Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஏன் வைகோவை தேர்ந்தெடுத்தேன்?

Featured Replies

நான் ஏன் வைகோவை தேர்ந்தெடுத்தேன்?

 

ஒரே சிந்தனை கொண்ட நண்பர் இல.கோபால்சாமியின் பதிவு.

நீண்ட நாட்களாகவே பகிர எண்ணி இருந்த அனுபவம். தற்போதுதான் நேரம் வாய்த்தது.

 

562154_10151523811422068_1148711779_n.jp

 

நான் மாணவனாக இருந்த பொழுது, ஒரு அடிமைச் சமூகம் போல நடத்தப் பட்டிருக்கிறேன். வெறும் படிப்பு, அளவான பொழுதுபோக்கு, செய்தித் தாள்களில் வரும் நாடு நடப்புகள் தவிர வேறெதுவும் அறிந்திருக்கவில்லை.

 

போட்டி நிறைந்த எதிர்காலத்தை கல்வி என்ற ஒற்றை ஆயுதம் கொண்டு எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் அதை மட்டுமே பட்டை தீட்ட வேண்டிய நிர்பந்தம். ஆயினும் கற்ற கல்வி கைவிட வில்லை. அந்தக் கல்விதான் பின்னாளில் எதையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் கண்டறியும் கருவியாயிற்று.

 

இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் தற்போதைய மாணவர்கள் அனைத்தையும் விரல் நுனியில் கண்டறிந்து வைத்துள்ளனர். நம் நாடு இப்படி இருக்கிறதே என எழுந்த ஆதாங்கத்தின் அழுத்தம் கூடிக் கொண்டிருந்த வேளையில் சானல் 4 பற்ற வைத்த நெருப்பு இன்று கொழுத்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

 

இன்றைக்கு உங்களில் விழுந்த அந்தப் பொறி தான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னுள் விழுந்தது.அப்போது நான் இங்கிலாந்து நாட்டில் மாணவனாக இருக்கிறேன். நம் நாட்டைக் காட்டிலும் சற்றே அதிக தொழில் நுட்பம் பயன்படுத்த முடிந்தது. நேரமும் அதிகம் கிடைத்தது.

 

அப்போது என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதின் விளைவு, பின்னாளில் வாழ்க்கைப் பாதையை பயனுள்ள திசையில் செலுத்த ஏதுவாயிற்று.

 

எனது அடையாளம், எனது இனம், எனது சமூகம் குறித்த ஒரு தெளிவு பிறந்தது. வரலாற்றுச் சிறப்புடனும், பெருமையுடனும் தெளிந்த நீரோடையாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்த நமது தமிழ்ச் சமூகத்தை, அண்மைக் காலத்தில் முடை நாற்றம் வீசும் சாக்கடையாக மடைமாற்றம் செய்து வைத்துள்ளனர் என்பதை எளிதில் உணர முடிந்தது.

 

எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும், நாம் தற்போது அனுபவிக்கும் இன்னல்களுக்கு நாம் சற்றும் தகுதி உடையவர்கள் அல்ல என்கிற உண்மை புலப்பட்டது. இதை மாற்ற நம்மால் ஆன பங்களிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்ய வேண்டும் என்ற உறுதி பிறந்தது.

 

ஆனால் ஒரு தனி மனிதாக நாம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகக் குறைவாக இருக்கும். நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதுதான் அரசியல். இன்றைய நமது நிலைக்குக் காரணம் அரசியல். முள்ளை முள்ளால் எடுப்பது போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல அரசியலை அரசியல் கொண்டுதான் எதிர்கொள்ள இயலும். அந்த சமயத்தில் நான் ஆராய்ந்து அடையாளம் கண்டுகொண்ட ஒரு அரசியல்வாதிதான் வைகோ அவர்கள்.

 

இன்றைக்கு நமக்கு இணையம், தகவல் தொழில்நுட்பம் தந்த இனமான உணர்வை அன்றைக்கு பெரியார்,அண்ணா ஆகியோரின் விழிப்புணர்வுப் பிரசாரங்களின் மூலம் பெற்றவர் வைகோ. அவை அனைத்தையும் இளம் வயதில் உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொண்டதால் தானோ என்னவோ தமிழ் மொழிப் பற்றையும், இனப் பற்றையும் இன்றளவும் குடத்து விளக்காக காப்பாற்றி வந்திருக்கிறார். அவரது போதாத காலம் அவரது திறமைகளே அவருக்கு எதிரிகளாயின. அரசியல் களத்தில், ஆட்சி அதிகாரத்த்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த சக்திகளை, எவ்வித துணையும் இன்றி, ஊடக பலமும் இன்றி தன்னந்தனியாக எதிர்கொண்டு இருந்த வைகோ எனக்கு ஒரு வீரனாகக் காட்சி அளித்தார். அரசியல் எதிரிகளை எல்லாம் தான் மிதித்து ஏறுகிற படிக்கட்டுகளாக வீழ்த்தும் அரசியல் களத்தில், 20 ஆண்டுகள்,

 

அதிலும் குறப்பாகக் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதெல்லாம் சாதரான காரியம் அல்ல. ஒரு மாத காலம் நடந்த மாணவர் போராட்டத்தை உடைக்க என்னென்னவோ வேலைகளைச் செய்கிற அரசியல்வாதிகள் வைகோ போன்றவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் என்னென்ன தொல்லைகள் நிர்பந்தங்கள் கொடுத்திருப்பார்கள் என்பதெல்லாம் சற்றே யோசித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

 

நேர்மை, நாணயம், ஒழுக்கம், உலகளாவிய அறிவு, சமரசம் இல்லா போராட்டக் குணம், மாற்றாரையும் மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இயல்பாகவே என்னை அவர்பால் ஈர்த்தது.

