Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர்களுடன் மும்பை சென்ற 4 நெல்லை மாணவிகள் பலாத்காரம்... பலாத்காரம் புரிந்தது ரவுடிகளா, காதலர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் பலாத்காரம் புரிந்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது.

 

தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போலீஸில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.

 

விசாரணையில் நான்கு மாணவிகளும் மும்பையில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்புப் படையினர் விரைந்து சென்று நால்வரையும் மீட்டனர். அந்த மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 

7 பேரும் மும்பையில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டி நான்கு மாணவிகளையும் கற்பழித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் இருவர் தங்களது பெற்றோரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி கதறி அழுததைத் தொடர்ந்து இந்தச் செயல் அம்பலத்திற்கு வந்துள்ளது.

 

என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 4 மாணவிகளையும் கூட்டிச் சென்ற 3 மாணவர்கள் எங்கே என்பதும் தெரியவில்லை. போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனரா என்பதும் தெரியில்லை.

 

இப்படியா கெட்டுச் சீரழிவார்கள் இந்த வயதில்...?

 

http://tamil.oneindia.in/news/2013/03/12/india-4-nellai-school-girls-raped-mumbai-by-their-lovers-171394.html

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாணவர்களுக்கு நாலு மாணவிகளா? :rolleyes: அப்ப ஒரு மாணவி போனசா?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களுக்குத் தேவை தான்...உந்த வயசில களவாக அவ்வளது தூரத்திற்கு பெடியங்களோட போயிருக்கினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தமாதிரி பொறுப்பில்லாமல் திரியிறது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதினை இனியாவது பொறுப்பில்லாமல் திரியும் இளம்பெண்கள் பார்த்தாவது திருந்தட்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை: பள்ளி மாணவிகள் திருவனந்தபுரம், புனே நகரங்களில் ரவுடி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பகீர் சம்பவத்தால் பரபரத்துக் கிடக்கிறது நெல்லை.

பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த நான்கு மாணவிகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் படித்து வந்தனர். கடந்த மாதம் 23ஆம் தேதி சிறப்பு வகுப்பு இருப்பதால் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து சென்றனர். ஆனால், அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கமடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள். 'சிறப்பு வகுப்பு எதுவும் இல்லை' என பள்ளி தரப்பில் சொல்லப்பட்டதால் மேலும் அதிர்ச்சியடைந்து போனார்கள்.

உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான், அதில் ஒரு மாணவி தனது வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில், காணாமல் போன மாணவிகளோடு பிளஸ் ஒன் மாணவியின் சகோதரனும் சென்ற‌து தெரிய வதந்து.

தனிப்படைகளை அமைத்து போலீஸார் மேல் விசாரணை நடத்தியதில் சேந்திமங்கலம், ரெட்டியார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவர்களும் உடன் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் டுடோரியல் ஒன்றில் படித்து வந்தவர்கள்.

மாணவிகள் 3 பேரும், மாணவர்கள் 3 பேரும் ரயில் மூலமாக கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களுக்கும் சென்று உள்ளனர். கடைசியில் புனே நகரில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததை கண்டு பிடித்த போலீஸார் அவர்களை அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை போலீஸார் நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 10ஆம் தேதி நான்கு மாணவிகளுக்கும் அவர்களுடன் சென்ற மாணவர்கள் மூவருக்கும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மாணவிகள் நால்வரும் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளனர். இது பற்றி விகடன் டாட் காமில் பேசிய‌ காவல்துறை அதிகாரி ஒருவர், ‘’நெல்லையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ - மாண விகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த அங்குள்ள‌ ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். ரவுடிகளின் கையில் சிக்கி சிறுமிகள் சீரழிக்கப்படுவதை பார்த்து அந்த லாட்ஜின் உரிமையாளர் போலீஸுக்கு சென்றால் ரவுடிகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால் சிறுமிகளை அங்கிருந்து புனேக்கு அனுப்பி இருக்கிறார். அங்கே சென்ற பிறகும் அவர்களுக்கு நிம்மதி இல்லை. வீட்டை விட்டு சிறுமிகள் ஓடி வந்து இருப்பதை அறிந்த அங்கிருந்த இன்னொரு ரவுடி கூட்டம், அவர்களை மீண்டும் சீரழிச்சிருக்கு. இதுல இன்னொரு கொடுமை என்னனா மாணவிகளோடு சென்ற மாணவர்களும் அங்கு வைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்காங்க.

தங்களின் நிலையை நினைத்து வருந்திய சிறுமிகள் பெற்றோருக்கு தகவல் சொல்லி இருக்காங்க. அதன் பிறகே எங்களுக்கு அவங்க‌ இருக்கும் இடம் தெரிய வந்துச்சு. ஆனால், எங்களிடம் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட‌ விவரத்தை யாரும் தெரிவிக்கவில்லை. மாஜிஸ்திரேட்டிடம் தான் ரகசிய வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

ஆனால் உடன் சென்ற மாணவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘'மாணவிகளை ரவுடிகள் யாரும் பலாத்காரம் செய்யவில்லை. கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்ற பிறகு நாங்களாகவே புனே சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். அங்கு வைத்து அந்த மாணவிகள் எங்களிடம் அத்துமீறி நடந்துக்கிட்டாங்க’ என தெரிவித்து இருக்கிறார்களாம்.

