger sympathisers in the diaspora call 27 November "Martyrs' Day" and mark it as such.

The clashes point to simmering tensions three-and-a-half years after the mainly Sinhalese security forces crushed the Tamil separatists, and as the army maintains tight control over the whole of the north where the war was fought most bitterly.

US Concerned About Attack on Sri Lanka Students

byline_ap.gif

More Sharing ServicesShare

Share on facebook_likeEmail

Print

Text Size

-/+

By By BHARATHA MALLAWARACHI Associated Press

COLOMBO, Sri Lanka November 29, 2012 (AP)

The United States expressed concern Thursday about attacks on Sri Lankan university students during a protest in a former war zone in the north of the country.

At least seven students were hurt in Wednesday's clashes seen as the worst political disturbance in the area since the end of Sri Lanka's civil war in 2009.

A statement from the U.S. Embassy in Colombo said "it is greatly concerned about reports of attacks on students in Jaffna. We call upon authorities to exercise restraint and respect peaceful demonstration."

The clash erupted as the students were protesting a search of their university a day earlier by army troops and police in the northern district of Jaffna, a former war zone which is the cultural heartland of minority Tamils. Police denied anyone was hurt.

A local journalist said troops and police searched the university for pro-rebel propaganda on Tuesday after students reportedly tried to honor rebels who died in the civil war.

During the nearly three-decade-long civil war, the Tamil Tigers used to commemorate their fallen comrades on Nov. 27, a day after their leader's birthday.

E. Saravanapavan, a Tamil lawmaker from Jaffna, accused the troops and police of triggering the clash by searching the university and later attacking the students' demonstration.

Military spokesman Brig. Ruwan Wanigasooriya denied any army involvement in the search and clash. He said the "army has been maintaining a very cordial relationship with people of Jaffna and we will continue that relationship in spite of attempts by some people to disrupt it."

Saravanapavan said the army should stay in its barracks, adding the "army need not be there as the normalcy has returned. Let the police handle the work and ensure law and order."

He called for greater demilitarization of the northern region.

Since the war's end, the government has maintained a heavy military presence in the north despite international calls for a reduction of troops there. International human rights groups and countries including U.S. have urged Sri Lanka to demilitarize the north.

Sri Lanka has rejected those calls, saying such a move would undermine national security.

The civil war ended after the government troops defeated the Tamil Tiger rebels who were fighting for a separate state for Tamils in the country's north and east.

Both the government forces and rebels have been accused of serious human rights violations during the conflict.

Tamil students in Sri Lanka clash with troops

facebook_logo.jpg blogger_logo.jpg gmail_logo.jpg | pdf_icon.png email_famfamfam.png print.gif | ico-fonts.png A A

Thursday 29 November 2012

Last Update 28 November 2012 10:35 pm

COLOMBO: Students in Sri Lanka’s former war zone clashed with troops and police yesterday over celebrations to commemorate defeated Tamil Tiger guerrillas, residents said.

At least 20 undergraduates were injured when troops and police beat up stone-pelting students outside Jaffna university, a witness said.

It was first major clash since security forces crushed Tamil rebels in May 2009.

Police and troops had stormed university dormitories on Tuesday searching for Tamil Tiger propaganda after students tried to mark “heroes’ week” — the last week of November when Tiger guerrillas used to commemorate fallen comrades.

“The students gathered inside the university and came out to protest the military action (of Tuesday) when fighting erupted (on Wednesday),” a witness said, asking not to be identified.

He said the vehicle of a local Tamil legislator was also damaged as he tried to stop the violence.

There was no immediate comment from the military, but the AdaDerana news website published photos soon after Tuesday’s military raid of the campus along with one image of a student on the ground being beaten by three policemen.

Tuesday’s incident degenerated into a bigger confrontation yesterday as students protested at the military intrusion into their hostels, leaving more than 20 students injured, witnesses said.

Sri Lanka lifted a state of emergency in August last year after defeating Tamil Tigers in May 2009, but heavily armed troops and paramilitary police units are often deployed to support police.

Jaffna, the cultural capital of the island’s ethnic Tamil minority, was once run as a de-facto separate state by the Tigers.

The latest clashes between the troops and students came amid international calls to de-militarize Jaffna, 400 kilometers (250 miles) north of Colombo, and ease restrictions on the civilian population.

Tiger rebels had led a 37-year-long guerrilla war for an independent Tamil homeland in a campaign that claimed more than 100,000 lives, according to UN estimates.[/size]

Edited by ragunathan

நிர்மலன் என்பது ஒரு பதவி பெயர் போல் இருக்கிறது. முன்னைய நிர்மலன் ஆக இருந்தவர் பதவி உயர்வு/இறக்கம் கிடைத்து மாறியிருக்கலாம். இந்த புதிய நிர்மலன் ஆக இருப்பர் உதவாது ( hopeless ). :lol:

பழைய நிர்மலன் ஆக இருந்தவர் திரும்பி வந்தால் தேவலை. :icon_idea:

[size=3]

[size=4]மாணவர்களுடன் சேர்ந்து அடுத்த வருடம் தாங்களும் தங்களுக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக தீபமேற்றப் போவதாக யாழ் பலகலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க தலைவரான விரிவுரையாளர் இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.[/size][/size][size=3]

[size=4]அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121130_jaffuniteacher.shtml

