Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? - சரத் பொன்சேகா புதிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? - சரத் பொன்சேகா புதிய தகவல்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 08:59 GMT ] [ தா.அருணாசலம் ]

 

prabha-family.jpg

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 20ம் நாள் மீட்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடல்களை மீட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.

ஆனால், பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் என்னவாயினர் என்று தமக்குத் தெரியாது அவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் கூறிவந்தன.

இந்தநிலையில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் காணப்படும் ஒளிப்படம் வெளியானது.

இதையடுத்து பாலச்சந்திரன் காவலரண் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்களை சனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பிரபாகரனின் மனைவி, மதிவதனி, மகள் துவாரகா ஆகியோரும் போரின் முடிவில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கடந்த புதன்கிழமை கூறியுள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதுபற்றிய தகவலை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

சந்தியா ஜெய்ன் என்ற இந்திய செய்தியாளர் தனது கட்டுரை ஒன்றில் சரத் பொன்சேகா வெளியிட்ட இந்தத் தகவல் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தச் சந்திப்பில் சரத் பொன்சேகா, பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை தனது படையினர் கொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்திருந்தார்.

அதேவேளை, பிரபாகரனின் மனைவி மதிவதனி, 20 வயதான அவரது மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 மே 20ம் நாள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் நினைவு கூர்ந்தார்.

பிரபாகரனின் உடல் சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்டு ஒரு நாள் கழித்து தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நந்திக்கடல் பகுதியில் இந்த உடல்கள், கண்டுபிடிக்கப்பட்டன.

நீரேரிப் பகுதியில் 150 ஏனைய விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களும் கூட மீட்கப்பட்டன.

பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி (24 வயது) கரையமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் 2009 மே 18ம் நாள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவருடன் ஏனைய மூத்த தலைவர்களான புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், புலித்தேவன், மூத்த களமுனைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல் நாள் போர் தவிர்ப்பு வலயத்தில் கேட்ட பாரிய தொடர் குண்டுவெடிப்புகளின் போது, பெரும்பாலும் அவர்கள் தமது உயிர்களை மாய்த்திருக்கலாம் என்று அப்போதைய தகவல்கள் தெரிவித்தன என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130324108001

அவருடன் ஏனைய மூத்த தலைவர்களான புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.
நடேசன், புலித்தேவன், மூத்த களமுனைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோரின்
உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

அவருடன் ஏனைய மூத்த தலைவர்களான புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், புலித்தேவன், மூத்த களமுனைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இதில இருந்து தெரிகிறது இவர் பேசுவது முற்றிலும் உண்மை என்று  :icon_mrgreen:
 
 
உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை  :D
 
 உள்ளுக்கு இருந்ததால பிசகி கிசகி விட்டிதோ இந்தாளுக்கு ?  :rolleyes:

 

Edited by தமிழரசு

அவருடன் ஏனைய மூத்த தலைவர்களான புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.

நடேசன், புலித்தேவன், மூத்த களமுனைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோரின்

உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

பொய்களை பொருந்தாமல் சரத்தை வாய்திறக்க கொத்தா அனுமதித்துள்ளார்  :icon_idea:

பொன்சேக்காவிற்கு பைத்தியம் இல்லை. அவர் உண்மைகளை திரிக்கிறார். தளபதியாக இருந்த பொன்சேக்காவுக்கு வழகொன்றில் காட்டப்படதக்க ஆதாரங்களை வெளிவிடக்கூடாது என்பது நன்றாகத்தெரியும். மேலும் அந்த ஆதரங்களை தெருவில் போடுவதால் போர்க்குற்ற பிரதிவாதிகள் தான் நன்மை அடைவார்கள். அப்போ ஏன பொன்சேக்கா தன்னால் இந்த வழக்கை உடைக்கஇயலும் என்று துடிக்கிறார்? உண்மையில் அது போர்குற்ற வழக்கை தோற்கடிக்க அல்ல. அவரின் விருப்பம் மகிந்தாவை ஏமாற்றி விசாரணையை உள்ளே கொண்டுவந்துவிடுவதுதான். விசாரணை நேரம் தான் ஒன்றும் அறியாதவர் போல சும்மா இருப்பார். இதனால் மகிந்த தன்னைத்தான் மாட்டி பதவி இழப்பார். இது அவரை சிங்கள மக்கள் முன் போர்வெற்றிக் கதாநாயகனாகவும், அதே நேரம் மகிந்தா மாதிரி குரூரம் இல்லாதவராகவும் அடுத்த தேர்தலுக்கு நல்ல கலவையாகவும் இருக்கும்.ஆனால் தனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் மகிந்தாவைக் காட்டிக்கொடுப்பார்.

