Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் இறங்குதுறையை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

Featured Replies

(3 ஆம் இணைப்பு) மூதூர் இறங்குதுறையை கைப்பற்றும் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு

[வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 17:21 ஈழம்] [திருமலை நிருபர்]

திருகோணமலை மூதூர் இறங்குதுறையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் மூதூர் இறங்குதுறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

பல படகுகளில் படையினர் மூதூர் இறங்குதுறையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்தப்படகுகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு படையினருடனேயே மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பலத்த தாக்குதல்கள் மூலம் படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

20060803001hm7.jpg

மூதூர் இறங்குதுறை

அத்துடன் மூதூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 40-க்கும் அதிகமான படையினரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக திருக்கோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் விடுதலைப் புலிகளின் ஐ.நா. நிறுவனங்களுக்கான இணைப்பாளர் பாவரசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

படம்: ஈழவிசன்

http://www.eelampage.com/?cn=27970

  • தொடங்கியவர்

மூதூரைக் கைப்பற்றும் சிறீலங்காப் படையினரின் நகர்வுகள் அனைத்தும் முறியடிப்பு.

திருமலை மூதூர் பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நவடிக்கைகள் அனைத்தும் இன்று விடுதலைப் புலிகளின் போராளிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இன்று இரண்டாவது நாளாக மூதூர் இறங்குதுறை ஊடாக பல தடவைகள் முன்னேற முயன்ற சிறீலங்காப் படையினரின் தரையிறக்க நகர்வுகள் அனைத்தும் கடற்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் தரை மார்க்கமாக முன்னேற முயற்சி செய்யும் சிறீலங்கா படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மூர்க்கமான தாக்குதலைத் தொடுத்து படையிரை விரட்டிவருகின்றனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கிழக்கிலயும் வன்னியப்போல ஒரு பிரதேசம் மிக விரைவா உருவாகப் போகுது எண்டு சொல்லுங்கோ.

  • தொடங்கியவர்

மூதூர் இறங்குதுறையை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு - படைத் தரப்பிற்கு பாரிய இழப்பு

- பாண்டியன் வுhரசளனயலஇ 03 யுரபரளவ 2006 18:59

விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட மூதூர் இறங்குதுறை மீள ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட பாரிய முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது படைத்தரப்பிற்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை மூதூர் இறங்குதுறைப் பகுதிகள் நோக்கி பல்குழல் எறிகணை செலுத்திகள் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகளின் ஆகோர எறிகணை வீச்சை மேற்கொள்ள வான்படையின் கிபிர், மிக் வானூர்திகள் குண்டுகளைப் பொழிய கடற்படைப் படகுகள் மூலம் ஸ்ரீலங்கா படையினர் தரையிறங்க முற்பட்டனர்.

இதனையடுத்து படையினர் மீது கடுமையான பதில் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர், படையினருடன் தரையிறங்க முற்பட்ட படகுகள் பலவற்றை கடலிலேயே மூழ்கடித்த போராளிகள் படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தி படையினரின் முயற்சியை வெற்றிகர மாக முறியடித்தனர்.

மூதூர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள போராளிகள் தொடர்ந்து தமது தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் தமது நிலைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்ட படையினரில் 40 வரையானோரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஸ்ரீலங்கா அரசிடம் கையளி;க்க ஏற்பாடுகளைச் செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://sankathi.com/content/view/4174/26/

ஏனப்பு புலிகள் மூதுருக்குள்ளை நிண்டு கொண்டு எதுக்கு மூதுருக்குள்ளையே ஆட்லறி அடிக்கணும்.

உதை எழுதுறவனுக்கு தான் மூளையில்லையெண்டால் அதைக் காவித்திரியிற உமக்காவது மூளையில்லையா? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! சூடு, சொறணை இருந்தால் தானே ரோசம் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 03-08-2006 20:39 மணி தமிழீழம் [நிலவன்]

மூதூர் இறங்குதுறை கடற்பரப்பில் சிறீலங்கா தாக்குதல் கலம் மூழ்கடிப்பு.

மூதூரைக் கைப்பற்றும் நோக்குடன் இன்று பல தடைவைகள் தரையிறங்க முற்பட்ட சிறீலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகளும் விடுதலைப் புலிகளின் மோட்டார் படையணியினரும் மூர்க்கமான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

தாக்குதலில் சிறீலங்காவின் தாக்குதல் கடற்கலம் ஒன்று மூழக்கடிக்கப் பட்டுள்ளதாக திருமலைச் களச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தும் இதனை சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

நன்றி-பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.