பல்கலைக்கழக கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்கே உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நியாயமான கேள்விகள்தான். பாதை மூடுவதற்கு முன்னர் புலிகளில் வந்து இணையுமாறு வன்னிக்கு வருமாறு நாள்தோறும் விடப்பட்ட அழைப்புகளை மறுத்து இராணுவத்துடன் அனுசரித்து இருக்கலாம் என்று இருந்தது வரலாறு. இன்று அழிவுகளின் பின் என்னவோ செய்ய முற்படுகின்றனர். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் இப்போது ஈடுபடுகின்றவர்கள் புதிய இளம் தலைமுறையினர் போலுள்ளது. இருந்தபோதும் எமது சமூகத்தை சிதைக்கும் மையவாதக் கருப்பைகளான யாழ்பல்களைக் கழகம் நல்லூர் கோயில் போன்ற ஆதிக்கத் தலமை அடயாளங்களில் இருந்து ஒட்டுமொத்த ஈழத்துக்குமான தேசீயஇனவிடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கும் இடங்கள் எல்லாம் கழுவிற தண்ணியில் நழுவிற மீனாக சிங்களத்தில் இருந்து தப்பிவிடும். வறுமைப்பட்ட மக்கள் காவுகொடுக்கப்படுவார்கள். என்னுமொரு முள்ளிவாய்காலுக்கு பூஜைபோடுகின்றார்கள். அதற்கு புலம்பெயர்ந்த தேசீயவாதிகள் சாம்பிராணி போட்டு ஊதிவிடப்பார்க்கின்றார்கள். எமது சமூகத்தை சிதைக்கும் கருத்தளத்தில் இருந்து இனவிடுதலைப்போராட்டம் ஒருபோதும் சாத்தியமில்லை. அஜித்தின் மங்காத்தா கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது விசயின் துப்பாக்கி கட்டவுட்டுக்கு பால் ஊத்துவது எல்லாம் இளைஞர்களின் ஒரு துடிப்பு. அதுபோல் ராணுவ அடக்குமுறையின் மத்தியில் இயக்கப்பாட்டை போட்டு குத்தாட்டம் போடுவது மாவீரர் தினத்துக்கு விளக்கை கொளுத்தி விடுவதும் ஒரு துடிப்பு. இளங்கன்று பயமறியாது என்பார்கள். புலத்து விசிலடிச்சான் தேசீயவாதிகளுக்கு இது ஒரு வாய்பு. பப்பாசி மரத்தில் ஏத்திவிடுவது விழுந்து முறிந்து செத்தால் இவர்களுக்கு என்ன நஸ்டம்.

[size=4]யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுசரிக்க முயன்ற மாணவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பகிரங்க மோதல் சிவில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான மனோபலத்தை அளிக்கவல்லது என்கிறார் யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நித்யானந்தன் [/size];

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121129_jafnaunistudents.shtml

[size=4]இன்றைய உலக அணுகுமுறை எவ்வாறு உள்ளது? எனக்கேட்டால் அது அமெரிக்கா ஜோர்ஜ் புஸ் இளையவர் தாண்டிய ஒரு ஒபாமா காலத்தில் நிற்கின்றது. [/size]

[size=1]

[size=4]ஜோர்ஜ் புஸ் இளையவர் காலத்தில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என முன்னெடுக்கப்பட்டது. அது பல வழிகளிலும் எதையும் சாதிக்காத நிலையில் இன்று ஒபாமா 'அரபு எழுச்சியை' ஆதரித்தமை மூலம் மக்கள் போராட்டத்திற்கு நியாயமான மனித உரிமை போராட்டத்திற்கு ஆதரவாய் [/size][size=4]நிற்கிறார். [/size][/size]

[size=1]

[size=4]தூ[/size][size=4]னீ [/size][size=4]சியாவில் வீதியில் பழங்களை விற்கும் சிறுவன் கொல்லப்பட்டது காரணமாக ஆரம்பான புரட்சி இன்று அமெரிக்க ஆதரவு நாடான எகிப்திலேயே இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வர அனுமதித்துள்ளது. நாற்பது வருடங்களாக ஆண்ட கடாபி - இன்று இல்லை. [/size][/size]

[size=1]

[size=4]எனவே யாழ் மாணவர் போராட்டத்தை இன்றை ஒபாமா அரசு 'அவதானிப்பது' என்பது ஒரு வித்தியாசமான காலத்தில் கூறப்படு செய்தி. [/size][/size]

[size=5]புலம்பெயர்ந்த மக்கள் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருவது சரி.[/size]

[size=1]

[size=4]#1: அந்த மக்கள் ஆதரவு தாருங்கள் என கேட்கிறார்கள், எனவே ஆதரவு தருவது எமது தார்மீக கடமை [/size][/size][size=1]

[size=4]#2 : இந்த ஆதரவு முழுக்க முழுக்க சனநாயக பண்புகளுக்கு அமைவானது [/size][/size][size=1]

[size=4]#3: இது ஒரு அடிப்படை மனித உரிமை போராட்டம் [/size][/size][size=1]

[size=4]#4 : இன்று புலிகள் இல்லை ஆனால் இராணுவம் அப்படியே ஆக்கிரமித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அதானால் மக்கள் அடக்குமுறைக்குள் அடக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர்[/size][/size][size=1]

[size=4]#5 : சர்வதேச கவனத்தை ஈர்ப்பது மூலம் மட்டுமே அந்த மக்களை காப்பாற்ற முடியும் [/size][/size]

அஜித்தின் மங்காத்தா கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது விசயின் துப்பாக்கி கட்டவுட்டுக்கு பால் ஊத்துவது எல்லாம் இளைஞர்களின் ஒரு துடிப்பு.

காலம் கடந்தாலும் கட்அவிட்டுகள் வைத்து பால் வார்ப்பித்தது என்ன தேவைக்கா என்பதை வெளிப்படையாக கூறியிருப்பதில் சந்தோசமே.

பள்ளியை தவறவிட்டுவிட்ட மாணவர்களை இலகுவில் வாங்கி, கட்அவிட்டுகளுக்கு பால் வார்ப்பிக்கலாம். ஆனால் அது பலகலைகழகத்து மாணவர்களிடம் எடுபடாது அகையால்தான் அவர்களை ஆமியை போட்டு அடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இரண்டு கூட்டத்தையும் ஒன்றாக்குவது சில உறவுகளுக்கு K.P ஆல் கொடுக்கப்பட்ட வேலை.

பலகலைகழகம் செல்ல முடியாமல் போய்விட்ட இளைஞர்களின் எதிர் காலத்துடன் விளையாடமல், K.P. ,தேவானந்தா போன்றோர் அவர்களுக்கு செய்ய எதாவது ஒரு தொழில் அரசிடம் கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம்.

