Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAயின் வடமாகாணசபை வேட்பாளர் அனந்தி எழிலன் மீது மற்றுமொரு கொலைமுயற்சி நடுநிசியில் அச்சத்துடன் அனந்தி

Featured Replies

வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - 

 

 வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - தனது வீட்டை சுற்றி வளைத்ததாக அனந்தி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார். பின்னர் அவரது நன்பர்கள் அயலவர்கள் சென்ற பொழுது வந்தவர்கள் தப்பிச்  சென்று விட்டதாக தெரிவித்துள்ள அனந்தி விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சம் வெளியிட்டுள்ளார்... அவரது தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது துண்டிக்கப்பட்டு விட்டது.

பெரும் பதட்டத்துடன் பேசிய அனந்தியின் அழுகையுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

2ஆம் இணைப்புஉடனடியாகச் சென்ற ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் சென்ற படையினரும் ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக அங்கிருந்து சற்று முன் பேசிய குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுழிபுரம் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஆதரவாளர்கள் காயம் அடைந்துள்ளதுடன் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

3ஆம் இணைப்பு கபேஅமைப்பின் யாழ் மாவட்ட கண்காணிப்பாளரும் மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான  சுபாஸ்  உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளதாக  இலங்கை நேரம் அதிகாலை 1.45க்கு அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

4 ஆம் இணைப்புசம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினரும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், ஊடகவியலாளர்களும் விரைந்துள்ளதாக இலங்கை நேரம் அதிகாலை 2.10 மணிக்கு அங்கிருந்து எமது தொடர்பாளர் தகவல் தந்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96740/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு அகோர வெறி வந்திட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்

உந்தத் தேர்தல் மூலம் நல்லிணக்கம் வரப்போகுதாம் என்று ஆரூடம் சொல்லும்.. பாங்கி மூனை முதலில் ஐநாவை விட்டுத் துரத்தனும். சனியன் நமக்கு வேற எங்கையும் இல்ல.. ஐநாவில இருக்குது..! இந்த மூன்களின் செயற்திறனற்ற தலைமைத்துவத்தால் தான் சிறீலங்காவும் சிங்களவர்களும் ஒட்டுக்குழுக்களும் இந்த ஆட்டம் ஆடுகின்றன. இவை எல்லாம் மூனின் பார்வையில்.. வல்லாதிக்க சக்திகளின் பார்வையில் ஜனநாயகம். போங்கடா நீங்களும் உங்கட சட்டங்களும்..! சிங்களவனுக்கு ஒட்டுக்குழுக்களுக்கு ஆயுதத்தால் பேசினால் மட்டும் தான் எல்லாம் விளங்கும் என்ற நிலையில்... சிங்களவன் திருந்தவே போறதில்லை..!  :icon_idea:  :rolleyes:  :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமா நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார்கள் .... ?!

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு  பறுவம்.... அதுதான் மூனுக்கு...

K.P.தானே போராளிகள் ஒவ்வொருவராக விடுவித்து காப்பாற்றுகிறார். விரைவில் அந்தி வீட்டிலும் வந்து அனந்தியை காப்பாற்றுவார். நீங்கள் இப்படி எல்லாம் அவசரப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்க்சனுக்கு பிறகு கே.பி ..இருக்கணுமே.....அதுதான் நாம அவசரப்படுறம்...

உந்தத் தேர்தல் மூலம் நல்லிணக்கம் வரப்போகுதாம் என்று ஆரூடம் சொல்லும்.. பாங்கி மூனை முதலில் ஐநாவை விட்டுத் துரத்தனும். சனியன் நமக்கு வேற எங்கையும் இல்ல.. ஐநாவில இருக்குது..! இந்த மூன்களின் செயற்திறனற்ற தலைமைத்துவத்தால் தான் சிறீலங்காவும் சிங்களவர்களும் ஒட்டுக்குழுக்களும் இந்த ஆட்டம் ஆடுகின்றன. இவை எல்லாம் மூனின் பார்வையில்.. வல்லாதிக்க சக்திகளின் பார்வையில் ஜனநாயகம். போங்கடா நீங்களும் உங்கட சட்டங்களும்..! சிங்களவனுக்கு ஒட்டுக்குழுக்களுக்கு ஆயுதத்தால் பேசினால் மட்டும் தான் எல்லாம் விளங்கும் என்ற நிலையில்... சிங்களவன் திருந்தவே போறதில்லை..!  :icon_idea:  :rolleyes:  :(

 

இதுதான் இதுகாலவரையிலும் உண்மையாயினும், சனநாயக முகமூடிக்கொள்ளைக்காரரும் கருத்துக் கந்தசாமிகளுக்கும் இப்பொழுதும் இவை வன்முறையாகவே தெரியும். எனெனில் அவர்களும் விரும்புவது இவர்களையே. வலியது வாழும்.

என்னுமா நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார்கள் .... ?!

 

இதுதான் அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் நல்லிணக்கம். பொல்லுகளும் கொண்டு தாக்குவதால் இது..."பொல்லிணக்கம்" அ..க..க.. கா.... :D

 

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில கடந்த முப்பது வருடங்களாகவும் உள்ளூரில ஆமிக்கறனின்ட முகாமுக்குப் பக்கத்திலும் புலிப்பாசிசம் பேசினவயள் இப்ப என்ன சொல்லுகினம். சொறி உரஞ்ச எந்தமரத்தைத் தேடுகினம். தீபம் தொலைக்காட்சியிலும் வேற ஊதுகுழல்களிலும் வந்துநிண்டு கூக்குரல்போடுறவை, மகிந்தவுக்கு முந்தானை விரிச்சு அறிக்கை விட்டவர்கள், எண்பதுகளுக்குமுன்பே நாட்டைவிட்டு ஓடுப்போட்டு இங்கவ்ந்து சிலர் ஊழைலிடுவினமே அவர்கள் என்ன சொல்லினம்.

வடக்கின் வசந்தம்... கத்தி, அரிவாள், பொல்லுகளுடன் வீசுகிறது... அப்போதே சொன்னோமே இவங்களுக்கு இந்த மொழி மட்டும்தான் புரியுமென்று... யார் காதுகொடுத்து கேட்டான்? சனநாயகம்..சனநாயகம் என்று ஓலமிடும் ஓநாய்களும் நவவுலகத்து நாட்டாமைகளும் மாற்றுக்குழு மாணிக்கங்களும் புலிவாந்தி நோயர்களும் என்னவாம் சொல்லுகினம்...?

அனந்தியக்கா வீட்டில ஆயுதம் பதுக்கி வச்சிருந்தா என்றேதும் சொல்லுவாங்களோ? <_<
 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் பாதுகாப்பு குறித்து TNA மற்றும் ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் ஆராய்வு
20 செப்டம்பர் 2013

"இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நள்ளிரவு தாக்குதல் நடத்தியதில் 14பேர் காயம்"


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நள்ளிரவு தாக்குதல் நடத்தியதில் 14பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோர் இன்றுகாலையில் வேட்பாளர் அனந்தி சசிதரனின் சுழிபுரம் இல்லத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக ஆராய்ந்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96748/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.