Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் மீண்டும் கொடூரம்: ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வல்லுறவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் மீண்டும் கொடூரம்: ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வல்லுறவு
Posted by: Siva Published: Friday, February 8, 2013, 9:12 [iST]
 
டெல்லி: டெல்லியில் 24 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் 24-பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லி ரோகினி பகுதி செக்டர் 16ல் வசிக்கும் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை இரவு தனக்கு பழக்கமான முகமது ஷாகில்(எ) அலியை(23) சந்திக்க ஸ்வரூப் நகருக்கு சென்றுள்ளார். அங்கு தனது 3 நண்பர்கள் முகமது இர்சாத்(30), முகமது ஆபித்(21) மற்றும் லஜ்பட்ராய் சச்தேவா(38) ஆகியோருடன் இருந்த ஷாகில் அப்பெண்ணை அருகில் உள்ள உத்தரகண்ட் காலனிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த 4 பேரும் அவரை கற்பழித்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண்ணை கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஏற்று பராரி சென்றுள்ளனர். காரில் செல்லும்போதே அவர்கள் அப்பெண்ணை மீண்டும் கற்பழித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு பராரி பகுதியில் செல்கையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளது. ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து பிற போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் கொடுத்து அந்த காரை அதிகாலை 2.53 மணி அளவில் 
போலீசார் மறித்தனர்.
அந்த பெண்ணை மீட்ட அவர்கள் அவர் கூறிய விவரத்தை வைத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது உறுதியானது. பின்னர் போலீசார் அந்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.http://tamil.oneindia.in/news/2013/02/08/india-delhi-cops-find-gang-raped-girl-car-with-tinted-glasses-169401.html

"எங்களுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு போலீசில் சிக்கியதும் பொய் சொல்கிறார்" என்று மற்றவர்கள் கூறினால் - எதை உண்மை என்று ஏற்றுக்கொள்வது?

 

இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு முக்கிய காரணம் - அண்மையில் டெல்லியை ஆட்டிப்படைத்த ஒரு சம்பவத்தின் பின்னரும் கூட தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப் படாமல் அகால வேளைகளில் சுத்தும் பெண்களும் இது போன்ற சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வி எழுவதாலே!

கடந்த சில மாதங்களில் மட்டும், படிப்பு என்று இலங்கையிலிருந்து பிறநாடுகளுக்கு சென்று, ஆண்களுடன் கண்டபடி சுத்தி அவர்களின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் தவித்த இரண்டு இளம்பெண்களின்  சம்பவங்களை கேள்விப்பட்டேன்! இவர்கள் இருவரும் கொழும்பில் வளர்ந்தவர்கள்.

இவர்கள் இருவருமே (இரு வேறு நாட்டில்) சம்பந்தப்பட்ட ஆண் நண்பர்களால் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் மிரட்டப்பட்டு - தமது பெற்றோரிடம் பெரும் தொகையான பணத்தை (இலட்சக்கணக்கில்) படிப்பு என பொய்க் காரணங்களைக் கூறி கேட்டுப் பெற்றுள்ளனர்.

இரு வேறு சம்பவங்கள் - ஆனால் ஏறத்தாள ஒரே மாதிரியானவை - கடந்த 3 மாதங்களில் தெரிய வந்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

"எங்களுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு போலீசில் சிக்கியதும் பொய் சொல்கிறார்" என்று மற்றவர்கள் கூறினால் - எதை உண்மை என்று ஏற்றுக்கொள்வது?

 

 

போலீஸ்காரர் முட்டாள்கள் ஆக இருக்க முடியாது.
 
பெண்ணின் பூர்விகம், விசாரணையில் தெரிய வருமே. சேர்ந்து, நால்வருடன் சுத்தும் பெண் குறித்து பார்த்தவுடனே போலிஸ் புரிந்து விடும்.
 
இதனைத் தான், வருமானவரித் துறை குறித்து ஒரு உவமானம் சொல்வார்கள்: அவர்களுடனான எமது அனுபவம் ஒன்றே ஒன்று. எம்போன்றவர்களுடன் அவர்களது பல மில்லியன்கள். எனவே பெரிதாக சுத்த முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது

 

india-300x168.jpgஇந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறுகிறது என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு கூறுகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களிலும், அரசு நடத்தும் சிறார் நல மையங்களிலும் சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

 

இந்த்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழாயிரத்துக்கும் அதிகமான சிறார் பாலியல் துஷ்பிரயோகப் புகார்கள் வருவதாக அது தெரிவித்துள்ளது. ஆனாலும் புகார்கள் இந்த அளவில் இருந்தாலும் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

 

பாதிக்கப்படும் சிரார்களை பொலிசார் பல நேரங்களில் மோசமாக நடத்துவதாகவும், நோகடித்து விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இருக்கின்ற சட்டங்களை வலிமையாக நடைமுறைப்படுத்தியும், நீதிக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தும் இந்த பிரச்சினையை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கேட்டுக்கொண்டுள்ளது.

 

சில பிள்ளைகள் தைரியமாக தாங்கள் அனுபவித்த பாலியால் துஷ்பிரயோகம் பற்றி வெளியில் சொல்லும்போதும், பொலிசார், மருத்துவப் பணியாளர்கள் போன்றோர் அவர்களை அலட்சியப்படுத்துவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

 

ஹியுமன் ரைட்ஸ் வாட்சின் இந்த அறிக்கை தொடர்பில், இந்திய அரசு உத்தியோகப்பூர்வமாக பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படியான அறிக்கைகள் தொடர்பில் அது கருத்து வெளியிடுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

 

தில்லியில் கடந்த டிசம்பரில் இளம் பெண் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெருமளவான மக்கள் கொந்தளிப்பு காணப்படுகின்ற ஒரு நேரத்தில் இந்த ஆய்வறிக்கை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் காரில் இருந்து ஏன் தள்ளிவிடவில்லை? :( அப்படிச் செய்திருந்தால் கிளர்ந்து எழுந்திருக்கலாம்..!! :unsure:

 வால் மாட் திறந்து செயல்படும் வரை அல்லது ஆளும் கட்சிக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் இப்படியான செய்திகள் முக்கியமாக்கப்படும்

பேசாமல் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் இதுகள் குறைய வைப்புகள் இருக்கு.

 

மற்றபடி வட இந்தியர்களின் குணங்களைப் பற்றி நாங்கள் எங்கள் ஆராவமுதனிடம் கேட்டால் தெரியும். 

 

வட இந்தியப் பெண்டகள் அதுக்கு எந்த குறையும் இல்லை. 

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.