Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா

தெற்கின் கடும்போக்குவாதிகளின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு பின்னால் வலுவான இந்திய அழுத்தம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றல்ல.

வடக்கு தேர்தல் தெற்கில் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்கள், அதன் அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க, நமது சூழலிலோ அது வேட்பாளர்களை அடிப்படையாககக் கொண்டிருந்தது. தெற்கில் இடம்பெற்றது போன்று 13வது திருத்தச் சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் எவையும் வடக்கில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றவாறு விமர்சித்த சில குழுவினர் கூட, இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் வருகையுடன் தங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டனர். யாழ்ப்பாண சாதாரண மக்கள் மத்தியிலும் விக்னேஸ்வரனின் வருகை வலுவானதொரு அதிர்வை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தியாளர்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்த போதும், அவை பெரியளவில் மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். இம்முறை கூட்டமைப்பிற்கு எதிராக வேலைசெய்யலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன், ஆனால் நீதியரசர் விக்னேஸ்வரனை களமிறக்கியதால் மனதை மாற்றிக் கொண்டேன் என்றார். ஏனெனில் அவரைப் போன்ற ஒருவர் தமிழர் அரசியலில் பிரவேசித்திருக்கின்ற நிலையில், அவ்வாறு செய்வது அழகல்லதானே என்றார் அந்த நண்பர்.

கூட்டமைப்பின் மீது அதிருப்தியுள்ளவர்கள் கூட, விக்னேஸ்வரன் போன்ற ஒருவருக்காக கூட்டமைப்பை சகித்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர் என்பதையே மேற்படி சம்பவம் உணர்த்துகின்றது. இதன் மூலம் பிறிதொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. அதுவரை சில தரப்பினருக்கு எலுப்புக்கூடாக காட்சியளித்துவந்த மாகாணசபைக்கு விக்னேஸ்வரன் என்னும் பெயர் சடுதியாக ஒரு கம்பீரத்தை வழங்கியிருக்கின்றது. இதற்கு விக்னேஸ்வரனின் பதவிப் பின்னணியே காரணமாகும். ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் என்னும் வகையில் விக்னேஸ்வரன், தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கின்றார் என்னும் அபிப்பிராயம் அதுவரை அவர் குறித்து சொல்லப்பட்ட ஏனைய அபிப்பிராயங்கள் அனைத்தையும் இரண்டாம்பட்சமாக்கியது எனலாம். இதனைத் தொடர்ந்து அதிருப்தியாளர்கள், தொடர்ந்தும் தங்கள் அதிருப்திகளை பிரச்சாரம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியம் என்னும் களிமண் ஆரம்பத்தில் மிதவாதிகளால் பிசையப்பட்டது. பின்னர் தீவிரவாதிகளால் பிசையப்பட்டு, இறுதியில் மீண்டும் மிதவாதிகளது கைகளுக்கே வந்து சேர்ந்திருக்கிறது. அது தொடர்ந்தும் பாரம்பரியமான மிதவாதிகளது கைகளிலேயே இருக்க வேண்டுமாயின், அதற்கு பலமான மிதவாத கைகள் தேவையென்பதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நிலைப்பாடு. இத்தகையதொரு பின்புலத்தை கருத்தில் கொண்டுதான், அவர் விக்னேஸ்வரனது நியமனத்தில் கடும்போக்கை கடைப்பிடித்திருக்கின்றார். உள்ளக அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் முக்கியமான முகங்கள் எந்தவொரு புலிச்சாய பின்னணிகளற்றவர்களாக இருக்க வேண்டுமென்பதில் இரா.சம்பந்தன் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. சர்வதேச ரீதியில் புலிகள் தொடர்ந்தும் ஒரு பயங்கரவாத அமைப்பாக நோக்கப்படுவதை, தனது செயலுக்கான தர்க்கமாக அவர் முன்னிறுத்தலாம். அவ்வாறு சம்பந்தன் முன்னிறுத்துவாராயின், அதனை மறுத்து விவாதிக்கக் கூடிய தர்க்கநியாயம் எவரிடமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் சம்பந்தனது தர்க்கம் உண்மை.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சம்பந்தன், எக்காலத்திலும் ஒரு புலி ஆதரவாளராக இருந்தவரல்ல. தெற்கின் சில கடும்போக்குவாதிகள் சம்பந்தனை புலிகளின் முகவரென விமர்சித்தாலும் கூட, முக்கியமான எந்தவொரு சிங்கள தலைவரும் அவ்வாறு குறிப்பிட்டதில்லை. ஏனெனில் அவர்கள் சம்பந்தனை அறிவர். அமெரிக்க, இந்திய தரப்பினரும் சம்பந்தனை ஒரு போதும் புலிகளின் நீட்சியாக கருதியதில்லை. அவ்வாறு அவர்கள் கருதியிருப்பின், சம்பந்தனுக்கு இத்தகையதொரு அங்கீகாரத்தை வழங்கியிருக்கவும் மாட்டார்கள். தற்போது சம்பந்தனுக்கு முன்னாலுள்ள சவால், தனது அரசியல் முகத்திற்கு வலுவூட்டும் வகையில், இன்னும் சில முகங்களை எவ்வாறு முன்கொண்டுவருவது என்பதே! இந்தவகையில்தான் சம்பந்தன், விக்னேஸ்வரனது முகத்தை முன்கொண்டு வந்திருக்கின்றார்.

