Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாரணி Vs நந்தினி.. யார் திறமைசாலி..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100527_FM_ClassStories_edu.jpg

 

புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு.

 

10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது.

 

ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர.. பரீட்சையில் தோற்றி சித்தியும் அடைந்தாள் தாரணி. மிகுந்த மகிழ்ச்சியோடு.. அதனைக் கொண்டாடிய தாரணி.. பள்ளியில் சேரும் நாளும் வர.. அதில் சேர்வதற்காக.. பெற்றோருடன் பேரூந்தில் ஏறி.. நகருக்கு போனாள். பள்ளியில்.. பிள்ளையின் விபரங்களை எல்லாம்.. எடுத்துவிட்டு.. பிள்ளையைச் சேர்க்க நன்கொடையாக.. ஒரு சிறு தொகையைக் கட்டச் சொல்கின்றனர். பாடசாலை அபிவிருத்திக்கு அந்தப் பணம் என்று சொன்னதால் பெற்றோரும் மறுக்காமல்.. கடன உடன வாங்கி அதனைக் கட்டி விட்டு மகளை நகரில்.. பிரபல்ய பாடசாலையில் படிக்கவிட்ட பெருமிதத்தோடு வீடு திரும்புகின்றனர்.

 

தாரணியுமோ.. மிக்க மகிழ்ச்சியோடு.. முதல் நாள் வகுப்பிற்குப் போகிறாள். எல்லாம்.. புதிய முகங்கள். தான் ஒருத்தியே தங்களின் சொந்த ஊரில் இருந்து வந்திருக்கிறவள் என்ற இறுமாப்பு வேறு அவள் மனதில். ஆனாலும்.. அது அதிக நேரம் நீடிக்கவில்லை. கடைசி வாங்கில் ஒருத்தி. அவளின் முகம் மட்டும் நல்ல பரீட்சயமானதாக இருந்தது. உற்றுப் பார்க்கிறாள். அட நம்ம நந்தினி. இவள் எப்படி இங்க. புலமைப் பரீட்சையிலும் பெயில்.. தேர்வுப் பரீட்சையிலும் பெயிலாச்சே..!

 

சரி.. இடைவேளையின் போது.. கதைச்சுப் பாப்பம் என்றிட்டு.. தாரணி வகுப்பில் கவனம் செலுத்த முயல்கிறாள். ஆனால் நந்தினியின் வரவை அறியாமல் அவளால் வகுப்பில் கவனம் செலுத்தவே முடியவில்லை. எப்படா இடைவேளை மணி அடிக்கும் என்றே காத்திருந்தாள்.

 

மணியும்.. கால ஓட்டத்தோடு  ஓடிய கடிகார முட்களுக்கு கட்டுப்பட்டு.. அடிக்க.. ஓடிச் சென்று நந்தினியின் அருகில் அமர்ந்து கொண்டாள் தாரணி. எப்படிடி.. நீ இங்க..??! ஆதங்கம் கலந்த தொனியில்.. எந்த நலன் விசாரிப்புக்களுக்கும் இடமில்லாத வகையில் கேள்விகளைத் தொடுத்தாள் தாரணி.

 

நந்தினி அமைதியாக.. ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. எந்தப் பதட்டமும் இல்லாமல்.. பதில் சொன்னாள். எங்க அப்பா 10,000 ரூபா டொனேசன் கட்டினார் அட்மிசன் கிடைச்சிட்டுது என்றாள்.

 

தாரணி.. பதில் ஏதேம் பேசமலே எழுந்து நடையைக் கட்டினாள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆ யூ ஓல் ரைட் நெடுக்கர் :lol: ...உங்களோட படித்த ஆட்கள் யாரவது காசை கட்டி முன்னுக்கு வந்து உங்களோட போட்டி போடினமோ :unsure:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கதைக்கும்  படிப்பினைக்கும்  தம்பி

 

ஆனால் உலகம் பூராகவும்  உள்ளது தானே  இது.

