Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொமன்வெல்த் மாநாட்டில் உரையாற்ற விக்னேஸ்வரனுக்கு அழைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM-01.jpg

கொமன்வெல்த் மாநாட்டில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்திலே, வடக்கு மாகாண முதல்வரை கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான நிகழ்வு ஒன்றில் உரையாற்ற அல்லது ஒரு உரையை சமர்ப்பிக்க அழைப்பதற்கான சாத்தியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளையும் வடக்கில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதையும் வெளிப்படுத்த முடியும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

எனினும், இதுதொடர்பான இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

 

http://www.puthinappalakai.com/view.php?20131020109281

இதைத் தான் அன்றைக்கே கேட்டேன், ம்யுட்டு சிங்கு வர கூடாது என்று அலப்பறை கொடுக்கும் உறவுகளே விக்கியார் அழைக்கப் பட்டால் அலப்பறை கொடுப்பிற்களா இல்லை வாழ்த்தி வழியனுப்புவீர்களா என்று ! இப்போயாவது சொல்லுங்களேன் ( கூட்டம் அதிகம் உள்ள பக்கம் சேர்ந்து கொள்வேன் அல்லவா :D )

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் அன்றைக்கே கேட்டேன், ம்யுட்டு சிங்கு வர கூடாது என்று அலப்பறை கொடுக்கும் உறவுகளே விக்கியார் அழைக்கப் பட்டால் அலப்பறை கொடுப்பிற்களா இல்லை வாழ்த்தி வழியனுப்புவீர்களா என்று ! இப்போயாவது சொல்லுங்களேன் ( கூட்டம் அதிகம் உள்ள பக்கம் சேர்ந்து கொள்வேன் அல்லவா :D )

 

விக்கியார்

சிங்கள   நாட்டின்  அடிமை

 

சிங்

சோனியாவின் அடிமை

 

இருவரும் தத்தமது முடிவுகளை தாங்களே  எடுக்கமுடியாது.

என்ன

விக்கியார் போனால்

பாவம் அடிமை பேசுது என்பார்கள்

சிங்

போனால் உலக ஐனநாயக நாட்டின் தலை பேசுது என்பார்கள்.

 

இது தான் இன்றைய  உலகம் :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அழைத்தால் போகவேண்டும். போய் தமிழரின் கோரிக்கை பற்றிய நியாயத்தையும், சமஸ்டி நாம் கேட்ப்பதர்க்கான காரணத்தையும் தெளிவாக சொல்லவேண்டும். சமஸ்டிக்கே மக்கள் ஆணை என்றும் அதை கேட்பதில் தவறில்லை என்பதையும், சமஸ்டியை தர மறுக்கும் அரா தரப்பே தீவிரவாதத்தை தூண்டுகிறார்கள், என்பதையும் சொல்லணும்.

விக்கியார்

சிங்கள நாட்டின் அடிமை

சிங்

சோனியாவின் அடிமை

இருவரும் தத்தமது முடிவுகளை தாங்களே எடுக்கமுடியாது.

என்ன

விக்கியார் போனால்

பாவம் அடிமை பேசுது என்பார்கள்

சிங்

போனால் உலக ஐனநாயக நாட்டின் தலை பேசுது என்பார்கள்.

இது தான் இன்றைய உலகம் :(

ஜனநாயக நாட்டின் தலை அல்ல தலைப்பாகை. மாநில மக்களின் பிரச்சனையை கருத்திற்க் கொண்டு வெளியுறவுக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் போன்ற இந்திய வம்சாவழியினரின் நலன்கள் காக்கப் பட வேண்டும் என பிரச்சாரங்களில் குறி வைத்து அடிக்கிறார் மோடி, இல்ங்கைக்கு போவதில்லை என அனைவரது பாரட்டையும் பெற்றுவிட்டார் கனடா பிரதமர். பாவம் இந்த சிங்கு என்ன செய்ய போகிறாறோ வாயில்லா பூச்சி வேறு ......