விக்னேஸ்வரன் (தமிழ் தேசியவாத நோக்கிலான) கட்சி அரசியலுக்கு புதியவராக இருப்பினும், தமிழ் தேசியத்திற்கு புதியவரல்ல. கொழும்பின் ஆளும் பிரிவின் எல்லைக்குள் இருந்த காலத்தில் கூட, அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாகவே நோக்கப்பட்டார். அவர் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட வேளையில் கூட, ஜாதிக ஹெல உறுமய அவரது நியமனத்தை எதிர்த்திருந்ததை இன்று பலரும் மறந்திருக்க கூடும். ஆனால் விக்னேஸ்வரன் ஒரு மிதவாத தமிழ்த் தேசியவாதியே தவிர, தீவிரநிலைத் தேசியவாதியல்ல. எனவே தமிழ் தேசிய அரசியல் முற்றிலும் ஒரு மிதவாத முகத்தை பிரதிபலிக்கின்ற சூழலில்தான், சம்பந்தன் அவரை ஒரு தெரிவாக்கியிருக்கின்றார்.

தனி நபர்களை முன்னிறுத்தி அரசியலை மதிப்பிடுவது பொருத்தமான ஒன்றல்ல என்றாலும், கடந்த அறுபதுவருட கால தமிழர் அரசியல் என்பதே தனிநபர்களை முன்னிலைப்படுத்தித்தான் நோக்கப்பட்டு வருகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயம், வே.பிரபாரகன், இரா.சம்பந்தன் என்றவாறு நோக்கப்பட்டு வந்த அரசியலில், தற்போது புதியதொரு பெயராக விக்னேஸ்வரன் இணைந்திருக்கின்றார். இது விக்னேஸ்வரன் காலம் என்றும் சொல்லக்கூடிய நிலையொன்று தோன்றுமா? அது அவரது பதவிக்காலத்தில், அவர் ஆற்றப்போகும் செயற்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது எனலாம். ஆனால் அத்தகையதொரு நிலைமையானது, நிட்சயமாக தீவிர நிலைப்பாடொன்றுடன் திருமணம் செய்து கொள்வதாக இருக்க முடியாது. ஏனெனில் விக்னேஸ்வரன் அரசியலில் நுழையும் காலம் என்பது, ஒரு அழிவுக்கு பின்னரான காலம் ஆகும்.

கடந்த முப்பது வருட கால தமிழ் தேசியம் என்பது, தமிழ் மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அனாதரவற்ற சந்தியொன்றில் நிறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றது. இத்தகையதொரு சூழலில்தான், தமிழர் அரசியலை கடந்த அறுபது வருடங்களாக வழிநடத்திக் கொண்டிருந்த, வடக்கு மாகாணத்தின் உயர் ஆசனமொன்றில் விக்னேஸ்வரன் அமரவுள்ளார். எனவே அதிக பொறுப்புமிக்க, சவாலான பணிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன. இன்று விக்னேஸ்வரன் முன்னுள்ள பாரிய சவால், அழிவுகளால் உருக்குலைந்துபோய் கிடக்கும் மக்கள் மத்தியில், எவ்வாறு ஆக்கபூர்வமானதொரு அரசியலை செய்வது என்பதாகும். சமீபத்தில் விக்னேஸ்வரன், இந்துஸ்தான் டைம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலின் போது பதிவு செய்திருக்கும் சில கருத்துக்கள், அவர் அழிவுகரமானதொரு அசியலுக்கு ஒரு போதும் துணைபோகமாட்டார் என்பதையே நிரூபிக்கின்றது.

விக்னேஸ்வரனது நியமனத்தின்போது எழுந்த முக்கிய விமர்சனம், அவர் மக்களின் நலனுக்காக கொழும்பு மேட்டுக்குடி உறவுகளை துறப்பாரா என்பதாகும். இப்பத்தியின் அவதானத்தில், விக்னேஸ்வரன் கொழும்பு மேட்டுக்குடியுடன் உறவில் இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனைக்குரிய விடயமல்ல. பிறிதொரு கோணத்தில் நோக்கினால் அது தேவையானதும் கூட. ஆனால் ஆளும் வர்க்க உறவுகளை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், எவ்வாறு கையாளுவது என்பதில்தான் அவரது அரசியல் இயங்குநிலை முக்கியத்துவம் பெறும்.

