Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம்: வாசு யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம்: வாசு யோசனை
வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:48 0 COMMENTS
-கெலும் பண்டார
 
தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இந்த யோசனைக்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம்: வாசு யோசனை
வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:48 0 COMMENTS
-கெலும் பண்டார
 
தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இந்த யோசனைக்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

தேசீய கீதத்தின் முதலாவது வசனம், தமிழில் இருந்தால், எனக்கு ஒக்கே, வாசு! :icon_idea:

உங்களால் முடிந்தால், செய்து காட்டுங்கள்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இரு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியல் சாசன மீறலாகும் - JHU
25 ஜனவரி 2013
 
இரு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பது அரசியல் சாசன மீறலாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதத்தை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடும் திட்டமானது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.
 
தேசிய நிகழ்வுகளின் போது இலங்கையின் பூர்வீக மொழியான சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
சிங்கள மொழி மட்டுமே இலங்கையிலிருந்து உருவானது எனவும், தமிழ் மற்றும் ஏனைய மொழிகள் இலங்கையில் உருவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளின் போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
 
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும், முக்கிய தமிழ் நிகழ்வுகளின் போதும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனால் தமிழ் மக்களுக்கு அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கருத்து தனிப்பட்ட கருத்து எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கட்சியின் நிலைப்பாடு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்

 

images37.jpgஇலங்கையில் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பாடப்பட்டு வரும் தேசிய கீத்த்தை, இரு மொழிகளையும் கலந்து ஒரு புதிய வடிவிலான தேசிய கீதம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் அமைச்சின் முன் முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த இசை வடிவம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பார்வைக்கு அனுப்பபட்டு, அதன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

இந்த இருமொழி கலந்த தேசிய கீதம் அமலுக்கு வர, இலங்கையில் ஒரு அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படலாம் என்று கூறிய அமைச்சர் நாணயக்கார, நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை இப்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன் தேவை குறித்து விளக்கிய அவர், இலங்கை அரசியல் சட்டத்தில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும், ஒரே இசை மற்றும் ஒரே அர்த்த்த்துடன் எழுதப்பட்டுள்ளது என்றும் எந்த சமூகம் அதைப் பாடுகிறது அல்லது கேட்கிறது என்பதை வைத்து சிங்களம் அல்லது தமிழில் பாடப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

 

இது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஏற்ப மொழிவாரியாக பாடப்படாமல், இரு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அவர் கூறுகிறார்.

 

தேசிய நிகழ்வுகளில் இருமொழிக் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதமே பாடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். அது தேச ஒற்றுமைக்கு உதவும் எனவும் அமைச்சர் நாணய்க்கார கூறுகிறார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் தேசிய கீதம் சிறிலங்கா மாதா என பாடப்படுகிறது இதனை மாற்றிப்பாடக் கூடாது -
25 ஜனவரி 2013
 
தேசிய சுதந்திர முன்னணி
இலங்கையின் தேசியக் கீதத்தின் சில பகுதிகளை தமிழ் மற்றும் சிங்களத்தில் பாட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு செய்துள்ள பரிந்துரைக்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தேசிய கீதத்தை தமிழிலும் சிங்களத்திலும் கொண்டதாக உருவாக்க வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளதாக நேற்று ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதை அடுத்து தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியமடைந்துள்ளதாக அந்த முன்னணியின் செயலாளர் பிரியஞ்சித் விதாரண விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் 04 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள சுதந்திர தின வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழலும் சிங்களத்திலும் கலந்து பாட தமது அமைச்சு ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்திருந்தாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
இலங்கையின் தேசிய கீதம் சிறிலங்கா மாதா என பாடப்படுகிறது. இதனை மாற்றிப்பாடக் கூடாது என இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமாயின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெருபான்மை பலம் அல்லது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
இவ்வாறான நிலையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7வது பிரிவில் கூறப்பட்டுள்ளது போல் அல்லாது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார செயற்படுவது குறித்து தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியமடைந்துள்ளது.
 
தேசிய ஒருமைப்பாட்டுக்கு இப்படியான குறுகிய செயற்பாடுகள் மூலம் வழியை ஏற்படுத்த முடியாது. இதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் அன்னியோன்யா நம்பிக்கை உறுதிப்படுத்த நீண்டகால அடிப்படையிலான வேலைத்திட்டம் அவசியம். இப்படியான சூழ்நிலையில், பொறுப்பற்ற வகையில் செயற்படுவதன் மூலம் தேசிய ஐக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தேசிய கீதத்தில் தமிழ்மொழியை சேர்ப்பதற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பு
26 ஜனவரி 2013
 
