Jump to content

எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம்

விக்கி
 


1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் அவருக்கு அன்றைய தினம் ராசி இல்லாதது. எஸ்.எம்.எஸ் எதிர்பார்த்த அளவிற்கு நாதஸ்வர பிருக்காகளை அவரால் பாட முடியவில்லை. பின் பி.லீலா வருகிறார். தன் பங்கிற்கு முயற்சி செய்கிறார். முடியவில்லை. மெட்டின் தரத்திற்கு தலைவணங்கி விலகிக் கொள்கிறார். இருந்த எல்லா துருப்புச் சீட்டும் கை நழுவி இப்பொழுது யாரை பாட வைக்கலாம் என்பதே அந்த சிக்கல்.


sj_1.jpg

 

கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே பாடி தனக்கென இன்னும் தனி இடம் தேடிக் கொண்டிருக்கும் எஸ் ஜானகியின் பெயரை பி.லீலா அவர்களே பரிந்துரைக்கிறார் (அக்காலத்து பொறாமையற்ற தொழில்முறைத் தோழமையை இங்கே கவனிக்க வேண்டும்.)ஜானகி வரவழைக்கப்படுகிறார். மெட்டு போட்டுக் காட்டப்படுகிறது. “இந்த நாதஸ்வர சங்கதிகள் எல்லாம் ‘ப த நி ச.. க ம த நி..’ என கால்அளவும் அரையளவுமாக இருக்கிறதே. முழுவதுமே சரளியாக பாடினால் சரியாயிராது. நான் இதை ராகமாக ஆகாக்காரத்தில் பாடிவிடுகிறேன்” என்கிறார். “இதை ஸ்வரமாகப் பாடுவதே பலருக்கு சிம்ம சொப்பனம். வெறும் ராகமாகப் பாடுவது இன்னும் கஷ்டமே அம்மா” என்கிறார் எஸ்.எம்.எஸ். “இல்லை சார். இந்த பாட்டுக்கு இதுதான் சரியாக வரும். நான் பாடுகிறேன்” என ஜானகி உறுதியாகக் கூறுகிறார். புதிதாக வந்த கத்துக்குட்டி எனக்கென்ன புத்தி சொல்வது என உதாசீனப்படுத்தாமல் எஸ்.எம்.எஸ்ஸும் ஆதரவு வழங்க, நாதஸ்வரமா குரலா எனத் தெரியாத அளவுக்கு அப்பாடலில் ஜானகி சோபிக்கிறார். அதே படத்தில் தவில் கலைஞராக வரும் மூத்த நாடகக் கலைஞர் சாரங்கபாணி மூலம் சினிமாத் துறையில் நுழைந்து அந்தப் படத்தின் எடிட்டராக அப்போது வேலை செய்த என் தந்தையிடம் ரெக்கார்டிங் முடிந்து அருணாசலம் இரண்டு விஷயங்களைக் கணிக்கிறார். முதலாவது, ‘இந்தப் பொண்ணு பிற்காலத்துல பெரிய பாடகியாக வரும்’ என்றது. இரண்டாமாவது “டேய் மணி.. நான் உயிரோட இருந்தா உன் கல்யாணத்துல வந்து வாசிக்கிறேண்டா” என்றது. படம் வந்த இரண்டாண்டுகளில் அருணாச்சலம் மறையவே அவரின் முதல் வாக்கு மட்டும் அமோகமாக பலித்தது.


காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் ஆசி பெற்ற ஜானகிக்கு அவருடைய 75-ஆம் வயதில் இந்திய அரசு பத்மபூஷண் கொடுத்து கெளரவிக்க நினைத்ததையும், அந்த விருதைப் பெற்றுக்கொள்ள ஜானகி மறுத்துவிட்டதையும்  ேள்விப்பட்டபோது ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. ‘ஷாஷன்க் ரிடம்ப்ஷன்’ என்கிற ஆங்கிலப் படத்தில் மார்கன் ஃப்ரீமேன் அறியாப் பருவத்தில் செய்த தவறுக்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவிக்கும் அவர் திருந்தி விட்டாரா, அவரை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யலாமா எனப் பரிசீலிக்க வருடாவருடம் ஒரு ஆய்வுக்குழு வருகிறது. ஒப்புக்குக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரையும் பிற சக கைதிகளையும் நிராகரித்துவிடுகிறது. அடுத்த வருடமும் வந்து “நீ திருந்திவிட்டாய் என நினைக்கிறாயா?” என வழக்கம்போல அவர்கள் அதே கேள்வியைக் கேட்க, “போடாங்க..” என மார்கன் கடுப்பாகி “நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தரட்டுமா, இல்லை உண்மையிலேயே திருந்திவிட்டேனா இல்லையா எனத் தெரிய வேண்டுமா” என அவர்களுக்கே உபதேசித்துவிட்டு வெளியேறுகிறார்.


