Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15520447tna_mp_yogeswaran.jpg

வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு? - சீ.யோகேஸ்வரன்

 

 

அம்பாறை - உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவசர கடிதமொன்றை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். 


அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,, 

இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பௌத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் தாபிக்க திட்டமிட்டுள்ள பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டையும், அரச மரம் நாட்டும் செயற்பாட்டையும் நிறுத்தி உதவ நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த அம்பாறை மாவட்டம் திட்டமிட்ட பெரும்பான்மை இன குடியேற்றம் காரணமாக இன்று தமிழ் மக்களை சிறுபான்மை நிலைக்கு தள்ளியதுடன், 3வது நிலை இனமாக மாற்றி அமைத்துள்ளது. 

இந்நிலையில் இம்மக்களின் வழிபாட்டு தலங்களை உடைப்பதும், சிலைகளை பிடுங்குவதும், பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகளை தாபிப்பதும் இந்த வகையில் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதும் தற்போது இந்நாட்டில் ஒரு செயற்றிட்டமாக நடாத்தப்படுகின்றது. 

இச்செயற்பாட்டை பௌத்த தர்ம போதனையை உண்மைக்கு உண்மையாக பின்பற்றும் பௌத்த சிங்கள மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் புத்த பகவானின் இலங்கை விஜய வரலாறுகளை எடுத்துக்கூறும் மகாவம்சம் என்னும் நூல் கௌதம புத்தர் சமாதான செயற்பாடுகளை மேற்கொண்டதை முக்கியமாக எடுத்துக் காட்டுகின்றது. 

கடந்த கால அரசியலாளர்களும், பெரும்பாலும் இந்து பௌத்த மக்களின் ஒற்றுமையை பாதிக்கும் செயற்பாடுகளில் இறங்கியது மிகக்குறைவாகும். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்து பௌத்த மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தங்களுடன் உள்ள பௌத்த அமைப்புக்கள் மற்றும் இராணுவத்தினர், இராணுவ புலனாய்வு பிரிவினர், ஏனைய படைப் பிரிவினரின் உதவியுடன் பௌத்த மக்கள் வாழாத இந்து மக்களின் வாழிடங்களில் பௌத்த விகாரைகளை தாபிப்பதும், இந்துக்களின் வழிபாட்டு தலங்களை இடிப்பதும், இந்து வழிபாட்டு விக்கிரங்களை பிடுங்குவதும், இந்து ஆலயங்களில் கொள்ளை செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். 

அத்தோடு பல நூற்றாண்டுகளாக ஆடி, பௌணர்மியில் நடைபெற்ற வருடாந்த கதிர்காம உற்சவத்தை தற்போது இவ்வருடம் ஆவணி பூரணைக்கு மாற்றி அமைத்து ஆலய வழமையான உற்சவ செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க முனைந்துள்ளனர். 

இவ்வேளை இவ் உகந்தை முருகன் ஆலயம் கதிர்காம ஆலய உற்சவத்தை ஒட்டிய வகையில் உற்சவம் நடைபெறும் வழமை கொண்டது. ஆனாலும் இதன் உற்சவத்தை ஆடி பௌர்ணமி தீர்த்தத்தை அடிப்படையாக கொண்டே நடாத்த வேண்டியுள்ளது. 

இது இவ்வாறு இருக்க இவ் உகந்தை முருகன் ஆலயம் இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கும். இவ்வேளை தற்போது திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரையை அமைப்பதும், அரச மரத்தை நடுவதுமான செயற்பாட்டுக்கு காணி வழங்குமாறு தங்களால் வலியுறுத்தப்படுவதாக எமக்கு செய்தி கிடைத்துள்ளது. 

இச்செயற்பாடானது இந்து, பௌத்த மக்களின் ஒற்றுமையை மேலும் மேலும் சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதற்கு உதவும் என்பது உண்மையாகும். எனவே இதனை அனுமதிக்க முடியாது. பௌத்த மக்கள் தங்கள் வாழிடங்களில் மிகப்பிரமாண்டமான பௌத்த விகாரைகளை கொண்டிருக்கும் இந்நிலையில் இந்து மக்களின் ஆலய சூழலில் திட்டமிட்ட பௌத்த விகாரைகளை ஏற்படுத்துவது பௌத்த மதத்தின் புனிதத்தை கெடுக்கும் ஒரு செயற்பாடாகும். புத்த பகவானை இன, மத, பிரச்சனையை தூண்டுவிக்கும் ஒரு பொருளாக பயன்படுத்துவதாகவே அமையும். 

