Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் இந்து தலைவர்களை கொல்ல பணம் உதவி செய்த போலீஸ் பக்ருதீன்: ரூ.6 லட்சம் பறிமுதல்

Featured Replies

மதுரை: தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வசூலித்து பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் நெல்லை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 18 கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கொலை செய்யவும், அதற்கான வழக்கு செலவுக்காகவும் ரூ.6 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.இந்த பணத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த கட்டை சாகுல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர்.

இதையறிந்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கட்டை சாகுல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.6 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட கட்டை சாகுலையும், முகம்மது தாசிமையும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சம் பணமும் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்னணியில் போலீஸ் பக்ருதீன், கிச்சான் புகாரி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தில் இந்து நிர்வாகிகளை கொலை செய்ய பல லட்சம் வரை பணப்பட்டுவாடாவை சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்து தலைவர்கள் கொலை

கடந்த ஜூலை 1ம்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஜூலை 19ம்தேதி பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், மதுரையில் இந்து முன்னணி ஆதரவாளர் பால் கடைக்காரர் சுரேஷ் ஆகியோர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளின் பின்னணியில் மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை பைப் வெடி குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பறவை பாதுஷா ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்களை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/2013/08/13/tamilnadu-murder-money-seized-link-nellai-181129.html

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் கொழுப்பு கூடிக் கொண்டே போகிறது!

ஆரம்பத்திலேயே கிள்ளிவிட்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் நிலை சற்று வித்தியாசமானது.. தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களாகத்தான் பல இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளார்கள்..! தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைபவர்கள் அவர்கள்.. அராபியர்கள் மாதிரி உடையணிந்து பேரீச்சை மரங்களை அவர்கள் நடுவதில்லை..

ஆனால் இலங்கைத்தீவில் நடந்ததுபோலவே சில கறுப்பாடுகளை வைத்து இனப்பாகுபாட்டை உருவாக்க சிலர் முனைகிறார்கள்.. இதுகுறித்து தமிழகம் விழிப்பாக இருக்கவேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம  தலைவர்களுக்கு  ஆபத்து இல்லை

(நெடுமாறன்

வைகோ

சீமான்)

 

அவர்கள்  தான் ஒரு மதத்தை கடைப்பிடிப்பதில்லையே :D

தமிழகத்தின் நிலை சற்று வித்தியாசமானது.. தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களாகத்தான் பல இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளார்கள்..! தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைபவர்கள் அவர்கள்.. அராபியர்கள் மாதிரி உடையணிந்து பேரீச்சை மரங்களை அவர்கள் நடுவதில்லை..

ஆனால் இலங்கைத்தீவில் நடந்ததுபோலவே சில கறுப்பாடுகளை வைத்து இனப்பாகுபாட்டை உருவாக்க சிலர் முனைகிறார்கள்.. இதுகுறித்து தமிழகம் விழிப்பாக இருக்கவேண்டும்..!

 

இந்த நிலை இப்ப வெகுவாக மாறிவிட்டுது என்று சொல்கிறார்கள்!

 

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவி மதவெறியை திணிக்கிறார்களாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை இப்ப வெகுவாக மாறிவிட்டுது என்று சொல்கிறார்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவி மதவெறியை திணிக்கிறார்களாம்

அவர்கள் கிளப்பட்டும் நாம கிளப்பாம இருந்தாச்சரி
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் கொழுப்பு கூடிக் கொண்டே போகிறது!

ஆரம்பத்திலேயே கிள்ளிவிட்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

 

இப்படி மதவெறி கருத்தை எழுதுகிறதை வைச்சு நீங்கள் யாரென்று கண்டு பிடிச்சிட்டமில்ல :lol: ஆனால் என்ன :D ஏன் பெண் பெயரில் வந்தீர்கள் என்று தான் தெரியவில்லை :unsure:

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
பாகம் மூன்று எப்போது வரும் ....?
 
அத்தனை உண்மைகளையும் அப்படியே உரித்து வைக்கிறார்.
 
புலிகள் அன்டன் பாலசிங்கம் அவர்களை பலவந்தமாக பேச்சுவார்த்தையில் இருந்து நீக்கிய பின்.
அவர் லண்டனில் புட்பாலும் பொலிபாலும் விளையாடி கொண்டு திரிந்தார். அதை பற்றியும் கொஞ்சம் விரிவாக மூன்றாம் பாகத்தில் எழுதுவாரா???
  • கருத்துக்கள உறவுகள்
நான் முன்பும் பல தடவை எழுதி உள்ளேன் ... பெரிதாக யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டீர்கள்.
இப்போது ஒரு தடவை யோசித்து  பாருங்கள்.
 
30 வருடம் போராடியிருக்கிறார்கள். (இத்தனையும் தாண்டி)
அசாதாரணமானவர்கள்.
 
அருகில் எப்படிபட்ட துட்டன் உடன் எல்லாம் படுத்து எழுந்திருப்பார்கள்??
30 வருடத்தின் ஓவரு வினாடியும்..... ஒரு ஆபத்தை கடந்து கொண்டே வந்தார்கள்.
 
"விமர்சன பூச்சாண்டி" என்று சிலர் சீரியல் காட்டினால். நாகரிகம் என்று யாழ் கள நிர்வாகிகளே ....நிலை மாறிய நேரங்கள் உண்டு.
புலிகளை பற்றி யாரவது தமிழில் எழுதிருப்பது கண்டால் ......... ஒரு கணம் நின்று கல் எரிந்து விட்டு போவதற்கு ஒரே காரணம் இதுதான்.
 
தமிழ் இனத்தை போல் ஒரு எளிய கொடும் இனம் வேறெங்கும் இரா..... 
நெருப்பற்றையும் தனியாகவே கடந்தார்கள். என்பதுதான் நிதர்சன உண்மை.
 
எல்லாம் முடிய ஒரு சம்பவத்தை கொண்டு வந்து விமர்சனம் செய்வது .......... பக்கவாதம் வந்தவனால் கூட துணிந்து செய்ய முடியாத ஒன்று. அதுக்கே வக்கிலாதவர்களின் ஈன செயலுக்கும் பேச்சுக்கும்தான் பெயர் விமர்சனம். இதனால் ஒரு சனமும் பயன் பெறா. சுய விளம்பரம் ஒன்றே இதன் உள் கரு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.