598530_447842588605323_99305201_n.jpg

[size=4]சிங்கள அரசின் மாணவர்கள் மீதான தாக்குதல் இவர்கள் எந்த நல்லிணக்கமும் கொண்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் எமக்கு காட்டி நிற்கின்றது. [/size]

[size=1][size=4]இன்று கூட்டமைப்பினர் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐ.நா.பிரதிநிகளிடம் 'சர்வதேச சுயாதீன விசாரணையை ' கோரியுள்ளனர். மாணவர்கள் மீதான தாக்குதல் இந்த அணுகுமுறையை அதன் தேவையை வி[/size][/size][size=4]ரை[/size]வுபடுத்தி நிற்கின்றது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்விகள்தான். பாதை மூடுவதற்கு முன்னர் புலிகளில் வந்து இணையுமாறு வன்னிக்கு வருமாறு நாள்தோறும் விடப்பட்ட அழைப்புகளை மறுத்து இராணுவத்துடன் அனுசரித்து இருக்கலாம் என்று இருந்தது வரலாறு. இன்று அழிவுகளின் பின் என்னவோ செய்ய முற்படுகின்றனர். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் இப்போது ஈடுபடுகின்றவர்கள் புதிய இளம் தலைமுறையினர் போலுள்ளது. இருந்தபோதும் எமது சமூகத்தை சிதைக்கும் மையவாதக் கருப்பைகளான யாழ்பல்களைக் கழகம் நல்லூர் கோயில் போன்ற ஆதிக்கத் தலமை அடயாளங்களில் இருந்து ஒட்டுமொத்த ஈழத்துக்குமான தேசீயஇனவிடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கும் இடங்கள் எல்லாம் கழுவிற தண்ணியில் நழுவிற மீனாக சிங்களத்தில் இருந்து தப்பிவிடும். வறுமைப்பட்ட மக்கள் காவுகொடுக்கப்படுவார்கள். என்னுமொரு முள்ளிவாய்காலுக்கு பூஜைபோடுகின்றார்கள். அதற்கு புலம்பெயர்ந்த தேசீயவாதிகள் சாம்பிராணி போட்டு ஊதிவிடப்பார்க்கின்றார்கள். எமது சமூகத்தை சிதைக்கும் கருத்தளத்தில் இருந்து இனவிடுதலைப்போராட்டம் ஒருபோதும் சாத்தியமில்லை. அஜித்தின் மங்காத்தா கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது விசயின் துப்பாக்கி கட்டவுட்டுக்கு பால் ஊத்துவது எல்லாம் இளைஞர்களின் ஒரு துடிப்பு. அதுபோல் ராணுவ அடக்குமுறையின் மத்தியில் இயக்கப்பாட்டை போட்டு குத்தாட்டம் போடுவது மாவீரர் தினத்துக்கு விளக்கை கொளுத்தி விடுவதும் ஒரு துடிப்பு. இளங்கன்று பயமறியாது என்பார்கள். புலத்து விசிலடிச்சான் தேசீயவாதிகளுக்கு இது ஒரு வாய்பு. பப்பாசி மரத்தில் ஏத்திவிடுவது விழுந்து முறிந்து செத்தால் இவர்களுக்கு என்ன நஸ்டம்.

இப்ப நீங்க புதிசா என்ன சொல்லவாறீங்க.. ஈபிடிபி ஒட்டுக்குழு சொல்லுறதைத் தானே நீங்களும் சொல்லுறீங்க..

டக்கிளஸ் தேவானந்தா உட்பட நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிஞ்சு கொள்ளனும். தமிழர்கள் ஆயுதம் தூக்கினால் என்ன அமைதியாய் கிடந்தால் என்ன.. விஜய்க்கு பாலாபிசேகம் செய்து கொண்டு சும்மா கிடந்தால் என்ன அஜித்துக்கு கட்டவுட் வைத்தால் என்ன.. சிங்களக் குமரிகளோடு கூத்தடித்தால் என்ன.. சிங்களத்தின் பேரினவாதக் கொள்கையின் கீழ் சிறீலங்கா ஒட்டுமொத்தமாக சிங்கள பெளத்த நாடாகும் வரை.. சிங்கள இனம் சிறீலங்காவின் அனைத்துப் பகுதியிலும் பெரும்பான்மை பெறும் வரை.. தமிழர்கள் அழிக்கப்படுவார்கள். அதன் பின்னரும் தமிழர்கள் சுத்திகரிக்கப்படுவார்கள்.

முள்ளிவாய்க்கால் உலகம் அறிய நடந்தது. உலகம் அறியாமல் மலையகத்தில் நடக்கும் இன சுத்திகரிப்பை பற்றி எந்த மையவாதத்தை.. எந்த தேசியவாதத்தை வைச்சு விளக்கம் கொடுக்கப் போறீங்களோ தெரியாது..???!

1952 இல் இருந்து தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டே வருகின்றன. முள்ளிவாய்க்காலை மட்டும் உதாரணம் காட்டி மக்களுக்கு பயங்காட்டிறது அர்த்தமற்றது. இப்படியான பயங்காட்டலுக்கு அடங்கும் மக்கள் என்றால் யாழ் தமிழாராட்ச்சிப் படுகொலைகளோடு தமிழர்கள் அடங்கி ஒடுங்கி சிங்களவர்கள் தாறதை வைச்சுக் கொண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து செத்திருப்பார்கள்.

உங்களைப் பொறுத்தவரை டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்களின் வழி புத்திசாலித்தனமானதாகத் தெரியலாம். அந்த வழியில் அவர்களை வைத்திருக்க சிங்களத்தைத் தூண்டியது ஆயுதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதும்.. மக்கள் விடுதலை வேட்கையோடு இருப்பதுவுமே. இன்றேல் டக்கிளஸ் உட்பட பலர் இன்று சிறீலங்கா அரசியல் அரங்கில்.. காணாமல் போயிருப்பார்கள். அஷ்ரப்புக்கு நடந்தது தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த மாணவர்கள் மட்டுமல்ல.. எந்த அடக்குமுறையை உணரும் உயிரும் போராடும். அதை உணர மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் நிலை வேறு..! உங்களுக்கும் சாவு வரத்தான் போகுது. போராடிறவனுக்கும் சாவு வரத்தான் போகுது. எனவே சாவைக்காட்டி அடக்குமுறைக்கு வக்காளத்து வாங்குவதை நிறுத்துவது ஒரு சுதந்திர பூமியில் வாழும் சுதந்திர இனமான மனித இனத்திற்கு நீங்கள் செய்யும் நற்காரியமாக இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

[size=6]பல்கலைக்கழகத்துக்குள் படைகளுக்கு என்ன வேலை? - மாவை எம்.பி.[/size]

[size=5]#1 : பல்கலைக்கழகத்தில் ஆண், பெண் மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து படையினர் அட்டகாசம் புரிந்துள்ளனர். இராணுவத்தினரின் அடாவடித் தனங்களைக் கண்டித்து மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயே தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

