Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த உறவை எப்படி அழைப்பீங்க..?! அவங்க அவங்க விருப்பம் போல.. அமைவதே வாழ்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் விருப்பு வெறுப்பு இருந்தாலும் சமூகக் கட்டமைப்பு ஒன்று இருக்குது அல்லவா அதற்க்கு ஏற்றப் போலதானே நடக்க வேண்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொருவரும் தங்களின் இஸ்ரத்துக்கு நடந்தால் வருங்காலத்தில் கட்டுக்கோப்பான குடும்ப வாழ் முறை இல்லாது போய்விடும் இப்படியான நிலை தொடர்ந்தால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எழுத்தளவில்தான் இருக்கும்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 

என்னப்பா

மீண்டும் குழப்புகிறாய்???

 

எல்லாம் கிடைக்குது

கல்யாணம் எதுக்காக என்று எங்கோ கேட்ட மாதிரி   ஞாபகம்???? :lol:  :D  :D  :D

(ஒருவேளை  உங்களுக்கு என்னைவிட  தெளிவு வந்திட்டுதோ?)

 

ஏங்க விசுகண்ணா...ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி வாழுவதும் பிரச்சினைப்படுவதும் பலருக்கு தொல்லையாக இருப்பதையும் விட தனிய யாருக்கும் தொந்தரவு தராமல் வாழ்வது மேல்..தனிய வாழ்வதில் சமூகத்திற்கு எந்தவிதத்திலும் உபத்திரவம் இருக்காது..

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க விசுகண்ணா...ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி வாழுவதும் பிரச்சினைப்படுவதும் பலருக்கு தொல்லையாக இருப்பதையும் விட தனிய யாருக்கும் தொந்தரவு தராமல் வாழ்வது மேல்..தனிய வாழ்வதில் சமூகத்திற்கு எந்தவிதத்திலும் உபத்திரவம் இருக்காது..

:icon_idea:

 

நான் நீங்க  மனசு மாறி  கல்யாணம் செய்து வாழ  முடிவெடுத்துவிட்டதாக நினைச்சன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நீங்க  மனசு மாறி  கல்யாணம் செய்து வாழ  முடிவெடுத்துவிட்டதாக நினைச்சன் :icon_idea:

விசுகண்ணா...அது தெளிவாய் எடுத்த முடிவு..எந்தக் கல்லால் எறிந்தாலும் இனிக்குழம்பாது மனக்கடல்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணா...அது தெளிவாய் எடுத்த முடிவு..எந்தக் கல்லால் எறிந்தாலும் இனிக்குழம்பாது மனக்கடல்.. :)

 

காலம் எல்லாவற்றையும் மாற்றும் ராசா

 

உங்கள் தொடர்புகளை  நிச்சயம் பேணுவேன்

ஒரு நாள் சந்திப்போம் தானே...

அப்ப  பார்க்கலாம்... :icon_idea:

கமலின் மனைவி கமலை விட்ட் பிரிவதுக்கு சிம்ரன் கமல் காதல் தான் காரணம் என்று சொன்னார்கள் அப்படியாயின்  கெளவுதமி கமல் உறவு சரிகாவுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புகழுக்காக இருந்தாரா?

சபாஸ் மருதங்கேணி...சரியாக சொன்ன்னீர்கள்..எப்படியும் வாழலாம் என்று இருந்திருந்தால் மனித இனம் இப்பவும் விலங்குபோலவே வாழ்ந்திருக்கும்..சமூகமாக வாழத்தொடங்கிய போதுதான் மனித இனம்மெதுமெதுவாக நாகரீகமடையத்தொடங்கியது..சிந்திக்க தொடங்கியது..தமக்கு தாமேபோட்டுக்கொண்ட மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உருவாக்கிய பலவிடயங்கள் கட்டுப்பாடுகள்தான் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி நாகரீகத்தால் முன்னேறிய விலங்குகள் ஆக்கியது...

 

ஒரு திரியில், எங்கட விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சேர்ந்து வாழுவம் அல்லது சேராமல் வாழுவம் என்ற தொனியில் எழுதின ஞாபகம். :D

இருந்தாலும் வரவேற்கத்தக்க மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரியில், எங்கட விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சேர்ந்து வாழுவம் அல்லது சேராமல் வாழுவம் என்ற தொனியில் எழுதின ஞாபகம். :D

இருந்தாலும் வரவேற்கத்தக்க மாற்றம்.

