Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sri-lanka-cricket-seithy-150.jpg

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அவமானத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜுன் 25ம் திகதி முதல் லண்டனில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடர்களின் அட்டவணை மற்றும் போட்டிகளை நடத்தும் இடங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் போது கிரிக்கட்டில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்குக் கூட சில போட்டிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த எட்டு வருட கால கிரிக்கட் போட்டித் தொடர் அட்டவணையில் ஒரு போட்டி கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நிறைவேற்றுக்குழுவானது, சர்வதேச மட்டத்திலான போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை பொருத்தமற்ற ஒரு நாடு என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதன் ஊடாக இலங்கைக்கு கிடைத்து வந்த பெரும் வருமானம் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இழக்க நேரிடும் அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

  

பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான வன்முறைகள், இனவெறி செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு கிரிக்கட் போட்டிகள் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படாமல் தவிர்க்கப்படுவது வழக்கமாகும். தென்னாபிரிக்காவில் இனவெறி நிலவும் வரை அந்நாடு கிரிக்கட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. அது போன்று தற்போது பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலும் சர்வதேச கிரிக்கட் தொடர்கள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது இலங்கைக்கு நேர்ந்துள்ள பெரும் அவமானமாகவே கருதப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=86413&category=TamilNews&language=tamil

இந்த செய்தியை எழுதின உறவு நடுவில கொஞ்சம் வெளுத்துக்கட்டி இருக்கிறார்.

நம்ம உறவுகள் யாராவது இந்த நிரலை பார்த்தார்களா? கிறிகெட் வாரியம் நிரலுடன் சேர்த்து சொல்லியிருக்கும் செய்தி என்ன?

 

எனது நிலைவில் கடந்த சில தடவைகளில் இலனகையின் விளையாட்டுதிடல்களைப்பற்றி சர்ச்சை எழுந்தது. இவற்றை பயன் படுத்தமுன்னர் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.  அதன் பின்னர் இலனகை அரசு ஆமியைப் பயன்படுத்தி அவ்ற்றை மறு சீர் அமைப்பத்தாக செய்திகள் வந்திருந்தன. இப்போது இலங்கை பாரிய திடல் ஒன்றை அம்பாந்தோட்டையில் கட்ட இருப்பதாகவும் வந்தது.

 

மேலும் இலங்கை தனது உள்ளுர் வாரியத்தை அமைப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும்கூட சில ந்பந்தனைகள் விதிக்கபட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியான பொய்யான செய்திகளை எங்கட ஊடகங்கள் வெளியிடுகின்றன?. இதனால் யாருக்கு இலாபம். அண்மையில் 2015ல் இருந்து 2023வரை உலகக்கிண்ணப்போட்டிகள் நடைபெறும் இடங்கள் பற்றித்தான் விவாதிக்கப்பட்டது. 2015ல் அவுஸ்திரெலியா நியூசிலாந்திலும் நடைபெறும் உலகக்கிண்ணப்போட்டியைத் தொடர்ந்து 2019ல் இங்கிலாந்திலும் 2023ல் இந்தியாவிலும் நடைபெறும். 20க்கு 20 உலகக்கிண்ணப்போட்டி அடுத்து 2014ல் வங்காளதேசத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போட்டிக்கு தயார்படுத்தல் சரியில்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 2013வரை அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு முடிவு எடுக்க்கப்படும். அதனைத்தொடந்து வரும் உலகக்கிண்ணபோட்டிகள் இந்தியா, அவுஸ்திரெலியாவில் நடைபெறவிருக்கிறது. புதிதாக உலக டெஸ்ட் கிண்ணப்போட்டி நடைபெறவுள்ளது. முதலாவது போட்டி இங்கிலாந்திலும் பிறகு இந்தியாவிலும் நடைபெறும். இச்செய்தியை அரைகுறையாகப் பார்த்துவிட்டு எங்கட ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பாற்றன நிலமை காரணமாக 2023 வரை சர்வதேசப்போட்டிகள் நடைபெறமாட்டாது எனவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அட, சைக்கிள் காப்பில தங்கட கருத்தை இட்டு முடிஞ்சிருக்கிறங்கள். நானும் விடயம் தெரியாது பச்சை குத்திவிட்டேன். நன்றி விளக்கத்திற்கு கந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.espncricinfo.com/ci-icc/content/story/646147.html http://static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0045/ftp_2011_2020.pdf http://www.espncricinfo.com/icc-world-twenty20-2014/content/story/646199.html