#2 : மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களில் உண்மை இல்லை. இன்றும் கூட மூன்று லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மீள்குடியேற்றம் என்ற பெயரில் எதுவிதமான அடிப்படை வசதிகளும் இன்றித் தட்டுக்குடில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதைகளில் பிச்சைக்காரர்கள் போல் அவல வாழ்வு வாழ்கின்றனர்.[/size]

[size=5]#3 : ஐ.நா. தீர்மானத்தின்படி இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற கடப்பாடு உண்டு. ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் உதாசீனப்படுத்தி அம்மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று வாழத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#4 : இந்தியாவில் இன்னும் 21 முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் இங்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் மீண்டும் வந்தால் தமது சொந்த இடங்களில் வந்து குடியேற சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். [/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=250891658030233200#[/size]

[size=3]'அடுத்த வருடம் நாங்களும் சேர்ந்து தீபமேற்றுவோம்'[/size]

[size=3]மாணவர்களுடன் சேர்ந்து அடுத்த வருடம் தாங்களும் தங்களுக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக தீபமேற்றப் போவதாக யாழ் பலகலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க தலைவரான விரிவுரையாளர் இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=3]அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121130_jaffuniteacher.shtml

[size=4]

இங்கே நிர்மலன் எனும் பெயரில் எழுதுபவர் குமரன் பத்மனாதனூடாக சிங்களப் பேரினவாதம் செய்யும் உளவியல்ப் போரில் ஈடுபட்டிருப்பவர். இதே தளத்தில் முன்னரும் பலமுறை கே. பீ எனும் துரோகியின் நடவடிக்கைகளைப் புகழ்ந்தும் அவன் நடத்தும் சிங்கள அரசின் கண்துடைப்பு செயற்பாடுகளுக்காகவும் நாங்கள் உதவ வேண்டும் என்று நிதி கோரியும் வந்தவர். ஆகவே இவர் எங்கிருந்து வருகிறார், இவரது உண்மையான நோக்கம் என்னவென்பது உறுதியாக விட்ட நிலையிலிருந்துதான் இவர் இந்தத் தலைப்பில் முன்வைக்கும் கருத்துக்களும் பார்க்கப்பட வேண்டும்.

விடுதலைப்போர் ஆரம்பமாக முன்னரும், போர் நடந்த காலத்திலும், போர் முடிந்த இந்தக் காலத்திலும் சிங்களப் பேரினவாதம் என்ன சொல்லி வருகிறது?? அதாவது, "தமிழர்கள் யாரும் தனிநாடோ அல்லது சுதந்திரமோ கேட்கவில்லை, வெறும் ஓரிரு பேர்தான் கத்துகிறார்கள், தமிழர்களுக்குத் தேவையானவற்றை நாம் செய்து கொடுக்கிறோம், இங்கே தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினை. அந்தப் பயங்கரவாதப் பிரச்சினையைக் கூட ஒரு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை மூலம் 2009 இல் நாம் முடிவுக்குக் கொண்டுவந்து தமிழர்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினோம்".

இவர் என்ன சொல்லுகிறார்? "யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. அங்கே மக்கள் அமைதியாகவும் சந்தோசமகாவும் இருக்கிறார்கள். அவர்கள் போர் முடிவடைந்ததற்காகவும், புலிகள் அழிக்கப்பட்டதற்காகவும் சந்தோஷப்படுகிறார்கள். அவர்களுக்கு மாவீரர் தினமென்று ஒன்று இருப்பதே தெரியாது. புலத்திலிருக்கும் சில இனவாதிகள்தான் அங்கே பணம் அனுப்பி அங்கே அமைதியாக இருக்கும் தமிழ் மக்களைக் குழப்புவதற்கு சில புல்லுருவிகளைத் தூண்டுகிறார்கள். இதனால் தேனும் பாலும் ஓடும் தமிழர் இடங்களில் வன்முறை நடைபெறுகிறது. பல்கலைக் கழகத்தில் வெறும் ஒன்று அல்லது இரண்டு மாணவர்களே ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அதைக்கூட காவல்த்துறையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றைச் செய்ததன் மூலம் மக்களுக்கு நடக்கவிருந்த புலம்பெயர் புல்லுருவிகளின் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தில் இரு மாணவர்களால் நடத்தப்பட்டதைத்தவிர வேறு எங்கிலும் நடக்கவில்லை".

இப்போது புரிகிறதா இவரின் நோக்கமும், இவர் யார் விட்ட அம்பென்பதும்???

அகோதா,

நீங்கள் இப்படியெல்லாம் ஆதாரத்துடன் கருத்தெழுதினால் அவர் என்னதான் செய்வது. தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதை அவர் அப்படியே இங்கு வந்து ஒப்புவிக்கிறார். அவரால் சொந்தமாக யோசிக்க முடியாது. அப்படி முடிந்தால் அவர் அங்கிருக்க முடியாது. எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு அவர் சிங்கள எசமானர்களுக்காக வக்காலத்து வாங்க நீங்களோ இலகுவாக அவரின் முகத்திரையைக் கிழித்து விடுகிறீர்கள். இனி முடியாது...அழுதுடுவேன்...!!!!!

[/size]

[size=4]இரகுநாதன்,[/size][size=1]

[size=4]நான் எழுதுவது நிச்சயமாக இவருக்காக இல்லை. [/size][/size]

[size=1]

[size=5]"நாய் வாலை நிமிர்த்த முடியாது " - பழ மொழி [/size][/size]

[size=1]

[size=4]
அப்படியானால் யாருக்காக?
[/size][/size]

[size=1]

[size=4]
- இவரை தெரியாமல் வாசிக்கும் உறவுகளுக்காக
[/size][/size]

[size=1]

[size=4]
- புதிதாக இணைந்துள்ள உறவுகளுக்காக
[/size][/size]

[size=1]

[size=4]
- அவர் எழுதும் பொய்கள் உண்மையா என வினவும் உறவுகளுக்காக
[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள்![/size][/size]

[size=4][size=5]"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டொன்றை வைக்குமாறு தனக்கு சிறிலங்கா படைத்தரப்பின் கேணல் தர நிலையிலிருந்த அதிகாரி ஒருவர் பணித்தார்"[/size] - [/size][size=4]2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா படைத்துறையில் இருந்து தப்பிச் சென்ற 38 வயதான கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112165

[size=4]சரணவபாவனோ இல்லை மாவையோ கூட நாளை கொல்லப்படலாம் ![/size]

இப்ப நீங்க புதிசா என்ன சொல்லவாறீங்க.. ஈபிடிபி ஒட்டுக்குழு சொல்லுறதைத் தானே நீங்களும் சொல்லுறீங்க..

