Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

---------------------------------------------------------------------------------------------------------------

 

 

ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கி நகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின் மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்படி
கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.


 


இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின்  அடிப்படை நோக்கம். அதனால்தான் குமுதம் தீராநதியில் 2006 (http://www.tamilcanadian.com/article/tamil/97) வெளிவந்த எனது பேட்டியிலும் மீனவர் பிரச்சினைக்கு விசேட அழுத்தம்
கொடுத்தேன்.  மேற்படி பேட்டியை
திரும்ப வாசிக்கும்படி பணிவன்புடன் கோருகிறேன்.  இலங்கை அரசினால் கொல்லப்படும் ஈழத் தமிழருக்கு ஆதரவான
போராட்டத்தை இலங்கை அரசால் இந்திய தமிழக மீனவர்கள் கொல்லப்படும்  பிரச்சினையுடன்
 கீழ்ப்படுத்தி இணைக்காமல் இலங்கை அரசுக்கு
எதிரான தமிழகத்தின் கோரிக்கையாக வளர்த்தெடுக்க முடியாது என நான் கடந்த பத்துவருடங்கலுக்கும் மேலாக வாதிட்டு வருகிறேன்.. 

 

 

ஈழத் தமிழருக்கு ஆதரவான கோரிக்கைகளை மீனவர் கொல்லப்படும்
பிரச்சினையுடன் இணைத்து முன்னிலைப் படுத்தியிருந்தால் வெளி மாநில மக்களும் மத்திய அரசும் நிராகரிக்க முடியாத
கோரிக்கைகளாக அவை முன்னிலைப் பட்டிருக்கும். தமிழக மானவர்களின் தமிழக கட்ச்சிகளின்
கோரிக்கைகளுக்கும் தமிழக சட்டசபை தீர்மனங்களுக்கும் இது பொருந்தும்.  


 

இனியேனும் தாமதிக்காமல் தமிழகத்தில் இலங்கை இனவெறி
அரசு உருவாக்கும் நெருக்கடிகள் வரலாற்று ரீதியாகவும் சரியான கோட்பாட்டு அடிப்படையிலும் புரிந்துகொள்ளப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் போராட்டத்தின்
கோரிக்கைகள் மீழ ஒழுங்கு படுத்தப் படுதல் வேண்டும். இது நமது காலத்தின் கட்டாயமாகும்.
இத்தகைய கோரிக்கைகளை நமது அறிஞர்களும் போராளிகளும்  தமிழகத்துக்கு வெளியில் ஏனைய மாநில மக்கள்
மத்திக்கும் டெல்கிக்கும் முன்னெடுத்துச் செல்ல்லவேண்டும்..


 

1


 

இலங்கையை தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?  

 

முதலாவதாக  காரணம் இந்தியரான தமிழக மீனவர்கள் வகை தொகையின்றி இலங்கைப் படைகளால் கொலை செய்யப்படுவது.  இரண்டாவது
காரனம்  ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் இனக்கொலையும் போர்குற்றங்கள் தொடர்வதும். இந்த முறைமையில் மட்டுமே மாணவர்களும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையை வடக்கு நோக்கிக் கொண்டு செல்லமுடியும். மீனவர் பிரச்சினையை கை விட்டு விட்டு இனக்கொலை இலங்கை அரசுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள் எதுவும் இதற்க்குமேல் செல்லும் சாத்தியமில்லை.

 

 

இலங்கை அரசால் மீனவர்கள் கொல்லப்படுவது இலங்கை அரசால் ஈழ தமிழர்கள் கொல்லப்படும்  பிரச்சினைபோல முக்கியமான பிரச்சினையாகும்.

ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு 500க்கும் அதிகமாக மீனவர்கள்

இலங்கை அரசால் கொல்லப்பட்டது மீனவர்
பிரச்சினை தொடர்வது ஒன்றும் முக்கியமான பிரச்சினையாக தெரியவில்லை. அகில தமிழ் நாட்டு கட்ச்சிகளும்  போராட்டக்குழுக்களும்
,

சிவில் அமைப்புகளும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இதனை உணருதல் அவசியம்.

