Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்களைச் சீண்டுவது மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் - ஹஸன் அலி எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களைச் சீண்டுவது மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் - ஹஸன் அலி எச்சரிக்கை!!

உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பொதுபலசேனா தெரிவித்துள்ள கருத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

 

பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் முஸ்லிம்களையும், உலமா சபையையும் சீண்டி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதானது, மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கூறியவை வருமாறு:

 

உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என்று பொதுபலசேனா கூறியிருப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

 

பொதுபலசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்கள் கட்டுக்கடங்காமல் தங்குதடையின்றிப் போகின்றன. இவை மிகவும் வேதனையையும், கவலையையும் தருகின்றன.

 

உலமா சபையானது இந்த நாட்டு முஸ்லிம்களால் மதிக்கப்படுகின்ற ஓர் உயரிய சபையாகும். அந்த சபையைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளை நாட்டுக்குள் இறக்குமதி செய்யும் ஓர் அமைப்பாக பொதுபலசேனா சித்தரிக்கின்றது. இது இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகக் காட்டும் முயற்சியாகும்.

 

அது மாத்திரமன்றி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு சமூகமாக முஸ்லிம்களைக் காட்ட பொதுபலசேனா முயற்சிசெய்கின்றது. பொதுபலசேனாவின் இவ்வாறான கீழ்த்தரமான இனவாதப் பிரசாரத்தைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு வெறும் மேல்பூச்சைப் பூசும் அணுகுமுறையை சம்பந்தப்பட்டவர்கள் கைவிடவேண்டும்.

 

பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் முஸ்லிம்களையும், உலமா சபையையும் சீண்டி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதானது, மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும்.

 

அரசிலும், எதிர்க்கட்சியிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் தமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பொதுபலசேனாவுக்கு எதிரான விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

 

ஹலால் சான்றிதழ் தொடர்பான முடிவுகளைக் கிடப்பில் போட்டுள்ளதால் இந்த இயக்கம் ஊக்கமடைந்துள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=26f9a2f3-dd2a-4c38-8baa-d72822e31e94

பல தமிழர்கள் நீண்டகாலமாக முஸ்லீம் தலைவர்களின் அறுபது வருட கால அரசியலை பாராட்டினோம். அவர்கள் பிரதேசங்கள் உட்பட அவர்கள் முன்னேறுவதாக கூறிவந்தோம். ஆனால் அது ஒரு ஆபத்தான அணுகுமுறை என்பதே நிதர்சனமாக இன்று எம்முன்னால் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அட ஏதாவது செய்யுங்கப்பா,

 

கொலைகள் பல செய்யாமல் வாழ்கையே போர் அடிக்குது. திரும்ம அமெரிக்கா போகலாமா எண்டு யோசனை வேற

 

.

 

கொதியன் கோத்தபாய

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ...... இவங்கட தொல்லை தாங்க முடியவில்லை எதையாவது செய்து தொலையுங்க  

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களும் சிங்களவர்களும் பிணக்குப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். முஸ்லிம்களை எம் பக்கம் இணைப்பதோ அல்லது சிங்களவர்களுடன் இணையவிடுவதோ தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை. இது காலம் என்மக்கு அளித்த சந்தர்ப்பம், எமது வாழ்வியல் பிரச்சினைகளில் முஸ்லிம் சமூகம் எப்படிக் குளிர்காய்ந்ததோ அவ்வாறே தமிழர்களாகிய நாமும் செயற்படவேண்டும்.

 

குறிப்பு: இங்கு முஸ்லிம்கள் என நான் குறிப்பிடுவது இலங்கை முஸ்லிம்களை மட்டிமே ஆகும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழீழத்துக்கான முஸ்லீம் ஆதரவுக்கரம் ..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.