இந்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டுபிடித்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது.

http://news.vikatan.com/?nid=12876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
திருவனந்தபுரம், மும்பையில் வைத்து 2 முறை பலாத்காரம் செய்யப்பட்ட நெல்லை மாணவிகள்- பரபரப்புத் தகவல்

 

 

 

 

 

நெல்லை: தங்களது காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள் நான்கு பேரும் முதலில் திருவனந்தபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ளனர். பின்னர் மும்பையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக பெற்றோர்களின் மனதில் நெருப்பை அள்ளிப் போடும் வகையில் அமைந்துள்ளது இந்த சம்பவம்.

 

நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு படித்து வருபவர்கள் இந்த நான்கு மாணவிகளும். இவர்களுக்கு இந்த வயதிலேயே காதலர்கள். இந்த காதலர்களுடன் இன்பச் சுற்றுவாலாக பல்வேறு ஊர்களுக்குப் போக திட்டமிட்டு கிளம்பியுள்ளனர்.

 

இதில் மூன்று மாணவிகளின் காதலர்களும் வந்து விட்டனர். ஆனால் நான்காவது மாணவியின் காதலன் மட்டும் என்ன காரணத்தாலோ வரவில்லை என்று தெரிகிறது. 3 மாணவர்களில் ஒருவன் பிளஸ் ஒன் படிக்கிறான். மற்ற இருவரும் டுடோரியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

 

நான்கு மாணவிகளும் மற்றும் 3 மாணவர்களும் கடந்த மாதம் 23ம் தேதி பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸுக்குப் போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அப்படியே ரயில் ஏறி சுற்றுலாவைத் தொடங்கி விட்டனர்.

 

ஸ்பெஷல் கிளாஸுக்குப் போன பிள்ளைகளைக் காணாததால் பரிதவித்துப் போன பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 

விசாரணையில், நான்கு மாணவிகளும் 3 மாணவர்களுடன் மாயமான தகவல் தெரிய வந்தது. இந்த நிலையில்தான் ஒரு மாணவி தனது தந்தையின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தபோது அதுகுறித்த தகவல் தந்தையின் செல்போனுக்கு வந்து அவர்கள் தங்கியிருந்த இடம் குறித்த தகவல் தெரிய வந்தது.

 

இதையடுத்து சிறப்புப் படை போலீஸார் புனே நகருக்குச் சென்று அவர்களை மீட்டனர். பின்னர் அனைவரும் நெல்லை கொண்டு வரப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்திலும், மும்பையிலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதைக்கேட்டு போலீஸாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் 7 பேரையும் போலீஸார் நெல்லை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராமலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி நான்கு மாணவிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

25 பவுன் நகைகளுடன் கிளம்பி வந்த மாணவி

இந்த நான்கு மாணவிகளில் ஒருவர் தனது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ. 40,000 பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது.

 

7 பேரும் முதலில் கன்னியாகுமரி போயுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் போனார்கள். அங்கு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு நான்கு மாணவிகளையும் ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 7 பேரும் உடனடியாக லாட்ஜைக் காலி செய்து விட்டு மும்பைக்குப் போயுள்ளனர். ஆனால் அங்கும் ஒரு கும்பலால் நான்கு மாணவிகளும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

உண்மையா.. பொய்யா?

ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு ஊராக பாலியல் பலாத்காரம் நடந்ததாக இவர்கள் கூறுவது குறித்து போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்கள் வந்துள்ளன. உண்மையில் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் ரவுடிகளா அல்லது மாணவர்களின் கூட்டாளிகளா என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் தவிர கடைசி நேரத்தில் சுற்றுலாவில் கலந்து கொள்ளாமல் போன இன்னொரு மாணவரையும் பிடித்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

 

 

http://tamil.oneindia.in/news/2013/03/13/tamilnadu-4-nellai-students-raped-twice-trivandrum-and-mumbai-171427.html

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் எவ்வளவு கஸ்ரப்பட்டு சேர்த்த 25 பவுண் நகை, 40,000 ரூபா பணம், அத்துடன்... தனது சகோதரனையும்... ஒருவர் கூட்டிச் சென்றுள்ளார். சிலவேளை... மாப்பிள்ள்ளை தோழனுக்காக இருக்குமோ...
போயும்... போயும்... ஒடுபவர்கள், மும்பை, டெல்லிக்கு ஓடினால் இதுதான் நடக்கும். அநியாயமாக தமது வாழ்க்கையை பாழாக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி க்கு சகோதரனோட friend bf ஆ இருந்திருக்கும் சகோதரனுக்கு சகோதரியோட friend gf ஆ இருந்திருக்கும்.....

ஒன்னுக்குள ஒன்னு கரெக்ட் பண்ணிட்டு கிளம்பி இருக்காங்க......

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.