Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரின் - தவறும் - சாதுரியமும் - ஓர் ஆய்வுக்குரிய பாடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது.

 

கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே.

 

இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள்.

 

தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீறும் போராட்ட வீரர்கள் தலைவர் ராபர்ட் முகபெயினை ஜனாதிபதியாக கொண்ட சிம்பாவே நாட்டில் சிறுபான்மை இனமான வெள்ளையர்கள் சகலத்தினையும் இழந்து அவர்கள் இருப்பே கேள்விக் குறி ஆகி உள்ளது.

 

1980 களில் நடந்த இந்த நிகழ்வுகளினால் விழிப்படைந்த தென் ஆபிரிக்க சிறுபான்மை வெள்ளையர்கள், நெல்சன் மண்டேலவினை விடுவித்து அவருடன் பேச்சு வார்த்தை நடாத்தி, பெரும்பான்மையினரிடம் நாட்டினைக் கையளித்ததுடன், சிம்பாபே வெள்ளையர்கள் போல் அல்லாது, தமது இருப்புகளையும், சொத்துகளையும் பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.

 

எமது தாயகத்திலும் சிறுபான்மையினமாகிய தமிழர்களும், புத்திசாலித் தனமாக இந்திய, சர்வதேச உதவிகளை பெற்று, இலக்குகளை அடைய வேண்டும்.

 

வேறு நாடு ஒன்றுடன் நிலத் தொடர்பில்லா நிலையில், சன விகிதாசாரம் 1:7 ஆக இருக்கும் போது ஆயுதம் மீண்டும், மீண்டும் மவுனிக்கும்.

 

கொரில்லா போர் நிரந்தர வெற்றி தராது.

 

இனியும்  ஆயுத போராட்டம் நடாத்த கூடிய கள நிலைமை இல்லாத படியால், அகிம்சை போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

நான் இங்கே சொல்ல வரும் விடயம் என்னவெனில், போராடி, இருப்பதனையும், இருப்பினையும் மேலும் இழக்காமல் பலம் மிக்கவர்களின் துணையுடன் பேசி வெல்வோம்.

 

இந்திய முனைவால், மகிந்தரின் 13 மீதான தகிடு தத்தம் தடுக்கப் பட்டுள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி, உங்கள் கருத்துதொடர்பான சாதக பாதகங்களை தீவிரமாக சிந்தித்துஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். ஈழத்துக் களத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு நமது வரலாற்றை மீழாய்வு/ஒப்பய்வு செய்து எதிர்கால உத்திகள் பற்றிய தேடலில் யாழ்க்கள உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் ஈடுபடவேண்டுமென வேண்டுகிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே சொல்ல வரும் விடயம் என்னவெனில், போராடி, இருப்பதனையும், இருப்பினையும் மேலும் இழக்காமல் பலம் மிக்கவர்களின் துணையுடன் பேசி வெல்வோம்.

 

நன்றி நாதமுனி, உங்கள் கருத்துதொடர்பான சாதக பாதகங்களை தீவிரமாக சிந்தித்துஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். ஈழத்துக் களத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு நமது வரலாற்றை மீழாய்வு/ஒப்பய்வு செய்து எதிர்கால உத்திகள் பற்றிய தேடலில் யாழ்க்கள உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் ஈடுபடவேண்டுமென வேண்டுகிறேன்..

 

இருவரது கருத்துக்களுக்கும் நன்றி

தொடருங்கள்  கருத்துக்களை.

 

எவரையும் நம்பி  எதையும் தொடங்காதீர்கள்

உங்கள் கருத்துக்களை  முன் வையுங்கள்

வெல்லும்

ஏற்றுக்கொள்ளப்படும்

வரவேற்புப்பெறும்

.........................  போன்ற எண்ணங்களுடன் மக்கள் முன்னால் வருபவர்கள் சுய நலத்துடன் இருப்பார்கள் என்று தமிழரது வலியுடன் கூடிய  போராட்ட  வரலாறு  சொல்லி  எம் முன் நிற்கிறது.

அதனால்  எவர் வராது விடினும்   உங்களது கருத்தை  முன் வையுங்கள்.

அந்த வகையில் நாதமுனியின் இந்த முயற்சியை  பாராட்டுகின்றேன்.  அதற்கு கருத்து  வைத்த தோழரையும் பாராட்டுகின்றேன்.  தொடருங்கள்

வழி  திறக்கும்போது மக்கள் அதனால் வருவர்.

வழிகாட்டி இன்று எமது இனம்

மறந்துவிடாதீர்கள்.............

உண்மைதான். இனியாவது எல்லதையும் ஒதிக்கி உதவமுன்வருபவர்களை அரவனைத்து அர்சியல்ரீதியக போரடடத்தை முன்னெடுக்கலாமே////

 

எல்லாரும் நல்லா செய்யுறீயள் இதிலை யார் முன்னுக்கு நிண்டு செயற்பட போறீர்கள் எண்று சொன்னா ஆதரவு குடுக்க வசதியாக இருக்கும்...   

