Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

Featured Replies

நான் மீண்டும் கூறுகிறேன் எம்மை நாகரிக முதல் மாந்தன் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்த அகள்வாய்வாளரும் இல்லை. எம்மைத் திசைதிருப்பவே இப்படியானவற்றைப் புனைகின்றனர்.

 

நாம் யார் என்று தெரியாத வரைக்கும் "எம்மை" என்ற சொல் பொருள் இல்லாதது.

 

கிழக்கே வந்து அங்கே சங்கமமான சமஸ்கிருதம் திராவிட இலக்கணத்தில் அமைக்கப்பட்ட மொழி. இது மேற்கே திரும்பிப் போக வில்லை. அப்போது மேற்கிலும் அதி கிழக்கிலும் தமிழ் சொற்கள் போன்ற சொற்கள் இருப்பதற்கு ஒரு பொது விளக்கம் ஒன்று வேண்டும். அல்லது தனியத் தனிய ஒரிரு சந்தர்ப்பத்தைமட்டும் விளங்க வைத்தால் அது அப்படி எத்தனை மொழிகளுக்கு  ஏற்பட்டிருக்கு என்றும் வேறு எத்தனை மொழிகளில் பரவியிருக்கு என்றும் அவை எல்லாவுமே ஆதி மொழிகளா என்ற கேள்வியும் வரும்.

 

"அம்மா அப்பா" உலக மொழிகள் எல்லாவ்ற்றிலும் காணப்படுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியப் பாதிரியார் டேவிட் என்பவர் சுமேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். வாங்கி வாசித்தால் நான் கூறிய சுமேரிய  மொழிக்கும் மற்றைய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு புரியும் மல்லை.

 

நீங்கள் ஒரு மொழியை பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழுக்கும் 270 மொழிகளுக்கும் தொடர்பு உண்டாம்.

 

அவர் சொல்வது தொடர்ப்பை பற்றி. ஆனால் இரண்டும் பிரிந்த காலத்தை சொன்னால் மிகுதி ஒரு தொகை அனுமானிக்க முடியும்  கன்னடமும் தமிழும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்திருக்கலாம். அவற்றின் ஒற்றுமை வைத்து சுமேரிய பாசையின் எத்தனை வீத சொற்கள் தமிழுடன் ஒத்து இருக்க வேண்டும் என்பது கூட சொல்லிவிடலாம். 

The earliest proto-urban settlements with several thousand inhabitants emerged in the Neolithic. The first cities to house several tens of thousands were Memphis and Uruk, by the 31st century BC (see Historical urban community sizes).

Historic times are marked apart from prehistoric times when "records of the past begin to be kept for the benefit of future generations";[8] that is, with the development of writing. If the rise of civilization is taken to coincide with the development of writing out of proto-writing, the Near Eastern Chalcolithic, the transitional period between the Neolithic and the Bronze Age during the 4th millennium BC, and the development of proto-writing in Harappa in the Indus Valley of South Asia around 3300 BCE are the earliest incidences, followed by Chinese proto-writing evolving into the oracle bone script, and again by the emergence of Mesoamerican writing systems from about 200 BC.

In the absence of written docu

Indian subcontinent

300px-Mohenjodaro_Sindh.jpeg
magnify-clip.png
Mohenjo-daro
300px-Indian_cultural_zone.svg.png
magnify-clip.png
Indian cultural zone

The earliest-known farming cultures in the South Asia emerged in Indian subcontinent (present day India & Pakistan) in the hills of Balochistan, on the border between modern-day Pakistan and Iran. These semi-nomadic peoples domesticatedwheatbarleysheepgoat and cattlePottery was in use by the 6th millennium BC. The oldest granary yet found in this region was the Mehrgarh in the Indus Valley.

Their settlement consisted of mud buildings that housed four internal subdivisions. Burials included elaborate goods such as basketsstone and bone toolsbeadsbanglespendants and occasionally animal sacrificesFigurines and ornaments of sea shelllimestoneturquoiselapis lazulisandstone and polished copper have been found. By the 4th millennium BC,Technologies included stone and copper drills, updraft kilns, large pit kilns and copper melting crucibles. Button sealsincluded geometric designs.

By 4000 BC, a pre-Harappan culture emerged, with trade networks including lapis lazuli and other raw materials. Urban centers during this phase spanned what is now Pakistan and western India. The Harappan phase is known to have comprised several large cities, including Harappa (3300 BC), Dholavira (2900 BC), Mohenjo-Daro (2500 BC), Lothal (2400 BC), and Rakhigarhi, and more than 1,000 towns and villages, often of relatively small size. The cities were perhaps originally about a mile square in overall dimensions, and their outstanding magnitude suggests political centralization, either in two large states or in a single great empire with alternative capitals. Or it may be that Harappa succeeded Mohenjo-daro, which is known to have been devastated more than once by exceptional floods.[22] The southern region of the civilization in Kathiawar and beyond appears to be of later origin than the major Indus sites. Villagers also grew numerous other crops, including peassesame seeddates, and cotton. The Indus valley civilization is credited for a regular and consistent use of decimal fractions in a uniform system of ancient weights and measures.[23][24] Furthermore, the streets were laid out in grid patterns along with the development of sewage and water systems. This civilization of planned cities came to an end around 1700 BC either through external invasion and perhaps due to drying of rivers flowing from the Himalayas to the Arabian sea and geological/climatic changes in the Indus valley civilization area which resulted in the formation of the Thar desert. As a result, the cities were abandoned and populations reduced and people moved to the more fertile Ganges–Yamuna river area. Much remains unknown as the Indus Valley script remains un-deciphered.

 

எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்து வெளியார் இவ்வளவு முன்னேற்றங்களுடன் தங்கள வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்கள். தமிழருக்கும் சிந்து வெளியாருக்கும் தொடர்பு இல்லை என்றால் பிரச்சனை எழுகிறது. சிந்து வெளியார் இவ்வளவு முன்னேறி வியாபாரங்களில் ஈடுபட்டிருந்த போது திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் தென்னிந்தியாவில்  இடியப்பம் அவித்து சொதி வைத்துக்கொண்டிருந்தவர்களா? :lol:  :lol:  :lol: அப்படி ஒரு முன்னேற்றத்தை எப்படித் தவறவிட்டார்கள். இவர்கள் கட்டிய செங்கல் நகரங்கள் எங்கே?  :unsure:  கீழே இருக்கும் படத்தின் படி சுமேரியரின் முதலாவது கிராமம் தொடங்கும் போது சிந்து வெளிக் ஹறப்பா அதன் அதி உயர் நாகரீகத்தில் இருந்தது.

364755649c469a266991131dba8e166f.png

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் வருவதெல்லாம் நம்பகத்தன்மை கொண்டது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா மல்லை.அதில் யாரும் எதுவும் எழுதலாம். அதனாலெல்லாம் அவை உண்மையாகிவிடாது. படித்தவர்களே இப்பிடித்தான்.ஒரு விஷயத்தை வடிவா அலங்கரிச்சு நம்புவதுபோல் எழுதியவுடன் நம்பி அதைவிட்டு அந்தபோபக்கம் இந்தப்பக்கம் நோக்காதிருப்பது. அதுதான் முன்பே கூறினேன் இதில் எழுதி எப்பயனும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

விபூதி தமிழரின் சின்னமா?