 

எனது நம்பிக்கையும் வீண்போகவில்லை என்பதை பின்னாளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக உறுதி செய்து கொண்டேன். எனது சமூகத்திற்கு நான் பட்ட கடனை இவர் வாயிலாகத் திரும்பச் செலுத்துவதுதான் முறையாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே அவருக்கு அதரவாக நிற்கிறேன். ஆதாயத்திற்காக அல்ல, பதவி, அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்குத் துணையாக அல்ல, எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்குத் துணையாக நிற்கும் என்போன்ற ஒவ்வொரு உண்மை ஆதரவாளனும் நான் கடந்து வந்த பாதையில் தான் கடந்து வந்திருப்பான். என்போலவே அவன் அதில் மிகவும் பெருமையும் அடைந்திருப்பான்.

 

தமிழகத்தில் அரசியல் தீய சக்திகள் ஒழிந்து சமூகம் தழைக்க வேண்டுமானால் வைகோ போன்ற நேர்மையாளர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

 

மாணவர் போராட்டம் நடந்து வரும் இவ்வேளையில் எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொன்டதன் காரணம், இளைஞர்களை எதோ ஒரு கட்சியின் பக்கம் ஈர்பதர்க்காக அல்ல. இன்றைய இளைஞர்கள் எதையும் எளிதில் நம்பி விடுபவர்களும் அல்ல. அணைத்து தகவல் தொழில்நுட்பத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும், சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் இளைஞர்கள் தங்கள் அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். ஓரிரு நல்லவர்கள் நம் கண்முன்னே இருக்கத்தான் செய்கிறார்கள்.

அத்தகைய நல்ல தலைவர்களை ஆதரியுங்கள், அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்ப்படும்.

 

அதனால் ஏற்ப்படும் சமூக மாற்றம் வளர்ச்சிப் பாதையில் நம்மை இட்டுச் செல்லும்.

யார் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும், அதிகாரத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும், எதிரிகள் எத்தனை சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் சமூக நலனை மட்டுமே இலக்காகக் கொண்ட எங்களின் பயணம் தொய்வின்றி தொடரும்.

 

 

நன்றி! நண்பர் இல.கோபால்சாமி.

Edited by akootha

நேர்மை, நாணயம், ஒழுக்கம், உலகளாவிய அறிவு, சமரசம் இல்லா போராட்டக் குணம், மாற்றாரையும் மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இயல்பாகவே என்னை அவர்பால் ஈர்த்தது.
வாழ்க வைகோ!

சேறு சகதிகள் நிறைந்துள்ள இந்திய அரசியலில் இவர் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார் என்பது வியப்பானது.

 

அதுவும் நயவஞ்சகம், நரித்தனம் என்பவற்றின் ஒட்டுமொத்த வடிவமான கருணாநிதியுடன் இருந்தும் அவை எதுவும்

 

தன்னைத் தீண்டாமல் பார்த்துக்கொண்டது பெரிய சாதனை எனலாம். என்றும் சிறப்புடன் வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வைகோ

ஈழ அரசியலுக்கும், சுற்று சூழல் பாதுகாப்புக்கும், நேர்மைக்கும், எதிரியையும் மதிக்கும் தன்மைக்கும் இவருக்கு நிகர் இவரேதான்

  • தொடங்கியவர்

இது போன்றத் தலைவர்கள் மீண்டும் கிடைப்பார்களோ?

வைகோ அவர்கள் இவர்போன்றோரை சிறிது நினைவுப்படுத்துகிறார்.

 

 

644359_583295528355368_1233964463_n.jpg

 

 

 

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.

 

 

ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் "அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள். ஆனால் காமராஜ் "அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

"சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்."

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐயா!

  • தொடங்கியவர்

நெடுமாறன் அரசியல் ஆசைகள் எதுமில்லாத ஒரு துறவி. அவரால் இயன்ற அனைத்து நல்ல முயற்சிகளையும் செய்து பார்த்தார். பலனில்லை.

 

 

544388_398371463593634_240168281_n.jpg

 

கடந்த 20 ஆண்டுகளாக ஈழப்போராட்டம் பற்றியும், பிரபாகரனைப்பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றியும் வைகோ பெருமிதம் பொங்கப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவர் எந்தத் தடைச் சட்டத்திற்கும் அஞ்சி தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இருந்தும் அவருக்குப்பின்னால் மிகத் திரளான மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத காரணத்தால் அவரது மனமார்ந்த ஈடுபாடு இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. ஆனால் வைகோவிற்குப் பின்னால் பெருந்திரளான கூட்டம் இனி உருவாகும்.


- தமிழருவி மணியன்

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியல்  ஆய்வாளர்கள் முக்கி முக்கி ஆய்ந்து விட்டு வந்து எழுதுவார்கள்.

 
ஏன் இரண்டு தொகுதிக்கு மேல் ஜெயிக்கவில்லை என்று.
 
பொய்யை சொல்லி புலம் பெயந்த நாடுகளில் வாழ்வை அமைத்தவர்கள். கேட்கிறார்கள் ஏன் உண்மை ஜெயிக்கவில்லை  என்று?
 
ஜெயித்த கருணாநிதியும் ஜெயாவும்  உண்மையானவர்கள் என்று ஒரு மறைபொருளை எழுதுகிறோம் என்பதே இவர்களுக்கு புலப்பட போவதில்லை. 
இதில் சர்வதேச அரசியல் வியாபாரம்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழகத்தில் வாழ்ந்தபோது தெரியாத்தனமாக எனக்கும் வாக்குரிமையைத் தந்துவிட்டார்கள்.. :D வைகோ அவர்களுககுத்தான் போட்டேன்.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.