Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 08:04 GMT ]


தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை, தமிழர்களுக்காக முழுமூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பவன் நான். அவ் வாழ்க்கையே எனது காதலியாகவும் கொள்கின்றேன்.

தற்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமனதாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் மாகாணசபை ஊடாக தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பு எனக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அதனை முழுமூச்சுடன் ஏற்றுக்கொண்ட போதிலும் உள்மனதில் காதலித்த பெண்ணை கைவிட்டது போல் ஒரு ஏக்க உணர்வு காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், எனது பொறுப்பை முழுஅளவில் ஏற்றுக்கொண்டு, அதனை இறுதி வரையில் நேர்மையாக போராடி வெற்றி கொள்வேன்.

 

vigneshwaran--sambanthan.jpg

 

மாகாணசபையின் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி, மக்களுக்கு உரிய சேவையை வழங்கக் கூடிய வாய்ப்பை சட்டம் வழங்கப்படவில்லை.

மாறாக ஆளுனருக்கே கூடுதலாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாரிய நெருக்கடியை நாம் சந்திக்க நேரிடும்.

அதேபோன்று அரசாங்கம் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கிலான அதிகாரக்குறைப்பு நாடகத்தை ஆடுகின்றது என்று எண்ண தோன்றுகின்றது.

பல சவால்கள் மாகாணசபையில் இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

இது வடமாகாணத்தில் வலுவான நிலையில் இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.

எவ்வாறாயினும் அரசியல் என்பதை விட, மக்கள் பணியாக, தமிழர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பமாக நினைக்கும் போது அதனை சட்டரீதியாக கையாண்டு நெறிப்படுத்த முயற்சிப்பேன்.

கொடிய யுத்தம் ஆட்கொண்டு மக்கள் பாரிய அழிவுகளிலிருந்து தற்போது விடுபட்டு ஜனநாயக காற்றை சுவாசிக்க விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் வட மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற இராணுவச் சூழல் அதற்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ அதிகாரியொருவர் ஆளுனராக பதவியில் இருப்பதை அனுமதிக்க முடியாது.

வட மாகாணசபை ஆளுநராக உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என்பதை எனது முதல் கோரிக்கையாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு முன்வைக்க விரும்புகிறேன்.

ஏனெனில் அவரின் செயற்பாடுகள் சிவில் நிர்வாகத்திற்கு ஒத்துவராது.

அதேபோன்று மனிதஉரிமைகள் தொடர்பிலோ, சிவில் நிர்வாகம் தொடர்பிலோ சிறந்த வெளிப்பாடுகளை இராணுவ அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

தொடர்ந்து மக்கள் இராணுவக் கட்டளைகளின் பிரகாரம் வாழ்வதை விரும்புவதில்லை.

ஆகவே, வட மாகாணசபைக்கு சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்க வேண்டும்.
 

vigneswaran-mavai.JPG

 

அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாணசபைகளுக்கான 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரங்களை வலுவான நிலையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், இதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேல் மாகாணசபை முதல்வராக இருந்த போது 13 வது திருத்தச் சட்டத்தின் கையாளாக தம்மை வெளிப்படுத்தியிருந்தார். இந்தநிலையே தற்போதும் காணப்படுகின்றது.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக செயற்படுத்த பாரிய நெருக்கடிகள் சட்டப்பொறிமுறையில் காணப்படுகிறது.

இவற்றை சீர்செய்ய வேண்டும். இதனை மட்டுமே தற்போது நான் கூற விரும்புகின்றேன்.

ஆனால் அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட இரு அதிகாரங்களை மாத்திரம் குறைக்க நினைப்பது எதற்கு என்று புரியவில்லை.

வட மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் தயா மாஸ்டர் அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட யார் போட்டியிட்டாலும் அவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக வடமாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே செயற்பட வேண்டும்.

தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை விட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவசியமானது.

நாம் தமிழர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்யாவிட்டால் யார் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள்?