விபூதி பூசுதல் எப்போது தொடக்கம் தமிழ் கலாசாரத்தில் கலந்துள்ளது என்று கூற முடியுமா?

ஆதி தமிழர்கள் தெய்வ வழிபாடு செய்தார்களா?

சிவ வழிபாடுக்கும் தமிழருக்குமான ஆரம்பகால தொடர்பு என்ன? தமிழர் மதமாற்றம் செய்யபட்டார்களா?

போக்குவரத்து, மிகவும் கடினமான கேள்வி!

 

என்னால் இயன்ற அளவுக்கு, எனக்குத் தெரிந்தவைகளை வைத்துப் பதிலளிக்க முயற்சிக்கிறேன்!

 

3%20brillanti%202pasupati_15440.jpg

 

மேலேயுள்ள படம், ஹரப்பா பகுதியில் கிடைத்தது. இது தியானத்திலிருக்கும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், இவரைச் சுற்றி, மிருகங்கள், பறவைகள்,மீன்கள் என்பவை காணப்படுகின்றன. கொம்பானது, வலிமையைக் காட்டுகின்றது என எடுத்துக்கொள்வோம்!

 

harappatablet.jpg

இரண்டாவது படத்தில், அதே தியான நிலை உருவத்துக்கு அருகில், ஒரு எருது காணப்படுகின்றது! அத்துடன் எருதையடக்கும் ஒருவரது படமும் உள்ளது! (ஜல்லிக்கட்டு?)

 

Harappan+linga+form.JPG

 

மூன்றாவது படத்திலுள்ளது, ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட 'லிங்கம்; !

 

தொல்காப்பியர் நிலத்தைப்பற்றிப் பாடுகையில்,அந்த நிலத்தோடு, தொடர்புடைய தெய்வங்களையும் பற்றிப் பாடுகின்றார்!

 

மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன் மேய மைவரை உலகமும்,

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,

வருணன் மேய பெருமணல் உலகமும்,

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென,

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே- (அகத்-5)

 

ஆகவே, மேலேயுள்ள 'ஹரப்பா' மக்களும், தமிழர்களும் வணங்கியது, இயற்கையையே என்றும், அந்த நிலங்களுக்கு, ஒவ்வொரு தலைவர்களையும் வைத்திருந்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, 'தியானம்' போன்றவற்றை அறிந்திருந்தார்கள் என்றும் கொள்ளலாம்!

 

அதிகம் நீட்டி முழக்காது, சுருக்கமாகச் சொல்வதெனில், ஆரிய வேதங்களின் பின்னர், ஹரப்பன் தெய்வங்கள், தமிழ்த் தெய்வங்கள் என்பன முறையே, பின்வரும் வேத நாயகர்களுடன் தொடுக்கப்பட்டனர்.

 

முருகன், ஸ்கந்தனானான்!

சிவன் உருத்திரனானான்!

திருமால் விஸ்ணு ஆனான்!

கொற்றவை துர்க்கையானாள்! 

 

சரி, திருநீறு எங்கே வருகின்றது?

 

எனது அனுமானத்தின் படி, வேதங்களில் வரும் உருத்திரன், சுடலைகளில் ஆடுபவன்! சுத்தமில்லாதவன்! இறந்த பிணங்களைப் புசிப்பவன்! இதிலிருந்த தான், திருநீறு பூசும் பழக்கம் வந்திருக்க வேண்டும்! 'அஹோரி' என்று நீங்கள் கேள்விப்பாட்டிருந்தால், இவர்கள் தான் சரியான உருத்திர வடிவங்கள்! வேதத்து உருத்திரன், மிகவும் உக்கிரமானவன். கோபக்காரன்!

 

வால்மீகி ராமாயணத்தில், திருநீறு குறிப்பிடப்படுகின்றது!

சம்பந்தர் (எட்டாம் நூற்றாண்டு), திருநீற்றுப்பதிகத்தில், திருநீற்றுக்கு ஒப்பிடுவதற்கு, உவமை கிடைக்காமல், இராவணன் மேலது நீறு என்று பாடுகின்றார். உண்மையான, இராவணனின் குணத்தை, மறந்து போய்க் கூறிவிட்டார்!

 

சம்பந்தர், வேதத்தில் உள்ளது நீறு, என்றும் குறிப்பிடுகின்றார். இந்திரனும், திரு நீறு அணிகிறான், திருமாலும் அணிகிறான், எனவே, வேதங்களின் ஊடுரவலின் காலமே, நாம் திருநீறு அணியத் தொடங்கிய காலமாக இருக்கவேண்டும்!

(ஏதோ என்னால் முடிந்தது! :D )

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை..

திராவிடர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் இருந்தும், ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாகவும் வந்தாக தமிழகப் பாடநூலில் இருந்தது.. ஆகவே நீங்கள் சொல்லும் சில விடயங்கள் ஒத்துவருவதுபோல் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை..

திராவிடர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் இருந்தும், ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாகவும் வந்தாக தமிழகப் பாடநூலில் இருந்தது.. ஆகவே நீங்கள் சொல்லும் சில விடயங்கள் ஒத்துவருவதுபோல் உள்ளது..

Silk Route என அழைக்கப் பட்ட 'பட்டு வழி' ஊடாக, இந்தியாவுக்கு ஒரு குழுவும், மற்றையது பாரசீகம் என அழைக்கப் பட்ட 'ஈரானுக்குள்ளும்' போய், இந்தியாவுக்கு வந்தவர்கள், சிந்து வெளி, ஹரப்பா பகுதிகளில் இருந்த தத்துவங்களைக்  களவெடுத்து, தங்களுடைய, சொந்தப் பெயரில், வேதங்களாக மாற்றிவிட்டனர்!

 

இப்போது, வேதத்தில் இருந்த குப்பை எல்லாத்தையும் , கூட்டித் துடைச்சு, 'பகவத் கீதை' என்று ஒரு 'வேதாந்தமாக ஆக்கி, Presentable Form இல் வைத்திருக்கிறார்கள்! இன்னும், அந்தப் பிராமண ஆதிக்கம், கீதையில் இருந்தாலும், இப்போது எல்லோரும் கீதையின் படி நடந்தால், அவர்களும் பிராமணர்களே என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துள்ளார்கள்!

 

அத்தோடு கௌதம புத்தரையும், கிருஷ்ணரின் ஒரு அவதாரமென்றும் கூறுகின்றார்கள்!

 

பாரசீகத்தில், 'அசிரியர்' ( Asiriyans)என்னும், ஒரு மிகவும் நாகரீகத்தின் உச்சியிலிருந்த இனமும், தனது பூர்வீக இடத்திலிருந்து, ஆரியர்களால் துரத்தியடிக்கப் பட்டது!

 

நாங்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுகின்றோமே ஒழிய, திராவிடர்கள் என்பது, வடக்கிலிருந்து. தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆரியர்களையே உண்மையில் குறிக்கும்! 

 

எனது, தமிழர்களின் பழக்க வழக்கங்கள் எப்படியிருந்திருக்கும், என்ற அனுமானங்கள், பெரும்பாலும் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடமிருந்த்து அவதானித்தவையே!