டக்கிளஸ் தேவானந்தா உட்பட நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிஞ்சு கொள்ளனும். தமிழர்கள் ஆயுதம் தூக்கினால் என்ன அமைதியாய் கிடந்தால் என்ன.. விஜய்க்கு பாலாபிசேகம் செய்து கொண்டு சும்மா கிடந்தால் என்ன அஜித்துக்கு கட்டவுட் வைத்தால் என்ன.. சிங்களக் குமரிகளோடு கூத்தடித்தால் என்ன.. சிங்களத்தின் பேரினவாதக் கொள்கையின் கீழ் சிறீலங்கா ஒட்டுமொத்தமாக சிங்கள பெளத்த நாடாகும் வரை.. சிங்கள இனம் சிறீலங்காவின் அனைத்துப் பகுதியிலும் பெரும்பான்மை பெறும் வரை.. தமிழர்கள் அழிக்கப்படுவார்கள். அதன் பின்னரும் தமிழர்கள் சுத்திகரிக்கப்படுவார்கள்.

முள்ளிவாய்க்கால் உலகம் அறிய நடந்தது. உலகம் அறியாமல் மலையகத்தில் நடக்கும் இன சுத்திகரிப்பை பற்றி எந்த மையவாதத்தை.. எந்த தேசியவாதத்தை வைச்சு விளக்கம் கொடுக்கப் போறீங்களோ தெரியாது..???!

1952 இல் இருந்து தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டே வருகின்றன. முள்ளிவாய்க்காலை மட்டும் உதாரணம் காட்டி மக்களுக்கு பயங்காட்டிறது அர்த்தமற்றது. இப்படியான பயங்காட்டலுக்கு அடங்கும் மக்கள் என்றால் யாழ் தமிழாராட்ச்சிப் படுகொலைகளோடு தமிழர்கள் அடங்கி ஒடுங்கி சிங்களவர்கள் தாறதை வைச்சுக் கொண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து செத்திருப்பார்கள்.

உங்களைப் பொறுத்தவரை டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்களின் வழி புத்திசாலித்தனமானதாகத் தெரியலாம். அந்த வழியில் அவர்களை வைத்திருக்க சிங்களத்தைத் தூண்டியது ஆயுதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதும்.. மக்கள் விடுதலை வேட்கையோடு இருப்பதுவுமே. இன்றேல் டக்கிளஸ் உட்பட பலர் இன்று சிறீலங்கா அரசியல் அரங்கில்.. காணாமல் போயிருப்பார்கள். அஷ்ரப்புக்கு நடந்தது தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த மாணவர்கள் மட்டுமல்ல.. எந்த அடக்குமுறையை உணரும் உயிரும் போராடும். அதை உணர மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் நிலை வேறு..! உங்களுக்கும் சாவு வரத்தான் போகுது. போராடிறவனுக்கும் சாவு வரத்தான் போகுது. எனவே சாவைக்காட்டி அடக்குமுறைக்கு வக்காளத்து வாங்குவதை நிறுத்துவது ஒரு சுதந்திர பூமியில் வாழும் சுதந்திர இனமான மனித இனத்திற்கு நீங்கள் செய்யும் நற்காரியமாக இருக்கும்..! :icon_idea:

இங்கே கருத்தாடும் தேசீயவாதிகள் தம் தேசீயச் சுதியை தக்கவைக்க இழுப்பது புளட் மாலதீவு டக்களஸ் கேபி.

நான் சொல்ல வருவது தவறான இடத்தில் இருந்து போராட்டம் எப்படி ஆரம்பிக்க முடியும் என்பதைப் பற்றியே.

சிங்களப் பேரினவாதம் எப்படி எம் மக்களை வதைத்ததோ அப்டியே மையாதமும் வதைத்தது. சர்வதேசத்தில் போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதில் பெரும் பங்கு வகித்தது UTHR (J) போன்ற முன்னாள் யாழ் பல்கழைக்கழக அமைப்புகள். சிங்களம் செய்த கொலைகளை புலிகள் தலையில் கச்சிதமாக போட்டு அரசுக்கு சாதகமாக போராட்டத்தை பயங்கரவாதமாக்கினார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் கொல்ப்படுவதற்கு அழமறுத்த இந்த யுனிவர்சிட்டி கோஸ்டி ராஜினி திரணகம என்ற ஒருவருக்காக கால் நூற்றாண்டாக குடம் குடமாக அழுது வர்க்க் கண்ணீர்விட்டுக்கொண்டிருக்கின்றது. இரயகரன் வகையறாக்கள் இந்த யுனிவர்சிட்டி தோற்றுவிப்புக்களே. போரின் பின்னர் யுனிவர்சிட்டிக்குள் நுழைந்த முன்னாள் போராளிகள் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். பலர் படிப்பே வேண்டாம் என்று விலகியுள்ளனர். மகிந்தனும் சரத்தும் பவ்வியமாக வந்து தரிசிக்கும் இடம் நல்லூர் கந்தன். எத்தனையோ தேவாலயம் கோயில் களுக்கு மேல் குண்டு போட்டாலும் இங்கே எல்லாம் சிங்களம் குண்டுகள் போடாது. காரணம் மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள். எந்த அடக்குமுறையிலும் இனவாத நெருக்கடியிலும் இந்த மையவாதம் நழுவிக்கொள்ளும். அரச மானியம் அரச உத்தியோகம் என தன்னை நெளிவு சுழிவுகளூடாக தக்கவைத்தக்கொள்ளும். கூட்டாளிகள் நீங்கள் அடிக்கும் கூத்துகளில் கொல்லப்படுவதும் வாழ்வை இழப்பதும் வறுமைப்பட்ட அப்பாவி மக்கள். உங்கள் கருத்தியல் தளம் ஜனநாயகத்துக்கு விரோதமானது குரோதமானது. இங்கிருந்து ஒரு போராட்டம் புறப்பட்டு எஞ்சியுள்ள வறுமைப்பட்ட மக்களை அழித்தொழிக்க கருக்கொண்டுள்ளது. 32க்கும் மேற்பட்ட இயக்கத்தலமையும் யாழ் குடாவின் கோவணத்துக்குள் இருநது புறப்பட்டு ஒன்றை ஒன்று கடிபட்டு கூட இருந்த மக்களையும் கடித்து குதறி சிதைத்து சின்னாபின்னமாக்கிய தளம் இது. இங்கிருந்து மக்கள் போராட்டம் கருக்கொள்ள முடியாது. பேரினவாதத்தின் உண்மையான கூட்டாளிகள் இந்த தளங்களே. இவற்றையே நான் சொல்கின்றேன். போராட்டம் தவறு என்பதல்ல எனது வாதம் அது ஆரம்பிக்கும் இடம் மிக ஆபத்தானது. அது மக்களை கொலைக்களத்துக்கு இழுத்துவிட்டு தான் சிங்களத்துடன் இணைந்துகொள்ளும். இங்கிருக்கும் மையவாதத்தில் ஊறிப்போன தேசீயவாதிகள் உங்கள் போராட்டத்தை உலகம் உற்றுப்பார்கின்றது ஒபாமா வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று பீல விட்டு உசுப்பேத்தி விடுவார்கள். மக்களின் உயிருடன் சிங்களமும் மையவாதமும் மீண்டும் ஒருமுறை விழையாட முற்படும் போது அதற்கு குறுக்காக எழுதவேண்டிய தேவை இருக்கின்றது.

