Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி

 

 

சென்னை: அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எனக் கூறவில்லை; அப்படியே கூறினாலும் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி உள்ள கருணாநிதி, பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று குழப்பமாகவே கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கட்சி வளர்ச்சிக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதா?
 

கூட்டணி பற்றியும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதையும் மனதில் வைத்து செயல் படுவோம்.

இந்த கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதா?

அவர் மாவட்ட செயலாளர் அல்ல.

உங்களுக்கு பின் மு.க.ஸ்டாலின் என்று நீங்கள் பேசியதற்கு திமுக மடம் அல்ல என்று மு.க.அழகிரி கூறி இருக்கிறாரேப

 பாமகவில் இருந்து 2 ஆயிரம் பேர் திமுகவில் சேர்ந்த போது அவர்களை வரவேற்று நான் பேசிய போது சமுதாயத்தை பற்றித்தான் பேசினேன். அந்த சமுதாய பணியில் நானும் என்னுடைய குடும்பத்தாரும் என் அளவுக்கு ஈடுபட்டதை கோடிட்டு காட்டினேன். அந்த சமுதாய பணியை எனக்கு பிறகு என்னை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முற்படுவார் என்று குறிப்பிட்டேன்.

திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று நான் குறிப்பிட்டதாக  சில ஏடுகள் விஷமத்தனமாக செய்தி வெளியிட்டன.அந்த விஷமத்தை நம்பிக்கொண்டு யாராவது எதிர் கருத்து தெரிவித்திருந்தால் அது அவர்களுடைய புரியாமையைத்தான் காட்டும்.

திமுக ஒரு முதன்மையான கட்சி. அந்த கட்சியில் உங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் என்று கூறுவதில் தவறு இல்லையா?

நான் பேசும் போது திமுகவுக்கு அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பேசியதாக வெளியிட்டுள்ளார்கள். திமுக என்ற அரசியல் இயக்கத்துக்கு எனக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வருவார் என்று நான் பேசியதாக உங்களால் எடுத்துக்காட்ட முடியுமா? அப்படியே நான் சொல்லி இருந்தாலும் அதில் என்ன தவறு? 

மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் வரக் கூடாது என்று இப்போதே தடுப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அது கடுப்பை ஏற்படுத்தும். திமுக அரசியல், சமுதாயம் இரண்டையும் இணைத்து செயல்படும் கட்சி. அன்று பாமகவில் இருந்து 2 ஆயிரம் பேர் திமுகவில் வந்து இணைந்த நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தை பற்றி நான் பேசும் போது என்னுடைய சமுதாய முன்னேற்ற சமத்துவ உணர்வுகளுக்கு எனக்கு பிறகும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபடுவார் என்று குறிப்பிட்டேன்.

திமுக தலைவராக எனக்கு பிறகு அவர் வருவார் என்று அன்று நான் கூறவில்லை. திமுக ஒரு ஜனநாயக இயக்கம்.கட்சி தேர்தலில் குறிப்பாக தலைமை கழக தேர்தலில் தலைவராகவோ,பொதுச் செயலாளராகவோ ஒருவர் நிற்க வேண்டும் என்றால் அதை ஒருவர் முன்மொழிந்து பொதுக்குழுவில் தான் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வருமேயானால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன் மொழிவேன்.
 

 

மு.க.ஸ்டாலின் அலை அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளதே?

கழக சட்ட திட்டத்தை பின்பற்ற வேண்டும்.

அழகிரியும் தலைவர் பதவியை விரும்புகிறார்.ஸ்டாலினும் தலைவர் பதவியை விரும்புகிறார்.இதில் ஸ்டாலின் பெயரை முன்னிலைப்படுத்துவது தவறு இல்லையா?
 

யார் யார் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் பொதுக் குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.தேர்தல் முறைப்படி நடைபெறும்.
 

அதிமுக பொதுக்குழுவில் செல்லாக்காசும், செல்லரித்த காசும் கூட்டணி வைக்கப் போவதாக பேசி இருக்கிறார்களே?

நான் கள்ளக்காசை பற்றி பேச விரும்பவில்லை.

 தேமுதிகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா?

 தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே. இவ்வாறு கருணாநிதி  கூறினார்.

 

 

 

கருணாநிதியே ரசிக்கிறாரா?

 

இதனிடயே கருணாநிதி இவ்வாறு குழப்பமாக பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்த திமுக புள்ளி ஒருவர்,  " மு.க. ஸ்டாலினை திமுகவின் அடுத்த தலைவராக்க வேண்டும் என்று தலைவர் விரும்புவது வெளிப்படையான ஒன்று என்றாலும், நாடாளுமனற தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற எண்ணத்திலேயே அதனை திட்டவட்டமாக அறிவிக்க தயங்கி கொண்டிருக்கிறார்.

 

மேலும் தனது கடைசி மூச்சுவரை திமுக தலைவர் பதவியிலிருந்து விலகி அதனை வேறு யாரிடமும் - அது தனது மகனே என்றாலும் - ஒப்படைக்க அவர் தயாராக இல்லை என்பதை இரு தினங்களுக்கு முன்னர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்ட வார்த்தை மூல்ம் தெளிவுபடுத்திவிட்டார் தலைவர்

 

கூடவே திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து  மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே  இவ்வாறு  தொடர்ந்து போட்டி இருப்பதுபோன்ற சூழல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தால்,  அப்பதவிக்கு தனது குடும்பத்தை தவிர்த்த வேறு ஒருவர் யாரும் போட்டியிடுவது குறித்து நினைத்தே பார்க்கமாட்டார்கள்.அப்படி ஒரு எண்ணமும் அவர்களுக்கு வராது.