அப்பொழுது எல்லோரையும்போல கல்யாணம் கட்டலாம் என்று இருந்தேன்..இப்ப உண்மை புரியும்போது மாற்றம் நிகழ்கிறது..சின்னவயதில் அம்புலிமாம கதைகள் புடிக்கும்..இப்ப அப்படி இருக்க முடிகிறதா தப்பிலி அண்ணா..? உண்மைகளை அறியும்போது நாங்களும் எமது கருத்துக்களும் மாற்றமடையும்..அதுதான் மனிதன்.. :D

அப்பொழுது எல்லோரையும்போல கல்யாணம் கட்டலாம் என்று இருந்தேன்..இப்ப உண்மை புரியும்போது மாற்றம் நிகழ்கிறது..சின்னவயதில் அம்புலிமாம கதைகள் புடிக்கும்..இப்ப அப்படி இருக்க முடிகிறதா தப்பிலி அண்ணா..? உண்மைகளை அறியும்போது நாங்களும் எமது கருத்துக்களும் மாற்றமடையும்..அதுதான் மனிதன்.. :D

 

உண்மைதான் சுபேஸ்.  அதேபோல், இன்னும் சில வருடங்கள் போனதும் திருமணம் செய்யலாம் என்ற மாற்றமும் வரும்.  என் தம்பியாவது திருமணம் செய்யாமல் இருப்பதாவது?  :)

கமல் ,கௌதமி இருவரினதும் வயசும் அதனால் வந்த பக்குவமும் தான் இந்த உறவு .கௌதமி ஒரு கான்சர் நோயாளி .கமலும் தனிமையில் இருந்து வாழமுடியாது என்பதை உணர்ந்துதான் இந்த முடிவு என நினைக்கிறேன் .

சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

திருமணச்சட்டங்கள் ஏன் தேவை என்று மருதங்கேணியார் ஒரு சிந்தனைக்குரிய கேள்வியைக் கேட்டார்.. யோசித்துப் பார்த்ததில்..

 

இந்தச் சட்டங்களே நிவாரணங்களை (Remedy) மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையோ என்று தோன்றுகிறது. உதாரணமாக, மேலைநாடுகளில் குழந்தைகள் உள்ள ஒரு தம்பதி விவாகரத்து பெறும்போது கீழை நாடுகளை ஒப்பிடும்போது இலகுவில் கிடைத்துவிடுகிறது. கணவன் குழந்தை, முன்னாள் மனைவி(?)க்கான கொடுப்பனவுகளை தீர்ப்பின்படி கொடுத்துவர வேண்டும். இல்லையென்றால் துரத்திப் பிடிப்பார்கள்.

 

வருமானம் இல்லாதவர்களாக இருந்தால் அரசாங்கத்தில் இருந்தே இத்தகைய கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆக, நிச்சயமற்ற எதிர்காலம் என்று ஒன்று இல்லை. வயிற்றுக்கு உணவும், தங்கும் இடமும் கிடைக்கவே செய்யும்..

 

ஆனால் கீழை நாடுகளில் அப்படியா? கணவன் கண்டபடி இடம் மாறினால், குழந்தைகளுக்கும், முன்னாள் மனைவிமாருக்கும் நிலைமை அதோகதிதான்.. ஆகவே அங்கெல்லாம் விவாகரத்து கிடைப்பதற்கு இழுபட வேண்டும்..

 

ஆனால் பணக்காரக் குடும்பங்களில் அந்த நிலை குறைவு அல்லவா.. கமல் கோடிக்கணக்கில் வாரிக் கொடுத்திருப்பார்.. பிள்ளைகளையும் நன்கு வளர்க்கிறார்.. கௌதமியும் நல்ல சித்தி.. :D பிறகென்ன?

