Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு : இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை.

இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:

‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’-

எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது தொடர்பாக நாம் ஒருபோதும் அச்சமடைய தேவையில்லை. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க என்னை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

நமது கட்சி பயங்கரவாதத்தை இல்லாமல் அழித்துள்ளது. ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’. பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம். பொய்களுக்கு வதந்திகளுக்கு பெருமளவு சக்தி காணப்படுகின்றது.எனினும் இதனை வெற்றி கொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும். கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Dinamalar

புஸ்சை சாவாஸ் "பேய்" என்று விவரித்த போது புஸ்சுடன் சேர்ந்து இனவழிப்பை செய்துகொண்டிருந்த மகிந்தா சாவோசுடனும் நண்பனாக
இருந்தார். அதைத்தான் அவர் சாசுவதமாக சொல்கிறார். தான் அமெரிக்க பிரேரணைகளை கண்டு அஞ்சக்கூடியவர் இல்லை என்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பேய்களுடன் குடும்பம் நடத்துபவன் மயானத்தில் வீடு கட்ட அஞ்சுவான என்ன ?  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களுக்கு வதந்திகளுக்கு பெருமளவு சக்தி காணப்படுகின்றது.

 

 

இதற்கு சிங்களவர்களுக்கு நிகர்  சிங்களவர்கள் தான். சந்திரிக்கா, ஹெகலிய, கோத்தபாய போன்றவர்களிடம் உலகமே பாடம் கற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள்..பேய்க்காய்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை.

இதில் சிரந்தி ராஜபக்ஸவுக்கு ஏதும் உள்குத்து இருக்குமோ...? டவுட்டு..!! :D

பழமொழி வீரத்தைபற்றி பேசவில்லை. ஊத்தைகளையும் அசிங்கத்தையும் பற்றித்தான் பேசுகிறது.  மகிந்தாவும் அதயேதான் கருதினார்.

 

காந்தி தேசத்துடனான  தமது உறவை அவர் பூஜிக்கவில்லை. புகழவில்லை. தேவானந்தா, கருணாவின் உறவை பயப்படாமல் வைத்துக்கொள்ளும் அவர் இந்திய உறவு வேண்டும் என்கிறார். பொலிசுக்கு பயந்த திருடன் இரவில் தொழிலுக்கு வெளிக்கிடுவானா?

 

ஐ.நா பிரேரணை நேரம் அவர் ஐ.நா அதிகாரிகளை சந்திக்க வந்த காணாமல் போனோரின் உறவுகளை திருப்பி அனுப்பவில்லையா? அவர் இவர்களை இலகுவில் சட்டை செய்யப்போவதில்லை.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிரந்தி ராஜபக்ஸவுக்கு ஏதும் உள்குத்து இருக்குமோ...? டவுட்டு..!! :D

 

Mrs._Shiranthi_Rajapaksa.jpg

 இருக்கலாஆஆம்...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.