[size=4]

நான் சொல்ல வருவது தவறான இடத்தில் இருந்து போராட்டம் எப்படி ஆரம்பிக்க முடியும் என்பதைப் பற்றியே.

[/size]

[size=4]போராட்டத்தை ஆரம்பித்து இப்போதைக்கு அறுபது வருடங்கள் ஆகிவிட்டன. அவை இன்றும் தொடர்கின்றன. காரணம், போராடினாத்தான் வாழ்க்கை என்ற நிலை.[/size]

[size=4]அவர்களை போராடாதீர்கள் என நாம் கூறமுடியுமா? [/size]

[size=4]

போராட்டம் தவறு என்பதல்ல எனது வாதம் அது ஆரம்பிக்கும் இடம் மிக ஆபத்தானது. [/size]

[size=4]அது மக்களை கொலைக்களத்துக்கு இழுத்துவிட்டு தான் சிங்களத்துடன் இணைந்துகொள்ளும். இங்கிருக்கும் மையவாதத்தில் ஊறிப்போன தேசீயவாதிகள் உங்கள் போராட்டத்தை உலகம் உற்றுப்பார்கின்றது

[/size]

[size=4]“தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.

இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.

அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.

அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார். அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது.

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது.

அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல்

கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும் தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது.

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112132

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை மாணவ ஒன்றியத்தை இலக்கு வைத்து அரச புலனாய்வாரள்களும் சிறிரெலோ அமைப்பும் களத்தில்

30 நவம்பர் 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களை சிக்க வைக்கும் நாடகமொன்றை இன்று இலங்கை இராணுவ புலனாய்வுப்பிரிவும் பொலிஸ் தரப்பும் இணைந்து அரங்கேற்ற தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக அண்மையில் அவசர அவசரமாக பல்கலைக்கழக பின் வீதியில் துணை ஆயுதக்குழுவான சிறீடொலோ அமைப்பின் அலுவலகமொன்று திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை தமது அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக அக்கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

செய்தியின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகத்தில் கணிசமான பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறுத்துவிட்டன. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலில் குறித்த துணை ஆயுதக்குழுவினது அங்கத்தவர்கள் நேரடியாக பங்கெடுத்தமை அம்பலமாகியும் இருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டது போன்று தமது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களில் ஏழு பேரது பெயர்கள் குறிப்பிட்டு புகாரொன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்களுள் முன்னாள் மாணவ தலைவர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் அவ்வாறு பெயர் குறி;ப்பிடப்பட்ட பலர் ஏற்கனவே தமது சொந்த இடங்களான வெளிமாவட்டங்களுக்கு தற்போதைய பகிஸ்கரிப்பு காரணமாக சென்றுவிட்டதாகவும் மாணவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த ஏழு மாணவர்களில் இருவர் மட்டுமே சட்டத்தரணிகள் மற்றும் பீடாதிபதிகள் சகிதம் இன்று பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளனர். எனினும் அவர்களை தாம் கைது செய்திருப்பதாக கூறும் பொலிஸ் நீதிமன்றில் ஆஜராகியே தீருவதென அடாவடியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் சக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகள் அதற்கு மறுதலித்து தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தினிலேயே தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்றும் பல்கலைக்கழக சூழல் படைத்தரப்பின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள நிலையில் அதையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக ஆசிரிய சங்கப்பிரதிநிகள் அரை நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.

http://www.globaltam...IN/article.aspx

இங்கே கருத்தாடும் தேசீயவாதிகள் தம் தேசீயச் சுதியை தக்கவைக்க இழுப்பது புளட் மாலதீவு டக்களஸ் கேபி

காரணம் மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள். எந்த அடக்குமுறையிலும் இனவாத நெருக்கடியிலும் இந்த மையவாதம் நழுவிக்கொள்ளும். அரச மானியம் அரச உத்தியோகம் என தன்னை நெளிவு சுழிவுகளூடாக தக்கவைத்தக்கொள்ளும்.

மக்களின் உயிருடன் சிங்களமும் மையவாதமும் மீண்டும் ஒருமுறை விழையாட முற்படும் போது அதற்கு குறுக்காக எழுதவேண்டிய தேவை இருக்கின்றது.

மையவாதிகளும் பேரின வாதிகளும் தமிழ் மக்களை அழித்தார்கள் என்று விளங்கிக் கொண்டிருப்பது சரியே. பலகலைகழகத்துள் மையவாதிகள் நிலை கொண்டிருப்பதும் உண்மையே. அரசாங்க மானியங்கள் மையவாதிகளுக்கு வந்து கிடைப்பதும் அவர்கள் தங்கள் அதிகாரங்களை UNP வந்தாலும், SLFP வந்தாலும் வளைந்து நெளிந்து கட்சி மாறி தக்கவைக்கிறார்கள் என்பதும் உண்மையே.

