Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல்

Featured Replies

பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல்

 


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம்.

 

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதே போல உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படக் காட்சி வெளியானது. இதனால் உலகத் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கொதித்து எழுந்தன.


ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்தார். பாலச்சந்திரன் படுகொலை குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து விரைவில்இரங்கல் தகவல் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60363-2013-03-09-11-40-12.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

rahul_kandhi_0011.jpg

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

 

தமிழ்ப் பெண்களை் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.

 

இதே போல உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

 

இதனால் உலகத் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கொதித்து எழுந்தது. ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்தார்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம்.

 

விரைவில் பாலச்சந்திரன் படுகொலை குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து இரங்கல் தகவல் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

http://tamil24news.com/news/?p=48232

  • தொடங்கியவர்

கடந்த வருடம் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தமைக்கு ஒரு காரணமாக சோனியாவின் இளகிய மனம் என கூறப்பட்டது. இந்த வருடம் மகன் இளகியுள்ளார்  :icon_idea:

 

இந்த குடும்பத்திற்கு பிராயச்சித்தம் என்று எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல்

 

 

IN11-AMBULANCE-TN_3975f.jpg

 

 

இதை படித்து எனக்கு கார்ட் அட்டாக்கெ வந்து போட்டுது.. கள உறவுகள் 108 க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா... பிளீஸ்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

IN11-AMBULANCE-TN_3975f.jpg

 

 

இதை படித்து எனக்கு கார்ட் அட்டாக்கெ வந்து போட்டுது.. கள உறவுகள் 108 க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா... பிளீஸ்..

அம்புலன்ஸ்ஓட காட் அட்டாக் வராது புரட்சிக்குதான் :)

பாலச்சந்திரன் கொலை வெளியில் வந்ததையொட்டி ராகுல் காந்தியின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
சந்திரிக்காவின் மகன், சோனியாவின் மகன் ஆகியோர் மென்மையான மனம் படைத்தவர்களாம். மிச்ச ஆட்கள் எல்லாம் வன்மையான மனம் படைத்தவர்களாக்கும்.
 
கருணாநிதியும், சோனியாவும் தமிழ் நாட்டில் இழந்த அரசியல் பலத்தை மீட்டெடுக்க என்ன மாதிரி எல்லாம் நடிக்கிறார்களப்பா!!!

கொஞ்சநாள் பிரியங்கா திரிஞ்சா  பாவம் நல்லவா என்டாங்க  இவர் வந்திட்டார் பாவம் நல்லவர் என்டு என்ன செய்கிறது.

 

என்ன செய்கிறது கேட்கிறவன் இருந்தா  எல்லாம் சொல்வாங்க

IN11-AMBULANCE-TN_3975f.jpg

 

 

இதை படித்து எனக்கு கார்ட் அட்டாக்கெ வந்து போட்டுது.. கள உறவுகள் 108 க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா... பிளீஸ்..

முடியல தோழர் ............ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.