எனவே இந்து பௌத்த மக்களின் இன ஒற்றுமையை விரும்பும் ஒரு அரச அதிகாரியாக தாங்கள் இருப்பீர்கள் என நான் கருதுகின்றேன். அவ்வாறாயின் உகந்தை முருகன் ஆலய சூழலில் பௌத்த விகாரை தாபிப்பதையும், அரச மரம் நடுவதையும் மேற்கொள்ளும் இன மத வாத பிக்குகளின் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு உறுதுணை புரியாது. இதை தடுத்து நிறுத்துமாறு அன்பாக வேண்டுகின்றேன். பதிலை அவசரமாக எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தின் பிரதிகளை மத விவகார அமைச்சர் மற்றும் இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 

கடந்த ஆண்டுகளில் தாயகப் பயணங்களை மேற்கொண்டிருந்த நேரத்தில் உகந்தைக் கோயிலுக்கு போயிருந்தேன். இயங்கை எழில் கொஞ்சும் நிலம் அது.

முருகன் கோயிலுக்கு அருகில் பன்சாலை அமைப்பதற்கு பல ஆண்டுகளாகவே முயற்சி நடந்து வருகிறது.

இதில் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்து, நன்கு தமிழ் பேசக் கூடிய ஒரு புத்த பிக்குதான் முன்னிலை வகிக்கிறார். இவர் கடந்த ஆண்டு பாணமையில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து ஒரு பிள்ளையார் சிலையை தூக்கிக் கொண்டு போய் தனியாக ஒரு பிள்ளையார் கோயிலையும் அமைத்திருந்தார்.

இப்பொழுது மீண்டும் உகந்தைக் கோயிலை கையில் எடுத்திருக்கிறார்.

Edited by சபேசன்

பாணமை பிக்கு பிள்ளையார் சிலையை இன்னொரு விகாரையில் கொண்டுபோய் வைத்திருப்பத்தாக அல்லவா செய்தி வந்திருந்தது.  அவர் அதற்கு கோயில் கட்டிவைத்திருக்கிறாரா?

ஆம், அதற்கு தனியாக ஒரு சிறிய கோயிலை கட்டித்தான் வைத்திருக்கிறார். அதற்கு ஊருக்குள் யார் பெரியவர் என்பதுதான் காரணம். பாணமை பிள்ளையார் கோயிலில் அந்தச் சிலைதான் முதலில் மூல விக்கிரமாக இருந்தது. பின்பு வேறொரு சிலை அங்கே வைக்கப்பட்டது. மூல விக்கரமாக இருந்த சிலை வேறொரு இடத்தில் வைக்கப்பட்டது.

கோயில் நிர்வாகத்தோடு இருந்த பிரச்சனைக்கு பழி வாங்குவதற்கு புத்த பிக்கு இதைப் பயன்படுத்தினார். மூல விக்கிரமாக இருந்த பிள்ளையாரை வெளியில் வைத்தனால்தான் பாணமையில் மழை பொழியவில்லை என்று சொல்லி, கூட்டத்தோடு வந்து சிலையை தூக்கிக் கொண்டு போய் விட்டார்.

இப்பொழுது பாணமையில் இரண்டு பிள்ளையார் கோயில்கள். உகந்தையில் இப்பொழுது திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறார்.

எங்கள் சைவக்கோவில்கள் பூர்வீகமானவை. 

 

வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்களின் தெய்வங்களை, எங்கள் சைவக்கோவில்களில் வைத்தோம்.

 

புத்தம், சமணம் இரண்டுமே வைஷ்ணவத்தின் தோன்றல்கள். இந்த இரண்டுமே சைவத்தை அழிக்க முயன்றார்கள். முடியவில்லை.

 

இருந்தாலும், எங்கள் பூர்வீகப் பண்பாக, புத்தர்,  இயேசு பெருமான்களை எங்கள் சைவக்கோவில்களில் வைத்து வழிபடுவது, மிகவும் சாலச்சிறந்தது.

 

ஈழத்தின்  பூர்வீகமக்கள் நாங்கள். வந்தவர்களை வாழவைப்பதுதான், நம் பண்பு.

 

 

 

15520447tna_mp_yogeswaran.jpg

வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு? - சீ.யோகேஸ்வரன்

 

 

 

 

வேலுடன் இருந்த முருகன் தமிழ் மக்களின் அத்தனை அழிவுகளையும் பாத்துக்கொண்டு இருந்தாரே. நியாயத்திற்கான தமிழ்மக்களின் போராட்டத்தை தோல்வியடைய வைத்தாரே.

 

அரசமரத்துடன் இருக்கும் புத்தர் ஆக்கிரமிப்பு படைகளை வெல்லவைத்தாரே?  ஆகவே இனி நாங்களும் புத்தம் சரணம் கச்சாமி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.