ஆனால் யார் இந்த மையவாதிகள் என்பதை மட்டும்தான் தெரிந்து கொண்டிருக்கவில்லை. அது அவ்வளவு கஸ்ட்டமான விவகாரம் அல்ல. சரவணபவனின் வரவு செலவுத்திட்ட உரையை யாழில் விவாதிக்கும் திரியில் இருக்கிறது யார் இந்த மையவாதிகள் என்பது.

எதற்கும் இரண்டு மையங்கள் இருக்காது என்பது பொது அறிவு. இலங்கை நாட்டுக்கும் அதுதான் பொது விதி. மங்கள 6000 உறுப்பினர்களுடன் இலங்கை அரசின் ஆதிக்கம் மையம் கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார். இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் அரசிடமிருந்து மானியங்களை பெற்று யாழ்ப்பாணத்தில் தனது உதவிகளுக்குமாக பகிர்ந்துகொள்ளும் தேவானந்தா, கே.பி.தான் வடக்கில் தொழில்படும் மையவாதிகள்.

தேவானந்தா, கே.பி போன்றவர்கள்தான் வடக்கின் மையவாதிகள் என்பதால்த்தான் அவர்களை இங்கே எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தாம் அரசிடம் மானியம் பெறும் கொழும்பு மையத்தின் வடக்கு பிரதிநிதிகள். மையவாதிகள் யார் என்று தீர்மானிக்கப்படுவது இருக்கும் அதிகாரத்தை தக்கவைக்கும் திறமையை பொறுத்தது என்று கருத்துப்படத்தான் மேல் எழுதிய பந்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மற்றயது யாழ்பாண பல்கலைகழகத்தில் ஒரு புதிய ஆயுத போராட்டம் ஆரம்பிக்க பட்டிருக்கிறது என்ற மாயை எழத்தக்கதாக மேல் சென்ற பந்தியில் கருத்து ஏழுதியிருப்பது, இராணுவத்தை அங்கே அனுப்ப அரசுக்கும், சுதந்திரமாக இயங்கப்பார்க்கும் விரிவுரையாளர் சங்கத்தை கைக்குள் பிடிக்க தேவானந்தாவுக்கும் தேவையான பிரச்சாரம். அதை தான் நீங்கள் செய்வதாக நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் யாரும் விழுந்தடிக்க வேண்டிய மாதிரி எங்கும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிக்கப்படும் ஜனநாயக போராடங்கள் மையத்தை சார்ந்ததாக இருக்காது. ஏன் எனில் அது ஜனநாயக போராட்டம் என்பதால்.

நாம் அல்ல அமெரிக்கா, "இராணுவம் பல்கலைகழகத்தில் தலையிடக்கூடாது " என்று அறிக்கைவிட்டிருப்பத்தாக செய்தி வெளிவிட்டது. அது ஒரு சிங்கள மையவாதத்தின் ஆங்கிலப்பத்திரிகை. யாருக்கும் அரசுக்காக பிரச்சாரத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்குமாப்போல், நாம் அமெரிக்காவுக்காக எந்த பிரச்சாரத்திலும் இறங்கவேண்டிய தேவை இல்லை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக முறையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸாரின் தந்திரம்!

[Friday, 2012-11-30 18:34:39]

யாழில் அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஊடகவியலாளரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதாவது, யாழ். மாவட்டத்தில் பொலிஸாரின் சேவை தேவையா? என்று அப்போது சில பொலிசுக்கு வாளிவைக்கும் (தங்களையும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லித்திரிவோர்) ஊடகவியலாளர்கள் "வேண்டும்", என்றும் சில ஊடகவியலாளர்கள் "வேண்டாம்" என்று சொன்னவுடன் போய்விடுவீர்களா என்று கேட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டில் நடைபெற்ற, நடைபெற்று வரும் சம்வங்கள் பொலிஸார் மீது ஒரு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர்களால் எதனையும் செய்யமுடியாது என்ற எண்ணப்பாட்டில் தான் இன்று யாழின் நிலவரங்கள் காணப்படுகின்றது.

யாழில் நடைபெறும் சைக்கிள் திருட்டு, போனில் ஆபாசப் படம் வைத்திருப்பவர்களை கைது செய்தல், பஸ்சில் திருடியவர்களை பிடித்தல் ( அதுவும் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு பஸ் வந்தால் மட்டும்) போன்ற சம்பவங்களை மட்டுமே இவர்களால் செய்யமுடிகின்றது. பாரிய குற்றங்கள் தொடர்பில் இவர்கள் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது தான் உண்மையான விடயம். யாழில் பல பாரிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக இனந்தெரியாத நபர்கள் ( தமிழர்களுக்கு தெரியாத நபர்கள்) என்று சொல்லப்படுபவர்களால் பல்வேறு கழிவோயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை என பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அச்சம்பவம் தொடர்பான எந்த ஒரு நடவக்கையும் எடுக்கவில்லை. இது தான் நான் சொல்லவந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திய செயல்.

இதற்கு அப்பால் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருப்பது வேடிக்கையான ஒன்று. இவரின் இந்தப்பம்மாத்துக் கதைக்கு நெல்லியடி புலிக்கொடி விவகாரம் நல்ல ஊதாரணம். நெல்லியடியில் புலிக்கொடியுடன் வந்தவர்களை 50 மேற்பட்ட பொலிஸார், நான்கு வீதியில் இருந்தும் பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக யாழ் ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அது புலிக்கொடி என்று பொலிஸாருக்கு தெரியாது என்று பதிலளித்ததோடு, இந்த விடயம் தொடர்பில் முறையிட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும் இதே பொலிஸ்மா அதிபர் தான் தெரிவித்திருந்தார்.