வரிவரியாகப் பாடி அதை வெட்டி ஒட்டி ஸ்ருதி விலகி இருந்தாலும்

போன்ற மென்பொருள் மூலம் சரி செய்து  ஒரு பாட்டை முடிக்க ஒரு மாதம் எடுத்துக்கொள்ளும் இன்றைய தலைமுறை, தன் எழுபத்தைந்தாவது வயதில் இருபதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி (அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் வைத்தாலும் அதுவே தன் வாழ்நாளில் தொடர்ந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் கால அளவிற்கு வருகிறது) என் போன்ற கணக்கற்ற ரசிகர்களின் ஆதர்சமாய் விளங்கும் ஜானகிக்கு இப்போது கொடுத்திருக்கும் பத்மபூஷணை அவர் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என நாசூக்காய் மறுத்திருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடிய முடிவாகவே எனக்குப் படுகிறது.

ஜானகியின் சாதனைகளை நாம் பலவாறாக எடை போடலாம். ஆனால் அதில் முதலும் கடைசியுமாய் நான் கூறுவது அவரின் வெர்சடாலிட்டி (versataility) மட்டுமே. ‘சகலகலாவல்லி’ என்றெல்லாம் இந்த வார்த்தையை நாடகத்தனமாய் தமிழில் மொழி பெயர்க்காமல் நான் சொல்ல வருவது இதுதான்: எந்த ஒரு இசை சார்ந்த, உணர்வு சார்ந்த, வெவ்வேறு விதமான குரல் சார்ந்த பாடலையும் அவரால் அட்சர சுத்தமாகப் பாட முடிந்திருக்கிறது. அவருடைய சம காலத்திய ஜாம்பான்களாக விளங்கிய கலைஞர்களோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இது தெளிவாகிவிடுகிறது.


இந்திய அளவில் பின்னணிப் பாடகிகள் என யோசித்துப் பார்த்தால் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளே. ஜானகியும் முறையாக சங்கீதம் பயின்றவர் என்றாலும், தான் பாட ஆரம்பித்த காலத்தில் இவர்கள் பாடிய இந்தி பாடல்களைதான் முன்னுதாரணமாக, வாய்ப்புகள் பெற ஒத்திகைகளில் பாடியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட இந்த சகோதரிகள் இருவருமே சாஸ்த்ரீய அடிப்படையில் அமைக்கப்பட்ட எவ்வளவு கடினமான பாடல்களையும் அசகாயமாக பாடக் கூடியவர்கள்.


சங்கர்-ஜெய்கிஷனின் ‘ரசிக் பல்மா’வையோ, மதன் மோகனின் “ஆப் கீ நசரோன் மே”வையோ, சி.ராமச்சந்திராவின் “ஏ ஜிந்தகி உஸி கி ஹை”யையோ லதாஜியின் குரலின் இடத்தில் வேறொருவரை நினைப்பதே பாவம். ஆனால் ஜீனத் அமன், பர்வீன் பாபி போன்ற நவீன நாயகிகள் நளினத்துடன் பாடும் பாடல்களையோ அல்லது கேபரே வகை கிளப் பாடல்களையோ அல்லது இன்றைக்கு நாம் குத்துப் பாடல் என வகைப்படுத்தும் பாடல்களை பாடும்போது தனக்கென ஒரு வரம்பை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளேயே லதாஜி தங்கி விடுவார். இந்த வகையில் “ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்” போன்ற பாடல்களே அந்த விஸ்தீரணத்தின் எல்லை எனலாம்.


