Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிங்களவரே விழிப்பாக இருப்போம்"! -கண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துண்டுபிரசுரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
breaking_news-050313-seithy-150.jpg

கண்டி, மடவளை மற்றும் வத்துகாமம் பகுதிகளில் 'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' என்ற தலைப்பில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'சிங்கள தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள்' என்ற அமைப்பு (சிங்களயே செபே உரிமக்காரயோ) இந்த துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளது. அதன் விபரம் வருமாறு,

சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்!

  

பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து இவ் உலகிற்கு குழந்தை ஒன்றை ஈன்று அளிப்பவள் தாய். அவளது உதிரத்தை பாலாக மாற்றி பருகத் தருகிறாள். தாயானவள் சகல சுமைகளையும் தானே சுமந்து கொள்ளும் உயர் ஸ்தானத்தில் இருப்பவள். இதற்கு சமமான நிலையில் இருப்பது தாய் நாடும் தான் பிறந்த ஊருமாகும்.

 

ஆனால் நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்றி முஸ்லிம்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய, அதிகாரங்களை தம்வசப் படுத்திக் கொண்டு போனால் கூடிய கெதியில்; முஸ்லிம்களின் கையின் கீழ் சிங்களவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுது சிங்களவர்களுக்கு வெளியேறுவதற்கு ஒரு நாடோ பின்பற்றுவதற்கு சமயமோ இல்லாது கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடக்காது முளையிலே கிள்ளி எரிய வேண்டிய காலம் சிங்களவர்களுக்கு உதயமாகியுள்ளது.

 

இலங்கை இன்னும் 20- 30 வருடங்களில் இஸ்லாமிய மயமாவதற்கு முஸல்மான்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

1996இல் மாலைத் தீவில் ஒன்று கூடிய முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகள் 2020 இல் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தான் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் நாட்டை உருவாக்கவும் பின்னர் முழு நாட்டையும் முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு வரைபடம் (பிலேன்) வரையப்பட்டுள்ளது.(திட்டம் தீட்டப்பட்டுள்ளது)

 

தற்கால சனத்தொகை விபரத்தை (குடிசன மதிப்பீடு) அரசு இன்னும் வெளியிடாது இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் 100 சதவீதமாக இருப்பதாலும், முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் பெருந்தொகை வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்குக் கைமாறாக அதனை மறைப்பதுமாகும். முஸ்லிம் சனத்தொகைப் பெருக்கம் அமைதியானதாயினும் அது மிகக் மிகக் கொடூரமானது.

 

நாட்டில் முஸ்லிம் சனத்தொகை 50 சதவீதமானதும் அவர்கள் ஷரீஹா சட்டத்தை அமுல் படுத்தி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர்கள்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79155&category=TamilNews&language=tamil

மத கலவரம் நடக்கபோவது நிச்சயம்.நாள் தான் தெரியவில்லை, ஆனால் நெருங்கி வருகின்றது :(

முகமதிய மக்களுக்கு குரல் கொடுக்க மனம் கட்டளை இடுகிறது . ஏனெனில் நான் கேனப்பய தமிழன் குருதி என்பதால் . அப்படித்தான் வேணும் என இன்னொரு மனம் சொல்கிறது . ஏனெனில் நான் பழிவாங்கலை அடிப்படையாக கொண்ட மதத்தினன் இந்து ஆதலால் . இப்போ நான் இந்துவா மாறி ரொம்ப நாள் ஆச்சு . மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்படைவீர் சிங்களவரே

இன்னும் என்ன  தூக்கம்.............???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அப்படி ஒரு மதக்கலவரம் வந்தால் சவூதி அரேபியா உட்பட இஸ்லாமிய நாடுகள் சிறிலங்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு உதவும்  :icon_mrgreen:
 
சிங்களவர்களுக்கு சீனா உட்பட ஏனைய பௌத்த நாடுகள் உதவும். :icon_mrgreen:  :icon_mrgreen: 
 
இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வரும். :icon_idea:   

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே .சிங்களா நீ பேராசையோடு நடமாடுகிறாய் உன் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் மிகவிரைவில் .இந்த உலகில் நீ ஒரு அசிங்கம். மனித நாகரிகத்தில் நீ ஒரு அருவருக்கத்தக்கவன் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஒற்றுமைக்கு பொது எதிரி வேணும் மே 18 பின்பு அவர்களால் உருவாக்கபடும் முஸ்லீம் எதிர்ப்பு வாதம் பலமான பின்னடைவுகளை அரசாங்கத்திற்கு தரும் எனத்தெரிந்தும் தொடரவேண்டிய நிர்ப்பந்தம்.

எங்கை அடிச்சாலும் நாய் காலைத்தூக்கும். தமிழர்கள்தான் கவனமாக இருக்க வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 
 
ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் முஸ்லிம் நாடுகள் குறிப்பிடத்தக்க அளவு உண்டு. இதனை ஹக்கீம் போன்றவர்கள் தான் பெற்றுக்கொடுத்தார்கள். 
 
மறுபுறத்தில் பொதுசேனா, ஹெல உறுமையா போன்ற  அதிதீவிர வாத சிங்கள கட்சிகள் (நிச்சயமாக மகிந்தவின் ஆசீர்வாதத்துடன்) முஸ்லிம்களை அடக்குவதில் நேரடியாகவும் , திரைமறைவிலும் செயற்படுகிறார்கள்.
 
இதற்கு மசூதிகள் தாக்கப்படுவது, ஹலாம் இறைச்சி விவகாரம் என்பனவற்றில் என்பன உதாரணங்கள்.
 
சிறுபான்மையினரை ஒடுக்குவதில் சிங்களவர்கள் மிக ஒற்றுமையாக செயற்படுகிறார்கள்.தற்போதைய அரசுடன் கூட்டு வைத்த முஸ்லிம் தலைவர்கள் தமது மக்களை காட்டிக்கொடுக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.