Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1375071_10151746396929891_862360119_n.jp
 
 
பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..
------------------------------------------
 
இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....
 
காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..
 
மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...
 
நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள் 
மெல்ல இறங்குமொரு முள்..
 
அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை 
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது 
ஒற்றைக்கண்ணீர்த்துளி..
 
பொழுதில்லை அழுவதற்கும்..
 
நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...
 
என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...
 

Edited by சுபேஸ்

என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...  //// இந்த உளப் பாங்கு தன்னிரக்கதால் வந்ததென்று நினைகின்றேன் .இது மாற்றப் படவேண்டும் .  ஏனெனில் கூளைக் கடாக்கள் பறந்து செல்வதை பார்ப்பீர்கள் ,அதில் ஒரு கூளைக்கடாவே முன்னுக்கு ஒரு கப்டினைப் போல மற்றைய கூளைக்கடாக்களை  வழிநடத்திகொண்டிருக்கும் . ஆகப் பார்வையில் மாறுபாடு வந்தால் இலையுதிகாலமும் அழகாகவே தோன்றும் . படைப்புக்குப் பாராட்டுக்கள் சுபேஸ்  :)  :)  .

கொத்தின பழம் திருப்பி எந்தகிளி கொத்துது .சுபேஸ் அருமை உங்க கவி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்.

 

அந்த வயதில் நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை, இது!

 

அதுக்குக் கூட எனக்கு நேரமிருக்கவில்லை! :o

 

உங்களுக்கு அந்த ஓய்வாவது கிடைத்ததே என்று ஆறுதல் கொள்ளுங்கள்!

 

என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்.

 

 

துவண்டு போகாத அந்த மரக்கிளைகளில்,

புத்தம் புதுக் குருத்துக்களும்,

புது மணம் தெளிக்கும் பூக்களும்,

பூப்பதை நீ காணவில்லையா, தம்பி? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸின் கவிதைகள் எல்லாம் ஒரு பக்கத்தைத்தான் சொல்லுகின்றன. படிக்கும்போத் மறுதரப்பின் கதையையும் கேட்கவேண்டும் என்று எப்பவுமே தோன்றுகின்றது. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸின் கவிதைகள் எல்லாம் ஒரு பக்கத்தைத்தான் சொல்லுகின்றன. படிக்கும்போத் மறுதரப்பின் கதையையும் கேட்கவேண்டும் என்று எப்பவுமே தோன்றுகின்றது. ^_^

 

எல்லாக் கவிதைகளும் ஒரு பக்கத்தைத்தானே சொல்லும்

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கவிதைகளும் ஒரு பக்கத்தைத்தானே சொல்லும்

ஆம். ஆனாலும் கவிதையினூடாகத் தெரிகின்ற அந்தத் தெரியாதவரின் உணர்வுகளைத் தெரியவேண்டும் அல்லவா!

ஆகவே அடுத்தவரும் பதில் கவிதைகள்/கதைகள் எழுதவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வரிகளினூடு பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி.. கிருபன் அண்ணா என்ன விளையாட்டு இது..? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பொழுதில்லை அழுவதற்கும்..
 
நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...
 
என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...
<<<<<<<<<<<<<<<<<
 
 
 
“உங்கள் தலைப்பே ‘ஆயிரம் கவிதைகளைச்சொல்லி விடுகின்றனவே!!!!!! ‘தலைப்பைப்பார்த்தபின்னரே ‘கவிதையை வாசிக்கும் ஆர்வம் பிறந்தது! ‘மிக அற்புதமாக எண்ணக்கோர்வைகளை வார்த்தைகளுக்குள் வடிகட்டி இருக்கின்றீர்கள்!
 
மிக விரும்பிய வரிகளை மேலேமீண்டும் கோடிட்டு இருக்கின்றேன்.
 
!! ‘’சபாஷ்:)சுபேஷ்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பொழுதில்லை அழுவதற்கும்..
 
நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...
 
என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...
<<<<<<<<<<<<<<<<<
 
 
 
“உங்கள் தலைப்பே ‘ஆயிரம் கவிதைகளைச்சொல்லி விடுகின்றனவே!!!!!! ‘தலைப்பைப்பார்த்தபின்னரே ‘கவிதையை வாசிக்கும் ஆர்வம் பிறந்தது! ‘மிக அற்புதமாக எண்ணக்கோர்வைகளை வார்த்தைகளுக்குள் வடிகட்டி இருக்கின்றீர்கள்!
 
மிக விரும்பிய வரிகளை மேலேமீண்டும் கோடிட்டு இருக்கின்றேன்.
 
!! ‘’சபாஷ் :)சுபேஷ்

 

கனவுகள் காய்ந்த நிலத்தில் காட்டுத்தனமாக ஓடுகிறது வாழ்க்கை..நன்றி அக்கா ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகள் காய்ந்த நிலத்தில் காட்டுத்தனமாக ஓடுகிறது வாழ்க்கை..நன்றி அக்கா ...

 

 

‘கனவுகள் காய்ந்து போனால், கவிதைக்கு அங்கே இடமேது?! ‘இதயத்தில் ஈரம் சொட்டச்சொட்ட இருப்பவர்களுக்கு ‘கனவுகளும் சரி, வாழ்க்கையும் சரி காய்ந்துபோய் விடாது!.

 

இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொண்டே ‘நாட்களை நகர்த்திக்கொண்டு போவதால் ‘நரகமே மிஞ்சும்!!!!!. ‘நம் இருப்பை விருப்பாக்கிக்கொண்டு வாழ்ந்துவிட்டால்!!!!!!!!!! ‘சொர்க்கமே எஞ்சும்!..

 

சொர்க்கமாகட்டும் வாழ்க்கை! வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.