Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2014இல் யாழ் தேவி யாழ்ப்பாணத்தில் தடம்பதிக்கும்! சல்மன் குர்தீஷ்

Featured Replies

Yurl.jpg2014ஆம் ஆண்டளவில் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணம் வரையில் பயணிக்க வைக்க முடியும் என இந்திய வெளியறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு சிறு கைத்தொழிலாளர்களுக்கு இந்தியா நிதியதவி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் இதனை நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சல்மன் குர்தீஷ்,

''பல தசாப்தகால யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யுத்த காலத்தில் அடைமுடியாத இலக்குகளை எட்ட வேண்டும். அதுவே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும். அடுத்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு யாழ் தேவி ரயிலை சேவையில் ஈடுபடுத்த முடியும் என நாம் நம்புகிறோம்'' என சல்மன் குர்தீஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா ஓமந்தையில் இருந்து கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சி வரையில் யாழ் தேவி தனது பயணத்தை விஸ்தரித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

1902 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை முதன் முதலாக ஆரம்பமானது. இந்த நிலையில், 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி ரயில் முறிகண்டியில் தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து யாழ் தேவி சேவை இடைநிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்ட யாழ் தேவி மீண்டும் வவுனியா வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சி வரை தனது சேவையை விஸ்தரித்திருந்தது.

வடக்கில் ரயில் பாதையை அமைக்கும் புனரமைப்பு பணிகள் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும், ரயில் பெட்டிகளும், என்ஜின்களும் சீனாவிடமிருந்து இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது. கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்ட புதிய ரயில் சீனாவிலிருந்து பெறப்பட்டமைக்கு இந்தியா தனது மறைமுக அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

http://tamilworldtoday.com/home

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்ட புதிய ரயில் சீனாவிலிருந்து பெறப்பட்டமைக்கு இந்தியா தனது மறைமுக அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
டமிழ்வேர்ல்ட் டுடே எங்களை மறைமுகமாக உசுப்பேத்தினம் போலகிடக்கு
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஒதுங்குதல் மூலம் சிங்களம் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்த இந்திய அரசு வட மகாணத் தேர்தலை நடத்தி தனக்குரிய கைப்பாவை ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறது.. முதலீடுகள் பற்றி நேரடியாக வடக்கில் நின்று ஊளையிடுவதன்மூலம் மகிந்தவுக்கு சவால் விடப்படுகிறது.. இது தமிழர் நலனுக்காக செய்யப்படுவது அன்று..

இந்தச் சமயத்தில் மகிந்தவும், இனவெறி சொம்பு தூக்கிகளும் மௌனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.. :rolleyes: **ரை விட்டான் சிங்க(ளவ)ன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஈழ அரசியல் யாழ் தேவி விடுறதில வந்து நிற்குது. அந்தோ பரிதாபம். :lol::D


இவங்க 1987 நேர வந்து நின்றும் கூட எங்கட சனத்தைப் பற்றிப் படிக்கேல்ல என்றது கவலைக்குரியது. இவர்கள் கனவுலகத்தில் இருந்து முதலில வெளிய வரணும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

 

வடக்கில் ரயில் பாதையை அமைக்கும் புனரமைப்பு பணிகள் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும், ரயில் பெட்டிகளும், என்ஜின்களும் சீனாவிடமிருந்து இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது. கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்ட புதிய ரயில் சீனாவிலிருந்து பெறப்பட்டமைக்கு இந்தியா தனது மறைமுக அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

இந்திய சந்தையைக் கைப்பற்றிய சீனா,

இப்போது, மூலதனப் பொருள்களின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். துணிநூல் இழை, தயாரிக்கப்பட்ட துணிகளில் 50%, பருத்தி நூலிழை, துணிகளில் 75%, பட்டு நூலிழை, கச்சா பட்டில் 90%, ஆயத்த ஆடைகளில் 33%, சிந்தெடிக் நூலிழைகளில் 66%, ரசாயன, மருத்துவப் பொருள்களில் 33%, உர உற்பத்திப் பொருள்களில் 66%, தொழிற்சாலை உதிரி பாகங்களில் 17%, கணினி மென்பொருள்களில் 33%, உருக்கில் 25%, மின்னணு சாதனங்களில் 66%, சிமென்டில் 10%, உலோகப் பொருள்களில் 33% ஆகியன இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு ஆகும்.

தினமணியில்; எஸ்.குருமூர்த்தி

 

பாற்கடலில் உள்ள மீன்களுக்கு பாலின் சுவை தெரியாது. :(  அதுபோல் இந்தியாவில் உள்ள, இந்திய வெளியறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ்!, ^_^  இந்தியாவின் நிலமையே தெரியாது பேசுவது ஒன்றும் வியப்புக்குரியதல்ல! :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.