விக்கி அழைக்கபட்டால் திறந்த அறிக்கை அல்லது உரை ஒன்று கொடுக்க அழைக்கப்படமாட்டார். ஒரு தனிப் பிரச்சனையில்( உ+ம் விக்கி தான் தெரியப்ப்ட்டது உண்மையான ஜனநாயக முறையால் தெரியப்பட்டார் என்று கருதுகின்றாரா?), தனி துறையில் அவரின் கருத்தை எழுதித் தரும் படி கேட்பார்களாக்கும். 

 

எப்படி போனாலும் விக்கி சுதந்திர புருஷனாக உரையாற்ற முடியாது. இதை அடிமைத் தளை அணிந்து செல்லும் கக்கீம் மீது நம்பிக்கைவைத்து ஜெனிவாவில் சுதந்திரமாக உரையாற்ற  விடவில்லை. அப்புறம் விக்கியால் முடியவே முடியாது. (கக்கீமுடன் எங்குமே ஒரு அரச காவலாளியும் செல்வதுண்டு.)

 

இதை கொழும்பு பத்திரிகைகள் போடுகின்றன. அவையேதான் K.P, தயா மாஸ்டர் போன்ற்வர்களின் தேர்தல் தெரிவு பற்றியும் செய்த்திகள் போட்டன.

 

இலங்கை தான் ஜனநாயமாக நடந்து கொள்வதாக காட்ட இப்படி ஒரு அறிக்கைய்யை ஒரு மந்திர்க் கேடி வெளி விடும். இதை தேசிய சுதந்திர முன்னணி நாநா இனி எதிர்த்து அறிக்கை விடுவார். பின்னர் ஊடக கேள்விகளுக்கு றம்புக்க தோப்பு கறணம் போடுவார்.

 

இப்பதான் காதலே ஆரம்பமாகியிருக்கிறது.. நீங்கள் பிள்ளைக்கு பெயர் என்ன என்றால் என்ன சொல்ல முடியும்?

அழைத்தால் போகவேண்டும். போய் தமிழரின் கோரிக்கை பற்றிய நியாயத்தையும், சமஸ்டி நாம் கேட்ப்பதர்க்கான காரணத்தையும் தெளிவாக சொல்லவேண்டும். சமஸ்டிக்கே மக்கள் ஆணை என்றும் அதை கேட்பதில் தவறில்லை என்பதையும், சமஸ்டியை தர மறுக்கும் அரா தரப்பே தீவிரவாதத்தை தூண்டுகிறார்கள், என்பதையும் சொல்லணும்.

காமன்வெல்த் அங்கத்துவ நாடுகள் இலங்கயின் மனித உரிமை மீறல்கள், மக்கள் அடக்குமுறை, போர்க்குற்றங்களை மையமாக கொண்டு பொதுநலவாய அமர்வுகள் இலங்ியில் நடப்பதை எதிர்க்கின்றனர், புறக்கணிக்க போவதாக கூறுகின்றனர். மனித உரிமை மீறலையும் பேசப் போவதில்லை மக்கள் அவலங்களையும் பேசப் போவதில்லை. ஆகக் குறைந்தது சுயதீனமான விசாரனைகளையும் கோரப் போவதில்லை, இன அழிப்பின் சூத்திரதாரிகளையும் கூண்டிலே எற்ற ஒன்றும் செய்யப் போவதில்லை வாக்குறுதி வழங்கியபடி. சமஸ்டி சமஸ்டி என்று சமஸ்டியில் குதிரை ஓட்ட வேண்டி உள்ளது இல்லையா ? இங்கே தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது, மாகாண முறைமை ஏற்ப்படுத்தப் பட்டுள்ளது, ஜனநாயகம் மீள் கட்டமைக்கப் பெற்றுள்ளது, தமிழர்களின் பிரதிநிதியாகிய வடமாகாண முதல்வர் இங்கே உள்ளார் என்று சர்வதேசதின் முன் கூற அங்கே மகிந்தாவிற்க்கு விக்கியார் தேவை இல்லையா ?

