Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி அனுமதி கோரும் டில்லி பெண்கள்

Featured Replies

டில்லி மாணவியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமானது இந்தியாவில், பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை கோரும் நிலைமையை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

 

கடந்த டிசெம்பர் மாதம் 16 திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவப்பீட மாணவி ஒருவர், ஆறுபேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.


இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி மாணவி 13 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இச்சம்பவத்தை தொடர்ந்து, 274 பெண்கள் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் கோரி,  டில்லி பொலிஸ் பிரிவின் துப்பாக்கி பிரிவு திணைக்களத்திற்கு விண்ணப்பத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இதற்கான அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தப்படுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

'சம்பவம் இடம்பெற்ற அன்று 1,200 இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. இவர்களில் சராசரியாக தொழில்புரியும் பெண்கள் மட்டும் அடங்கவில்லை. மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்கின்றனர். இவர்கள் குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்தவர்களாக உள்ளனர். அவர்கள் துப்பாக்கி பெறும் செயன்முறையை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்' என டில்லி பொலிஸ் அதிகாரி மேலும்  தெரிவித்துள்ளார்.


இதேவேளை, துப்பாக்கி பெரும் முறைமை குறித்து அறிந்துகொள்வதற்காக நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் டில்லி கமிஷனர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.

 

'ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உறுதியாகும் பட்சத்தில் துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படும்' என இதன்போது கூறினோம். ஆனால், எங்களது பதிலில் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை.


இதற்கு அவர்கள், 'நகரத்தில் நீண்ட பொதுப்பயணம் என்பது பாதுகாப்பாக இல்லை' என கூறியுள்ளனர். 'டில்லி வீதிகளில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கடிதமொன்றை தருமாறு அவர்களுக்கு கூறினோம்' என பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 

தற்காப்பு வகுப்புகளுக்கு செல்லும் 20 வீத பெண்கள்   

இதேவேளை மேற்படி சம்பவத்தை தொடர்ந்து, 20 வீதமான பெண்கள் தற்காப்பு பயிற்சிக்கு செல்வதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

'டில்லியில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக துப்பாக்கி அனுமதிபத்திரங்கள் வழங்கப்படுகின்றன. பெண்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கு உண்மையான காரணங்கள் இருக்கலாம்' என இந்தியாவின் தேசிய துப்பாக்கி உரிமை சங்கத்தின் பெண் அங்கத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

உண்மையில், பாதுகாப்பாற்று வாழும் தமது பிள்ளைகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் தயாராக உள்ளனர். டில்லி நகரில் 20 வீதமான பெண்கள் தற்காப்பு பயிற்சிகளுக்கு செல்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

துப்பாக்கி அனுமதி கோரி கடந்த இரண்டு வருடங்களில் 800 விண்ணப்பப்படிவங்கள் பெண்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக டில்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு 320 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தொகையானது 2011 ஆம் ஆண்டு 500 ஆக அதிகரித்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/55980-2013-01-01-09-01-28.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கனே துவக்கு வேண்டாம் ஆன்மீகம் வேணுமெண்டுறான்.ஆன்மீகங்களோ துவக்கு வேணுமெண்டுதுகள். :D

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 'கப்சிக்கம் ஸ்பிரே" காணும்!

 

7b6c8cae-a9fe-498b-83d9-d900355e5adf_S_s

 

இந்தியக் கணவனை நினைக்கப் பாவமா இருக்கு! :o  

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே... கணவன் மீதுள்ள ஆத்திரத்தில், வரதட்சணை புகார் கொடுப்பவர்கள், துவக்கையும்.. கொடுத்தால், தெருவுக்குத் தெரு, தினமும் கருமாதி தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

இனி shut up  க்கு பதிலாக  இந்தி(ய) பெண்கள் துவக்கை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.