 

மேலும் பாரிய குண்டு வெடிப்புக்களின் போது இறந்திருக்காலாம் என்கிறார். இதன் கருத்தை குண்டுகளால் இறந்தார்கள் என்று கொள்ளவேண்டும்.

 

இரகசியமாகவோ அல்லது பரகசியமாகவோ வெளிவந்த ஆதாரங்கள் இதற்கு முரணாவை. படங்களில் படி தனியத்தனிய துன்புறுத்தப்பட்டு கிட்ட நின்ற துவக்குகளால் சுடபட்டிருக்கிறார்கள். 

இதில இருந்து தெரிகிறது இவர் பேசுவது முற்றிலும் உண்மை என்று  :icon_mrgreen:
 
 
உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை  :D
 
 உள்ளுக்கு இருந்ததால பிசகி கிசகி விட்டிதோ இந்தாளுக்கு ?  :rolleyes:

 

பாவம் ஆள் அரசியலுக்கு  புதுசு . :D

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்ஸ்க்கு பயம் வந்திட்டுது தன்னையும் தூக்கி போர்குற்றம் புரிந்ததற்காக விசாரிக்க போகின்றார்கள் என்று.....

:D

  • கருத்துக்கள உறவுகள்

பொய்  :unsure:

பொன்சேக்காவை குறைத்து எடை போடக்கூடாது.

முன்னர் பொன்சேக்கா விசாரணை வரவேண்டும் என்று கூறியவர். 

அவர் முன்னர் தான் நடந்த போர்க்குற்றங்களை பற்றி எந்த விசாரணையிலும் சொல்லத்தயாராக இருக்கிறேன் என்று பிரெடிரிக்கா ஜான்சிடம் பேட்டி கொடுத்து மகிந்தாவை ஒரு கலக்கு கலக்க முயன்றவர். மகிந்தா எத்தனுக்கு எத்தன். பொன்சேகா மாதிரி வெறும் பேய்களுக்கு பயப்பட்டாமல் சுடலைக்குள் வீடுகட்டியிருப்பவர். (அல்லது நீங்கள் விரும்பினால் நாட்டை சுடலையாக்கிவிட்டு தான் மட்டும் அதில் மாளிகை போன்றதொரு வீடுகட்டியிருப்பவர் என்றும் வைத்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். :lol:  :lol:  :lol: ) வழக்கு இறுகியவுடன் தனது காலை பின்னால்  இழுத்து பிரேடிரிக்காவை முன்னால் தள்ளி மகிந்தாவிடம் மாட்டிவிட்டார். பிரிடெரிக்கா தன்னை கொல்ல முயற்சிகள் எடுக்கப்படுவது பற்றி கதைகள் கதைகள் கேள்விபட்டவுடன் தான் விட்ட பிழைகளை உணர்ந்து யாரோ எம்பசிக்காரர் காலில் விழுந்து நாட்டையே விட்டு ஓடிவிட்டார். 

பிரெடிரிக்கா விசாரணை ஒன்று தேவை என்ற கருத்துக்கொண்டிருந்த ஊடகவியலார். பொன்னரிடம் ஒரு தடவை மாட்டிவிட்டு அண்டு விட்டன் கொண்டலடி நாட்டையே விட்டு ஓடிவிட்டா. அது பொன்னர் விசாரணை தேவை என்று கேட்டுத்திரிந்த ஊடகவியலாருக்கு பாடம் படிப்பித்தவிதம். :lol:  :lol:  :lol: 

 

இப்போ மற்றவளமாக  தொடங்கியிருக்கிறார். இதில் கோத்தாவும் மாட்டுப்பட ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகவே கோத்தா பிரெடிரிக்காவின் விலாசத்தை நேரத்திற்கே எடுத்து வைத்திருந்தால் நல்லது.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.