 

நீங்கள் இங்கு வந்தால், உண்மையான சிவதாண்டவத்தைக் கூட உங்களுக்கு என்னால் காட்ட முடியும்!  :icon_idea:

56%20Corroboree.jpg

 

காடுடைய சுடலைப் பொடி,

பூசியென் உள்ளங்கவர் கள்வன்!

 

ஏற்றாயடியேன் இரவும், பகலும்,

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்! :D

புங்கை..

திராவிடர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் இருந்தும், ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாகவும் வந்தாக தமிழகப் பாடநூலில் இருந்தது.. ஆகவே நீங்கள் சொல்லும் சில விடயங்கள் ஒத்துவருவதுபோல் உள்ளது..

நீங்கள் தமிழ் கும்பலா? திராவிட கும்பலா? ஆரியக்கும்பலா? :D

 

(புத்தகங்கள் மிக பழைய கதை. முதலில் திராவிடர் சிந்து வெளியில் வைத்து அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றார்கள். பின்னர் அந்த நேரத்து உலகின் மிக பெரிய சனத்தொகையை ஆரியர் அழிக்க அவர்கள் அப்படி ஒன்றும் காட்டு மிராண்டிகள் இல்லை; வெள்ளம் அல்லது பஞ்சம் அழித்தது ஆகையால் இன்றைய பண்பாடு தனிய  ஆரியரின் பண்பாடு மட்டுமே என்றார்கள். இன்று திரும்ப ஆரியர் அழிக்கவில்லை; ஆண்டார்கள்;ஆனால் திராவிடர் இலகுவில் ஆளுபவர்களின் மொழி, மதம் கலாச்சாரம் ஆகியவற்றை பின் பற்றுபவர்கள், ஆகையால் இன்று முழுவதாக மாறிவிட்டார்கள் என்கிறார்கள். இதனால்த்தான் வடக்கில் பிரகு தவிர எந்த திராவிட மொழியும் இல்லை. )

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை.. "திராவிட" என்கிற சொல்லே புகுத்தப்பட்டதுதான் என்பதுதான் எனது எண்ணமும்..

 

அதுபோக, அவுஸின் ஆதிகுடிகளின் கலாச்சாரத்தை நானும் நிழற்பட வடிவில் கண்ணுற்றேன்.. ஆச்சரியம்தான்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

 

உங்களது கண்டமே பிரிந்து தள்ளிப் போன ஒன்று என்றால் அந்தக் காலங்களிலேயே இவர்கள் இந்தக் கலாச்சாரத்தோடு இருந்தார்களா? கடினமான ஒரு கேள்வியாக உள்ளதே..

 

 

மேலே உள்ள காணொளி ஒரு தேடலில் கிடைத்தது.. ஒரு தமிழர் உருவாக்கியது அல்ல என நினைக்கிறேன்..

 

1:05 நிமிட நேரக்கணக்கில் பார்த்தீர்கள் என்றால் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியா கண்டமும், இந்தியத் துணைக்கண்டமும் இன்றைய அண்டார்ட்டிக்கா பகுதியில் இருந்து பிரிந்து செல்வதுபோல் காட்டுகிறார்கள்..!

 

இன்று அவுஸ் பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமை எப்பொழுது தோன்றியிருக்கும் என்று ஏதாவது ஆராய்ச்சித் தகவல் உண்டா புங்கை?



நீங்கள் தமிழ் கும்பலா? திராவிட கும்பலா? ஆரியக்கும்பலா? :D

 

(புத்தகங்கள் மிக பழைய கதை. முதலில் திராவிடர் சிந்து வெளியில் வைத்து அழிக்கபட்டிவிட்டார்கள் என்றார்கள். பின்னர் அந்த நேரத்து உலகின் மிக பெரிய சனத்தொகையை ஆரியர் அழிக்க அவர்கள் அப்படி ஒன்றும் காட்டு மிராண்டிகள் இல்லை; வெள்ளம் அல்லது பஞ்சம் அழித்தது ஆகையால் இன்றைய பண்பாடு தனிய  ஆரியரின் பண்பாடு மட்டுமே என்றார்கள். இன்று திரும்ப ஆரியர் அழிக்கவில்லை; ஆண்டார்கள்;ஆனால் திரவிடர் இலகுவில் ஆளுபவர்களின் மொழி, மதம் கலாச்சாரம் ஆகியவற்றை பின் பற்றுபவர்கள், ஆகையால் இன்று முழுவதாக மாறிவிட்டார்கள் என்கிறார்கள். இதனால்த்தான் வடக்கில் பிரகு தவிர எந்த திராவிட மொழியும் இல்லை. )

 

யாரிடம் வாயைக் கொடுத்தாலும் மல்லையிடம் வாயைக் குடுக்கக்கூடாது என்பது எனது படிப்பினை.. :lol:

 

தமிழக பாடநூலில் இருந்ததை அப்படியே தந்தேன் ஐயா..!  :(  அது என் கருத்து என்று சொல்லவரவில்லை.. நான் ஆராச்சியாளர் ஐராவதம் மகாதேவன் இல்லை ஐயா.. :D
 

விக்கிபீடியாவில் வருவதெல்லாம் நம்பகத்தன்மை கொண்டது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா மல்லை.அதில் யாரும் எதுவும் எழுதலாம். அதனாலெல்லாம் அவை உண்மையாகிவிடாது. படித்தவர்களே இப்பிடித்தான்.ஒரு விஷயத்தை வடிவா அலங்கரிச்சு நம்புவதுபோல் எழுதியவுடன் நம்பி அதைவிட்டு அந்தபோபக்கம் இந்தப்பக்கம் நோக்காதிருப்பது. அதுதான் முன்பே கூறினேன் இதில் எழுதி எப்பயனும் இல்லை.

சிந்து வெளி நாகரீகம் பற்றி நான் 1991 இருந்து  கிட்டத்தட்ட 10 புத்தங்கங்கள் படித்துவிட்டேன். அதற்கு முதல் படித்தவை என்னோடு Arts (A/L எடுத்த நண்பர்களிடம் வாங்கி படித்த அப்பாத்துரை பிள்ளையின் இந்து வெளி நாகரிகம் என்ற பாடப்புத்தகம். அதை தவிர தமிழில் படித்த கட்டுரைகள் எல்லாமே வெறும் பிரச்சாரங்கள். சுமேரிய நாகரிகம் மேற்கு நாடுகளால் மிக தெளிவாக ஆராயப்பட்டுவிட்டது. சிந்து வெளி நாகரீகம் இந்த சோதனையில் இந்திய அரசால் படு கேவலமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதானல் அது காலத்தால், பரிமாணத்தால், நாகரீகத்தால் சுமேரிய நாகரீகத்திற்கு குறைந்ததாக எங்கும் சொல்லப்பட்டு இல்லை. தனிய விபரங்கள் மட்டும் இல்லாமல் தவிக்கிறது. 

