Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்றேனும் நினைத்ததுண்டா?

Featured Replies

என்றேனும் நினைத்ததுண்டா?

புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும்

பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம்.

எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர்

எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை

பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி

பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள்

பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால்

பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை

கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம்

குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர்

கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும்

கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை

பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப்

புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற்கும்பலர்

போர்செய்த கொடுமையினால் பெற்றவரைப் பிரிந்திழந்து

புளுதியிலே புரள்கின்ற பிள்ளைகளை நினைப்பதில்லை

காதலர் தினத்தினிலே களியாட்டம் செய்யும்பலர்

கணவரையே இழந்துநிற்கும் கன்னியரை நினைப்பதில்லை

மண்ணிற்காய் உயிர்துறந்த மறவர்கள் மறைவாலே

மனம்நொந்து போயிருக்கும் மனைவியரை நினைப்பதில்லை

உடல்மெலியும் வழிதேடி ஊரெல்லாம் அலையும்பலர்

உணவிற்கே வழியில்லா ஊரவரை நினைப்பதில்லை

தமிழுக்காய் உயிர்கொடுக்கத் தயங்காத தீரர்களை

தரணிக்குத் தந்திட்ட தாய்மாரை நினைப்பதில்லை

பெற்றவரை நினைப்பதற்கும் நாளொன்றை ஒதுக்கிவைத்த

பிறநாட்டார் வழக்கினையும் கடைப்பிடிக்கும் தமிழர்பலர்

பெற்றெடுத்த பிள்ளைகளை போர்க்களத்தில் இழந்துவிட்டு

புறக்கடையில் கலங்கிநிற்கும் பெற்றோரை நினைப்பதில்லை

அன்புடன்

மணிவாசகன்

மணிவாசகன் அண்ணா

உங்கள் கவிகளை நான் படித்திருக்கின்றேன். உங்கள் எல்லாக் கவிகளிலும் ஒரு அர்த்தம் புதைந்திருக்கும் ...அது போல இந்தக் கவியையும் அருமையாக வடித்திருக்கிறீர்கள். என் வாழ்த்துக்கள் :lol:

எனக்குப் பிடித்த வரிகளும், உண்மையில் நடப்பதும் கூட

பெற்றவரை நினைப்பதற்கும் நாளொன்றை ஒதுக்கிவைத்த

பிறநாட்டார் வழக்கினையும் கடைப்பிடிக்கும் தமிழர்;பலர்

பெற்றெடுத்த பிள்ளைகளை போர்க்களத்தில் இழந்துவிட்டு

புறக்கடையில் கலங்கிநிற்கும் பெற்றோரை நினைப்பதில்லை

காதலர் தினத்தினிலே களியாட்டம் செய்யும்பலர்

கணவரையே இழந்துநிற்கும் கன்னியரை நினைப்பதில்லை

மண்ணிற்காய் உயிர்துறந்த மற்றவர்கள் மறைவாலே

மனம்நொந்து போயிருக்கும் மனைவியரை நினைப்பதில்லை

நிதர்சனமான கவிதை, அருமை பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

வணக்கம் கவிப்பிரியை, ரசிகை

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி

பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள்

பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால்

பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை

கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம்

குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர்

கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும்

கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை '

உண்மையான வரிகள். தங்கள் பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக செலவழிக்கும் ஒரு சிறிய தொகையை என்றாலும் இப்படியான பாதிக்கப்பட்ட பட்டினியால் வாடும் நம் உறவு சிறுவர்களுக்கு கொடுக்க மறுக்கின்றார்கள்.

ஏக்கத்தை காட்டும் கவிதை நன்றி. பாராட்டுக்கள்.

கவிதை அருமை.....யதார்த்தமாகவுள்ளது பாராட்டுக்கள் :wink:

கவிதை நன்றாக உள்ளது மணிவாசன் அண்ணா. பொருள் அதைவிட நன்றாக உள்ளது. நான்கூட சிலநேரம் இவர்களை நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் எனக்கு நல்லது நடக்கும் நேரத்தில் அல்ல. எனக்கும் துன்பம் வரும்போது. துன்பம் எல்லோருக்கும் கட்டாயம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் வலியையும் உணரமுடியும்.

இது கவிதை வரியா தெரியல்ல..

எல்லார் மேலையும் ஒரு சாட்டையடி!

அத்தனை வரிகளிலும்- உண்மை!

நன்றி பாராடெல்லாம் சொல்ல முடியாது........

வேணும்னா - நல்லாயிருக்கு என்னு சொல்லிட்டு - ஓடி போயிடுறேன்!

8)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மணி இல்லை முத்துக்கள் இல்லை முள்ளாக தைக்கிறது நெஞ்சில் ...........தொடர்ந்து அடிக்கட்டும் மணி....

  • தொடங்கியவர்

வணக்கம் ரமா, பாலன், சுஜிந்தன், வர்ணன், புத்தன்,

உங்களுடைய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

காலத்துக்கு ஏற்றமுறையில் கவி படைகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான வரிகள், நன்றிகள்,

பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

வணக்கம் புவனா,

உங்கள் கருத்துக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

கவிதை நல்லாயிருக்கு மணிவாசகன் அண்ணா (ஐயா) நல்லா எழுதுறீங்க..... பாராட்டுக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்...! :P

மணிவாசகன், சுயநலம் நிறைந்த இவ்வுலகில்... பொது நலத்துடன் எழுதிய உங்கள் கவிதையை வாசிக்கும் பலருக்கும் ஒரு விழிப்புனர்ச்சியை உணர்த்தும் என நம்புகிறேன்...

  • தொடங்கியவர்

வணக்கம் அனிதா, விழிகள்

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.