Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் போர்க்குற்றங்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் ஆசாத்தின் ஆட்சிக்கெதிராக போராடும் போராளிகளுக்கு அமெரிக்கா உற்பட பல மேற்கு நாடுகள் ஆதரவளித்து வருவது தெரிந்ததே. கடந்த இரு வருடங்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

 

சிரிய ராணுவத்தால் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், சிரிய ராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கிறது, போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறதென்று கூறிக்கொண்டு அமெரிக்கா பெரிய அளவில் போராளிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கிவருகிறது.

 

ஆனால் தற்போது வெளியாகிவரும் செய்திகளின்படி, அமெரிக்க உதவிவரும் போராளி அமைப்புக்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒள்நாடாபற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் குற்றுயிரில் கிடக்கும் ஒரு சிரிய ராணுவ வீரனின் இதயத்தை கத்தியால் அறுத்தெடுத்து ஒரு போராளி அல்லாவுக்கு மகிமை என்று கூவிக்கொண்டே பச்சையாக உண்கிறான். இது போராளிகளின் நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியிருந்தது. 

 

அதேபோல பலமுறை சிரிய ராணுவத்தின் நிலைகள் மீது போராளிகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்துத் தாக்கியிருக்கிறார்கள் என்கிற செய்தியும் வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிரிய அரசுக்கு ஆதரவானவர்கள், ராணுவத்தில் பணிபுரியும் குடும்பங்கள் என்று பலரைப் போராளிகள் ஈவு இரக்கமின்றிக் கொன்றிருக்கிறார்கள். 

 

இரு நாட்களுக்கு முன்னர் வீதியில் கடவுளை நிந்தித்துப் பேசினான் என்கிற காரணத்துக்காக 13 வயதுச் சிறுவன் ஒருவனை அவனது வீட்டில், பெற்றோர் பார்த்திருக்க நெற்றியில் சுற்றுக் கொன்றுவிட்டுப் போயிருக்கிறது ஒரு போராளிக்குழு. சிறுவன் கொல்லப்படும்போது அல்லவுக்கே மகிமை என்று கூவப்பட்டே கொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறே, இக்குழுவினரால் 4 பேருக்கு பகிரங்க சவுக்கடி நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வாடகை வண்டியொன்றைக் கடத்த முற்பட்டனர் என்கிற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 பேரை இழுத்துவந்து, அவர்களின் குற்றங்கள் குர் ஆனின் விதிப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டு, ஒரு அடிப்படைவாத முல்லா தண்டனைய வாசிக்க அந்த நால்வருக்கும் பல சவுக்கடிகள் (பின்னப்பட்ட மின்கம்பிகளால் ஆன சவுக்கு) மக்கள் பார்த்திருக்க வழங்கப்பட்டது. 

 

சிரியாவின் மேலுள்ள பகை காரணமாக அந்த அரசை கவிழ்க்க எத்தனிக்கும் அமெரிக்கா தெரிந்துகொண்டே இஸ்லாமிய அடிப்படைவாதப் போராளிகளுக்கு உதவி வருகிறது.ணாமெரிக்காவின் உதவிகளைப் பாவித்து பல இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் தமக்கென்று ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத நாடொன்றினை மெல்ல உருவாக்கி வருகிறார்கள். 

 

இவ்வாறு அமஎரிக்கா தலையிட்டு ஆட்சியைக் கவிழ்த்த நாடுகளான ஈராக், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் கட்டுப்பாட்டுடன் இருந்த சமுதாயங்கள் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் அலைக்கழிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தங்களை முகம்கொடுத்து வருவதோடு இஸ்லாமிய அடிப்படைவாதம் காலூன்றவும் உதவியிருக்கிறது.

 

ஈழத்தில் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் சிங்கள அரசுக்கு பணமும், ஆயுதங்களும், ஆலோசனையுடன் பயிற்சியும் கொடுத்து போர்க்குற்றங்களை ஊக்குவித்த அமெரிக்கா இன்று சிரியாவிலும் அதையே செய்துவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் கண்டது பிற்காலத்தில் அமெரிக்கா ஆதரவான சிரியா அரசாங்கம் அமைக்கப்படும் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சிரியா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா செயற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தமக்கு பிடிகாதவர்களை அவர்களின் எதிரி மூலம் கொல்லும் தந்ரோபாயத்தை அண்மை காலங்களில் அதிகம் பயன்படுத்துகிறது. தானாக நேரடியாக சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்கிறது. ஒரு தரம் சிறிலங்கா அரசுக்கு உதவி புலிகளை அழித்தது.இன்று சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா செயற்படும் வேளையில் (சீனாவின் நண்பனாகியது) நாம் அமெரிக்காவை பயன்படுத்தி கொள்வது தான் புத்திசாலிதனமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தமக்கு பிடிகாதவர்களை அவர்களின் எதிரி மூலம் கொல்லும் தந்ரோபாயத்தை அண்மை காலங்களில் அதிகம் பயன்படுத்துகிறது. தானாக நேரடியாக சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்கிறது. ஒரு தரம் சிறிலங்கா அரசுக்கு உதவி புலிகளை அழித்தது.இன்று சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா செயற்படும் வேளையில் (சீனாவின் நண்பனாகியது) நாம் அமெரிக்காவை பயன்படுத்தி கொள்வது தான் புத்திசாலிதனமானது.

 

நீங்கள் சொல்வது சரிதான் நுணா, ஆனால் இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா இன்றுவரை சிறிலங்காவின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காதிருக்கிறது என்பதுதான் எனது எண்ணம். 

 

அமெரிக்கா சிறிலங்காவுக்கெதிராக எமக்கு உதவுவதை விடுத்து, இன்னும் இன்னும் சிறிலங்கவுக்கு உதவி அதைச் சாந்தப்படுத்தி சீனாவின் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்கிறது என்பதுதான் உண்மை. இதே காரணத்தைத்தான் இந்தியாவும் இப்போது கடைப்பிடிக்கிறது. சீன, பாக்கிஸ்த்தானிய பயத்தை வைத்தே இந்தியா இன்றுவரை இலங்கைக்கு இராணுவ, இராஜதந்திர உதவிகளை வழங்கி வருகிறது. 

 

ஆனால் முடிவில் இவர்கள் என்ன செய்தாலென்ன, செய்யாவிட்டாலென்ன, சிறிலங்கா நிச்சயம் சீனாவின் பக்கம்தாமன் போகப் போகிறது. அப்படியொரு தீர்க்கமான நிலை வரும்போது நீங்கள் சொல்லியவாறு அmeரிக்காவோ அல்லது இந்தியாவோ வேறு வழியில்லாமல் எமது பக்கம் சாயலாம். அதுவரை சிறிலங்காவின் தாளத்திற்குத்தான் அமெரிக்காவும் இந்தியாவும் ஆடவேண்டும். இன்றுதான் தமிநெட்டில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்தேன். அதில் கோத்தாபாயவின் இந்திய மேலாதிக்கத்தை உதாசீனம் செய்யும் கருத்துகளும் அடங்கியிருக்கின்றன. படித்துப்பாருங்கள். 

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36452

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தனக்கு ஆதாயம் என்று வந்தால் தலிபானுக்கும் அலுவலகம் திறக்கும்..! இவங்களை எல்லாம் மனிசர் என்று.. கணக்கில எடுக்கப்படாது. :icon_idea::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.