Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

"கடற்கரும்புலி கப்டன் வினோத்"

9045_391709857599599_1905154255_n.jpg

 

"கடற்கரும்புலி கப்டன் வினோத்"
=============
1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.

மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.

வினோத்தின் அக்கா சொல்கிறாள் ….

” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.

‘ என்னடா இது ‘ என்று கேட்டால் , ‘ அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… ‘ என்றுவிட்டு போயிடுவான்.

அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா , அது தண்ணீர் இல்லை – இறுக்கமாக , பாரமாகக் கணக்கும் …. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை. ”

யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் – திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம் , வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு , அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

வினோத்தின் அப்பா சொல்கிறார் ….

” அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டு போய காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான் – தற்செயலா லேனைப்பார்த்தேன் , சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை – அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன் , பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான்.

இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி - அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன பிள்ளை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

” இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க - நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம் , வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும். ”

இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது , ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.

‘ தமிபி வந்திட்டான் ‘ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது , 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.

திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன….

ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.

வரிப்புலிச் சீருடையில் , ” மிலிற்றறி ” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் , மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.

” என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…? “ அக்கா கேட்டாள்.

” ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்… “ சிரித்துக்கொண்டு சொன்னான்.

அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு ,

” உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான். ”

‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’

வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக , கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும் , அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.

கட்டி அனைத்துக் கொண்டு படம் எடுத்த்தான்.

அம்மா கேட்டபோது – அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை.

” நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும் “ என்று சொல்லிவிட்டுப் போனான்.

அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள்.

இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார்.

” சின்னவனாய் இருக்கேக்க , என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை , அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு , அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன் …… என்று சொல்லுவானடா தம்பி. ”
  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்..! 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.