 

கிடத்தட்ட  5 புத்தகங்கள் ஆரிய திராவிட முரணல்களை பற்றி வாசித்துவிட்டேன். ஒன்றை தவிர மிச்சம் எல்லமே மானக்கேடாக பலவற்றை ஒழித்தன. ஒன்று மட்டும் ஆராச்சியை தொடர்ந்து செய்து சுமேரியருக்கு மேலே போய்,  ஒரு வெள்ளை இனம் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியதரை கடலடிலில் இருந்து ஆரம்பித்து சிந்து வெளி வரை வந்தது என்றும் அந்த இனத்தினர்தான் சுமேரிய, எகிப்திய, சிந்து வெளி நாகரீகத்துக்கு காரணம் என்றும் ஆராந்திருந்தது.  

 

மேலே, இந்த தொடக்கத்தின் தமிழ் கட்டுரையை படித்தீர்களானால் அது 2,300 + 700 ஆண்டுகளை 10,000 என்று கணக்கையே பிழையாக கூட்டும் குழப்பத்தை அறிந்து கொள்வீர்கள். திருட்டுத்தனமாக அது ஆங்கிலத்தில் இருக்கும் அதே விவரத்தை தனது பிழையான கணிதத்தை பாவித்து ஏமாற்றி 10,000 ஆண்டுகளாக்குகிறது. 

 

சுமேரியரின் காலம் சிந்து வெளிக்காலம் அல்லது பின்னானது. எகிப்த்தில் பாவித்த கணிதம், அளவு, முறைகள் எல்லாமே சிந்து வெளியாரினது. சுமேரியர் ஒரு சிறிய நாகரீகம். சிந்துவெளி(இந்திய அரசு ஆராய மறுத்த பின்னரும்) குறந்தது 1,500 பட்டணங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய மிக மிக மிக மிக..... பெரிய நகரீகம். அந்த நேரத்து உலகம் கனவில் கூட காண முடியாத பெரியது.

 

முட்டாள் தமிழர்கள், (இந்த தமிழ், திராவிட, ஆரிய கும்பல் பிரச்சாரங்களை விடுத்து) இந்த மாதிரி ஒரு பெரிய  நாகரீகம் எப்படி அழிந்தது என்று விடை கண்டாலே கணக்க புதிர்கள் விடுபட்டுவிடும்.

 

காலங்களை குழம்புவதில் பலன் இல்லை.  தொல்காப்பியம் பிராமியில் எழுதப்பட்ட புத்தகம். இதன் காலம் தெற்கில் 2,500 ஆண்டுகளுக்கு பின்னர். இதில் இருப்பது எதுவும் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் நடந்ததை சொல்கிறதா என்பது கேள்வி. 

 

புங்கை ஊராரின் கழிமன் தட்டு யல்லிகட்டைச் சொல்லவில்லை. சிந்து வெளி மாடுகள் "பிராமின்" எனப்படும் வடக்கன் மாடுகள். அவற்றின் கொம்புகள் ஆகாயத்தை நோக்கி வளருபவை. இது எருமை மாடு. கொம்பு பக்கங்களுக்கு வளர்ந்திருக்கு. மேலும் பசுபதியின் தியானத்தை காட்டும் அதே தட்டில் யல்லிக்கட்டையும் காட்டுவது பொருள் குறைவு. அது ஒரு பழைய சமயக் கதையை சொல்லும் செய்தியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்."இப்படி விளங்கப்படுத்தலாம்: பசுபதி தன்னிடம் அடைக்கலம் வருவோர்களை (உருத்தினின்-யுதிஸ்திரன - யமனின்) எருமை மாட்டை   உதைத்து காப்பாறுவத்தாக இருக்கலாம் (பிற்கால மார்க்கண்டேயர் கதை).  எனவே அது ஒன்றும் கணிமண்தட்டு செய்யப்பட்ட கால விளையாட்டைப் பற்றி சொல்லவில்லை. அது இந்து சமயத்தின் கோட்பாடான பதி பசு பாசம் பற்றி பிரஸ்தாபிக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சிவன் (செக்க செவேலென்ற)சிவப்பன்; பிராமணன் . திராவிடர் சாதிகளை ஆரம்பித்து வைத்த வெள்ளை இனத்தவர்கள். கைபர் கணவாயால் வந்த ஆரியர் அதை பின் பற்றியவர்கள். அவர்கள் சாதியைக் கொண்டுவரவில்லை. 

 

விருப்பமாக இருந்தால் விக்கி பீடியாவை நம்பாமல் அதில் காட்டப்படும் மேற்கோள்களையும் படியுங்கள். நான் நம்பவில்லை. இதைவிட நல்ல விளக்க மொன்றுக்கு காத்திருக்கிறேன். உங்களின் கட்டுரையின் பகுதிகள் பல, பல  இடங்களில் காலங்களை குழம்புகிறது. அதை பற்றி நான் ஆரராயவில்லை.

Edited by மல்லையூரான்

உண்மைதான் புங்கை.. "திராவிட" என்கிற சொல்லே புகுத்தப்பட்டதுதான் என்பதுதான் எனது எண்ணமும்..

 

அதுபோக, அவுஸின் ஆதிகுடிகளின் கலாச்சாரத்தை நானும் நிழற்பட வடிவில் கண்ணுற்றேன்.. ஆச்சரியம்தான்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

 

உங்களது கண்டமே பிரிந்து தள்ளிப் போன ஒன்று என்றால் அந்தக் காலங்களிலேயே இவர்கள் இந்தக் கலாச்சாரத்தோடு இருந்தார்களா? கடினமான ஒரு கேள்வியாக உள்ளதே..

 

மேலே உள்ள காணொளி ஒரு தேடலில் கிடைத்தது.. ஒரு தமிழர் உருவாக்கியது அல்ல என நினைக்கிறேன்..

 

1:05 நிமிட நேரக்கணக்கில் பார்த்தீர்கள் என்றால் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியா கண்டமும், இந்தியத் துணைக்கண்டமும் இன்றைய அண்டார்ட்டிக்கா பகுதியில் இருந்து பிரிந்து செல்வதுபோல் காட்டுகிறார்கள்..!

 

இன்று அவுஸ் பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமை எப்பொழுது தோன்றியிருக்கும் என்று ஏதாவது ஆராய்ச்சித் தகவல் உண்டா புங்கை?

 

யாரிடம் வாயைக் கொடுத்தாலும் மல்லையிடம் வாயைக் குடுக்கக்கூடாது என்பது எனது படிப்பினை.. :lol:

 

தமிழக பாடநூலில் இருந்ததை அப்படியே தந்தேன் ஐயா..!  :(  அது என் கருத்து என்று சொல்லவரவில்லை.. நான் ஆராச்சியாளர் ஐராவதம் மகாதேவன் இல்லை ஐயா.. :D

 

 

நன்றி இசை. :lol:

 

நீங்கள் சில ஆண்டு உணர்வுகளை உங்களுக்குள்  ஏற்படுத்தி உங்களுக்கு நீங்கள் சில பதில்கள் அளிக்கலாம். கீழே இருப்பவை பொது உண்மைகள்.

 

1.120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சியன் கண்டம் உடைந்து பிரிந்து விட்டது. அவிஸ்திரேலியாவில் காணப்படும் சில தனித்துவ உயிரினங்கள் பிரிவின் பின்னால் உருவானவை. மற்றவை கண்டத்தோடு சேர்ந்து போனவை. இதில் மானிடர் அடங்க இல்லை. அந்த நேரம் சாதாரண குரங்குகளே உயிர் வாழவில்லை, பெரும்பாலான முலையூட்டிகள் கூட இருக்கவில்லை. (மனித குரங்குகள் 3- 5 மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம்.)

2. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோ சோவாக்கள் தோல்வி கண்ட பின்னர் முலையூட்டிகள் ஆட்சியை பெற ஆரம்பித்தன. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னைய முலையூட்டி முன்னோடிகள் எலிகளை விட சிறியவை.

3. முதல் மனிதன் ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் ஆரம்பித்தான். மனிதர் மாதிரி இருந்த நியோண்டத்தால் போன்றவை 50-30 ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்டு கோமோ சப்பியன் என்ற மானிடர் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தார்கள்.

4. இவர்கள் ஆபிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவி அமெரிக்கா,ஆஸ்திரேலியா எங்கும் போனார்கள்.

5. திராவிடராக கருதப்படும் இந்த இனம் ஒரு தனி இனம் அல்ல. கோர்கேசியர்கள்தான். அவர்கள் இந்தியா வழியே அவிஸ்திரேலியாவுக்கும் போனார்கள் இது ஒரு 10,000 ஆண்டுக்குள் நடந்தது.

6. ஆஸ்திரேலியாவிலும் இந்தியா எங்கனும் ஒஸ்ரெலியாபொட் அல்லது அந்தமானீஸ் எனப்படும் கறுப்பர் வாழ்ந்தார்கள் இவர்கள் திராவிடர் அல்ல. இவர்கள்தான் பின்னாளில் திராவிடருடன் கலந்தார்கள்.

 

திராவிடரானவர்கள், இலங்கை, தென் இந்தியா, வங்காளம் போன்றவற்றில் தனித்துவத்துடனும், தென்னிந்தியா அல்லாதா இந்திய மாகாணங்களிலும், அவுஸ்திரேலியா, போலினேசிய தீவுகள் போன்ற இடங்களில் பழைய ஆபிரிக்கர்களுடன் அல்லது புதிய கோர்கெசியர்களுடனும் கலந்து காணப்படுகிறார்கள்.  நீங்கள் போட்ட படம் ஆவுஸ்திரேலியாவில் இருந்த ஆஸ்திரேலியபொட்களுடன் இனம் கலந்த திராவிடர். ஆஸ்திரேலிய பழங்குடியினரில் ஆபிரிக்கருக்கு சமமான தோற்ற முள்ளவர்களும் இருக்கிறார்கள். திராவிடருக்கு சாமான தோற்ற முள்ளவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் போட்ட கலப்பு உருவத்திலும் இருக்கிறார்கள்.  தனிப்படம் ஒன்று ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் திராவிடர் என்றோ ஆபிரிக்கர் என்றோ நிறுவாது.

 

ia2_2.jpg

 

 

(இந்த படத்தில் ஆண் கறுப்பர்கள் போலவும் பெண் திராவிட தமிழிச்சி போலவும் தோற்றம் கொண்டவர்கள். மேலும் பெண்ணின் சொண்டு தமிழ் சொண்டாகவும் ஆணுக்கு வெள்ளையர்கள் போல உள்போந்ததாகவும் இருக்கிறது)

 

aborigine-1.jpg

(ஆபிரிக்க உருவம் உடைய ஆண்)

 

13aborig.600.1.jpg

 

 (நன்றாக கலந்துவிட்டர்வர்கள்.)

 

1200x800_World_Vision_Young_Mob_camp_201

(வெளையருடன் கலந்த திராவிட தமிழ் குடும்பத்தவர். காம்)

 

Aboriginal%20Australia.jpg

(தெளிவான கறுப்பு சிறுவன். சொண்டும் தலயும் இன்னமும் கலப்படையவில்லை.)

 

barrines1890.jpg

 

 

https://www.google.com/search?q=aboriginal+australians&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=9xNwUaPOH6--4APD-ICwBQ&biw=1440&bih=756&sei=UhpwUeTbMubB4APBu4DYDw

 

 

ஆபிரிக்காவை விட்டு வெளியேறியர்களில் அந்த மானீஸ் சுத்த இரத்தக்காரர்களாக கணிக்கப்படுகிறார்கள். காரணம் இவர் அந்த பக்கத்தில் வந்து தங்கிய கப்பல்கலில் இருந்தோரை இனம் பெருக்க பாவிக்காமல், உணவுக்குக்காப் பயன் படுத்தினார்கள் என்பது ஐதீகம்.  இதனால் வெளியேறிய ஆபிரிக்கர்களில் அவர்களைத்தவிர மற்றவர்கள் பெரும்பாலும் கலந்துவிட்டார்கள். இதுதான் தென்னிந்தியா, இலங்கையின் கதையும். இங்கு அவர்கள் திராவிடர்களுடன் கலந்துவிட்டார்கள்.

 

ஆஸ்திரேலியரின் உடம்புக்கு பூசும் பழக்கம் அவர்களிடம் இருக்கும் ஆபிரிக்கர் கொண்டு சென்றவையாக இருக்கலாம். அல்லது அங்யேயே ஆரம்பித்திருக்கலாம். இது திருநீற்றை சுட்டாது. இது தென்னிந்தியாவில் இருக்கும் சந்தனம், குங்குமம், திருநீறு போன்றதல்ல இது.

https://www.google.com/search?q=aboriginal+australians&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=9xNwUaPOH6--4APD-ICwBQ&biw=1440&bih=756&sei=UhpwUeTbMubB4APBu4DYDw#um=1&client=firefox-a&rls=org.mozilla:en-US%3Aofficial&hl=en&tbm=isch&sa=1&q=africans%27+body+painting+&oq=africans%27+body+painting+&gs_l=img.3...4281.19110.4.20005.4.3.0.1.1.0.164.315.1j2.3.0...0.0...1c.1.9.img.ammjNTgFw9U&bav=on.2,or.r_qf.&bvm=bv.45373924,d.dmg&fp=a3dbd44c3eff8fd3&biw=1440&bih=756

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழ் கும்பலா? திராவிட கும்பலா? ஆரியக்கும்பலா? :D

 

(புத்தகங்கள் மிக பழைய கதை. முதலில் திராவிடர் சிந்து வெளியில் வைத்து அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றார்கள். பின்னர் அந்த நேரத்து உலகின் மிக பெரிய சனத்தொகையை ஆரியர் அழிக்க அவர்கள் அப்படி ஒன்றும் காட்டு மிராண்டிகள் இல்லை; வெள்ளம் அல்லது பஞ்சம் அழித்தது ஆகையால் இன்றைய பண்பாடு தனிய  ஆரியரின் பண்பாடு மட்டுமே என்றார்கள். இன்று திரும்ப ஆரியர் அழிக்கவில்லை; ஆண்டார்கள்;ஆனால் திராவிடர் இலகுவில் ஆளுபவர்களின் மொழி, மதம் கலாச்சாரம் ஆகியவற்றை பின் பற்றுபவர்கள், ஆகையால் இன்று முழுவதாக மாறிவிட்டார்கள் என்கிறார்கள். இதனால்த்தான் வடக்கில் பிரகு தவிர எந்த திராவிட மொழியும் இல்லை. )

கீதை கூட இதைத்தானே சொல்கின்றது, மல்லை? :D

 

சத்திரியன், தர்மத்தை நிலைநாட்டக் கடமைப்பட்டவன்!