 


தமிழக பதிரிகைகளை விரித்தால் மாணவர் போராட்ட
சேதிகளுக்கு மத்தியில் ராமேஸ்வரதிலோ நாகப்பட்டினத்திலோ இலங்கை அரசின் கொலைவெறிக்கு
எதிராக மீனவர்கள் அனாதைகள்ப்போல தனித்துப்போய் போராடுகிற சேதிகளும் கானக்கிடக்கிறது. ஏன் ஒரே எதிரிக்கு எதிரான போராட்டங்கள்
 இப்படி பிளவு பட்டுக்க் கிடக்கின்றன. ஏன் அரசியல் வாதிகளைப்போல மாணவர்கள்
மீனவர் பிரச்சினையை முதன்மைப் படுத்தவில்லை? இத்தகைய வரலாற்றுக் கேழ்விகளுக்கு
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

 

 

தொகுதிவாரியான வாக்கு வங்கி இல்லாத உழைக்கும் சாதியினருக்கும் ஆதிவாசிகளும்மும் தமிழகத்தில் எந்தக் குரலும் இல்லை. மீனவர்கள் தமிழராக இருந்தபோதும் வாக்குப்

பலமற்ற ஏழை பாழை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைத்தவிர புறக்கணிப்புக்கு வேறு காரணம் தெரியவில்லை. பிழைகள் திருத்தப் படவேண்டும். இல்லையேல் எதிர்கால
ஆய்வாளர்கள் மறைமுக சாதி உணர்வு என்றுதான் இதனை பதிவு செய்வார்கள்.


 

 

கேரழக்கரையில் இத்தாலிய கடற்படையால் 2 மீனவர்கள் கொல்லப்பட்டபோது சில மணித்துளிகளுக்குள்ளேயே கேரழ மக்களும் கேரழ அரசியல்வாதிகளும்

அதிகாரிகளும் பொங்கி எழுந்தார்கள். இத்தாலி நட்பு நாடு என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இதற்க்கு கேரழாவில் ஜாதி உணர்வு கீழ்ப்பட்டிருப்பதும்
மாநில இன உணர்வு சாதி உணர்வைவிட மேலோங்கி இருப்பதுவும்தான் காரணமாக இருக்க முடியும்.

 


தமிழர்கள் என்பதால் 500 க்கும் அதிகமான இந்தய

மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை நட்ப்பு நாடா? என்று கேட்க்கும்போது கோரிக்கையை

புரிந்துகொள்வது அயல்மாநிலங்களுக்கும் இலகுவாக இருக்கும். இன்று வடமாநிலத்தவர் பலர் தமிழகத்தின் கோரிக்கையை உணர்வு
நிலைப் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இதுதான் பிரச்சினையே

 


 

2


 

 

 

கோட்பாட்டு ரீதியில் தமிழக மக்களின் போராட்டம் இலங்கை
நட்ப்பு நாடல்ல என்பதை காங்கிரஸ் தலைமையிலான மதிய அரசுக்கு உணர்த்தி அவர்களை
செயல்பட வைப்பதாகும். இதனை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். மீனவர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இயன்றவரை பல்வேறு தமிழக அரசியல்
சக்திகளின் ஆதரவுடன் காங்கிரஸ் பஜக சிபிஎம் உட்பட எல்லா தரப்பிலுமுள்ள நட்ப்புச்
சக்திகளுடன் சேர்ந்து இலங்கையை தனிமைப் படுத்துவது மட்டுமே தமிழக மக்களின் நோக்கமாக முடியும். அது மட்டும்தான்
போராட்டங்களை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லும். இலங்கையை விட்டுவிட்டு பஜக காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி இலங்கை இனவெறி அரசுக்கும் தமிழக தேர்தல்
அரசியல்திளுக்கும் மட்டுமே அனுகூலமானதாகும். .  

 

 

தமிழகச் சட்டசபை தீர்மானங்கள் உட்ப்பட இலங்கைக்கு
எதிரான தீர்மானங்கள் பல மீனவர் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்பது அபத்தமாகும்  

தீர்மானங்களும் கோரிக்கைகளும் தமிழக மக்களின் முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்கு படுத்தப் படாவிட்டால் தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும். .

 

 

மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிபந்தனைகளுடன் தமிழக இந்திய கட்சிகளுக்கும் அரசுகளுக்கும் முன் வைத்துவிட்டு சற்று
நிதானிக்க வேண்டிய தருணமிதுவாகும்.

தற்காலிகமாக தங்கள் போராட்டங்களை நிபந்தனைகளுடன் வாபஸ் பெறுவதும் புதிய தீர்மானங்கள் போராட்ட வடிவங்கள் விவாதிக்கப்
படுவதும் அதுவரை கல்லூரிகளுக்குத் திரும்புவதும்  சரியான முடிவாக இருக்கும். மாணவர்கள் தொடரும் மக்கள் மற்றும் அரசியல் இயக்கப் போராட்டங்களை எப்பவும் கண்காணிக்க முடியும். அவர்கள் கல்வியைத்
தொடர்வதுடன் புதிய போராட்ட வடிவங்களோடு எப்பவும் மீண்டும் போராட்டத்தில் தவணை
முறையிலோ தொடற்ச்சியாகவோ குதித்திடவும் முடியும்.