 

இல்லை உபதேசம் ஊருக்கும் புலிகளுக்கும் தானோ எண்டால் அதையும் விளக்கமா சொல்லுங்கோ கேப்பம்...  இப்பெல்லாம்  சும்மா இருக்காமை எல்லாரும் அறிவுரை சொல்லுறதுதானே வளமையாக இருக்கு... 

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் இங்கே சொல்ல வரும் விடயம் என்னவெனில், போராடி, இருப்பதனையும், இருப்பினையும் மேலும் இழக்காமல் பலம் மிக்கவர்களின் துணையுடன் பேசி வெல்வோம்.

 

இந்திய முனைவால், மகிந்தரின் 13 மீதான தகிடு தத்தம் தடுக்கப் பட்டுள்ளது.

ஈழ விடுதலை சார்பில் ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

 

ஒன்றுமே இல்லாத 13காகவா இத்தனை இழப்புக்கள் 

சரி 13 கிடைத்து மாகாணத்தை எங்கள் பிடிக்குள்??? கொண்டுவந்தால்

மிகுதியை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்???

 

இந்த மாகாண சபையின்  அதிகாரங்கள் உண்மையில் யார் கைகளில் உள்ளது.

மத்திய சிங்கள அரசின் அனுமதியின்றி முற்று முழுதாக ராணுவத்தை வட பகுதியில் இருந்து 

அகற்ற முடியுமா ??? அல்லது இந்த மாகாண சபையால் காணி அதிகாரங்களை உண்மையிலேயே

 அமுல்படுத்த முடியுமா???

அப்படி அதிகாரங்களைப் பயன்படுத்த முனையும் மாகாண சபை எத்தனை காலம்

மத்திய சிங்கள அரசிற்கு ஈடு கொடுக்குமா ???

 

இந்தியாவின் நிலை என்ன???

 

சிறிலங்காவில் எப்போதும் ஒரு கொதிநிலை இருக்க வேண்டும் 

ஹிந்திய ஒருமைப்பாடு முடிந்த அளவிற்குத் தக்கவைக்கப்பட வேண்டும் 

 

தமிழ் நாட்டில் இந்திய காங்கிரஸ் மீண்டும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

அதனூடாக தமிழ் நாட்டிலும் கூட்டணி என்ற பெயரில் ஸ்திரமற்ற ஒரு ஆட்சியை 

தக்க வைக்க வேண்டும் .

இன்று ஜெயலலிதாஅவர்களுக்குக் கிடைத்த பெரும்பானமைபோல இனியும் வேறு ஒரு 

கட்சிக்குக் கிடைக்கக் கூடாது.

 

சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்களின் கைகள் தமிழ் நாட்டில் ஓங்கக் கூடாது.

 

அதனால் ஒரு உப்புச் சப்பில்லாத அரைகுறையான ஒரு தீர்வை

ஈழத்  தமிழர்கள் மீது திணிக்க வேண்டும்.அதன் பின்னர்

 

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியாவின் 

உதவியுடன் தீர்வு வழங்கப்பட்டது என ஏமாற்று அறிக்கை விட்டு 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்  

தனது செல்வாக்கை நிலைநிறுத்த மேற்குலகை நாட வேண்டும் 

 

சும்மா இந்தியா ஈழத் தமிழனுக்காக அழவில்லை 

எல்லாம் தனது அதிகாரங்கள் நிலைநிறுத்துவதற்கும் 

ஹிந்தியம் என்னும் மாயை தக்க வைத்துக்கொள்ளவுமே  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லா செய்யுறீயள் இதிலை யார் முன்னுக்கு நிண்டு செயற்பட போறீர்கள் எண்று சொன்னா ஆதரவு குடுக்க வசதியாக இருக்கும்...   

 

இல்லை உபதேசம் ஊருக்கும் புலிகளுக்கும் தானோ எண்டால் அதையும் விளக்கமா சொல்லுங்கோ கேப்பம்...  இப்பெல்லாம்  சும்மா இருக்காமை எல்லாரும் அறிவுரை சொல்லுறதுதானே வளமையாக இருக்கு... 

 

நன்றி தயா ஐயா,
 
யாருக்கும் அறிவுரை தருவது அல்ல நோக்கம். அதற்கான தகுதியும் இல்லை.
 
வாசித்ததை, படித்ததை பகிர்ந்து  கொள்கிறோம். சிலர் வாசிக்கின்றனர். சிலர் பதில் பதிவு போடுகின்றனர். அவ்வளவுதான்.
 
யாரும், யாருக்கும் அறிவுரை சொல்வதாக நான் நினைக்கவில்லை ஐயா.  

புலிகளை ஆதரித்தற்கான பலனை அனுபவிக்காமல் அடுத்த படி தாண்ட முடியாது .

குறுக்கு வழி கொஞ்ச காலம் சந்தோசம் தரும் பிறகு மீள முடியாத பாதைக்கு தள்ளிவிடும் .இதை நாம் அனுபவித்தே ஆகவேண்டும் .

இந்திய முனைவால், மகிந்தரின் 13 மீதான தகிடு தத்தம் தடுக்கப் பட்டுள்ளது.

 

இது முழுப்பொய்.

இந்திய முனைப்பால் தான் 2 இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இன்று சீனாவின் முனைப்பால் தான் 13வது சட்டத்திருத்தத்தில் மேற்கொள்ளப்படவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.