Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி கணேசனின் நடிப்பின் உச்சம் என்று சொல்லலாமா? :D

 

இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன?

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த உடையார், வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோவிற்கு நன்றி. :)
"சந்திரோதயம்"(1966) திரைப்படத்திலிருந்து.....  "சந்திரோதயம் ஒரு, பெண்ணானதோ..."

பாடல் வரிகள்: வாலி.
இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்கள்: சுந்தர்ராஜன்  &  சுசீலா.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். &  ஜெயலலிதா. 

 

 

என்னவொரு குரல் வளம், இனிமையான இன்றொரு பாடல் தந்த சிறிக்கு நன்றி

 

 

பல்வேறு பகுதிகளுடனும் சூரியனின் கிரணங்கள் கலந்து காட்டும் பல விதமான எண்ணிறந்த வர்ண ஜாலங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்.
சூரியனின் உதயமும் அஸ்தமனமும் குறிப்பாகக் கன்னியாகுமரியில் மிக அற்புதமான காட்சிகளாகும். அத்துடன் ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் ஒரே நேரத்தில் சூரியன் மேற்குக் கடலில் மறைகையில் கிழக்குக் கடலில் சந்திரன் மேலெழும் காட்சி மிகவும் அற்புதமானது,

ஒவ்வொரு ஆண்டிலும் தினந்தோறும் சூரியன் காலையில் உதிக்கும் நேரமும் மாலையில் மறையும் நேரமும் நாமறிவோம் ஆனால் சந்திரன் உதிக்கும் நேரத்தை அறிவோமாவெனில் இல்லையென்றே கூற வேண்டும். சந்திரன் பொதுவாக இரவில் வானத்தில் நம் கண்களுக்குப் புலப்பட்டாலும் பல நாட்களில் பகல் பொழுதிலேயே தோன்றி விடுவதும் கண்கூடு. ஆனால் சந்திரன் எப்போது தோன்றினாலும் அதன் அழகை அனைவரும் வியந்து ரசிக்கிறோம்.

சந்திரனின் நடமாட்டத்ததைக் கணிக்க இயலாதது போல் பெண்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அவர்களது செயல்பாடுகளையும் கணிக்க இயலாத நிலை இருப்பதாலேயே பெண்ணை சந்திரனுடன் ஒப்பிடுகின்றரோ கவிஞர்கள்? இதோ ஒரு கவிஞர் ஒரு பெண்ணை சந்திரனின் உதயத்துக்கு ஒப்பிடுகிறார்.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

படம் : சந்திரோதயம்
குரல் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்: வாலி
ஆண்டு: 1966

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ? என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ? நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ? என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ? சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ? இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ? முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

 

http://daily-one-song.blogspot.com.au/2009/11/blog-post_1871.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல். ஜெயலலிதா மெல்லிதாகவும் அழகாகவும் இருக்கிறார். எனக்கு அவரின் நடிப்பு பிடிக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் சிறி

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சிறி!

 

எவ்வளவு அன்னியோன்னியமான நடிப்பு? :D

 

மொத்தத்தில் ஒரு அழகிய தமிழ்ப்பாடல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... வந்தியத்தேவன், சுமோ, உடையார், புங்கையூரானுக்கு நன்றி. :)
"பாகப் பிரிவினை" (1959)என்ற படத்திலிருந்து, "தாழையாம்... பூமுடித்து...."

பாடல்வரிகள்: கண்ணதாசன்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் &  லீலா.
நடிகர்கள்: சிவாஜி கணேசன் &  சரோஜாதேவி.

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுடன் பாடல்களைத்தரும் சிறித்தம்பிக்கு நன்றிகள். அனைத்துப்பாடல்களும் அருமை. :)

  • கருத்துக்கள உறவுகள்

காலை நேரத்துக்கு ஏற்ற பாடல். நன்றி சிறி.

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு அழகிய ஒரு கிராமத்துப் பாடல்? :D

 

எனக்கு, இப்போதெல்லாம், கறுப்பு வெள்ளை தான் பிடிக்கிறது! :o

 

நன்றிகள், தமிழ் சிறி!

