Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தலைமையை மீட்க, அமெரிக்கா அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல்

Featured Replies

புலிகளின் தலைமையை மீட்க, அமெரிக்கா அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல் [ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கார்வண்ணன் ]

us-aircraft.jpgபோரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

“ஒரு கட்டத்தில், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்து, விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வெளியேற்றுவதற்கு தனது வளங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமான கவனம் செலுத்தியது. 

வன்னியின் கிழக்குப் பகுதியில் தரைப்போர் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியது. 

விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களை மீட்பதற்கான வழிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆராய்வதற்கே அவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பசுபிக் கட்டளைப்பீடத்தின் சிறப்பு விமானம் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே, அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றொகித போகொல்லாகமவிடம், அப்போது அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக், இது குறித்து எச்சரித்திருந்தார்” என்றும் சாமிந்ர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20121219107470

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்ச் செய்திகள் எல்லோருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை மல்லை அதுதான் ஒருவரும் கருத்துப் பகிரவில்லை. உங்கள் சேவை தொடரட்டும்.

மல்லையூரான் ஏனைய விடயங்கள் எனில் கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அரசியல் தொடர்பான கருத்துக்கள் என வரும் போது அதில் கருத்தெழுதும்போது அவதானமாக எழுதவேண்டும். சில சமயங்களில் நாம் ஏதோ நினைத்து எழுதும் கருத்து பார்க்கும் வேறொருவருக்கு வேறு கருத்தாக பொருள்படும் அதனால்தான் கருத்தெழுத பின்னிற்கிறார்களோ என்னவோ...

 

தப்பி போகும் என்ன  யாருக்கும் இருந்து இருக்காது ஆனால் போராட்டம் தொடரவேண்டுமெனில் தலைமையும் தளபதிகளும் தப்பி இருக்க வேண்டும் என  விரும்பி இருக்கலாம்.

இவைகள் வெறும் வாந்திகளாகத்தான் எனக்குப்படுகிறது. உயர்மட்டத் தலைவர்களை சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்துக் காப்பாற்றவேண்டும். என்ற எண்ணமிருந்தால் அது நிறைவேறாதது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். சிறிலங்கா சம்மதித்திருந்தாலும் இந்தியா சம்மதித்திருக்காது. அதையும் மீறி அவர்கள் காப்பாற்றப்பட்டிருந்தால் சிறிலங்கா அருசும் பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும். இவ்வாறு செய்வதைவிட அமெரிக்கா போரை நிறுத்துவதற்கு வழிசெய்திருக்கலாம். ஆகவே இவைகளெல்லாம் பம்மாத்துச் செய்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தடைவிதித்த இயக்கத் தலைமையை வெளிப்படையாக காப்பாற்றப் போவார்களா? சிங்களவனின் அமெரிக்காவைக் கோர்த்துவிடும் எழுத்து இது.. :D

  • தொடங்கியவர்

தடைவிதித்த இயக்கத் தலைமையை வெளிப்படையாக காப்பாற்றப் போவார்களா? சிங்களவனின் அமெரிக்காவைக் கோர்த்துவிடும் எழுத்து இது.. :D

 

இப்ப அல்ல பகிடி, இலங்கை அரசு விட இருக்கும் பகிடிகளை கேட்கவேண்டுமாயின், வரும் மார்ச் வரை காத்திருந்து,  அதில் ஐ.நாவில் ஏதாவது நடக்க வேண்டும். அப்போதுதான் சுவையான பகிடிகள் வெளிவரத்தொடங்கும்.

நெடுக ஒரு படி சறுக்கல இருக்கிறது. கெரி வராமல் சுசான் வந்திருந்தால் இலங்கை சற்று திக்குமுக்காடியிருக்கும். ஆனல் கெரி சமாதான பாதைகளை கொஞ்சம் நெருக்குவாராக இருக்கும். 

சுமேரியர் அக்காவும், மையூரன் சொல்வது உண்மைதான். எல்லோருடைய கருத்துக்களுக்கும் நன்றி.

 நாங்கள் எழுதுகிறோம் வாசிக்கின்றோம்.இதுவரையில் எங்கழுக்கு தெரியாதா?என்ன நடந்தது என்று.அல்லது ஏன் இன்னும் இன்னும் இலங்கை அரசு இவ்வளவு காட்டமாகவிருக்கிறது. நேற்றுக்கூட இந்தியாவில் இருவரைக்கைது செய்தார்கள்.கே பியை ஏன் இப்படி சுகபோகமாக வைத்திருக்கிறார்கள்.மழை வந்தால் காளான் முளைக்கும் தான் இதில் மாற்றமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.