மேலே 3 இணைப்புக்கள் இருக்கிறது. 1) உலகக்கிண்ணப்போட்டி தொடர்பான முடிவு 2)2020 வரையில் நடைபெறவுள்ள போட்டிகளின் அட்டவணை 3) வங்காளதேசம் தொடர்பான முடிவு

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிராக முடிவு எடுக்கவேண்டுமென்றால் இந்தியாவால்தான் முடியும். தற்பொழுது இந்தியாதான் துடுப்பாட்டத்தில் வல்லரசு. அவர்களால் நடாத்தப்படும் ஐபிஎல், செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் சம்பியன்கிண்ணம் காலங்களில் வேறு நாடுகளில் பெரும்பாலும் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதில்லை( இங்கிலாந்து விதிவிலக்கு). பல்வேறு முடிவுகள் வாக்களிப்புகள் நடைபெறும் போது இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மேற்கிந்தியதீவுகள், தென்னாபிரிக்கா, சிம்பாவே போன்ற வெள்ளையர்கள் அல்லாத நாடுகள் ஒர் அணியில் சேர்ந்துவிடும். அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்றவை மற்றைய அணியில் சேர்ந்து வாக்களிக்கும். இதில் தென்னாபிரிக்கா, சிம்பாவே நாடுகளில் வெள்ளையர்களே அதிகமாக விளையாடினாலும் அந்த நாடுகளை ஆள்பவர்கள் கறுப்பினத்தவர்கள். முன்னாள் அவுஸ்திரெலியா பிரதமர் ஜோன் கவாட் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச துடுப்பாட்டவாரியத்தில் பதவி ஒன்றுக்காக போட்டியிட்டபோது இலங்கையின் விருப்பத்திற்காகவும் இந்த 7 நாடுகள் ஒரே அணியில் இருந்து அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஜோன் கவாட் முன்பு ஒரு பேட்டியில் முத்தையா முரளிதரன் பந்தை வீசுகிறார் என்று சொன்னவர். பாகிஸ்தானும் இந்தியாவும் எதிரி நாடுகள் என்றாலும் வெள்ளையர்களின் நாடுகளுக்கு எதிரான வாக்களிப்புகளில் ஒன்றாகவே வாக்களிப்பு செய்வார்கள். உலகக்கிண்ணப்போட்டி அவுஸ்திரெலியாவில் 1992ல் ஒரே ஒரு முறைதான் நடைபெற்றது. ஆனால் 1987ல் இந்தியா பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டி 1996லும், 2011லும் நடைபெற்றது. 2023லும் நடைபெறவுள்ளது. ஆனால் அவுஸ்திரெலியாவில் 2015ல் தான் 2 வது போட்டியை நடாத்தவுள்ளது. 7 அணிகூட்டாக இருக்கும் (இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மேற்கிந்தியதீவுகள், தென்னாபிரிக்கா, சிம்பாவே) அணியில் சில முடிவுகளை 4 அணிகள்(ஆசிய நாடுகள் -இந்தியா,பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்) ஆகியவை முடிவு எடுக்கின்றன. ஆசிய நாடுகளின் பலத்தினை அதிகரிக்க 90களில் இறுதியில் கென்யாவைவிட பலம் குறைந்த வாங்காள தேசத்துக்கு டெஸ்ட் அந்தஸ்து ஜெயமோகன் டல்மியாவினால் வழங்க சிபரிசு செய்யப்பட்டது. சிம்பாவே நிறவெறி நாடு என்பதினால் 2003ல் இங்கிலாந்து உலகக்கிண்ணப்போட்டியில் சிம்பாவேக்கு எதிராக விளையாடவில்லை. சிம்பாவேயில் இனப்படுகொலைகள் நடைபெறவில்லை. ஆனால் முகாம்பே அரசு, சிம்பாவே வாழ் வெள்ளையருக்கு எதிராக நடந்ததினால் வெள்ளை நாடான இங்கிலாந்து சிமபாவேயைப் புறக்கணித்தது. தமிழர்கள் தற்பொழுது ஒரு நாட்டிலும் ஆட்சி அமைக்கவில்லை. தமிழ் நாட்டில் சிங்கள அணிக்கு எதிராக செயற்பட முடிகிறது. ஐபிஎல் போட்டியில் சிங்கள நாட்டுவீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.