Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவு கொள்ளும் கவிக்கானகம்...

Featured Replies

உன் பார்வையில் விழுந்த நாள் முதல்

என் துன்பங்கள் மறந்து போனது

உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே....

சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. 

 
இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி  எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். 
 
எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம்.

இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்களுடன் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம். பரவசத்தை பகிர்கிறேன்... தாகமுள்ளவர்கள் பருகலாம்.....

முதலில் புறத்திரட்டு நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தில் இருந்து சில பாக்கள்.

 

1. அரக்காம்பல் வாய்அவிழ

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளம் தீப்பட்டது எனவெரீப் - புள்ளினம்தம்

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ! 

 

Allal_palanathu.gif

 

நீல வான் பரப்பில் நீந்திச் சென்ற இந்தப் நீர்ப் பறவைகளின் பரபரப்பிற்கு செவ்வாம்பல் மலர்கள் செய்த சதிதான் காரணமோ!! மென்மை உணர்த்தும் மலர்கள் வன்மையும் செய்யுமோ !!?? தனல் தணிக்கும் புனல் மீது அனலை அள்ளித் தெளித்தது யார் ?

கவிஞன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவன் கவித்திறன் விஞ்சி நிற்கிறது..

பாடல் விளக்கம்:

சேறும் நீரும் நிறைந்த வயல்வெளிகளில் அரக்கு நிறத்து ஆம்பல் மலர்கள் மலர்ந்து பரந்திருக்கிறது. நீரின் மேல் மிதந்தது போல் நெருக்கமாக  காணப்படும்  இந்த ஆம்பல் மலர்கள் வயல்களில் நெருப்பு பற்றிக் கொண்டதுபோல் தோற்றமளிக்கிறது. இந்தக் காட்சிப் பிழையை உண்மையென நம்பிய வயலில் இருக்கும் நீர்ப் பறவைகள் தன கைகளாகிய சிறகுகளால் தம் குஞ்சுகளை தூக்கிக் கொண்டு பறக்கும். 

2. கடும்பனித் திங்கள்

 

கடும்பனித் திங்கள்தன் கை போர்வையாக

நெடுங்கடை நின்றது கொல்தோழி

 

hut_fog.jpg

 

மாலை முயக்கம் கொண்ட தலைவியின் தவிப்பை தோழி அறிவாளோ? அல்லது  துரும்பாகிப் போன கம்பிகளுக்குப் பின்னே உள்ளே தலைவியின் கண்ணீர் கதையை தலைவாசல் தான் அறியுமோ!!  

பாடல் விளக்கம்:

கடும் பனி பொழியும் மார்கழி மாதம், ஊனை உறுத்தும் குளிரை பொருட்படுத்தாது  இரு கைகளையும் போர்வை போத்திக் கொண்டதுபோல் மார்போடு அணைத்துக் கொண்டு, எனது மனது தலைவாசல் போய் நிற்கிறதே தோழி!! இதை என்னவென்று சொல்வேன்!

 

குறிப்பு:

வாழ்வியலை அழகியலோடு பார்ப்பதனால் இதனை இந்தப் பகுதியில் பதிந்துள்ளேன். பொருத்தம் இல்லையெனில் வேறு பகுதிக்கு மாற்றி விடவும்.

பகிர்வுக்கு நன்றிகள் இளம்பிறையனாரே . இதை தமிழும் நயமும் பகுதியில் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .தொடருங்கோ :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா.. சாவடிக்கிறிங்களேப்பா .. ஏனோ இப்படியானவற்றை படிக்கும் போது எப்படியெல்லாம் ரசிக்கிறாங்கப்பா.. என்ற எண்ணப்பாடு எழத்தவறுவதேயில்லை. இவற்றின் தாக்கங்களையும் சிலவேளைகளில் நம்மில் உணரத்தலைப்படுவதும் உண்டு.

வாழ்த்துக்கள் அண்ணா. :)

 

பச்சை தான் முடிந்துவிட்டது.. :(

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றிகள் இளம்பிறையனாரே . இதை தமிழும் நயமும் பகுதியில் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .தொடருங்கோ :) :) .

 

நன்றி கோ. ஒரு குழப்பத்திலேயே இந்தப் பகுதியில் இட்டேன். அடுத்த எழுதப்போவதை தமிழும் நயமும் பகுதியில் இட்டு விடுகிறேன்.