 

'மண் பார்த்து விளைவதில்லை, மரம்பார்த்துப் படர்வதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... உடையார், குமாரசாமி அண்ணா, சுமோ, புங்கையூரானுக்கு நன்றி. :) 
"பெற்றால் தான் பிள்ளையா"(1966) திரைப்படத்திலிருந்து, "சக்கரை கட்டி ராஜாத்தி"
இந்த திரைப்படத்தில்... எம்.ஜீ.ஆர். நடிக்கும் போது அவரின் வயது 49.

இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்கள்:
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & சரோஜாதேவி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில, 'சர்க்கரைக்கட்டி' என்றால் வெல்லக்கட்டி என நினைக்கிறேன்!

 

சரோஜா தேவி' காலத்தில வாழ்ந்திருக்கலாமே, என்று மனது ஏங்குகின்றது!

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படமும் பாடலும் இப்பதான் கேட்கிறான். பார்க்காதவற்றை எல்லாம் லிஸ்ட் போட்டு வைத்து வயதுபோன பிறகு ஆறுதலா இருந்து பாக்கவேணும். பாடலுக்கு நன்றி சிறி.

 



தமிழ் நாட்டில, 'சர்க்கரைக்கட்டி' என்றால் வெல்லக்கட்டி என நினைக்கிறேன்!

 

சரோஜா தேவி' காலத்தில வாழ்ந்திருக்கலாமே, என்று மனது ஏங்குகின்றது!

 

நன்றிகள், தமிழ் சிறி!

 

சரோஜா தேவி இன்னும் சாகேல்லைப் புங்கை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படமும் பாடலும் இப்பதான் கேட்கிறான். பார்க்காதவற்றை எல்லாம் லிஸ்ட் போட்டு வைத்து வயதுபோன பிறகு ஆறுதலா இருந்து பாக்கவேணும். பாடலுக்கு நன்றி சிறி.

 

 

சரோஜா தேவி இன்னும் சாகேல்லைப் புங்கை.

தகவலுக்கு நன்றிகள், சுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... புங்கையூரான், சுமோவிற்கு நன்றி. :)
"நீர்க்குமிழி"(1965) திரைப்படத்திலிருந்து, "ஆடி, அடங்கும் வாழ்க்கையடா..."

பாடல் வரிகள்:'உவமைக் கவிஞர்' சுரதா.
இசையமைப்பு: வி. குமார்.
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்.
நடிகர்: நாகேஷ்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை நடிகர் நாகேஷை, இன்னொரு தளத்துக்கு உயர்த்திய பாடல் இதுவாகும்!

 

இயலாமையின் உணர்வுகளை, வெளிப்படுத்தும் நடிப்பு மிகவும் நன்றாக வந்துள்ளது!

 

நல்ல கருத்துள்ள பாடல்! நன்றிகள், தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கண்ணா கருமை நிற கண்ணா
 
 
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)
 
 
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா 
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
 
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா 
(கண்ணா...)
 
படம் : நானும் ஒரு பெண்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கண்ணதாசன்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா நல்ல பாடல்.. வி.குமாரின் இசையமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்காக, நான் இணைக்கும் இன்றைய பாடலாக,ஒலிப்பது  ' ஆட்டுவித்தால் யாரொருவர், ஆடாதாரோ கண்ணா? என்ற பாடலாகும்! எம். எஸ். வியின் இசையமைப்பில், டி.எம்.எஸ்சின் இனிய குரலில், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அழகிய நடிப்பில், அவன் தான் மனிதன் திரைப்படத்திலிருந்து........

 

  • கருத்துக்கள உறவுகள்

"கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்..

அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்.."

 

இப்படியான எளிமையான, நயமான வரிகள் கவிஞருக்கு எங்கிருந்துதான் கிடைக்குமோ என்று வியப்பதுண்டு..! :D

 

சுருதிப்பெட்டியில் கைவைத்தால் இசைராஜாவுக்கு சுரக்கோர்வைகள் கொட்டுவதுமாதிரி, கவிக்கு கவிஞர்தான்.. நன்றி புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள். சிறிக்கும் நுணாவுக்கும் புங்கைக்கும் நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாக ஒலிப்பது,' நினைத்ததை முடிப்பவன்' படத்திலிருந்து, டி.எம்.எஸ்.சின் இனிய குரலில், எம்.ஜி.ஆரின், நெஞ்சை அள்ளும் நடனத்தில்,

'பூமழை தூவி வசந்தங்கள் ..........!!!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.