எது தர்மம், என்பதில் தான் பிரச்சனையே? :o

 

முள்ளி வாய்க்காலை, எமது கண்ணால் பார்த்தபின்னும், உங்களுக்குச் சந்தேகமா? மல்லை! :o

புங்கை நான் புத்தகங்களை பற்றிக்கவலைப்படவில்லை. 

 

கிருஸ்ணன் கறுப்பன். பாஞ்சாலி கறுப்பி. குந்தி கறுப்பி, வியாசன் கறுப்பன். ஆனால் எழுதப்பட்டிருப்பது துவேசம். அதாவது வியாசன் எழுத்திய பாரதத்தைதான் நாம் இப்போ படிக்கிறோமா என்பதே கேள்வி. இதை முன்னர் ஆதித்த இளம்பிறையனுக்கான திரியில் சொல்லியிருக்கிறேன். இதனால் யார் என்ன எழுதிவைத்திருக்கிறார்கள் என்பதை விட்டுவிடுங்கள். வேறு என்ன ஆதாரம் இருக்கு என்பதுதான் கேள்வி.

 

இதை நான் சொல்லவில்லை. ஒரு தடவை சில தமிழர் ஒரு அமெரிக்க பேராசிரியரிடம் பலவற்றை விவாதித்தார்கள். அவரும் தமிழர், அல்லது தென்னகத்தார், அல்லது சிந்து வெளியார், இவர்கள் எகிப்தியர், சுமேரியரின் அடிதொடிகள் என்றதை ஏற்பவர்.  அப்போது ஒருவர் இந்திய இலக்கியங்களான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் பொய் சொல்லுகின்றன என்று ஆதங்கப்பட்டார். பேராசியர் ஈழத்து தமிழர், தமிழ் நாட்டு தமிழர் என்ற பேதம் மனத்தில் இல்லாதவர். உடனே அவ்ர் கேட்ட கேள்வி "Why are you blaming those books now; Those were not written for this purpose. What have you done so far on the archaeological side. That is an inexpensive tool well with in your reach" என்று அடித்தது போல் சொல்லிவிட்டார். அவர் கிண்டுவதற்கும் ஆராய்வதற்கும் தமிழ் நாட்டில் மலிவான தொழிலாளிகளும், பேராசியர்களும் இருக்கத்தானே வேண்டும் என்று நினைக்கிறார். அரசுகளை முன் வரச்செய்ய வேண்டியது ஆர்வமுள்ளவர்களின் பங்கல்லவா என்று முடிக்கிறார். 

 

இசையின் சொல்லில் இந்த புதிய தமிழ் கும்பல்கள் திராவிட, ஆரிய கும்பலகளின் அதே பழைய கதைகளையே திரும்ப தங்கள் பாணியில் எழுதுகிறார்கள். எவரும் சரியான விஞ்ஞான ஆராச்சி முறைகளை தொடவில்லை. கதைகளை மட்டும் திருப்பி எழுதி என்ன லாபம்? :(

 

கருணாநிதியின் ஏமாற்று செம்மொழி மகாநாட்டுக்கு போன பல பேராசிரியர்கள் மகாநாட்டின் போலித்தனமையை கணடது மட்டுமின்றி  தமிழ் நாட்டில் பலருக்கு தமிழ் பேச விருப்பமில்லை என்பதையும் கண்டு, அவர்களில் பலர் தமிழர்களை தமிழில் பேசும் படி மேடையில் வைத்து அறிவுரைகள் வழங்கியிருந்தார்கள். :(  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://m.youtube.com/watch?feature=relmfu&v=O6omKaHFCQY

சிவன் 20,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சித்தர் . பின்பு கடவுளாக வணங்கபடுகிறார் : இந்த ஒளி நாடா தொடரில் மூன்றாவதை பார்க்கவும்

http://m.youtube.com/watch?feature=relmfu&v=jDhZBFwewao

http://m.youtube.com/watch?feature=plcp&v=M9Ch8oQOl7M

http://m.youtube.com/watch?feature=relmfu&v=jDhZBFwewao

http://m.youtube.com/watch?feature=fvwrel&v=cHInqRywGhA

http://m.youtube.com/watch?feature=relmfu&v=F0D_T9M4vRY

http://m.youtube.com/watch?v=9pgUpfV5WsY&feature=plcp

http://m.youtube.com/watch?v=9u5t9yY8oLo&feature=relmfu

Please watch all videos in this series.

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் பெயர் வைக்கும் முறை, இன்றுபோல முற்காலத்தில் இருக்கவில்லை என்றே கருதுகின்றேன். தமிழர்களைப் போல, சிங்களவர் ஆரியவருகையால், அதிகம் பாதிக்கப்படவில்லை. ஒருவரது பரம்பரையை, அடையாளம் காட்டும் பெயர் முறை தமிழனுக்கு, ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். சிங்களவர்களது பெயர் வைக்கும் முறையை இந்தப் பிரதேசத்தில் உள்ள பெயர் வைக்கும் முறைக்கு ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். சோழ மன்னர்கள்களும்,தங்கள் பெயரில் சோழன் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். இது அவர்களது பரம்பரையை வெளிக்காட்டி நிற்கிறது. இதே போல 'வன்னியர்கள்' தங்கள் பெயர்களில், தங்கள் பரம்பரையைத் தெளிவாகத் தெரியப்படுத்தினார்கள்.இதே போல பெண்களும், நாச்சியார் போன்ற பெயர்களின் மூலம் தங்கள் பெயர்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களின் கணவன் மாரின் பெயர்களால், தங்கள் பெயர்களை அவர்கள் மறைக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். இரும்பொறை, சேரலாதன் போன்ற பெயர்கள் பரம்பரைப் பெயர்களின் தொடர்ச்சிகளே. கண்டியை ஆண்ட மன்னர்களும், நாயக்கர் என்ற பெயரையே தொடர்ந்தார்கள். (சிறி விக்கிரம

ராஜசிங்கனின் பெயர் முத்து நாயக்கன் என்று நினைக்கிறேன்).

முது மக்கள் தாழிகள் பலவிதமான் அளவுகளில் காணப்படுகின்றன. இவை, மண்கும்பான், சாட்டி, மற்றும் வன்னிப்பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில்,உடல்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. எனது அனுமானம் என்னவெனில், முதலில் உடல்கள் புதைக்கப்பட்டுப், பின்னர் ஒரு குறித்த காலத்தின் பின்னர், சடங்கு, சம்பிரதாயங்களுடன், எலும்புகள் தாழியொன்றில் வைக்கப்பட்டுச், சடங்குகளுடன் புதைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தகனம் நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.வேதங்களில் வரும் 'உருத்திரனை' சிவனுடன் தொடர்பு படுத்தியபின்பே தகனம் செய்யும் முறை, தமிழனுக்கு அறிமுகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களின் செயல்களை அவதானிப்பதிலிருந்தே, தொலைந்து போன எமது வழக்கங்களைத் தேடிப்பார்க்க முயல்கிறேன். அவர்களும் உடல்களைத் தகனம் செய்வதில்லை. ஆனால், குகைகள்,, மலைத் துவாரங்களில், வைத்துவிடுவார்கள்.

