Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராச்சி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராச்சி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ். இராணுவத்தின் 2 விமானங்கள் சுட்டு விழுத்தப்பட்டன. செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்பத்தமிழ் வானொலியில் மூலம் அறிந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.......சிங்களம் என்ன பொய் செய்திகளோட வருது என்டு பாப்பம்.

பலாலில 2 உலங்கு இது அதுக்குப் பிறகா???????

பலாலில 2 உலங்கு இது அதுக்குப் பிறகா???????

அதைத்தான் சொல்கின்றார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிரிஎன் செய்தி பார்க்க விரும்புவர்களிற்கு

http://www.lankasri.tv/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலாலில 2 உலங்கு இது அதுக்குப் பிறகா???????

ஆம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CPS.AEB96.100706094443.photo00.photo.default-512x342.jpg

feuerwerk.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட இப்படி தான் இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி

புலிகள் மண்டைதீவு தாக்குதல்

திருமலை கடற்படைத்தளம் மீது புலிகள் பீரங்கித்தாக்குதல் -இராணுவத்தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்

தென்மாராச்சி புலிகளின் வசம்

முன்பு புலிகள் விமானத்தினை சுட்டு விழ்த்தியதாகச் சொன்னதகவல் தவறானது.

புலிகள் திருமலை துறைமகம் மீது முழு அளவிலான தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சங்கதி செய்தி வெளியிட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தா திங்கட்கிழமைக்குள்ள எல்லா இடமும் பிடிச்சிடுவினம் போல இருக்கு!!

கந்தப்பு உண்மையா? எல்லா பக்கத்தாலையும் நல்ல செய்திகள்தான் கிடைத்தவண்ணம் இருக்கு! சிங்களவன் ரோட்டில் முளுசி பார்க்கிறாங்கள்!

தென்மராட்சி முழுதாக கிடைத்துவிட்டதா??

போற போக்கை பாத்தா திங்கட்கிழமைக்குள்ள எல்லா இடமும் பிடிச்சிடுவினம் போல இருக்கு!!

அப்பிடி பிடிச்சா, உடன தமிழீழம் தந்துவிடுவீனமா? அதுக்கு பிறகு எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுமா? ஏனெனில் இதில் கூடுதலாக பாதிக்கப்படுவது, எங்களைப் போன்ற பொதுமக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தியவிலிருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. என்றைக்குமே, தமிழீழமோ, அல்லது புலிகளோ, தமிழ்நாட்டிற்கோ, இந்தியாவிற்கோ அச்சுறுத்தலாக என்றுமே இருக்கமாட்டார்கள் என்று பல தடவை தெரிவித்து விட்டாகிவிட்டது.

ஆனால் சென்றமுறை போன்று சிங்கள அரசிற்காக இந்திய அரசு செய்த செயலை மீண்டும் ஒரு முறை செய்யமலிருக்க தமிழீழ ஆதரவாளர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அது நன்றியோடு நினைவு கூரப்படும்

அப்பிடி பிடிச்சா, உடன தமிழீழம் தந்துவிடுவீனமா? அதுக்கு பிறகு எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுமா? ஏனெனில் இதில் கூடுதலாக பாதிக்கப்படுவது, எங்களைப் போன்ற பொதுமக்களே.

சுட்டி எவரும் தமிழ் ஈழத்தைத் தாம்பாளத்தில் வைத்து தந்து விடப் போவதில்லை, நாம் தான் அதனைப் போராடிப் பெற வேண்டும். நாம் தமிழ் ஈழத்தைப் பெற்றால் தான் எமக்குப் பாதுகாப்பு,எதிரியை அழித்தால் அல்லது பலவீனமாக்கினால் தான் எமக்குப் பாதுகாப்பு அதுக்குத் தான் இந்தப்போராட்டம் நடக்குது.மக்களின் நிரந்தர சமாதானம் ,அமைதி,பாதுகாப்புக்காகத் தான் இந்தப்போராட்டம் நடக்குது.

மக்கள் , போராளிகள் எல்லாருக்கும் தான் பாதிப்பு, பாதிப்பு இல்லாம போரட ஏலாது, அப்படி அதிசயங்கள் கனவிலும் ,கட்டுக் கதைகளிலும் தான் நடக்கும்.

எமது இப்போதைய போர் நாளைய அமைதிக்கும் மக்களின் சுபீட்சத்திற்கும் ஆனது.உலகெங்கும் இது தான் நடைபெற்றது, நடை பெறுகிறது.மனித வரலாற்றில் சுதந்திரம் போராட்டத்தால் தான் பெறப்பட்டது, தமிழ் ஈழமும் அதற்கு விதிவிலக்கானது கிடையாது..

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா

இரவு தூக்கமே வருதில்லை போல!

மடியில் நெருப்போடு எப்படித் தூக்கம் வரும்?

கிழக்கு விடிந்து விட்டால், வானம் சிவத்து விட்டால் தூக்கம் எப்படி வரும்? :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! ஆனால் எப்ப பிபிசியில் செய்தி வரும் என்று நானும் நித்திரையே இல்லை!

முகமாலை நோக்கி நகர்ந்த படையினரின் தொடர்புகளை முற்றாக இழந்தது இராணுவக் கட்டுப்பாட்டு மையம்!

- சோழன் ளுயவரசனயலஇ 12 யுரபரளவ 2006 08:11

முகமாலை நோக்கி நகர்ந்த படையினரின் அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்து விட்டதாக இராணுவச் பேச்சாளர் ஒருவர் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்ததாக ரொய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலதிக விபரம் இணைப்பு)

முகமாலை நோக்கி பெருமளவிலான படையினர் கிபீர், மற்றும் முகாம்களிலிருந்து ஏவப்படும் ஆட்லெறிகளின் உதவியுடன் முன்னேறி வந்த படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பாரிய தாக்குதல்களினால் இராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. முகமாலை நோக்கி நகர்ந்த படையினரின் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி எந்தத் தகவலையும் அறியாமுடியாமலிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

"யாழில் பாரிய எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. வானொலிகளில் ஊரடங்கு உத்தரவுக்கான அவசர அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை பின்னிரவு வெளியிடப்பட்டன. கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீதிகளிலிருந்து வெளியேறினர்" என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..

மேலும் "தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலியில் பொதுமக்கள் இடம்பெயருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதாகவும் ரொய்ட்டர் செய்தி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க கூறுகையில், "திருகோணமலை துறைமுகம் தற்போது தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பேச்சாளர் ரோபன் நில்சன், "பலமுனைகளில் போர் அரங்குகள் திறக்கப்பட்டுள்ள இந்த நிலைமையானது நிச்சயமாக மிகவும் அபாயகரமானது" என்று கூறியுள்ளார்.

"எமது எல்லைகளைத் தாண்டி சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவர்கள் கிளிநொச்சி நோக்கி முன்னேற முனைந்தமையால் எமது போராளிகள் பதில் தாக்குதல் நடத்தினர்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

http://sankathi.com/content/view/4273/26/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.