கமலின் வாழ்வைப் பொறுத்தவரையில் அவர் செய்தது, செய்வது எமது சமூகத்தைப் பொறுத்தவரை தவறு.  அவருக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை.  ஆனால், அவர் வாழும் சமூகம் அப்படி இருந்ததனால் இவ்வாறு செய்ய வேண்டி வந்து விட்டது.  கமலின் சுபாவம் அவரது மனைவியருக்கு நன்றாகவே தெரியும்.  கமலின் பிரிவால் அவர்கள் குப்பைமேட்டிற்குப் போகவில்லை. அதோடு, கமல் அவரது முதல் மனைவியான வாணியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்கு முன்பே சரிகாவிற்குப் பிள்ளை பிறந்துவிட்டது.  கௌதமிக்கும், கமல் எதிர்பார்ப்பதைத் தான் கொடுக்காதபோது, அவர் தன்னைவிட்டுப் போய்விடுவார் என்று தெரியும்.  ஆகவே, சரிகாவிற்காகவோ கௌதமிக்காகவோ நாம் பரிதாபப்படவேண்டியதில்லை.  கமலுடைய மகளான ஸ்ருதிஹாசன்கூட ஒன்றாக வாழும் முறையில்தான் வாழுகிறார்.  கமல் உண்மையில் வெளிநாட்டில் (அமெரிக்காவில்) பிறந்திருக்கவேண்டியவர்.  துரதிஸ்டவசமாகத் தமிழராகப் பிறந்து விட்டார்.  அவருடைய பல குணங்களும் வாழும் முறையும் வெளிநாட்டுச் சமூகத்திற்கே பொருந்தும்.

 

புலம்பெயர் நாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கோ அல்லது பிள்ளைகள் பெறுவதற்கோ சட்டப்படி அரசில் பதிய வேண்டியதில்லை.  கனடாவில், ஒரு வருடத்திற்கு மேல் அவர்கள் அப்படிச் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் ஒரு குடும்பமாகப் பார்க்கப்படுவார்கள்.  நிறைய தமிழ்க் குடும்பங்களைப் பார்க்கும்போது, இவர்கள் ஏன் திருமணம் செய்து கொண்டார்கள் என்று தோன்றும்.  கணவன், மனைவிக்குள் ஒரு அந்நியோன்யமோ புரிந்துணர்வோ இருக்காது.  ஏதோ மணந்து விட்டோம், வாழுகிறோம் என்பது மாதிரியே இருக்கும்.  பலரைப் பார்க்கும்போது, துறவிகள் போலத் தெரிவார்கள்.  இதனால், இப்போது பல விவாகரத்துக்கள் நடைபெறுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.  விவாகரத்துப் பெறுபவர்களில் பலர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் ஊரிலிருக்கும்போதே திருமணம் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள், பிள்ளைகளின் பொறுப்புகள் முடிந்ததும் விவாகரத்து செய்பவர்களை அதிகம் பார்க்கக்கூடியதாக உள்ளது.  முக்கியமாக, எமது தமிழ்ப் பெண்களுக்குத் திருமணம் முடிந்ததும் எல்லாமே முடிந்துவிடும்.  திருமணம் முடிந்ததும், அவர்கள் தம்மைக் கவனிப்பதை, அழகுபடுத்துவதை நிறுத்துகிறார்கள். பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் துறவியாகி விடுகிறார்கள். ஆனால், ஆண்கள் அப்படியல்ல.  அவர்களுடைய எதிர்பார்ப்புகள் அப்படியேதான் இருக்கின்றன. 

 

தமக்குப் பிடித்த துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு அமையாததே இதற்குக் காரணம்.  பெற்றோர், குடும்பம், சமூகம் என இறுகிய கட்டுப்பாட்டிற்குள்ளிருந்துவிட்டு, மிகச்சுதந்திரமான ஒரு சமூகத்திற்குள் அவர்களால் வாழமுடியாதுள்ளது.  இவர்கள் அந்தக் கட்டுப்பாட்டுச் சமூகத்திற்குள்ளேயே வாழ்ந்திருந்தால் இத்தனை பிரச்சனைகள் வந்திராது. என்னைப் பொறுத்தவரையில், திருமணம் செய்வதே மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான். ஆகவே, கணவன், மனைவி இருவருமே அத்திருமணத்தில் சந்தோசமாக இருக்கவேண்டும்.  அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி இல்லையெனில் பிரிவதில் தவறேதும் இல்லை.  எல்லோருக்கும் தமது விருப்பப்படி வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். 

 

இயற்கையான மனித உணர்வுகளுக்குட்பட்டு மனிதன் வாழ முற்படுவதை நாம் ஏன் சமூகம் என்ற போர்வையில் கெடுக்க வேண்டும்?  இன்றைய எமது சமூகமும் சம்பிரதாயமும் எமக்கானவையா?  நாகரீக வளர்ச்சி என்ற போர்வையில் மனிதன் தனது வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டவைதானே?  இப்போது மாறுவதில் மட்டும் என்ன தவறிருக்கிறது? 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.