இதுபற்றி மேலும் ஆய்வுகள் செய்யப்ப்படுமெனின், பல உண்மைகள் தெளிவாகலாம்.

சிவன் 20,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சித்தர் . பின்பு கடவுளாக வணங்கபடுகிறார் : இந்த ஒளி நாடா தொடரில் மூன்றாவதை பார்க்கவும்

http://m.youtube.com/watch?feature=relmfu&v=jDhZBFwewao

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

error

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபூதி தமிழரின் சின்னமா?

விபூதி பூசுதல் எப்போது தொடக்கம் தமிழ் கலாசாரத்தில் கலந்துள்ளது என்று கூற முடியுமா?

ஆதி தமிழர்கள் தெய்வ வழிபாடு செய்தார்களா?

சிவ வழிபாடுக்கும் தமிழருக்குமான ஆரம்பகால தொடர்பு என்ன? தமிழர் மதமாற்றம் செய்யபட்டார்களா?

http://m.youtube.com/watch?feature=relmfu&v=M9Ch8oQOl7M

உங்கள் கேள்விக்கான பதில் இந்த ஒளி நாடா தொடரில் உள்ளது

முதலாவதை மட்டும் பார்த்தேன். இவற்றை பிரச்சாரமாக தயாரிப்பது. மிக மிக தப்பானது. முருகன்  கிட்டத்தட்ட 5,7 நூற்றாண்டுகளாக தமிழில் இருக்கிறார். முருகனின் முழு பெயர்களும் தமிழில் இருந்து பிறந்தவை. ஆனால் முழுவதாக ஒரு தமிழ் பெயர் இல்லாதவர் பிள்ளையார். 3000 ஆண்டுகால ஆரிய வேதங்களால் கூட கடவுளாக ஏற்க்கப்படாதவர் பிள்ளையார்.  புதை பொருள் ஆராச்சிகள் மூலம் இவர் வடக்கிலும் தெற்கிலும் இருக்க வில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் இவரை வாதாபியில் பிறந்த கடவுளாக கொள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்த்தான் இந்தியாவிலிருந்துதான் இந்து மத புத்த மத சிலைகளை பெற்றது. அது ஆரிய தொடர்பு ஏற்பட்ட பின்னர். புததர் பிறந்த பின்னர். தென் நாட்டில் முருகனின் காலம் குறிப்பிட முடியாத பழமையானது.

 

 

முருகன் வடகே இருக்காத படியால் பசுபதி(மிருகங்களின் அதிபதி- கிருஸ்ணனின் இடையர் குலத்தோனே) அல்லது அல்லது சிவன் (வெள்ளையானவன்) மட்டும்தான் சிந்து வெளியில் காணப்படுகிறார். இவர்கள் துறவறத்தை போதித்தவர்கள். இனப்பெருக்கத்தை ஆதரிக்காதவர்கள். இவர்களை கும்பிட்டவர்கள் யோனிகளை கும்பிட வில்லை. யோனி வணக்கம் சிந்துவெளி கணிமண் தட்டுக்களில் இல்லை.

 

 மேலும் மிகவும் மட்டமாக நிர்வாண என்பதை நீர் வண்ணம் ஆக்குகிறார். அப்போ நிர்வாணியும் நிர்மலனும் ஒரே கருத்தைதானே குறிக்கிறது  நி என தொடங்கும் வட மொழி சொற்கள்  எதிர் கருத்துச் சொற்கள். நிர்வாணி கட்டுப்பாடு இல்லாதவன்.

 

வேதங்கள் நிர்வாணத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. வேதங்கள் சடங்குகள் மூலம் மோட்சம் அடைபவை. அது பௌத்தம் தான் நிர்வாணத்தை பற்றிக்கூறுகிறது. மேலும் இந்த சொல்லை பாளியில்தான் அதிகமாக கொள்கிறார்கள். எனவே தமிழுக்கும் இந்த சொல்லுக்கும் இடையில் தொடர்பு கொண்டுவருவது பொருத்தமில்லாதது. 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்குவரத்து, மிகவும் கடினமான கேள்வி!

என்னால் இயன்ற அளவுக்கு, எனக்குத் தெரிந்தவைகளை வைத்துப் பதிலளிக்க முயற்சிக்கிறேன்!

3%20brillanti%202pasupati_15440.jpg

மேலேயுள்ள படம், ஹரப்பா பகுதியில் கிடைத்தது. இது தியானத்திலிருக்கும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், இவரைச் சுற்றி, மிருகங்கள், பறவைகள்,மீன்கள் என்பவை காணப்படுகின்றன. கொம்பானது, வலிமையைக் காட்டுகின்றது என எடுத்துக்கொள்வோம்!

harappatablet.jpg

இரண்டாவது படத்தில், அதே தியான நிலை உருவத்துக்கு அருகில், ஒரு எருது காணப்படுகின்றது! அத்துடன் எருதையடக்கும் ஒருவரது படமும் உள்ளது! (ஜல்லிக்கட்டு?)

Harappan+linga+form.JPG

மூன்றாவது படத்திலுள்ளது, ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட 'லிங்கம்; !

தொல்காப்பியர் நிலத்தைப்பற்றிப் பாடுகையில்,அந்த நிலத்தோடு, தொடர்புடைய தெய்வங்களையும் பற்றிப் பாடுகின்றார்!

மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன் மேய மைவரை உலகமும்,

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,

வருணன் மேய பெருமணல் உலகமும்,

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென,

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே- (அகத்-5)

ஆகவே, மேலேயுள்ள 'ஹரப்பா' மக்களும், தமிழர்களும் வணங்கியது, இயற்கையையே என்றும், அந்த நிலங்களுக்கு, ஒவ்வொரு தலைவர்களையும் வைத்திருந்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, 'தியானம்' போன்றவற்றை அறிந்திருந்தார்கள் என்றும் கொள்ளலாம்!

அதிகம் நீட்டி முழக்காது, சுருக்கமாகச் சொல்வதெனில், ஆரிய வேதங்களின் பின்னர், ஹரப்பன் தெய்வங்கள், தமிழ்த் தெய்வங்கள் என்பன முறையே, பின்வரும் வேத நாயகர்களுடன் தொடுக்கப்பட்டனர்.

முருகன், ஸ்கந்தனானான்!

சிவன் உருத்திரனானான்!

திருமால் விஸ்ணு ஆனான்!

கொற்றவை துர்க்கையானாள்!

சரி, திருநீறு எங்கே வருகின்றது?

எனது அனுமானத்தின் படி, வேதங்களில் வரும் உருத்திரன், சுடலைகளில் ஆடுபவன்! சுத்தமில்லாதவன்! இறந்த பிணங்களைப் புசிப்பவன்! இதிலிருந்த தான், திருநீறு பூசும் பழக்கம் வந்திருக்க வேண்டும்! 'அஹோரி' என்று நீங்கள் கேள்விப்பாட்டிருந்தால், இவர்கள் தான் சரியான உருத்திர வடிவங்கள்! வேதத்து உருத்திரன், மிகவும் உக்கிரமானவன். கோபக்காரன்!

வால்மீகி ராமாயணத்தில், திருநீறு குறிப்பிடப்படுகின்றது!

