Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் மீண்டும்: புது வருடத்தைக் கொண்டாட சென்ற மாணவி மீது வல்லுறவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By General 

2013-01-02 14:44:33  

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்யில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

 

தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும் 17 வயது மாணவியொருவரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 

குறித்த மாணவியை அவரது ஆண் நண்பரொருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் தனது நண்பருடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

 

புது வருடத்தைக் கொண்டாட வருமாறு நண்பர் விடுத்த அழைப்பின் பேரில் அவருடன் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேஸ்புக்கின் மூலமே குறித்த வாலிபரின் தொடர்பு தனக்கு கிடைத்தாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை டெல்லி பொலிஸார் கைது செய்து பின்னர் தீகார் சிறையில் அடைத்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/world.php?vid=389

இத்தனை உலக கவனத்தின் பின்னரும், வல்லுறவுகளின் தலைநகரம் என்ற பெயரை டெல்லி தக்கவைத்துள்ளது  :( 
புது வருட கொண்டாண்டத்தை இரத்து செய்த சோனியா சொல்லை இந்த மாணவி நிகழ்விற்கு என்ன செய்யப்போகின்றார் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அங்கே சகஜம்.. :rolleyes:  இந்தியாவில் பெண்கள்தான் கவனமாக இருக்க வேணும்.. நிலைமை அப்பிடி..

 

ஆனால் இந்த விடயம் பெரிதாக வெளியே வராது. பெண்ணைக் கொலை செய்யவில்லைதானே.. :unsure::D

புதுச்சேரியில்பிளஸ் 2 மாணவி 4 பேர் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள தொத்தபெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளியான இவரது மகள் அங்குள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.நேற்று வில்லியனூர் அருகேயுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு,தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 4 பேரும், மாணவியைவிழுப்புரத்திற்கு கடத்தி சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.

 

இந்தமாணவி, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயக்கமடைந்து கிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். இதன் பேரில் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள், அந்த மாணவியை அழைத்து வந்து, ராஜீவ் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5-4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2-085200246.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கிறதில்லையா? Australia Tasmania பகுதியில் கூட புதுவருட கொண்டாட்டத்தின் போது ஒரு பாலியல் வல்லுறவு நடந்திருக்கு ஆக இது எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனை தான் என்ன யாழ்ப்பாணத்தில் நடந்தால் அப்பிடியே அமுக்கி போடுவார்கள் சில பெண்கள் சம்பவங்களை துணித்து வெளியே சொல்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தயாவில் பெண்கள் கருவிலே கொல்லப்படுவதையும் பெண் குழந்தை எதோ வேண்டத்தகாத ஒண்டு என்று நினைப்பதையும் நிறுத்தவேண்டும் ஆண்களின் எண்ணிக்கை பெருக பெருக பெண்களின் எண்ணிக்கை குறைய குறைய இன்னும் இன்னும் இப்பிடியான சம்பவங்கள் நடக்கத்தான் போகின்றன...,மற்றது எதோ திருமணத்துக்கு முன்பு உறவு கொள்வது எதோ கொலைக்குற்றம் என்ற சிந்தனை போக்கிலும் மாற்றம் அவசியம்

இது எங்கும் நடப்பதுதான். அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் குளிர் பாணங்களில் வில்லைகளை போட்டு சக நட்பு மாணவிகளை பலாத்காரம் செய்துவிடுவதாகக்க கூறி, நண்பர்கள் குளிர்பாணம் தந்தால் போத்தல், கான் என்பவற்றிலிருந்து நேராக பெற்று மாணவிகளை பருகும் படி அறிவுரைகள் கூறுகிறார்கள். இந்தியாவில் விடையங்கள் அளவுக்கு அதிகமாக சில நேரங்களில் அரசிலாக்கப்படுகின்றன. இந்திய பத்திரிககள் பணம் வேண்டுமாயின் சிலசமையங்களில் விளம்பரங்களையும் நாடவேண்டும்.

 

எந்தப் போக்கில் மாற்றம் வந்தாலும், காசுகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் வராத ஆண்கள் செய்யும் களவுகளுக்கு சிறைக்கு போயாக் வேண்டும். உலகின் பிரபல பாடகி பிரிட்னி  ஸ்பியேர்ஸ் 50$ மேக்கப் பொருளை திருடினார் என்பது கோடுவரைக்கும் சென்றது.  அங்கே பிரிட்னி 50X50$ களுக்கு மேலே செலவளித்து வழக்கை மீளப்பெற்றுவிட்டார்.

 

மேலும் பாலியல் வலோகாரம் செய்தபின் கொலை செய்வது குற்றமாகாது. ஆன்மா மரணம் எய்துவதில்லை. பழைய பாவித்த, அழகில்லாத மேனியை களைந்துவிட்டு புதிய பாவிக்காத மேனியுடன் இளமை கொலுவிருக்க மறுபிறப்பெடுக்கும்.

 

 

 

 

Edited by மல்லையூரான்

மற்றவர்கள் பார்த்து திருந்தும் அளவிற்கு தண்டனைகள் கடுமையாக அமையவேண்டும் 110 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் இது ஒரு சவால்லாகவே அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் நடந்திருப்பதால்...........

நல்லவற்றை எடுத்துக்கொள்ளும்  பழக்கம்  தமிழரிடையே இல்லை  என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை தோனிக்கலாச்சாரம் தான் காரனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.