Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

school%2Bgirl.jpg

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை 
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள் 
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட 
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து 
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத் 
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

வகுப்பறையினுள் 
வந்து விழுந்த நட்சத்திரங்கள் 
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை 
உம் கிரணங்கள்

எனது குறைபாடுகளை நீங்கள் 
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில் 
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப் 
புறந்தள்ளிவிட்டு 
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும் 
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை

கற்றுத் தாருங்களெனக்கு

கொம்புகளும் விசிறிகளுமாகப் 
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள் 
வீற்றிருந்தவாறு 
தீராச் சிக்கல் தரும் 
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்

எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை 
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற 
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்

நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால் 
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?

என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும் 
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின் 
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?

-----------

(நன்றி:கலைமுகம் இதழ் 51)

ஃபஹீமாஜஹான் 

நல்ல கவிதை. சில ஆசிரியர்களுக்கு படிப்பிக்கவே தெரியாது, வீட்டுப் பிரச்சனைகளை மாணவர்கள் மீது காண்டுவார்கள், அல்லது பக்கத்து வகுப்பு ஆசிரியை / ஆசிரியருடன் சல்லடிப்பார்கள். புனிதமான தொழில், அன்பாக பிள்ளைகளுடன் பழகி படிப்பிக்க வேண்டியவர்கள், பிள்ளைகளை படிப்பில் வெறுப்பைதான் ஊட்டுகின்றார்கள்,

 

இவர்கள் பார்க்க வேண்டிய படம் சாட்டை

 

 

 

 

 

சமூக அக்கறையுடன், தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வந்திருக்கும் படம் இந்த சாட்டை..! முதல் நன்றி பிரபு சாலமனுக்கு.. இப்படியொரு அற்புதமான படத்தினை தயாரித்தமைக்கும்.. தனது சீடனுக்கு, புதுமுக இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கும்..!
 
 
saattai-posters.jpg
 
ஒழுக்கம், கட்டுப்பாடு, படிப்பு இது எதுவுமே இல்லாத திருவண்ணாமலை வந்தாரங்குடி அரசுப் பள்ளிக்கு மாற்றலாகிவரும் அறிவியல் ஆசிரியர் தயாளன், மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பள்ளியைத் தலைகீழாகப் புரட்டி.. ஆசிரியர்கள், மாணவர்கள் துணையுடன் பள்ளியை முன்னணிக்கு கொண்டு வருவதுதான் இந்தச் சாட்டை..!

சிறந்த திரைக்கதையுடன், கொஞ்சம் நாம் பார்த்து பழகிப் போன சீரியல் டைப் காட்சிகளுடனும், தேர்ந்த நடிப்புடனும் இந்தச் சாட்டை பலருக்கும் எதிராக தனது சாட்டையைச் சுழற்றியிருக்கிறது..!

வட்டிப் பணம் தராதவர்கள் என்று நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டி வைக்கும் அளவுக்கு தரம் கெட்டுப் போயிருக்கும் பள்ளி என்பதை கனி வரும் முதல் காட்சியிலேயே உணர்த்திவிட்டார் இயக்குநர்.. பள்ளியின் அலங்கோல நிலை.. கக்கூஸின் அவலம்.. மாணவர்களின் தறிகெட்டத்தனம்.. ஆசிரியர்களின் பொறுப்பின்மை என்று வரிசையாக பலவும் இருப்பதை சில குறிப்புகள் மூலமாகவே உணர்த்திவிட்டு மிக வேகமாக தயாளனை பேச வைத்திருக்கும் அந்த்த் திரைக்கதையை படம் முடிந்த பின்புதான் யோசிக்கவே முடிந்தது..!

தனது முதல் கூட்டத்திலேயே தயாளன் அந்தப் பள்ளியைப் பற்றிப் பேசுவதும்.. தயாளனின் அறிமுகத்திலும், பேச்சிலுமே ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, தயாளன் மீது தனது பார்வையைச் செலுத்துவதும் சீரியல் டைப் காட்சிகள்தான் என்றாலும், கதையின் ஓட்டத்தில் எதுவுமே தெரியவில்லை..!