    

 

கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மாணவர் பின்போடும் இடத்தில்

இருந்து போராட்டத்தை முனெடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய போராட்டங்கள்

மாணவர்களது கண்காணிப்பினால் மேலும் உறுதிப்படும்.


 

 



 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள் பேட்டியிலும் இலங்கை அரச படைகளால் கொல்லப்படும் மீனவர்பற்றி ஒரு கேழ்விதன்னும் வரவில்லை.

 

தமிழகத்திலும் டெல்கியிலும் இயங்கும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் மீனவர் பிரச்சினையை தவர்த்து விடுவார்கள். இலங்கை தொடர்பான நேர்கானல்கள் விவாதங்கள் இடம்பெறும்போது மீனவர் பிரச்சினை எழுப்பப் படுவதில்லை. இறுதியில் பிரச்சினை தமிழகத்தவரின் உணர்வு நிலை என முடித்துவிடுவார்கள். கேட்க்கும்போது கஸ்ட்டமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் சொன்னது போன்று தமிழக மீனவர் கொல்லப்படுவதையும் இணைத்து இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர் என்பதை மற்ற இந்தியர்களுக்கு புரியவைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன்  தமிழகத்து மாணவர் போராட்டம் பற்றி  உரையாடுவதற்காக  யாழ் இணையத்தில் ஒரு திரி தொடங்கப் பட்டுள்ளது அதில் நீங்களும் உங்கள் கருத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும்.

இணைப்பு இங்கு

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120188#entry882632

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாலிக்கும் நண்பன் சாஸ்திரிக்கும் நன்றிகள். நான் இதனை தளமேறியபோது மானவர் பிரச்சினை தொடர்பாக தனி திரி தொடங்கி இருப்பதை அறிந்திருக்கவில்லை. இதனை அந்தத் திரிக்கு எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை? யாராவது உதவவேண்டும். நண்பர் நிழலி உதவக்கூடும் என நினைக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருத்தம் insert - தொகுதிவாரியான வாக்கு வங்கி இல்லாத உழைக்கும் சாதியினருக்கும் ஆதிவாசிகளும்மும் தமிழகத்தில் எந்தக் குரலும் இல்லை. மீனவர்கள் தமிழராக இருந்தபோதும் வாக்குப்

பலமற்ற ஏழை பாழை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைத்தவிர புறக்கணிப்புக்கு வேறு காரணம் தெரியவில்லை.

இலங்கையை தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?  

 

முதலாவதாக  காரணம் இந்தியரான தமிழக மீனவர்கள் வகை தொகையின்றி இலங்கைப் படைகளால் கொலை செய்யப்படுவது.  இரண்டாவது

காரனம்  ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் இனக்கொலையும் போர்குற்றங்கள் தொடர்வதும். இந்த முறைமையில் மட்டுமே  ணவர்களும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையை வடக்கு நோக்கிக் கொண்டு செல்லமுடியும். மீனவர் பிரச்சினையை கை விட்டு விட்டு இனக்கொலை இலங்கை அரசுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள் எதுவும் இதற்க்குமேல் செல்லும் சாத்தியமில்லை.

 

யாழ் தொடர்ந்து வெடடுவதால் இதில் பெரிதாக எழுதி ஒரு பலனும் இல்லை.

 

முதலில் "இலங்கையை தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? " என்ற கேள்வி அரசியல் தரம் இல்லாத கேள்வி (ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருந்தால் கொஞ்சம் பொருள் இருந்திருக்கும். கிளிநொச்சிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பலதடவை தங்கள் உயிரையும் கவனிக்காமல் பயணம் செய்த தலைவர்களை எல்லாம் எள்ளிநகையாட வந்த கேள்விதான் இது . மாணவர் போரட்டம் எழுச்சி பெற்றது பாலச்சந்திரனின் இறப்புப் படத்திலிருந்து. உதய குமார் ஐயாவின் கருத்துப்படி இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் நாட்டில் மாணவர் போராட்டம் எப்போதும் இருந்தது.). அதன் பின்னர் அளிக்கப்படும் பதில் இரண்டும் கற்பனையே இல்லாதா வலிந்த வறட்டுப் பதில்கள். ஏன் எனில் இப்போதைய எழுச்சி மாணவர் பற்றியது.