தேசிய கீதத்தில் தமிழ்மொழியை சேர்ப்பதற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.தேசிய கீதத்தில் தமிழ் மொழி வசனங்கள் சேர்க்கப்பட்டால் அது அதற்கு மஹா சங்கத்தினர் எதிர்ப்பை வெளியிடுவர் என ராமன்ய பீடத்தின் தலைவர் நாபன்ன பத்மசிறி தேரர் தெரிவித்துள்ளார்.மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய கீதத்தில் தமிழ்மொழி வசனங்கள் இணைக்கப்பட்டால் அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் சகல இன சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் 1940ம் ஆண்டு தேசிய கீதம் உருவாக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் அனைத்து மக்களும் தற்போதைய தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பதாகவும் புதிதாக மாற்றம் செய்வதனால் குழப்ப நிலைமைகள் ஏற்படும் எனவும் பத்மசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள தேசிய கீதத்தின் பெரும்பாலான வரிகள் எனக்குத் தெரியாது!
வாழ்நாளில் பாடியதும் இல்லை!!
இனிப் பாடப் போவதும் இல்லை!!!

தமிழையும் சிங்களையும் கலந்துபாடினால் ஒற்றுமை அதிகரிக்கும் என எண்ணும் சிங்கள அரசியல்வாதிகள்  :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதத்தில் தமிழ் இணைக்கப்படமாட்டாது; அரசாங்கம் திட்டவட்டம்
news

இலங்கையின் தேசிய கீதத்தில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பில் சில பெரும்பான்மைக் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
 
எனினும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தேசிய கீதத்தில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் என்ன பயன் கிடைக்கப் போகிறது. யார் என்ன சொன்னாலும் தேசிய கீதத்தில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மொழிகள் அமைச்சினால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்ட தேசிய கீதம் திருகோணமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதினத்தன்று இசைக்கப்படுவதற்காக ஜனாதிபதியிடம் வாசதேவ நாணயக்கார கைளித்திருந்தார்.

எனினும் அதற்கான பதில் எதுவும் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
28 ஜனவரி 2013, திங்கள் 10:50 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=407451797528218419

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா சொல்லுறாங்கையா விட்டா நம்ம சம்மந்தன் ஒரு அறிக்கை விடுவார் இலங்கை தேசிய கீதத்தை ரகுமானின் இசையில் ரீமிக்ஸ் செஞ்சு பாடுவம்னு

  • கருத்துக்கள உறவுகள்

தேசியக் கீதத்தில் எவ்வித மாற்றங்களும்

செய்யப்பட மாட்டாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று

தெரிவித்துள்ளார். தேசியக் கீதத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது

தற்போதைய  தேவையில்லை எனவும் அதனை மாற்றுவதன் மூலம் ஏற்பட போகும் பலன்

 என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

எவர் எதனை கூறினாலும் தேசியக் கீதத்தில்

எந்த விதமான மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது. அதனை மாற்றியமைக்க

போவதுமில்லை.  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசியக் கீதத்தில் மாற்றங்களை

செய்ய வேண்டும் என்ற யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார். 

 

இதனை ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்கள தேசிய கட்சிகளும் அமைப்புகளும் எதிர்த்திருந்தன. 

 

cartoon.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியை தேசிய கீதத்தில் இணைத்தால், எதிர்காலத்தில் காட்டு மொழிகளையும் இணைக்க நேரிடும் - மேதானந்த தேரர்
[Tuesday, 2013-01-29 10:08:44]

இலங்கையில் எதிர்காலத்தில் காட்டுவாசிகளின் மொழியிலும் தேசிய கீதம் பாட நேரிடலாம் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். நினைத்த மாதிரி தேசிய கீதத்தில் புதிய மொழிகளை இணைக்கக் கூடாது. தேசிய கீதத்தில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது.எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பிரதான மொழியில் பாடப்படுவது வழமையாகும்.
 

பல இன மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தேசிய கீதத்தை பல மொழிகளில் பாடினால் அது குழப்பமாகிவிடும். தமிழ் மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுக்கவில்லை.

இவ்வாறு தமிழ் மொழி தேசிய கீதத்தில் இணைக்கப்பட்டால், எதிர்காலத்தில் காட்டு மொழிகளையும் இணைக்க நேரிடும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில், சிங்கள மொழி இணைக்கப்பட வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=74841&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதத்தை வைத்துகொண்டு அரசாங்க தீவிரவாத கட்சிகள் புதிய சர்ச்சை ஒன்றை தொடங்கியுள்ளன. - மனோ கணேசன்
[Wednesday, 2013-01-30 18:53:55]

தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது ஸ்ரீ லங்கா என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும்.
 