வீதி  விளக்கில்  படித்தவனும் ஆண்டிருக்கின்றான்

கோடி  கொடுத்து படித்தவனும் வீதியில்  பிச்சை  எடுத்திருக்கின்றான்

ரோசம்  வரணும்

எந்த தடையையும் முந்தணும்

தகர்க்கணும்

அதற்கு நீ  தயாராகணும்.

இதுவும்  கடந்து போகும்

இன்றைய  பொருளாதார உலகில்.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ யூ ஓல் ரைட் நெடுக்கர் :lol: ...உங்களோட படித்த ஆட்கள் யாரவது காசை கட்டி முன்னுக்கு வந்து உங்களோட போட்டி போடினமோ :unsure:  :icon_idea:

 

நாங்க யாரோடும் போட்டி போட்டுப் படித்ததா படிக்கிறதா ஞாபகம் இல்லை. எங்க வழி தனி வழி..! :lol:

 

இது ஊரின் பழைய நடப்புக்கள் இன்று மீண்டும் புத்துயிர்ப்புப் பெற்று வருவது தொடர்பில் அறியக் கிடைத்ததின் பெயரில் எழுதப்பட்ட ஆதங்க.. ஆக்கம். இடையில்.. போர்க்காலம் எம்மவர்களை கொஞ்சம் சிந்திக்க திருந்தச் செய்திருந்தது. இப்போ மீண்டும் நிலைமைகள்... பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலைக்கு போய்க்கிட்டு இருக்குது.

 

இன்னும் தெளிவாச் சொல்லப் போனால்.. வேதாளம் பழைய படி முருங்கை மரத்தில் ஏறிட்டுது. :icon_idea:

 

நன்றி  கதைக்கும்  படிப்பினைக்கும்  தம்பி

 

ஆனால் உலகம் பூராகவும்  உள்ளது தானே  இது.

வீதி  விளக்கில்  படித்தவனும் ஆண்டிருக்கின்றான்

கோடி  கொடுத்து படித்தவனும் வீதியில்  பிச்சை  எடுத்திருக்கின்றான்

ரோசம்  வரணும்

எந்த தடையையும் முந்தணும்

தகர்க்கணும்

அதற்கு நீ  தயாராகணும்.

இதுவும்  கடந்து போகும்

இன்றைய  பொருளாதார உலகில்.................

 

உலகில் எப்படியோ தெரியாது.. ஆனால் ஊரில் 1990 தொடக்கம் 95 வரை இப்படியான செயல்களில் நல்ல வீழ்ச்சி இருந்தது. நேர்மை அதிகம் இருந்தது. இப்போ மீண்டும்..........................

 

நன்றி விசுகு அண்ணா தங்கள் வரவிற்கும் கருத்துக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயிலான மாணவர்கள் திறமைசாலிகள் அல்ல.. அவர்களுக்கு உயர் பள்ளிகளில் இடம் கொடுக்கக் கூடாது.. என்ற எடுகோளுக்கு எதிரானவர்கள் நாங்கள். அதேவேளை திறமையுள்ள மாணவர்களின் திறமைக்கு சரியான இடமளிக்கப்படாமல் விடப்படுவதும்.. திறமையை வளர்க்க வேண்டிய மாணவர்களை திறமையான மாணவர்களோடு சேர்த்துவிட்டு அவர்களுக்கிடையே இடைவெளியை பராமரிப்பதையும் வெறுக்கிறோம்.

 

திறமை குறைந்த மாணவர்கள் மீது கூடிய கவனம் செலுத்தி அவர்களையும் திறமையானவர்களாக்க வேண்டுமே தவிர வெட்டிக் கெளரவத்திற்காக பணத்தால் எதனையும் சாதிக்கலாம் என்ற நிலைமை என்பது மாணவர்களைப் பொறுத்த வரை பெரிதும் திறமையை வளர்க்க உதவாது..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.