 

 

அடடா.. சாவடிக்கிறிங்களேப்பா .. ஏனோ இப்படியானவற்றை படிக்கும் போது எப்படியெல்லாம் ரசிக்கிறாங்கப்பா.. என்ற எண்ணப்பாடு எழத்தவறுவதேயில்லை. இவற்றின் தாக்கங்களையும் சிலவேளைகளில் நம்மில் உணரத்தலைப்படுவதும் உண்டு.

வாழ்த்துக்கள் அண்ணா. :)

 

பச்சை தான் முடிந்துவிட்டது.. :(

 

நன்றி தம்பி ஜீவா. யாழ் தயவால் எனக்கு தம்பிமார்கள் கொடுப்பினை :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்தன் சார் இலக்கியத்தின் பால் மேவிநிற்கும் தங்கள் காதலுடன் கனிந்த ரசனை என்னையும் நறையுண்ட அறுகால் சிறுபறவையன்ன மயக்கிவிட்டது.

 

இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றேன் தங்களிடமிருந்து!

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்ய இளம்பிறையன்,

உங்கள் வரிகளுடன், படங்கள் நன்றாக இணைந்து போகின்றது.
தொடர்ந்து... இணையுங்கள் ரசிக்க ஆவலாயுள்ளேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை ஆதித்தியன். இது சக்திமுத்தப்புலவரின் பாடலை இருக்கலாம். முன்பு ஒருமுறை வாசித்த ஞாபகம். பாடலுக்கு நீங்கள் போட்டிருக்கும் படம் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

முத்தொள்ளாயிரத்தில் சில நூறாவது ரசிக்க ஆசை ! தொடருங்கள்  ஆதித்ய இளம்பிறையன்!! :D

  • தொடங்கியவர்

யாழ்வாலி, தமிழ் சிறி, சுமேரியர் மற்றும் சுவி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
 

  • தொடங்கியவர்

வாடைக் காற்றே!! காதலர்களை வாட்டுவதல்தான் உனக்கு வாடை என்ற பெயரோ !!??

 

மாலை மயங்கி மன்மதன் தன் மலரம்புகளை எய்யும் வாடை வீசும் மார்கழி மாதம்.  பால்நிலவு தன் பட்டுப் பாதங்களை பூமியில் மெல்ல பரப்பும் காலம் காட்டில் வாழும் காடைகளும் தன் பேடைகளுடன் சுகித்திருக்க இவளோ தனிமையில் !! காதல் நினைவுகள் கனலாக கொதிக்க குளிர் வாடையும் கொடும் அனலைச்  சொரிகிறது!!

 

காதலன் தழுவிய எண்ணங்களை தழுவுவதால் அவள் காதல் வேட்கை கட்டுக்கடங்காமல் பெருகுகிறது. மோகம் என்னும் தாகம் பருகாமல் அடங்காது.. என்ன செய்வது?? கட்டுக் காவலும் அதிகம்...அதனால் வந்து விடாதே என்று காதலனை எச்சரிக்கிறாள்!!  

 

தமிழில் வேட்கை என்ற வரத்தை ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. ஒன்றின் மேல் கொண்ட ஆசை(காதல், விடுதலை...எதுவானாலும் சரி) அதை அடையும் வரை அதன் மேல் உள்ள விருப்பு குன்றிமணி அளவும் கூட குறையாமல் அதே வேகத்துடன் இருப்பது.

 

பாடல் இதுதான்

 

நாம நெடுவேல் நலங்கிள்ளி சேணாட்டுத்
தாமரையும் நீலமும் தைவந்து - யாமத்து
வண்டொன்று வந்தது வாரால் பனிவாடாய்
பண்டுஅன்று பட்டினம் காப்பு

 

dark-night-full-moon.jpg

 

 

குளிர்ந்த சோழ வளநாட்டில் உள்ள தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தழுவி வருடி மொய்த்து தேன் உண்ண வண்டு ஒன்று வந்தது.  வண்டு ஒன்று வந்ததே என்று வாடையே நீ இப்போது வந்து விடாதே !! அப்போது காவல் இல்லை இப்போது எங்கும் கட்டுக் காவல் என்று தலைவி கூறுகிறாள்.இதன் உள் அர்த்தம் என்னவெனில், கட்டுக் காவல் மிகுதியாகி விட்டது தலைவனே இப்போது வந்து விடாதே !!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....தொடருங்கோ


பால் நிலவு நன்றாகத்தான் காய்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.