ஆனால் பாப் மற்றும் ஹிப்பி கலாச்சாரத்தில் தன்னை அடையாளம் கண்ட நகர்ப்புற எழுபதுகளின் இந்தியா பாடிய அனைத்து பாடல்களுமே ஆஷாஜிக்கு சொந்தமானவை. ‘சுராலியா’வாக இருந்தாலும்,

புகைத்தாலும்,
மோனிக்கா-வாக ஆர்ப்பரித்தாலும்,
என தேடினாலும் அதைத் தகுந்த உணர்வுடன் ஆஷா-ஜியால் மட்டுமே வழங்க முடிந்தது.

அதேபோல் இங்கே தமிழ்நாட்டில் ஜானகியின் சம காலத்தை பார்த்தால் - பட்டத்து ராணி, இலந்தப்பழம் போன்ற எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்கள் சுசீலா அம்மாவிற்கு பொருந்தாது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.


அதனால் இந்தியப் பெண் பின்னணி பாடகிகளில் இந்த வகை பாடல்கள் மட்டுமே பாடக் கூடியவர் என்றோ, இந்த வகை பாடல்களை பாட இயலாதவர் என்றோ கைசுட்டி காட்டும்படி இடைவெளி இல்லா திறமை உள்ளவர் ஜானகி மட்டுமே என்பது என் கருத்து.


sj_2.jpg

 

ஜானகி தன்னுடைய குரலில் சாகசம் செய்த பாடல்கள் என அனேகப் பாடல்களை மேற்கோள் காட்டலாம். ஆனால் குரலை தான் நினைத்த அச்சில் அப்படியே வார்ப்பது மட்டுமல்லாது இசை நுட்பத்திலும் ஒரே நேரத்தில் மேதமையை வெளிப்படுத்தும் வகையில் இவர் பாடிய பாடல்களே இவரை ஒரு தன்னிகரில்லாத மேதை என நான் இவரைப் பற்றி சொல்லக் காரணம். அவரே தன்னுடைய ஒரு நேர்காணலில் தான் இதுவரை பாடிய பாடல்களிலேயே கடினமானதென “சிவ சிவ என்னத” என்ற கன்னடப் பாடலை குறிப்பிடுகிறார். காரணம், அந்த பாட்டில் அடுத்தடுத்த வரிகள் ஆபோகியிலும் தோடியிலும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு ஸ்பூனில் குலோப் ஜாமுனும் மறு ஸ்பூனில் சுக்கு மிளகு திப்பிலி அளவுக்கதிகமாய் போட்ட தீபாவளி லேகியமும் சாப்பிடுவது போல. போதாக்குறைக்கு வயலினுக்கு ஈடாக இந்தப் பாட்டில் இவர் பாடியிருக்கும் ஸ்வரங்கள் ‘சிங்கார வேலனே தேவா’வையே ஒன்றும் இல்லாமல் செய்கிறது. இதை இன்று கேட்கும்போது ஒரே டேக்கில் இதைப் பதிவு செய்வது எக்காலத்திலும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இவரால் முடிந்திருக்கிறது. இவை போன்ற தருணங்கள், நாதியா கோமனேசி 1976-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வாங்கிய “பெர்ஃபெக்ட் 10″ போன்றவை. ஆண்டாண்டு காலத்திற்கும் இன்னொருவரால் தாண்டிச் செல்ல முடியாதவை.


குரல் கட்டுப்பாடு என்கிற அடிப்படையில் சொன்ன பேச்சை அப்படியே கேட்க வைப்பதில் கடவுள் ஜானகிக்கு கொஞ்சம் ஓரவஞ்சனை செய்திருக்கிறார் எனும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையே. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில்

என்கிற பாடலை வயதான கிழவியைப் போல் பாடியிருப்பார். அப்படிப் பாடுவதற்கு தேவையான குரல் மாற்றம் செய்திருக்கிறார் என்கிற விஷயத்தை விடுங்கள். Just for Gags நிகழ்ச்சியில் இவரை ஒரு திரைக்கு பின்னல் இருந்து இந்த பாட வைத்து, இது தமிழ் நாட்டுபுறத்திலேயே பிறந்து வளர்ந்த பெண்மணிதான் என்கிற உணர்வை ஏற்ப்படுத்திவிட்டு கடைசியில் திரையை விலக்கி, “இல்லை இது ஆந்திரா நமக்கு தந்த ஜானகி” என கேட்பவர்களை திக்கு முக்காட வைக்கலாம். தலை சுற்றுபவர்களுக்கு சோடா கொடுத்து தெளிய வைத்து அதே படத்தில்தான் இவர் “நான் பாட வருவாய்” என கல்யாணியில் ஜிம்னாஸ்டிக் செய்திருக்கிறார் என திரும்ப மயக்கத்துக்கு இட்டுச் செல்லலாம். தப்பி தவறி யாரவது எழுந்துவிட்டால் திரும்ப அதே படத்தின் “அழகிய கண்ணே” என்கிற உயிரை உருக்கும் பாட்டை போட்டுக் காட்டி இதை பாடியவரும் அவரே என பார்ட்டியை கோமாவில் தள்ளிய புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.

