Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுகமாறு காலம் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுகமாறு காலம்

நிலாந்தன்

20f13547-b5eb-4a00-9176-2c155a9623ad1.jp

 

முந்தித் தப்பினவன்

நீதிபதியானபோது

பிந்தித் தப்பினவன்

துரோகியாக்கப்பட்டான்

குற்றவுணர்ச்சியின் மீது

கொழுவப்பட்டிருக்கிறது

நியாயத்தராசு

முந்தித் தப்பினவன்

தனது வம்சத்தையும்

வம்சவிருத்தியையும்

பாதுகாத்துக் கொண்டான்

பாதுகாப்பான ஒரு

இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம்

நிகழ்காலத்தின்

பேச்சாளன் ஆனான்

சீவியத்தில் நேசித்தவரை

மரண நேரத்தில்

கைவிட்டுச் சென்றவனெல்லாம்

இறந்த காலத்தைத்

தத்தெடுத்து விட்டான்

சீவியத்தில் நேசித்தவரை

மரணம் வரை

பின்தொடர்ந்தவனோ

மரணத்தால் உமிந்து விடப்பட்டு

கைதியும் அகதியுமானான்.

வீரயுகமொன்றின் முடிவில்

கொல்லப்படாதவனெல்லாம்

கோழையெனில்

தற்கொலை செய்யாதவனெல்லாம்

ஒற்றனெனில்

எங்களில் எவரும் புனிதரில்லை..

வீரத்தை வழிபட்டவனும்

தியாகத்தை வழிபட்டவனும்

ஒரு வீரயுகத்திற்கு

பொன்முலாம் பூசியவனும்

கவிஞனாகவோ

கதை சொல்லியாகவோ

பாடகனாகவோ இசைஞனாகவோ

ஊடக ஊழியம் செய்தவனாகவோ

ஆய்வாளனாகவோ அரங்காடியாகவோ

இருக்குமிடத்து

ஒன்றில்

கொல்லப்பட்டிருந்திருக்க வேண்டும்

அல்லது

தற்கொலை செய்திருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்

அவனொரு துரோகி

அல்லது சந்தர்ப்பவாதி

மரணத்தின் ருசி தெரியாப் பாலகரின்

நீதிமன்றில்

பலியாடு நிறுத்தப்பட்டுள்ளது

நீங்கள் முந்தித் தப்பினவர்கள்

நாங்கள் பிந்தித் தப்பினவர்கள்

நீங்கள் முதலில் மறுதலித்தவர்கள்

நாங்கள் முடிவில் மறுதலித்தவர்கள்

ஒரு காலகட்டத்தின்

ரத்தமும் ரத்தப் பழியும்

எங்கள் எல்லாருடைய

கைகளிலும் கவிதைகளிலும்

ஒட்டிக்கொண்டிருக்கிறது.

யார் துரோகி?

யார் தியாகி?

கலையாடிகளே

கள்ளத் தீர்க்கதரிசிகளே

உங்களுடைய இதயம்

அழுகி

நாவால் வழிகிறது.

உங்களுடைய

உணர்கொம்பின் மீது

ஒரு முதிய யுகத்தின்

பாசியும் பூஞ்சணமும்

படிந்திருக்கின்றன.

குற்றவுணர்ச்சியால்

உங்களுடைய

பணப் பைகள் கனக்கின்றன.

நாங்கள்

கைதிகளும் அகதிகளுமாக

இருப்பதாற்றான்

நீங்கள்

உலகை வலம் வர முடிகிறது.

எமது வாய்கள்

கட்டப்பட்டிருப்பதாற்றான்

நீங்கள்

இறந்தகாலத்தைத்

தத்தெடுக்க முடிகிறது.

எங்களுடைய இதயம்

எதிர்காலத்தைத் குறித்த

ரகசியங்களால்

பூட்டப்பட்டிருக்கிறது.

எங்களுடைய வாய்

புது யுகமொன்றைக் குறித்த

தீர்க்க தரிசனங்களால்

தைக்கப்பட்டிருக்கிறது.

கணணித் திரைக்குப் பின்

ஒளிகிறது

உங்களுடைய

பாதுகாப்பான இறந்த காலம்.

கணணித் திரை கடந்து

விரிகிறது

இங்கொரு புதிய யுகம்.

பரசேயரே சதுசேயரே

விலகி நில்லுங்கள்

மரணத்தின் ருசி தெரியாப் பாலகரே

விலகி நில்லுங்கள்.

தலைப் பிள்ளைகளைக்

கொடுத்த நாடே

எழுவாய்.

கன்னி கழியாத

வன்னிக் காடே

திற கதவை.

புதுயுகமொன்று

பிறக்குமினி.

அந்தப் புரங்களில் அல்ல

கணணித் திரையிலும் அல்ல

ஆட்டுத் தொழுவமொன்றிலே

இறை வாக்கினரின் ரகசியமாக

ஒரு யுக முடிவின் காயங்களால்

போர்த்தப்பட்டு

அகதியாக தலைமறைவாக

பிறக்குமொரு குழந்தை யுகம்.

அது ஒரு புதிய ஏற்பாடாயிருக்கும்

அறிவு

சாகா வரம் பெற்று

யுத்தப் பிரபுக்களைத் துரத்தும்

பூமியின் யௌவனம் திரும்பும்

பீரங்கிகள் இளைப்பாறும்.

யுத்தத்தின் நாய்கள்

யுகங்களின் சாம்பல் மேட்டில்

படுத்துறங்கச் சென்றுவிடும்

தேவர்கள்

பூமியிற் பிறந்து

பாற்கடலிற் சுழியோடி

போருக்குப் போன

குழந்தைகளையெல்லாம்

வீட்டுக்கு அழைத்துவர

உத்தரித்த கடற்கரையிலே

சொற்கேளாப் பிள்ளைகளின் பின்

போனவளே தாயே

உனது பொற்கனவு

பலிக்குமினி

***

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=20f13547-b5eb-4a00-9176-2c155a9623ad

நாங்கள்
கைதிகளும் அகதிகளுமாக
இருப்பதாற்றான்
நீங்கள்
உலகை வலம் வர முடிகிறது.

 

எல்லோருக்குமே நெத்தியடி .

  • கருத்துக்கள உறவுகள்

கலையாடிகளே
கள்ளத் தீர்க்கதரிசிகளே
உங்களுடைய இதயம்
அழுகி
நாவால் வழிகிறது.

உங்களுடைய
உணர்கொம்பின் மீது
ஒரு முதிய யுகத்தின்
பாசியும் பூஞ்சணமும்
படிந்திருக்கின்றன.


குற்றவுணர்ச்சியால்
உங்களுடைய
பணப் பைகள் கனக்கின்றன.

 

 

நல்வாழ்த்துக்கள் தோழா. உன்னுடைய சத்தியாவேசம் கவிதையாகியிருக்கு. உயரும் தர்ம கொதிப்புத்தான் ஈழத்துக் கவிதைகளின் உயிர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

கவியைப் பகிர்ந்த கிருபனுக்கு நன்றிகள். மீண்டும் மீண்டும் முகத்தில் அறைகிறது ஒவ்வொரு வரிகளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.