Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில்

 

ranil.jpgநாம் ஆட்சி அமைத்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதுடன் நாம் தமிழ் மக்களுக்கு ஒரு புரட்சிகரமான தீர்வினை வழங்குவோம். மக்களின் இறைமையை மதிக்கின்றவர்கள் எம்முடன் வரலாம் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமிங்க அழைப்பு விடுத்துள்ளார்.எதிர் கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நண்பகல் ஒரு மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளர்.அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம். இந்த அரசாங்கம் எங்கள் யோசனைகளை ஏற்று கொண்டு செயல் பாடாமல் விட்டால் மக்களை திரட்டி இந்த அரசை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.நேற்று பலாலி சுற்று வட்டாரத்தில் வாழும் மக்கள் நடாத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் எதிர் கட்சிகள் எதிர்ப்பு இயக்கம் என்ற ரீதியில் நாம் கலந்து கொண்டோம்.

 

அங்கே தேவையற்ற ஒரு இடையுறு ஏற்பட்டது. நான் பேச ஆரம்பித்த போது எனது உரையை குழப்பும் நோக்குடன் கூச்சல் எழுப்பட்டது. பின்னர் நாங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பொழுது மக்கள் மத்தியில் சென்று அவர்களை விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்கள்.

அதனை செய்தது இராணுவ புலனாய்வாளர்களே. அவர்கள் இல்லையெனில் இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு அந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பற்றி எனக்கு எழுத்து மூல அறிக்கையை இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சமர்பிக்கட்டும் என தெரிவித்தார்.

 

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் புதிய இடது சாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண முஸ்லிம் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

இரணில் அவர்களுக்கு தமிழர் தீர்வு என்பது மகிந்தாவை அகற்றி ஆட்சியை கைப்பற்ற உதவும் ஒரு உபாதை.

 

தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வரும்வரை மகிந்த ஆட்சியில் நீடிப்பது நன்மையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் புரட்சிகர தீர்வு என்பது முதுகில் குத்துவது............

  • கருத்துக்கள உறவுகள்

அய்க்கிய தேசியக் கட்சி விதைத்ததைத்தான் மகிந்த தமிழருக்கெதிரான பெருவெற்றியாக அறுவடை செய்திருந்தார். யார் அதிகாரத்தில் இருந்தாலும் சிங்களப் புத்த பேரினவாதம் தனது இனச்சுத்திகரிப்பைத் தொடர்ச்சியாக ஒரு சிறிய இடைவெளியைத் தன்னும் விடாமல் செய்துகொண்டு வந்திருக்கின்றது.

 

தற்போதைய (போர்க்குற்றம் என்ற) சூழ்நிலையில் மேற்குலகின் நட்பை நாடும் அய்க்கிய தேசியக் கட்சியை விட மகிந்த ஆட்சியில் இருப்பதே நன்மையாக இருக்கக்கூடும்.

இன்று புலிகளை மட்டும் சிலர் பிழை சாட்டுகிறார்கள். சந்திரிக்கா பத்விக்கு வந்த போது கூட்டமைப்பை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். புலிகளுடன் சமாதனம் மாதிரி நடித்து களுத்தறுத்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த கட்சி கொழும்புவில் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கட்சி கொழும்புவில் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ?

 

60 வருடங்களுக்கு  மேற்பட்ட தமிழரின் அத்தனை  போராட்டவடிவங்களுக்கும் பின்  இப்படி ஒரு கேள்வி??? 

நாம் எங்கு நிற்கின்றோம்????

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கட்சி கொழும்புவில் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ?

 

தமிழ்தேசிய கூட்டமைப்பு.. :D

எந்த கட்சி கொழும்புவில் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ?

அப்படிப்பட்ட கட்சிகள் உள்ளன, உதாரணத்திற்கு விக்கிரமபாகு அவர்களின் கட்சி.

ஆனால் அதை ஆதரிக்கும் பக்குவம் சிங்கள பேரினவாதம் இல்லை.

 

அப்படி ஒருநாள் வராது, வரும் என்றால், அப்பொழுது அங்கே தமிழின அடையாளமே இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்ட்ட குள்ள நரி விளையாட்டால் தான் ஈழ தமிழனுக்கு இந்த நிலமை... 2002டில் பிடிச்ச சனியன் ( சமாதானம் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு;


 

எனக்கெண்டா ஒன்றும் விளங்கவில்லை .......