சம்பந்தர் (எட்டாம் நூற்றாண்டு), திருநீற்றுப்பதிகத்தில், திருநீற்றுக்கு ஒப்பிடுவதற்கு, உவமை கிடைக்காமல், இராவணன் மேலது நீறு என்று பாடுகின்றார். உண்மையான, இராவணனின் குணத்தை, மறந்து போய்க் கூறிவிட்டார்!

சம்பந்தர், வேதத்தில் உள்ளது நீறு, என்றும் குறிப்பிடுகின்றார். இந்திரனும், திரு நீறு அணிகிறான், திருமாலும் அணிகிறான், எனவே, வேதங்களின் ஊடுரவலின் காலமே, நாம் திருநீறு அணியத் தொடங்கிய காலமாக இருக்கவேண்டும்!

(ஏதோ என்னால் முடிந்தது! :D )

நீங்கள் குறித்த அனைவருள் சிவன் தொடங்கி இந்திரன் வரை 10-20 ஆயிரம் ஆண்டுகளின் முன்பு வாழ்ந்த சித்தர்கள், பின்பு கடவுள் ஆனார்கள் . இந்த ஒளி நாடவை பார்க்கவும்

http://m.youtube.com/watch?feature=relmfu&v=jDhZBFwewao

http://m.youtube.com/watch?feature=relmfu&v=M9Ch8oQOl7M

உங்கள் கேள்விக்கான பதில் இந்த ஒளி நாடா தொடரில் உள்ளது

அந்த கேள்விகள் எல்லாம் மிக நீண்ட ஆராச்சி செய்யபட வேண்டியவை. அவை ஒன்றுக்கும் இன்று பதில் இல்லை.

 

இந்த இரண்டாவது பதிவில் இருப்பவை  இப்படித்தான் போகிறது.

 

ஒரு குருடனின் பிள்ளை பால் விக்கி இறந்து விட்டது.  பிள்ளையை இழந்து பரிதவித்த குருடன் பாலைக்கொடுத்த தாயிடமிருந்து, குழந்தையின் தொண்டைக்குள் விக்கத்தாக்க பால் எப்படி இருக்கும் என்று அறியமுயன்றான்.

பதில் இப்படி வந்தது. (நீர்த்தன்மையான) பால்= கொக்கு= முழங்கை. எனவே குருடன் முழங்கை போன்ற கடினமான பொருளை குடித்த பிள்ளை விக்கியது ஏன் என்பதை புரிந்து கொண்டான். இந்த மனிதர் யோகி=அமணர்= சமணர் என்கிறார். யோகி யோகப்பியாசத்தால் நிர்வாணம் அடைய முயல்பவன். வேதங்களை பின் பற்றுவோர் கிரிகை முறையை பின் பற்றுவோர்.  திருநாவுகரசர் பக்திமார்கத்தை சரியை மூலம் ஆரம்பித்தார்.  பௌத்தர்களும் இந்துகளின் ஒரு பிரிவு மாதிரியே ஞான மார்க்கத்தை பின்பற்றுபவர்கள்.  இவர் எல்லாவற்ற்றையும் சேர்த்து சாம்பார் வைக்கிறார்.  அமணர் என சமணர் தமிழில் அழைக்கப்பட்ட காரணம் அவர்களில் துறவி(ஞானி) அல்லாதோரும் உடை அணிவதை  மதத்தில் எதிர்க்கப்பட்டதனாலாகும். ஆதாவது சமணர் எல்லோரும் ஞானிகளோ அல்லது யோகிகளோ அல்லது பக்கதர்களோ அல்ல. ஆனால் சமயம் உடையை தடை செய்ய முயன்றதால் அந்த சமயத்தில் இருந்தோரை அமணர் என்று தமிழர் அழைத்தார்கள். ஞானி உடையை கணக்கில் எடுக்காதவன். ஆனால் உடுக்காதவன் அல்ல. யோகி யோகத்தை பயில்பவன். அமணன் உடை தடை செய்யபட்ட சமயத்தினன். 

சித்தர் புவி வாழ்வின் வெற்றிகளை கடைப்பிடிக்கும் யோகிகள். இதனால் இவரகள் மக்களிடம் பல கலைகளை பரப்பினார்கள். இவர் ஞானிகளின் போக்குகளுக்கு பலதடவைகளில் எதிரானவர்கள். ஞானி கலைகள் எதையும் கைக்கொள்ள முடியாதவன்.  ஞானிகளில் ஜீவன் முக்தர்கள் மட்டும் போதனைகளில் இறங்குபவர்கள். 

இந்த பேதங்கள் விளங்காதவர் அமணர்= சமணர்= யோகி=ஞானி= சித்தர் என்கிறார். இது சரியாக முழங்கைப் பால் கதை.

 

தமிழில் இருந்து வடமொழிக்கு போன சொற்களை வைத்து சமணம் தெற்கிலிருந்து வடக்குக்கு போனதாக காட்ட முயல்கிறார்.

 

3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் நாடு நகரங்களைக் கைப்பற்றும் போது மொழியையும் பெற்றுக்கொண்டார்கள்.  எந்த தீர்தங்கரும் அந்த காலத்தவர்கள் இல்லை. எனவே சமணம் அங்கேயே ஏற்கனவே இருந்த தமிழ் சொற்களை பாவிக்கிறதேயல்லாம் அந்த சொற்கள் சமணத்துடன் அங்கு போகவில்லை. ஜெய.வீற  போன்ற சொற்கள் சமணம் தோன்றமுதல் வேத காலத்திலும் இருந்திருக்கு. இவை சிந்துவெளியில் இருந்து பெறபட்டவையே அல்லாமல் தெற்கிலிருந்து சமணத்துடன் போனவை அல்ல. 

 

ஊர் என்ற பழம் தமிழ் சொல் பூர் ஆகி புற ஆகி, புரமாக தழிலுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பவும் வந்துவிட்டது. அந்த நிலையில் இவர் வட மொழியில் காணப்படும் தமிழ் சொல்களை பற்றி தப்பபிப்பிராயம் வைத்திருக்கிறார். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மலையூறான்

தயவு செய்தி உள்கள் கருத்த்தை ஒளி நாடாவின் பின்னூட்டமாக எழுதுவீர்களா? இதை பதிவு செய்தவர் யு ட்டுப் கருத்துகளுக்கு பதில் எழுதுகிறார். யூ டுப் அலது கூகுளே கணக்கு இருந்தால் நீங்கள் எழுதலாம்.என்ன பதில் சொல்கிரார்க் என்று பாப்போம் .

http://www.discoveryuk.com/web/stephen-hawkings-grand-design/ 'Grand Designs' by Stephen Hawking முடிந்தால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவும் . DVD Amazon இல் கிடைக்கும்

Edited by Queen

விஞ்ஞானரீதியான பகுப்பாய்வுகளே பொதுவான சந்தேகங்களை நிவர்த்தி செய்யகூடியவை.

 

புங்கையூரனின் கருத்தும் மல்லையூரனின் கருத்தும் வெவ்வேறு துருவங்களில் தென்படுகிறது.

 

அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய அரசு மூடிமறைத்தது என்ற செய்தி பிழயானதோ என்று தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.