என் ஸ்லாப்ஸ்டிக் காமெடி ஒருபுறமிருக்க, நான் சொல்ல வருவது - ஒரே படத்தில் சாஸ்த்ரீய பாணியில் ‘தூங்காத விழிகள் ரெண்டை’ அமிர்தவர்ஷினியாய் பொழியும் அதே ஜானகிதான் ‘ஒரு பூங்காவனம், புதுவனம்’ என இளமை ததும்பி ‘ரோஜாப்பூ ஆடிவந்தது’ என ஏரோபிக்ஸும் செய்கிறார். அக்னி நட்சத்திரம், உதிரிப் பூக்கள் என இந்த இரு திரைப்பட பாடல்களின் உதாரணங்களில் இருந்து மட்டுமே நினைத்ததை அவரின் சொந்த எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நடத்தி முடிக்கும் திறன் உள்ளவர் ஜானகி என்பது புரியும். பாட்டி குரலில் பாடிய அதே ஜானகி

என்கிற மலையாள படத்தில் ஒரு முழு நீளப் பாடலை சிறு குழந்தையின் குரலில் பாடியிருப்பார். நெஞ்சத்தை கிள்ளாதே கேஸட்டில் “மம்மி பேரு மாரி” என்ற பாடலுக்கு நேர் இருக்கும் எஸ்.ஜானகி என்கிற பெயர், இன்றளவும் நான் அச்சுப்பிழை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

(சிவசங்கரி சிவானந்த லகரி புகழ்) பெந்த்யால நாகேஸ்வர ராவ், எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடங்கி, மெல்லிசை மன்னர்கள், எம்.பி.ஸ்ரீநிவாசன், சலீல் சௌத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் வழியாக இளையராஜாவிற்குப் பாட வரும்போது ஜானகி ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர பாடகி. தன் இசையில் அவரைப் பாட வைக்க வேண்டும் என்பது இளையராஜாவுக்குக் கனவாக இருந்திருக்கிறது. அது அவர் ஜானகிக்கு கொடுத்த ஒவ்வொரு பாடலிலும் எப்போதும் தெரிகிறது. அன்னக்கிளியில் ஆரம்பித்த இவர்கள் இருவரின் பயணம் படிப்படியாக அடைந்த பரிணாம வளர்ச்சியை ஜானகியின் பாடல்கள் மூலமாக மட்டுமே எடுத்துக்காட்ட முடிகிறது. இளையராஜாவின் ஆரம்பப் பாடல்கள் மொத்தமும் பாடிய ஜானகி, அதுவரை சுசீலா தக்க வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் முதன்மைப் பாடகி என்ற பெயரைத் தட்டிச் செல்கிறார். 16 வயதினிலேவின் ‘செந்தூரப் பூவே’ இளையராஜாவை மறுபேச்சின்றி மொத்தமாக அனைவரும் இசை மேதையாக ஒப்புக்கொள்ளும் இடத்தில் வைத்தது என்றால், அது ஜானகிக்கும் முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. ராதா, ராதிகா, ரேவதி என பாரதிராஜா அறிமுகப்படுத்திய எல்லா முன்னணி நாயகிகளின் பாடல்களிலும் நமக்கு தோன்றும் குரல் ஜானகியுடயதாகவே ஒலிக்கிறது. அவர் பாடிய “நல்ல நேரம் நேரம்” (கன்னடத்தில் “யாரி காகா”) என்ற பாடல் ரெக்கார்டிங்கை நேரில் பார்த்த ஆர்.டி.பர்மன் குட்டி போட்ட பூனை போல் இருப்பு கொள்ளாமல், அங்கும் இங்குமாய் நடனம் ஆடி ராஜாவை “என்னய்யா நீ இருபது வருஷம் கழிச்சி கொடுக்க வேண்டிய இசையை இப்பவே கொடுதிட்டிருக்கே” என கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார். இவ்வளவு நீண்ட பயணத்தில் இவ்விருவருக்கும் தொழில் ரீதியாக பிரச்சனை இல்லாமல் இல்லை. தன்னை விட்டுச் சென்ற யாரையும் தேடிப்போகாத இளையராஜா, ஜானகியுடன் மட்டும் பிளவு வந்த போதெல்லாம் நல்லவேளையாக சமரசம் செய்து கொண்டுள்ளார் . இல்லையென்றால் (மற்ற பாடல்களை விட ஏனோ கேட்பவரிடம் மிகவும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அமையும்) சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, பூ மாலையே தோள் சேரவா, தென்றல் வந்து தீண்டும் போது என இளையராஜாவும் அவரும் சேர்ந்து பாடிய டூயட்டுக்களை நாம் கேட்காமலேயே போயிருப்போம்.