 

திமுக ஒன்றும் மடமல்ல...ஜனநாயகம் இயக்கம் என்று தலைவர் சொல்லியிருக்கிறாரே; தலைவர் பதவிக்கு நாமும் போட்டியிட்டால் என்ன? என்று கழக முன்னோடி யாருக்காவது இலேசாக  ஒரு ஆசை வந்தால்கூட, அண்ணன் தம்பியே அடித்துக்கொண்டிருக்கும்போது, நாம எங்கே போட்டியிடுவது? என்ற எண்ணம் ஏற்பட்டு அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்.

 

அந்த எண்ணத்தில்தான் தலைவர் இவ்வாறு ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே தலைவர் பதவிக்காக  போட்டி என்பதுபோன்ற செய்தி வருவதை ரசிக்கிறாரோ என நினைக்கிறேன்"  என்றார்,

 

http://news.vikatan.com/?nid=11909#cmt241
 

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி
 
130106103804_karunanidhi_stalin_dmk_tami

கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைவர் யார் என்ற போட்டி ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையில் இருந்துவருவதாக செய்திகள் இருந்துவருகின்றன.

திமுக தலைவர் மு கருணாநிதி தனக்குப் பின் கட்சியின் அடுத்த தலைவராக தனது இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் பொறுப்பேற்கவேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

 

சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கோரியிருந்தார்.

 

 

தனது வாரிசு ஸ்டாலின்தான் என மீண்டும் கருணாநிதி குறிப்பிடுகிறார் என்று ஊடகங்கள் அப்போது செய்திவெளியிட்டன.

கருணாநிதியின் மூத்தமகன் அழகிரியோ, தனது தந்தை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி "திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட" எனக் கூறினார்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உரியமுறைப்படியே தேர்ந்தெடுக்கப்படவேண்டும், அவ்வகையில் அடுத்த தலைவரை முன்மொழியும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமானால் ஸ்டாலினைத் தான் முன் மொழிவேன்" என்றார்.

 

அவ்வாறு ஸ்டாலின் அடுத்த தலைவராகவேண்டுமென ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆலோசனை கூறியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

 

ஆனால் தற்போது நடைபெறவிருக்கிற உட்கட்சித் தேர்தல்களிலேயே ஸ்டாலின் தலைவராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

"கட்சி முடிவுசெய்யும்" என்று மட்டும் கூறினார்.

 

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு முன்பு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கருணாநிதி கூறினார்.

 

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "அழகிரி விருப்பப்பட்டால், அவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாமே" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

அந்த அளவில் கருணாநிதி தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்பதை உறுதிசெய்துவிட்டார் எனலாம்.

அழகிரி ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

ஸ்டாலின் தலைவராவதில் தனக்கொன்றும் பிரச்சினையில்லை என கருணாநிதியின் மகள் கனிமொழியும் கூறியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/01/130106_dmksuccession.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை தலவராக்குவது நமக்கு நல்லது.. :rolleyes:

ஸ்டாலினை தலவராக்குவது நமக்கு நல்லது.. :rolleyes:

 

கருணாநிதியை விட நல்லது :D

திமுக பிரிவது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும் காலம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன்./

  • கருத்துக்கள உறவுகள்
கருணாநிதியை விட நல்லது :D

 

ஓம்.. அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என்று அடிபட்டு கட்சி உடைந்துவிட்டால் உருப்படியான இன்னுமொரு கட்சி வளர வாய்ப்பு உள்ளது. :D

ஓம்.. அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என்று அடிபட்டு கட்சி உடைந்துவிட்டால் உருப்படியான இன்னுமொரு கட்சி வளர வாய்ப்பு உள்ளது. :D

 

கருணாநிதி அவர்களின் இறப்பிற்கு பின்னர் இது நிச்சயம் நடக்கும்  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி

கிழடுக்கு சுண்ணப்பு இடிக்கிற சத்தம் இப்பவே கேக்க வெளிக்கிட்டுது..... :icon_idea:

கருணாநிதி அவர்களின் இறப்பிற்கு பின்னர் இது நிச்சயம் நடக்கும்  :icon_idea:

 

ஊரில 2  விஷர் நாய்கள் கடிபட்டு கடசியில் பக்கத்தில் நடந்து போவோருக்கு கடி என்பது போல்  அண்ணன் தம்பி மோதல்  பல உண்மையான தொண்டர்களின் அழிவில் முடியலாம்.

ஊரில 2  விஷர் நாய்கள் கடிபட்டு கடசியில் பக்கத்தில் நடந்து போவோருக்கு கடி என்பது போல்  அண்ணன் தம்பி மோதல்  பல உண்மையான தொண்டர்களின் அழிவில் முடியலாம்.

 

உண்மையான குண்டர்கள் உண்டு.

நிம்மதியிழந்து தன் கடைசி நாட்கள் இவன் கழிக்கனும், வேஷதாரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.