சமுத்திரக்கனி அலட்டல் இல்லாமல் வெகு இயல்பாக தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..! ஒரு ஆசிரியருக்கு முதல் தேவை நல்ல குரல்.. கம்பீரமான தோற்றம்.. உறுதியான பார்வை.. இவை மூன்றுமே கனியிடமிருந்து இயக்குநருக்கு கிடைத்திருக்கிறது..!

தம்பி ராமையா போன்ற வாத்தியார்கள் இன்றைக்கும் தனியார் பள்ளிகளில்கூட இருக்கிறார்கள்..! “படிச்சா படி.. படிக்காட்டி போ..” என்று சொல்லும் இந்த அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அந்தக் கேரக்டருக்கு தம்பி ராமையாவை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.. ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற மீட்டிங்கில் இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு ஒரு ஆக்சன் கொடுக்கிறார் பாருங்கள்.. ஹாட்ஸ் அப்.. அசத்தல்..!

டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் காட்சியில் அவருடைய நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்காக இருந்தாலும் ரசிக்கக் கூடியதே. பள்ளியில் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்தாலும் தனது அடிப்பொடிகளை வைத்து அவர் நடத்தும் வித்தைகள் சுவாரஸ்யமானவை.. தன்னுடைய ஈகோவை ஒரு மனிதன் எப்போதும் கைவிட மாட்டான் என்பதற்கு தம்பி இராமையாவின் கேரக்டரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும், கிளைமாக்ஸில் இருக்கும் திடீர் திருப்பம், வழக்கமான சினிமாத்தனமாக திரும்பி அதுவரையிலும் தம்பியின் கேரக்டர் மீதிருந்த ஒரு ஈர்ப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது என்பதும் உண்மை..

பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவின் வழக்கப்படி பள்ளியென்றாலும், காதலை காட்டியாக வேண்டுமே என்பதற்காக யுவன், மகிமா காதலையும் காட்டியிருக்கிறார்கள்.  எங்கே இந்த இனக் கவர்ச்சியை காதல் என்று சேர்த்து வைத்துவிடுவார்களோ என்ற பயத்துடன் இருந்தேன்.. நல்லவேளை.. இறுதியில் எந்த முடிவும் சொல்லாமலேயே முடித்துவிட்டார்கள். அதுவரையிலும் சந்தோஷம்தான். ஆனாலும் இவர்களது காதலுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். “காதலிக்கு பிடித்ததுபோல் நடந்து கொள். நல்லா படிச்சாத்தான் அவளுக்குப் புடிக்கும்னா அதையே செய்..” என்கிற சமுத்திரக்கனியின் அட்வைஸ்.. அனைத்து காதல்களுக்கும் பொருத்தமானதுதான்..!

“கபடி கபடியை எழுதி, அதனை படி படி என்று மாற்றுவது.. ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பழகுங்கள் என்பது.. தோப்புக்கரணத்தில் இருக்கும் ஒரு அறிவியலை வெளிப்படுத்துவது.. குறைந்த மார்க் எடுத்தாலும், போன தடவைக்கு 2 மார்க் கூடுதல் என்றதால் அதனை பாராட்டுவது.. புத்தகத் திருடன் அட்டையுடன் சுற்றும் மாணவனை அன்புடன் கண்டிப்பது.. லேடீஸ் பாத்ரூமை எட்டிப் பார்த்த குற்றத்திற்காக தண்டனை பெறும் சிறுவனுக்காக பி.டி. டீச்சருடன் சண்டையிடுவது.. சத்துணவை கடத்தும் வாத்தியாரையும், நூலகத்தை திறக்காத நூலகரையும் மீட்டிங்கில் போட்டுத் தாக்குவது.. பாலையா வீட்டில் வைத்து தம்பி இராமையாவை சாத்துவது..” என்று படத்தில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை..!