இதுவரை மேற்கோள் காட்டிய இயற்கையாக அமையப்பெறும் குரலும், இசைத்திறனும் மட்டுமல்லாது இசையமைப்பாளர் என்ன எதிர்பார்க்கிறார் என்ற கிரகிப்புத்தன்மையும் பாடகர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அசாதாரணமான மேதைகள் அனைவரும் ‘நான் இப்படி இருப்பதற்கு ஸ்பெஷலாக எதுவுமே செய்வதில்லை’ என வழக்கமாகச் சொல்வதுதான். ஜானகியுமே அப்படித்தான். ஒரே பாடலை உணர்ச்சி இல்லாமல் பாடினால் எப்படி இருக்கும் எனவும் உணர்ச்சியோடு பாடினால் எப்படி இருக்கும் எனவும் ஒரு முறை அவர் பாடிக் காட்டினார். அதைப் பார்த்தபோது, ஜானகி மாடுலேஷனுக்கு ஒன்று, எக்ஸ்ப்ரஷன்களுக்கு ஒன்று, வாய்ஸ் ரேஞ்சுக்கு ஒன்று எனப் பலப் பல திருகுவிசைகளை (knob) வைத்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. இசையமைப்பாளர் தன் தேவைகளைச் சொன்னவுடன், அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு விசையையும் ரோபோ போலத் தேவையான அளவு செட் செய்துகொண்டு அப்படியே பாடுகிறார். ஆமாம், அப்படித்தான் இருக்கமுடியும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ளும் வேளையில் அவர் மனிதர்தான் என்கிற உண்மை ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக சொன்ன விஷயம் இது: “இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு அவர் பாடும்போது பார்த்தால் உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது”. ஆனால் அவருடைய பாடல்களை இன்று டேலன்ட் ஷோக்களில் பாடும் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்கள் நடிக்கிறார்களா அல்லது பாடுகிறார்களா என தெரியாத அளவிற்கு அலட்டும்போது, சிரிப்பதா அழுவதா எனத் தெரிவதில்லை.


இன்னொரு வகை உதாரணமாக ஜானகியின் விரகப் பாடல்கள் என எடுத்துப்பார்த்தால் “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்”, “மீண்டும் மீண்டும் வா” போன்ற மேல்தட்டு கர்னாடக ராகங்களில் அமைக்கப்பட்ட பாடல்களும் இருக்கும். “பொன்மேனி உருகுதே”, “பூப்போட்ட தாவணி” என்ற நவீனத்துவ பாடல்களும் இருக்கும். “கண்ணத் தொறக்கணும் சாமி” போன்ற பாடல்களும் இருக்கும். ஒரு ரசிகனாய் இப்பாடல்களை விரும்புவதும் வெறுப்பதும் நமது ரசனை சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞராக சொந்த விருப்பு/வெறுப்பு, பலம் - பலவீனங்களை அப்புறப்படுத்தி வேலையின் மேல் கவனம் செலுத்த அபார தொழில்முறை நேர்த்தியும், மனதை ஒருமைப்படுத்தும் ஆன்ம வலிமையும் வேண்டும்.  ‘காற்றில் எந்தன் கீதத்தில்’ பாடலுக்குத் தேவைப்படும் அதே அளவு முயற்சி ‘நேத்து ராத்திரி யம்மா’விற்கும் தேவைப்படுகிறது. சந்தேகம் இருந்தால் இவ்விரு பாடல்களையும் அவரைப் போலவே ரகசியமாய் பாடிப் பாருங்கள்.


