Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமதாசையும், தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- சீமான்

Featured Replies

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆற்றிய உரைகளும், அக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும், வழியே இருந்த தாழ்த்தப்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலும், அது தொடர்பாக விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது மருத்துவர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறை நிகழ்வுகளும் மிகுந்த கவலையளிக்கிறது.

மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான வன்முறையில் மட்டும் 3 பேர் உயிர் இழந்துள்ளனர், பலர் காயமுற்றுள்ளனர். இது போல், ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பேருந்து உள்ளிட்ட பொது சொத்துக்களை குறிவைத்து நடந்து வரும் தாக்குதலிலும் அப்பாவிகள் பலர் காயமுற்றுள்ளனர்.

கடலூரில் இருந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருந்த எமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன் வந்த கார் மீது பெரிய கல்லை எறிந்து நடந்த தாக்குதலில், அவருடைய விலா எலும்பு முறிந்து படுகாயமுற்றுள்ளார். இப்படி பொது மக்களில் பலரும் காயமுற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சாலை பயணம் ஆபத்தானதாக மாறியுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைக்கும் நாம் தமிழர் கட்சி இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறது. ஒன்று, மருத்துவர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் பிணைய விடுதலை அளித்த பிறகும் அவரை விடுதலை செய்யாமல், 2004-ம் ஆண்டு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதிதாக வழக்கு தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பதை நாம் தமிழர் கட்சி கண்டிக்கிறது.

இது சட்டத்தையும், நீதியையும் அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தும் தேவையற்ற நடவடிக்கை யாகும். மேலும், ராமதாசின் வயது, அவருக்குள்ள உடல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ராமதாசையும், அக் கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இரண்டாவதாக, அரசு தொடுத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடு விக்கை நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர, வன் முறையில் ஈடுபடுவதும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதும், பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் காயமடைகிற அளவிற்கு கண் மூடித்தனமான வன் முறையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதும் நாகரீகமான அரசியல் அல்ல.

கடந்த ஒரு வார காலமாக சாலை வழிப்பயணம் என்பது பல ஊர்களிலும் நிறுத்தப்பட்டு, பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர்கள் உடனடியாக தங்கள் தொண்டர்களை வன்முறை பாதையில் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சி விடுக்கும் வேண்டுகோளாகும்.

2008-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு அரசியலிலும் பொது வாழ்விலும் ஒரு இணக்கமான சமூக அமைதி நிலவியது. இலங்கையில் தமிழினம் இன அழித்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவான, ஒருமித்த அரசியல் எண்ண வோட்டம் தமிழ்நாடு மக்களிடையே நிலவியது. அந்த நிலை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் அரசியல் உரிமை போராட்டங்களுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். தமிழர் சமூகத்தில் புறை யோடிப்போயுள்ள சாதிய உணர்வுகளால் ஆங்காங்கு நடைபெறும் சில நிகழ்வு களுக்காக, உழைக்கும் இரு பெரும் சமூகங்களுக்கு இடையே ஒரு மோதல் அரசியலை முன்னெடுப்பதை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. தமிழினப் போராளியாக நின்று, தமிழினத்தின் உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற மருத்துவர் ராமதாஸ், ஒரு வன்னியரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கும் அரசியல் தமிழினத்தை 500 ஆண்டுக் காலத்திற்கு பின்னால் தள்ளும் பிற்போக் குத்தனமான அரசியலாகும். இப்படிப்பட்ட சாதிய அரசியல், தமிழின உணர்வு எனும் ஒர்மையின் மாபெரும் பலத்தை உடைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும். அது வன்னிய சமூகத்திற்கும் பயனளிக்காது, தமிழினத் திற்கும் பயன்படாது. மதிப்பிற் குரிய ராமதாஸ் முன்னெடுக்கும் இந்த அரசியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது.

தமிழினத்திற்கு எதிரான இன அழித்தலில் இருந்து, காவிரி, முல்லைப் பெரியாற்று அணைப் பிரச்சனைகள் வரை, இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளிலும், சாதி, மத வேறுபாட்டு உணர்வுகளைத் தாண்டி தமிழினமாய் ஒன்று பட்டு நின்றால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். தமிழ்த் தேசிய உணர்வே நமது நிகழ்கால, எதிர்கால நல் வாழ்விற்கான ஒரே ஒரு சரியான அரசியல் பாதையாகும். இதனை தமிழர் சமூதாயத்தின் அங்கமாக உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் உணர்ந்து செயல் பட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14475:ramatacaiyum,-volunteers-must-be-released-immediately&catid=36:tamilnadu&Itemid=102

 

ராமதாஸ் இன்று தமிழினத்தின் நலன்களுக்கு எதிராக செய்து வருகின்ற அரசியலை சீமான் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். ராமதாஸின் சாதிய செயற்பாடுகளை தாம் எதிர்ப்பதாக கூறியிருக்கிறார். நல்ல விடயங்கள்.

ராமதாஸ் போன்ற ஒருவரை இன்னும் சில காலம் உள்ளே வைத்திருப்பதே நல்லது. அவரை விடுவிக்கும்படி சீமானும் கலைஞரும் வேண்டுகோள் விடுத்திருப்பது ஏற்புடையது அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற உத்தரவை செயல் இழக்கச் செய்யும் பொருட்டு பழைய வழக்கை தூசி தட்டுவது சிறந்த செயற்பாடா சபேசன்? அப்படியானால் அந்த வழக்கை முன்னரே தூசு தட்டியிருக்க வேண்டுமல்லவா?

அவரை உள்ளே வைத்திருப்பதற்கு கையாளப்படும் முறைகள் தவறானவை. இந்திய நீதித்துறையை கேலிக்கிடமாக்குபவை. ஆனால் சாதியத்தை தூண்டுபவர்களை இப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால்தான் மற்றவர்களும் திருந்துவார்கள்.

ஒன்றே ஒன்று செய்யலாம் எந்த கட்சி வன்முறையில் இறங்கி பொது சொத்தை நாசாமாக்குகிறதோ அந்த கட்சியே நஷ்ட பணத்தை கொடுக்கவேணும் என்று சட்டம் போட்டால் என்ன?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் சபேசன்!
இது எனது தெரிவல்ல....இருந்தாலும் உங்களிடம் ஒரு கேள்வி!
சாதீயம் என்றால் என்ன? உங்கள் பார்வையில் அதன் விளைவுகள் என்ன?
எனது சந்ததி.
எனது குடும்பம்.
எனது உறவுகள்.
எனது பணம்.
எனது காணி நிலம்.
எனது  ஊர்.
எனது நாடு.
எனது மாநிலம்.
எனது கொள்கை.
எனது நிறம்.
எனது மொழி.
எனது மதம்.
எனது கடவுள்.
எனது சாதி?.....இங்கு மட்டும் பலர் முரண்படுகின்றார்களே? ஏன்? அதற்கான காரணம் என்ன?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபேசன். நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையா?

 

வணக்கம் சபேசன். நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையா?

 

வேண்டாம் குசா, அழுதிடுவன்

மன்னிக்கவும் குமாரசாமி. உங்கள் கேள்வியை இப்பொழுததான் கவனித்தேன். எனது சாதி என்பதில் எந்தப் பிரச்சனையும் எனக்கு இல்லை. எனது சாதிக்கு உள்ள உரிமை உனது சாதிக்கு இல்லை என்பதிலும் எனது சாதி உனது சாதியை விட உயர்ந்தது என்பதிலும்தான் எனக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.