செய்யாத குற்றத்திற்காக தான் அடி வாங்கியும், மாணவர்களின் எழுச்சியை தடை செய்வது.. மகிமாவின் வீட்டிற்குச்  சென்று அவளை மீண்டும் படிக்க அனுப்பும்படி சொல்வது.. ஒரு பாடல் காட்சியில் மாணவர்களின் மனதில் இடம் பிடிப்பது இதெல்லாம்.. பழமையான சினிமா பாணிதான் என்றாலும்,  வேறு வழியில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..! கிராமப் புறங்களில் இன்றைக்கும் இந்தக் காதலினால் பல பெண்களின் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.. குடும்பமே முக்கியம் என்ற சூழலில் இயங்கும் நமது கலாச்சாரம் மாறினால் ஒழிய.. இது போன்ற சம்பவங்களை நிறுத்தவும் முடியாது..!

ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, சமுத்திரக்கனியின மனைவி சுவாசிகா, மகிமாவின் அப்பா, மகிமாவைத் தொடும் வாத்தியார், தம்பி இராமையாவின் அல்லக்கை ஆசிரியர்கள்.. மாணவர்களின் காதல் கவிதையை சந்திக்கும் மிடில் ஏஜ் ஆசிரியை.. கோபக்கார பி.டி. டீச்சர், ஸ்கூல் பெஞ்சை வீட்டு விசேஷத்துக்கு எடுத்துச் செல்லும் ஆட்கள்.. என்று பலருமே சுவாரசியமான கேரக்டர்ஸ்..! சுவாசிகா மருத்துவமனை வாசலில் நின்று பேசும் அந்தக் காட்சியும், அதனை எடுத்தவிதமும் நன்று..!

கனியின் இறுதியான முடிவு எதிர்பார்த்துதான் என்றாலும், அதனை வைத்து அவர் பேசும் பேச்சும், அந்தக் காட்சிகளும்.. இடுப்பில் கத்தியுடன் மேடைக்கு வந்து அமரும் தம்பி இராமையாவின் ஆக்சனும், பின்பு அவருடைய மனம் நெகிழ்தலும்.. படத்தின் தன்மையை மாற்றியமைத்தாலும் ஜீரணிக்க வேண்டியதுதான்..!

பள்ளிக்கூடத்தைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், கொஞ்சமும் சலிப்பு வராத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்..! யுவன்-மகிமா காதல் காட்சிகளும் படத்தினை வேறு பக்கம் நகர்த்திக் கொண்டு போய்விடுமோ என்ற பயத்துடன் இருக்கும்போது மகிமா-போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தவுடன் ஜெட்வேகத்தில் பறக்கிறது..!

இமானின் இசையில் “ராங்கி.. ராங்கி” என்ற பாடலும், “சகாயனே” பாடலும் கேட்கும்படி இருந்தது.. மற்றபடி பின்னணி இசையே தேவையில்லாத படமாக இதனை எடுத்துக் கொடுத்திருப்பதால் கஷ்டமே படாமல் பணியாற்றியிருக்கிறார் இமான்..!

வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று, தமிழ்ச் சினிமா முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் சூழலில்,  ஒரு சமூக அக்கறையுடன்.. கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் புரியும்வகையில் ஒரு சிறந்த படத்தை இயக்கிக் கொடுத்தமைக்காக இயக்குநர் அன்பழகனுக்கு எனது நன்றிகள்..!

சாட்டை - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! 



Read more: http://truetamilans.blogspot.com/2012/09/blog-post_23.html#ixzz2I0dAbPKA

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து விட்டேன்  அருமையான  படம்.

பகிர்வுக்கு நன்றி நுணாவிலன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு நுனாவிலான்.

வந்தி நல்ல படம் என்றுவிட்டு அரைவாசிக் கதையை முதலே கூறினால் எப்படிப் படம் பார்ப்பது ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.