sj_3.jpg

 

ஜானகி பாடிய பல முக்கியமான பாடல்களை, பெரும்பாலானோரின் தனி விருப்பப் பாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம், சரித்திரம் என்றெல்லாம் மார் தட்டுவதோ, அவருடைய வாழ்க்கை, தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ, இதுவரை வாங்கிய விருதுகளைப் பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் மூன்றாவது பெரிய கௌரவத்தைப் புறக்கணிக்கும் அவருடைய நிலைப்பாட்டைக் குறித்தது மட்டுமே. ஜானகி நிச்சயமாக பாரத ரத்னா விருது வாங்கத் தகுதி உடையவர்தான். இத்தனைக்கும் தாய் மொழியான தெலுங்கோ, பிரபலமாக விளங்கிய தமிழோ அல்லாது மலையாளம் மற்றும் கன்னடத் திரையிசை உலகிலும் கூட இதுவரை அதிகப் பாடல்கள் பாடியவர் என்று தென்னிந்திய அளவில் சாதனை புரிந்தவர் இவர். ஆனால் வாங்கினால் பாரத ரத்னா மட்டுமே வாங்குவேன் என அவர் சொன்னதில் http://www.youtube.com/watch?v=G2y-7kGs90Y. நிதானமான வேறொரு தருணத்தில் நிச்சயமாக அவர் இந்த நிபந்தனையைத் தவிர்த்திருக்கக்கூடும். அதே சமயம் பத்ம பூஷணை அவர் மறுத்ததும் நியாயமே. அந்த நிராகரிப்பில் நிச்சயமாக ஆணவம் இல்லை. தென்னிந்தியக் கலைஞர்களை தொன்றுதொட்டே அந்நியப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற பரவலான ஆதங்கத்தை கேட்பவர்களுக்கு உரைக்கும் வகையில் தன் நிலமையை தெளிவு படுத்தியிருக்கிறார்.


ஜானகி போன்ற கலைஞர்களுக்கு நடிகர்/நடிகைகளைப் போல குறுகிய கால நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதில்லை. ஆனால் அதை விட ஆர்ப்பாட்டம் இல்லாத நிரந்தர அங்கீகாரத்தை ரசிகர்கள் மனதில் நிச்சயமாக பெறுபவர்கள். இதையேதான் அவரும் “என் ரசிகர்களின் மனதில் நான் பிடித்திருக்கும் இடமே எனக்கு பெரிய விருது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.


கடைசியாக அந்த நிலைப்பாட்டை கௌரவப்படுத்தும் வகையில், “பால் மரியா” போன்ற ஒரு மேற்கத்திய மெல்லிசையமைப்பாளர் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை, தமிழகத்தின் அனைத்து ஆர்க்கெஸ்ட்ராக்களும் தேசிய கீதமாக கருதும் இந்த பாடலை, “காற்றில் குழலோசை” என்ற அந்த இரு வார்த்தைகளில் மட்டும் ஆயிரம் நகசு வேலைகளை ஜானகி செய்திருக்கும் இந்தப் பாடலின் என் வடிவத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.


 

 

http://solvanam.com/?p=24387

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்தை கிள்ளாதே கேஸட்டில் “மம்மி பேரு மாரி” என்ற பாடலுக்கு நேர் இருக்கும் எஸ்.ஜானகி என்கிற பெயர், இன்றளவும் நான் அச்சுப்பிழை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடகி சந்தேகமே இல்லை.அவர் பத்மபூஷன் விருதை புறக்கணித்ததும் நியாயம்தான். ஆனால் பாரதரத்னா விருது வேண்டும் என்று சொல்வதுதான் கொஞ்சம் இடிக்குது.

Link to comment
Share on other sites

 
எந்த விருதும் ஜானகி அவர்களின் திறமைக்கு இணையாக இல்லை.
இவருக்கு இது வரை விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றால் விருது வழங்குவர்களில் ஏதோ கோளாறு இருப்பதாக தான் பார்க்க முடிகிறது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.