Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதல்; ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும்; சரவணபவன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2e5aed0ffaec04c71592a1ebe4c4b537.jpg

பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

 
யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார்
 
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
 
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
 
 
 

வட தமிழீழ மக்களின் மூளைகளை சலவை செய்யவேண்டும் என சிங்கள அடக்குமுறையாளர்களும் அவர்களுக்கு துணை போகும் ஒட்டுக்குழுக்குழும் முனைவது பற்றி கூட்டமைப்பு உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் எதிர்பார்ப்போ அதிகம், கூட்டமைப்பின் வேலைகள் எல்லாமே ஆமை வேகத்தில் உள்ளது !  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சி தான் ஒரே வழி.

 

இங்ஙனம் யாழ்கள அரசியல் வித்துவான்கள்.

இதுதான் யாழ் வடக்கின் வசந்தத்தின் சிறந்த ஜனநாயகம்.

யார் இந்த ஈனத்தனாமான, கேவலனாமான வேலை செய்தது? என மக்கள் கேட்டபொழுது...

'ஐயோ அது சத்தியமா நானில்லை' என விழுந்தடித்து ஒருவர் கூறுகையில்

அவர் மீது சந்தேகமே வராது.

 

மேற்கோளுக்கான இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Edited by nunavilan

ஈ.பி.டி.பி தினக்குரலை அடிப்பிப்பதே தனது பத்திரிகைகள் அவிட்டுவிடும் போலிப்பிரச்சாரங்கள் மக்களை அடைந்தாலும் மற்றைய பத்திரிகைகள் இருபத்தால் மக்கள் நம்புகிறார்கள் இல்லை என்பதாலாகும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 இது முதல் தரமல்லவே. இதற்கு முன் பல தடவைகள் பத்திரிகைகள் தீ மூட்டப்பட்டும் உள்ளன.இது யாழ்ப்பாணத்தின்  அதி உச்ச ஜனநாயகத்தை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில் போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம்

 

 

media-1.jpgஉலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில் போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம் இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம். அனைத்து வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு வைச்சிருங்காங்க ஆப்பு !

இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5, 7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச் சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார் ? அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார். அவர் கணணியின் இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.

இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும் விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள் இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில் தடைசெய்யலாம். அவ்வளவுதான்.

எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத் தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான் வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப் பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப் பார்வையிடலாம். இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால் ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும் பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள முடியும்.

ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள் ! மாவீரர் துயிலும் இல்லங்கை அழித்தார்கள் ! சிலைகளை உடைத்தார்கள் ! ஈழத்தில் ஒரு விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இலங்கையில் இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும் ? இப்ப புரிகிறதா மேட்டார் ?

http://tamilseithekal.blogspot.ca/2011/11/blog-post_09.html

யாழ் மண்ணை ஆக்கிரமித்துள்ள சிங்களப் பயங்கரவாதிகளான கழிவொயில் சந்திரசிறியும், கத்துருசிங்கவும் தான் கைக்கூலி டக்லஸ் கும்பலுடன் சேர்ந்து இந்த குப்பை வேலைகளை செய்து வருகின்றனர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.