ஓர் அரசியல் முன்னெடுப்பு என்பது உபாயங்களற்ற ஒன்றாக இருக்க முடியாது. அவ்வாறு ஒரு அரசியல் போக்கு உபாயங்களற்று இருப்பின், அதனால் மரணங்களை எண்ண முடியுமே அன்றி, மக்களை முன்னேற்றகரமான பாதை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது. இன்றும் கூட கூட்டமைப்பை விமர்சிப்பதன் ஊடாக, தீவிர தமிழ்த்தேசிய நிலையை பேணிக்கொள்வதாக நம்பும் ஒரு சிலர், இதுவரை அறிக்கைகளை பிரசவித்ததைத் தவிர, வேறு எதனையும் சாதித்ததில்லை. இத்தகையதொரு பின்னணியில்தான், கூட்டமைப்பு மாகாணசபை முறைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. மாகாணசபையை நோக்கி நகருதல் என்பதை, நாம் ஒரு அரசியல் உபாயமாக நோக்க வேண்டுமே அன்றி, அதனை ஒரு சரணாகதியாக கருத வேண்டியதில்லை. மாகாணசபையை நோக்கிப் பயணிப்பதை ஒரு சரணாகதியென்று எவரேனும் சொல்ல முற்படின், அவ்வாறானவர்கள் சரணடையா அரசியலின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். அது அவர்களால் முடியுமா? எனவே மாகாணசபை என்னும் அரசியல் உபாயத்தை கையாளும் பொறுப்பு, தற்போது விக்னேஸ்வரனை நோக்கி திரும்பியுள்ளது என்பதே உண்மை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=2699ef64-33cb-4722-bd69-d8eb482afd93

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து நடை ஆய்வுமுறை எனக்கு பரீட்சயமானதாகவும் காத்திரமானதாகவும் உள்ளது.

 

வடமாகாணத் தேர்தல் தொடர்பாக அண்மையில் வாசித்த மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை இது. எந்த முக்கிய கருத்துக்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையல்ல. ஆனால் அவை அழுக்காறில்லாத ஆரோக்கியமான விமர்சனத்தையும் விவாதத்தையும் கோரி நிற்பவை.

 

நன்றி யதீந்திரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கினேஸ்வரனை வெல்ல வைக்க வேண்டிய தேவை சம்பந்தர் தலமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட அரசுக்குத் தான் அதிகம். விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லாத அவர்களுக்குச் சாதகமாய் நடந்ததற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பது கூட்டமைப்பும் தனது புலிகளாதரவு நிலையை மீள்பரிசோதனை செய்திருக்கிறோம் என்று காட்டுவதற்குத் தான். அரசும் விக்கினேஸ்வரனை வெல்ல வைப்பதன் மூலம் புலிகளுக்கு ஆதரவான மக்கள் அலையை இல்லாமல் செய்யத்தான் விரும்பும். அந்த வகையில் தாயகத்திலும் சர்வதேச அரசியலிலும் புலிகள் என்ற பதம் நீர்த்துப்போகச் செய்யப்படுவதோடு அவர்களுக்குச் சார்பானவர்களும் மௌனித்துப் போக வேண்டிய நிலைவரும்.  ஆக மொத்தம் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாண சபையை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வென்று விக்கினேஸ்வரன் முதலமைச்சரானாலும் பாதிப்பு தமிழ்மக்களுக்குத் தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்தை காப்பற்ற முனைந்த நாயன்மார்களின் இன்றைய நிலை தான் புலிகளுக்கு நாளை......தமிழ்தேசியம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமெனில் தமிழதேசிய வன், மென்,கடும்,மிதவாத தேசியவாதிகளை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் மீட்பர் என்ற பாணியில் எழுதி இருப்பது மிகவும் நகைச்சுவையானது.என்ன அடிப்படையில் மாகாணசபையில் வென்ற பின் விக்னேஸ்வரன்   தமிழ் மக்களுக்கு என்ன விடிவை கொண்டு வரப்போகிறார்?? 
 
யதார்த்தம் ஹத்துரு சிங்காவோ அல்லது இன்னுமொரு இராணுவ அதிகாரி சொல்வதை செய்யும் பிள்ளையாக மட்டுமே விக்னேஸ்வரன் அவர்களது பதவி அமையும்.
 
அரசு தனக்கு விருப்பமான ஒருவரை வடக்கில் நிறுத்தும் என அரசின் அமைச்சர் ஒருவர் மறைமுகமாக சொன்னதும் இவரை தானோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.