 

மாணவர் போராட்டம் பிசிபிசுத்துபோய்விட்டதாகவும் அதை திரும்பக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதை மீனவர் போராட்டம் பக்கம் திரும்ப வேண்டும் என்பது பொய்யட் மாணவருக்கு செய்ய வரும் உபதேசம்.(மீனவரை இலங்கை அரசு சுடுவது ஏன் என்று பொய்யட்டுக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால் மாணவருக்கு "அவர்கள் தமிழர்கள்" என்பதால்த்தான் சுடப்படுகிறார்கள் என்பது விளங்கியத்தால் தான் இந்த எழுச்சி இன்று வந்த்தது)  இதற்கு அவர் காட்ட வரும் சான்றான அவரின் பழைய கட்டுரை அவரின் அண்மைய கருத்துக்களுக்கு எதிரானது. இன்றை இந்தியா இன்னொருதடவை தனது பாதுகாப்பு, வெளிநாட்டுக்  கொள்கைகளை "ஈழத்தமிழரை பழிவாங்க" என்பதில் இருந்து எடுத்து "2014 தேர்தல் வெல்ல" என்றதற்கு மாற்றிவிட்டார்கள்.  

 

மீனவர் பிரச்சனை, தமிழ் நாட்டில் மீனவர் சிறுதொகை என்பதால் என்று பொய்யட் கருத்து வைக்கிறார். இதற்கும் தனது பழைய காட்டுரையைத்தான் சூசகமாக மேற்கோள் காட்டுகிறார்.

 

இவருக்கு சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று நன்றாக விளங்கு கிறது ஆனால் அரசியல் என்றால் என்ன என்று விளங்குவதில்லை. முழு அளவிளான போர் ஆரம்பம் ஆக முதல் இலங்கை 20 மீனவர்ளை பிடித்து அடைத்தது. அதற்கு இந்தியாவும் 20 மீனவரை பிடித்து அடைத்தது. எனவே இலங்கை வேறு வழி இன்றி தமிழ் நாட்டு மீன்வரை விடுவிக்க வேண்டி வந்தது. அப்போது தமிழ் நாடு அரசும் சேர்ந்து மீனவரை பிடித்து வைத்திருந்தது புலிகள் என்று பட்டம் கட்டினார்கள். இதனால், விடிவிக்கப்பட்ட  மீனவர் தமிழ் நாடு சென்றவுடன் ஊடகங்களை சந்திக்கும் போது என்ன சொல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருந்த சிறுவன் எல்லா உண்மைகளையும் புட்டுக்கொட்டியதால் அவனை வெளியே எங்கோ அனுப்பினார்கள். இதை எல்லாம் கருணாநிதியின் தமிழக அரசும் சேர்ந்துதான் செய்தது.

 

தமிழக மீனவர் கொல்லப்படும் உண்மையை கருணாநிதியின் தமிழக அரசும் மூடி மறைத்ததின் காரணம் மீனவர் தமிழ் நாட்டில் சிறிய தொகை என்பதால் அல்ல. கருணாநிதி முழு தமிழகத்தின் ஆதரவையும் இழந்தும் காங்கிரசுக்கு அடி பணிய வேண்டிய களவுகளில் பிடி பட்டிருந்ததாலேயே அப்படி செய்ய வேண்டியிருந்தது..

 

ஒட்டு மொத்த பெரிய தமிழ் நாட்டு, முழு சமூதாயத்திலிமிருந்து 19 தமிழர் தீயில் ஆகுதியானபின்னரும் ஈழத்தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஆதரவை கருணாநிதி தடுத்ததின் காரணம் மீனவர்கள் சிறிய சமுதாயம் என்பதால் அல்ல, அதைதான் காங்கிரஸ் கருணாநிதியிடம் செய்யும் படி கட்டளை இட்டது.  தமிழ் நாடு அரசால் மீனவரை காப்பாற்ற முடியாது. அது வெளிநாட்டுப் பிரச்சனை. 2 மலையாளிகள் இறந்ததால் இத்தாலிய தூதுவர் நாடு திரும்ப முடியாது போனது.(அங்கும் மீனவர் சிறிய சமுதாயம் தான்) இது மீனவர் தமிழ் நாட்டில் காட்டத்தாக அரசியல் பலம் சார்ந்ததல்ல. தமிழ் நாட்டு அரசு மத்தியில் காட்டத்தக்க அரசியல் ராஜதந்திர பலம் சார்ந்தது.

 

19 பேர் தீயில் ஆகுதியான பின்னரும் அசைந்து கொடுக்காத கருணாநிதி தேர்தலின் பின்னர் டெசோ காட்டுகிறார். காங்கிரசும் 2014 தேர்தலின் பின்னர் எதிர் கட்சியில் இருக்கும் போது  தமிழ்மீனவர் பாட்டை பற்றி பாரளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். இன்றைய மாணவர் போராட்டாம் இன்னும் 25- 30 வருடங்களின் பின்னர் பலன் தரத்தக்க சில அடிப்படை மாற்றங்களை தமிழ் நாட்டில்  ஏற்கனவே செய்த்துவிட்டது.மாணவர் போராட்டம் தோற்கவில்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.