சிங்கள, தமிழ் சொற்கள் அடங்கிய ஒரே தேசிய கீதம் என்ற புதிய யோசனையை எனக்கு தெரிய தமிழர்கள் முன்வைக்கவில்லை. அதை முன் வைத்திருப்பது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அதை இந்த ஜெனீவா மார்ச் மாத காலப்பகுதியில் முன்வைத்து, அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார் என அவரை எதிர்த்து அரசாங்கத்தில் உள்ள தீவிரவாத கட்சிகளும், பொதுபல சேனையும் திட்டுகின்றன. இது அரசாங்க உள்வீட்டு பிரச்சினை. இன்று நிலவும் ஜெனீவா காய்ச்சல் காரணமாக மூளை கலங்கி போய் கண்டதையும் திட்டித்தீர்க்கும் இவர்களது இந்த வேலைப்பற்றி நாம் ஒன்றும்செய்ய முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தேசிய கீதம்

இந்நாட்டில் இன்று பாடப்படும் சிங்கள மொழி தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் உருவாக்கினார். அதை பின்பற்றி தமிழ் மொழியில் அதே அர்த்தங்களுடன் பண்டிதர் மு. நல்லதம்பி உருவாக்கினார். இது 1950 இல் நடைபெற்றது. இந்த இரண்டு தேசிய கீதங்களும் ஒரே தாள மெட்டிலும் அமைந்துள்ளன. இன்று பிரிந்து நிற்கும் தமிழ், சிங்களம் பேசும் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் அற்புதமான கருவி இதுவாகும். இதை புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும்.

கனடாவில், "ஓ, கனடா" என ஆரம்பிக்கும் இரண்டு தேசிய கீதங்கள் ஆங்கில, பிரான்சிய மொழிகளில் உள்ளன. பிரான்சிய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்த கீதம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது ஒரே நாட்டில், ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் இருப்பதற்கு உதாரணம்.

தென்னாபிரிக்காவில் ஒரே தேசிய கீதம் உள்ளது. இதில் ஆங்கிலம், ஆபிரிக்கன் உட்பட மொத்தம் ஐந்து மொழிகளின் வார்த்தைகள் உள்ளன. இதன்மூலம் அந்த நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் உள்ளன. இதை வேண்டாம் என சொல்லி பிரச்சினையை இவர்கள் முதலில் கிளப்பினார்கள். இவர்கள் கிளப்பிய பிரச்சினைக்கு தீர்வாக இன்று ஒரே கீதத்தில் இரண்டு மொழி வார்த்தைகள் என இவர்களே சொல்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு இன்று தேசிய கீதத்தை விட பெரும் பிரச்சினைகள் உள்ளன. தமிழருக்கு இலங்கை தேசிய உணர்வே மறந்து விட்டது. முஸ்லிம்களும் இன்று இந்த கொடுமையை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்.

இருந்தாலும் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது இலங்கை என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும்.

ஜெனீவா காய்ச்சல்

கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை காட்டித்தான் அரசு, ஐநாவில் பிணை வாங்கி வந்தது. நமது ஐநா தூதுக்குழு, கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்கிறோம் என்றும், உண்மையில் 50% அமுல் செய்து விட்டோம் என்றும் ஐநாவில் சொன்னார்கள். அப்படியானால் சரி, மிகுதி 50% தையும் அமுல் செய்துவிட்டு அடுத்த மார்ச் மாதம் வாருங்கள் என சொல்லி உலகம் நம்மவர்களை வழியனுப்பி வைத்தது. இதோ இன்று அன்று சொன்ன அந்த "அடுத்த மார்ச்" வந்துவிட்டது.

இவர்கள் இந்த ஒரு வருடத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் எதையும் அமுல் செய்யவில்லை. அது நமக்கு தெரியும். எனவே இந்த முறை அங்கு சென்று எந்த பொய்யை, எப்படி சொல்வது என இந்த அரசாங்கம் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் இன்று நமக்கு தெரியும். இந்த ஆணைக்குழு அறிக்கை ஐநா ஆணைக்குழு அறிக்கை இல்லை. இது இந்த நாட்டு அரசாங்கம் தயாரித்து உலகத்துக்கு அளித்த அறிக்கையாகும். இதுவே இன்று அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு மறந்துவிட்டது.

கடந்தமுறை இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அரச தூதுக்குழுவில் ஜெனீவா போனார். இந்தமுறை அவருக்கு பதில் சரத் சில்வா போக இருப்பதாக கதை அடிப்படுகிறது. சரத் சில்வா அங்கும், இங்கும் என்று எல்லா இடத்திலும் இருந்தவர். ஆகவே அவர் ஜெனீவாவும் போகட்டும். யார் போனாலும், உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் காத்திருக்கிறது. ஏனென்றால் உலகத்துக்கு இன்று உண்மை தெரியும்.

http://seithy.com/breifNews.php?newsID=74926&category=TamilNews&language=tamil

cartoon-of-the-day-01_02_2013-600-1.jpg

நாம் எமது தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.