பிளவுபட்டு போனால் நாளை இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைகளும் தடயங்களும் அழிந்து போய் விடும்.

எனவே தேர்தலின் பின்னரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130716108678

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போகப் போகத்தான் எல்லாம் தெரிய வரும். எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தார் ஏறி விழுந்த கதையா இருக்காட்டில் சரி. :):rolleyes:

இவரால் சில விடயங்களை செய்யமுடியும் என்று நம்பும் சிலரில் நானும் ஒருவன். ஆகவே அவருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ அப்பாவி தமிழ் இளைஞர்களின் சிறைவாழ்விற்கு எதிராகக் கூட இவரால் எதுவும் செய்ய முடியவில்லையே.

 

சிறீலங்காவின் சட்டப் புத்தகத்தை படிச்சவருக்கு தமிழ் மக்களின் மனங்களைப் படிக்க வாய்ப்பிருந்திருக்காது. எனவே அதிக எதிர்பார்ப்பை இவர் மீது வைப்பதிலும் இவர் மீதும் தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அழுத்தத்தை பிரயோகிக்க நகர்வுகளைச் செய்தாகனும். அது புலம்பெயர் இளைய தலைமுறையால் தான் முடியும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன்

[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 08:04 GMT ]

.

.

vigneswaran-mavai.JPG

.

ஆனால் அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட இரு அதிகாரங்களை மாத்திரம் குறைக்க நினைப்பது எதற்கு என்று புரியவில்லை.

 

http://www.puthinappalakai.com/view.php?20130716108678

இத்தனை சட்டங்களையும் படித்த இவருக்கு இது மட்டும் என் என்று புரியவில்லையாம்

அல்லது புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கின்றாரா???

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நிறைய பேர் சொல்லுறத பாத்தும் இருக்கிறம் கேட்டும் இருக்கிறம்....கடைசில் என்ன செஞ்சவை எண்டதையும் பாத்தும் இருக்கிறம்.... Colombo இல் இருந்து படித்து வளர்ந்த ஒருவர் வடக்கு மாகான முதலமைச்சராம்...., முடியல்ல.....

சம்மந்தர் விக்கியை முதல் அமைச்சர் வேட்பாளராய் அறிவித்ததில் இருந்து மகிழ்ச்சியில் இருப்பது சிங்களவர்களும் அதன் தமையையும் தானாம்....

Edited by SUNDHAL

காலம் போகப் போகத்தான் எல்லாம் தெரிய வரும். எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தார் ஏறி விழுந்த கதையா இருக்காட்டில் சரி. :):rolleyes:

 

ஏன்  அண்ணா இவர் விடயத்தில் விடாப்பிடியாக எதிர் மறையாக சிந்திக்கிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரச மந்திரியும், புகழ்பூத்து புலம் பெயர் தேசமெல்லாம் சென்று திரும்பிய வாசுதேவ நாணயக்கார என்ற இடது நாமம் போட்ட ‘ஹை புரபைலின்’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இன ஐக்கியத்துக்கு குறியீடு போட்டவர் என்ற பெயர் வேறு நமது ஹை புரபைல் முதல்வருக்கு உண்டு. மகிந்த ராஜபக்சவோடு ஸ்கொடிஸ் கள்ளு வாங்கிக் குடிக்கும் அளவிற்கு நட்பு வேறு உண்டு.

இதெல்லாம் அமரிக்காவின் கருணையாலும் இந்தியாவின் இதய சுத்தியாலுமே நடந்தது என்று ஈபிள் ரவர் உச்சியிலிருந்து யோசித்து புல்லரித்துப் போய் பாராட்டுகிறார்கள் புலம் பெயர்ந்த பெரியோர்.

‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தெரிவாகியுள்ளது.

அப்படித்தான் நினைக்கின்றோம் அதில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் அதையும் ஏற்று உங்களை மீண்டும் தெரிவு செய்ய தமிழர்களுக்கு பொறுமை  இல்லை என்பதனையும் புரிந்து கொண்டால் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.