 

இசைக்கலைசன்


 

ஐயோ , ஐயோ ...உங்கட பதில் ஜோக் போல இருந்தாலும் அதைத்தான் கனபேர் எதிர்பார்கினம் போல இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு.. :D

 

நான் புலிகள் என்று எழுதுவீர்கள் என  எதிர்பார்த்தேன்............. :D

என்ன தீர்வென்று இப்பவே சொல்ல முடியாது - அது இரகசியம்!

இந்தப் பயங்கரவாதி ரணிலின் அறிவிப்பை தூக்கிப்பிடித்து கூத்தாட விஜயகலா மகேஸ்வரன், துவாரகேஸ்வரன் போன்ற ஒருசில தமிழர் இருக்கத்தான் செய்கிறார்கள்

RW.jpg

 

கிளிநொச்சியில் தனது பிள்ளையின் நிலைமை கூறி ஒரு தாய் :(

நாங்கள் சர்வதேசத்துடன் மிரண்டு பிடிக்க முடியாது. எம்மிடம் கதிர்காமர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது மறுத்து துரோகிகள் இல்லை ஒட்டுமொத்த தமிழர் எல்லாம் அப்பாவிச்சாமிமார் என்று பேக்ககதை சொலவதிலும் பலன் இல்லை. ரணிலுடன் கூட்டமைப்பு கைக்கோர்க்கட்டும் அந்த பாதையை மூடிவிட்டால் சுதந்திரம் வரும் என்று நினைக்ககூடாது. முள்ளிவாய்காளில் நடந்தவற்றை போர்க்குற்ற விசாரணையில் வெளிக்கொண்டு வந்தால்தான், 65 ஆண்டுகளாக ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளையும் இணைத்து,  சிங்கள மக்கள் இரவும் பகலும் ஆயத்தப்படுத்தி தமிழரை முள்ளிவாய்காலில் அழித்தர்வர்கள் என்றதை காட்டி ஒரு தீர்வு பேற முடியும். சிங்கள மக்களுக்கு கிடைத்த இந்த வெற்றி 65 வருடகாலமாக அவர்கள் தங்களை தாங்கள் தயார் செய்ததினால் கிடைத்தது என்பதை சர்வதேசம் விளங்க வேண்டும்.

 

முள்ளி வாய்க்கால் நேரம் தமிழரை சிங்களவர் கொன்றது போல இன்னொரு இடத்தில் சிங்களவரை தமிழர் கொல்ல கூடியதாக இருந்திருந்தால் போர் நின்றிருந்திருக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை. பல தடவை புலிகளைச் சாட்டி சிங்கள இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்தபோது பிரபாகரன் அதையே திரும்ப செய்து இராணுவத்தை பின்வாங்க செய்தார் என்பதும். உண்மை. சிங்கள காடை அரசுகள் செய்யகூடியதும், கௌரவமாக நடைமுறைபடுத்தக்கூடியதுமான  ஒரு ஒரே ஒப்பந்தம் ஊனுக்கு ஊன். அதை தமிழர் செய்ய கால வரையறை இன்றி முடியாதவர்கள் என்பதுதான் அவர்களின் முள்ளி வாய்க்கால் தோல்வி. எனவே சிங்களம்-தமிழ்  பிரிக்கபட்டு வேலி போடப்பட்டு இரு கிராமத்தவர்களும் மற்றவர் பக்கம் போகாமல் இருக்க வழி தேடுவதால் மட்டுமே இந்த ஊனுக்கு ஊன் என்ற சிங்கள ஒபந்ததிலிருந்து தமிழ்மக்கள் விடுவிக்கப்படலாம்.

 

சிங்கள காடை ரணில் விக்கிர சிங்கா "நான் அடித்து என் காலில் தமிழரை கொண்டுவந்து விழவைக்க முடியாவிட்டாலும், அதை எனக்கு செய்து தந்த மகிந்தாவுக்கும், நான் போய் நியூயோர்க்கில் கேட்டவுடன் சிங்கள ஆமியை பாதுகாத்த பாங்கிமுனுக்கும் நன்றி" என்றுதான் மனதுக்குள் நினைத்திருப்பர். எனவே தமிழர் சர்தேசத்தின் காலில்தான் விழ வேண்டுமேயல்லாமல் ரணிலின் காலில் விழுந்து ஒன்றும் நடக்காது. இதறகாக கூட்டமைப்பை திட்டினால் சரவதேசம் தமிழர் பக்கம் திரும்பாது. புலத்தில் தொரந்து பிரசாரம் செய்து தமிழருக்கு ஒரு இடம் பிடித்தால் மட்டும்தான் கூட்டமைப்பு புலம் பெயர் தமிழரை அவதானிக்க தொடங்கும். அப்போதுதான் அது துணிச்சலாக சுய ஆட்சி கேட்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.