புலிக்கொடியுடன் வந்தவர்கள் பயன்படுத்திய மோட்டர் சைக்கிளின் இலக்கத்தை தந்தால் 2 மணித்தியாலயத்திற்குள் பிடிப்போம் என்று இன்றுவரை பிடித்துக்கொண்டே இருக்கின்றார்கள். "முறையிட்டால் நடவடிக்கை! தகவல் தந்தால் கைது" இது இவர்களின் மந்திரமாக மாறிவிட்டது. பாட்டும் நானே பாவமும் நானே என்ற நிலையில் தான் இன்று பொலிஸாரின் செயற்பாடு அமைந்துள்ளதே தவிர, உண்மையில் சட்ட ஒழுங்கை சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பொலிஸாருக்கு இல்லை எனபது யாழில் நடந்து வரும் சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது என யாழ் ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

http://seithy.com/breifNews.php?newsID=71138&category=TamilNews&language=tamil

மையவாதிகளும் பேரின வாதிகளும் தமிழ் மக்களை அழித்தார்கள் என்று விளங்கிக் கொண்டிருப்பது சரியே. பலகலைகழகத்துள் மையவாதிகள் நிலை கொண்டிருப்பதும் உண்மையே. அரசாங்க மானியங்கள் மையவாதிகளுக்கு வந்து கிடைப்பதும் அவர்கள் தங்கள் அதிகாரங்களை UNP வந்தாலும், SLFP வந்தாலும் வளைந்து நெளிந்து கட்சி மாறி தக்கவைக்கிறார்கள் என்பதும் உண்மையே.

ஆனால் யார் இந்த மையவாதிகள் என்பதை மட்டும்தான் தெரிந்து கொண்டிருக்கவில்லை. அது அவ்வளவு கஸ்ட்டமான விவகாரம் அல்ல. சரவணபவனின் வரவு செலவுத்திட்ட உரையை யாழில் விவாதிக்கும் திரியில் இருக்கிறது யார் இந்த மையவாதிகள் என்பது.

எதற்கும் இரண்டு மையங்கள் இருக்காது என்பது பொது அறிவு. இலங்கை நாட்டுக்கும் அதுதான் பொது விதி. மங்கள 6000 உறுப்பினர்களுடன் இலங்கை அரசின் ஆதிக்கம் மையம் கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார். இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் அரசிடமிருந்து மானியங்களை பெற்று யாழ்ப்பாணத்தில் தனது உதவிகளுக்குமாக பகிர்ந்துகொள்ளும் தேவானந்தா, கே.பி.தான் வடக்கில் தொழில்படும் மையவாதிகள்.

தேவானந்தா, கே.பி போன்றவர்கள்தான் வடக்கின் மையவாதிகள் என்பதால்த்தான் அவர்களை இங்கே எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தாம் அரசிடம் மானியம் பெறும் கொழும்பு மையத்தின் வடக்கு பிரதிநிதிகள். மையவாதிகள் யார் என்று தீர்மானிக்கப்படுவது இருக்கும் அதிகாரத்தை தக்கவைக்கும் திறமையை பொறுத்தது என்று கருத்துப்படத்தான் மேல் எழுதிய பந்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மற்றயது யாழ்பாண பல்கலைகழகத்தில் ஒரு புதிய ஆயுத போராட்டம் ஆரம்பிக்க பட்டிருக்கிறது என்ற மாயை எழத்தக்கதாக மேல் சென்ற பந்தியில் கருத்து ஏழுதியிருப்பது, இராணுவத்தை அங்கே அனுப்ப அரசுக்கும், சுதந்திரமாக இயங்கப்பார்க்கும் விரிவுரையாளர் சங்கத்தை கைக்குள் பிடிக்க தேவானந்தாவுக்கும் தேவையான பிரச்சாரம். அதை தான் நீங்கள் செய்வதாக நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் யாரும் விழுந்தடிக்க வேண்டிய மாதிரி எங்கும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிக்கப்படும் ஜனநாயக போராடங்கள் மையத்தை சார்ந்ததாக இருக்காது. ஏன் எனில் அது ஜனநாயக போராட்டம் என்பதால்.

நாம் அல்ல அமெரிக்கா, "இராணுவம் பல்கலைகழகத்தில் தலையிடக்கூடாது " என்று அறிக்கைவிட்டிருப்பத்தாக செய்தி வெளிவிட்டது. அது ஒரு சிங்கள மையவாதத்தின் ஆங்கிலப்பத்திரிகை. யாருக்கும் அரசுக்காக பிரச்சாரத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்குமாப்போல், நாம் அமெரிக்காவுக்காக எந்த பிரச்சாரத்திலும் இறங்கவேண்டிய தேவை இல்லை.

மையவாதம் என்பது ஒரு கருத்தியல். அனைத்திலும் தானே உயர்ந்தவன் அது கல்வி சாதி சமயம் பிரதேசம் என அனைத்தையும் இணைத்த ஒரு மேட்டுக்குடி கருத்துநிலை. இது தன்னை தக்கவைத்துக்கொள்ள குறிவைப்பத தனது இனத்தையே. இது தன்னினத்துக்குள் இரைதேடும் ஒரு செயல்வடிவம். எதற்காகவும் அனசரிப்பு ஐக்கியப்பாடு விட்டுக்கொடுப்பு என்பத இதனிடம் இல்லை.இது உளவியல் ரீதியல் ஸ்திரமாகிவிட்டது. இதன் விழைவு சிங்களத்துக்கு சாதகமானது. இயக்கங்கள் ஒன்றுபடாத பிடிவாதம் இங்கிருந்ததான் தோற்றம் பெறுகின்றது. இந்த முரண்பாடு ஆட்கொல்லிக் நோயாக மாறும் போது பல இயக்கத்தலமைகள் சிங்களத்திடம் சென்று சேர்ந்தனர். இது பிரிவுகளை பெருக்கிக்கொண்டிருக்கும் ஒரு தளம். நாட்டில் இயக்கங்களாகட்டும் இயக்ங்களுக்குள் பிளவுகளாகட்டும் மத பிரதேச பிளவுகளாகட்டும் புலத்தில் நாடுகடந்த அரசு பின்பு ஜனநாயக நா க அ பிரிவு. ஒரு மாவீரர் தினம் பிறகு ஒன்பது. நாம் எவ்வளவு தூரம் சிதைவு படுகின்றோமோ அவ்வளவு தூரம் அது சிங்களத்துக்கு சாதகமானது. அந்தவகையில் பேரினவாதத்திற்கு சாதகம் செய்யக்கூடிய மையவாதம் அதன் கூட்டாளி என்பதில் மாற்றுக்கருத்திருக்கமுடியாத. எனது வாதம் தமிழ்மக்களுக்கான போராட்டம் பேரினவாதக் கூட்டாளிகளின் கூடாரங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால் தமிழ்மக்களின் கதி என்ன? டக்ளஸ் மையவாதி அல்ல டக்ளசையும் இன்னும் பல தலைவர்களையும் கொண்டுபோய் பேரினவாதத்திடம் ஒப்படைத்ததே மையவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.