விக்கி அழைக்கபட்டால் திறந்த அறிக்கை அல்லது உரை ஒன்று கொடுக்க அழைக்கப்படமாட்டார். ஒரு தனிப் பிரச்சனையில்( உ+ம் விக்கி தான் தெரியப்ப்ட்டது உண்மையான ஜனநாயக முறையால் தெரியப்பட்டார் என்று கருதுகின்றாரா?), தனி துறையில் அவரின் கருத்தை எழுதித் தரும் படி கேட்பார்களாக்கும்.

எப்படி போனாலும் விக்கி சுதந்திர புருஷனாக உரையாற்ற முடியாது. இதை அடிமைத் தளை அணிந்து செல்லும் கக்கீம் மீது நம்பிக்கைவைத்து ஜெனிவாவில் சுதந்திரமாக உரையாற்ற விடவில்லை. அப்புறம் விக்கியால் முடியவே முடியாது. (கக்கீமுடன் எங்குமே ஒரு அரச காவலாளியும் செல்வதுண்டு.)

இதை கொழும்பு பத்திரிகைகள் போடுகின்றன. அவையேதான் K.P, தயா மாஸ்டர் போன்ற்வர்களின் தேர்தல் தெரிவு பற்றியும் செய்த்திகள் போட்டன.

இலங்கை தான் ஜனநாயமாக நடந்து கொள்வதாக காட்ட இப்படி ஒரு அறிக்கைய்யை ஒரு மந்திர்க் கேடி வெளி விடும். இதை தேசிய சுதந்திர முன்னணி நாநா இனி எதிர்த்து அறிக்கை விடுவார். பின்னர் ஊடக கேள்விகளுக்கு றம்புக்க தோப்பு கறணம் போடுவார்.

இப்பதான் காதலே ஆரம்பமாகியிருக்கிறது.. நீங்கள் பிள்ளைக்கு பெயர் என்ன என்றால் என்ன சொல்ல முடியும்?

அப்படி கேட்கவில்லை அண்ணா, கூப்பிடுவது போன்று கூப்பிட்டு பின்பு எதிர்ப்பது சூழ்ச்சியாக இருப்பினும் இந்தியா போன்று மவுனம் சாதிக்காமல் தங்கள் நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு கூட்டமைப்பிற்கும் முதல்வருக்கும் உண்டல்லவா...
  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் அங்கத்துவ நாடுகள் இலங்கயின் மனித உரிமை மீறல்கள், மக்கள் அடக்குமுறை, போர்க்குற்றங்களை மையமாக கொண்டு பொதுநலவாய அமர்வுகள் இலங்ியில் நடப்பதை எதிர்க்கின்றனர், புறக்கணிக்க போவதாக கூறுகின்றனர். மனித உரிமை மீறலையும் பேசப் போவதில்லை மக்கள் அவலங்களையும் பேசப் போவதில்லை. ஆகக் குறைந்தது சுயதீனமான விசாரனைகளையும் கோரப் போவதில்லை, இன அழிப்பின் சூத்திரதாரிகளையும் கூண்டிலே எற்ற ஒன்றும் செய்யப் போவதில்லை வாக்குறுதி வழங்கியபடி. சமஸ்டி சமஸ்டி என்று சமஸ்டியில் குதிரை ஓட்ட வேண்டி உள்ளது இல்லையா ? இங்கே தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது, மாகாண முறைமை ஏற்ப்படுத்தப் பட்டுள்ளது, ஜனநாயகம் மீள் கட்டமைக்கப் பெற்றுள்ளது, தமிழர்களின் பிரதிநிதியாகிய வடமாகாண முதல்வர் இங்கே உள்ளார் என்று சர்வதேசதின் முன் கூற அங்கே மகிந்தாவிற்க்கு விக்கியார் தேவை இல்லையா ?

இதுதான் நாம் எப்போதும் விடும் தவறு. அவர்கள் என்ன நோக்கத்துக்காக கூப்பிட்டாலும், நாம்போய் நம் நோக்கத்தை, நம் நிலையை சொல்லி வந்தால், நம் பக்க நியாயமும் தெரியவரும், அதே நேரத்தில், தேர்தலே கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது, நாம் இவ்வளவு இறங்கி வந்தும் அரசு ஒரு உருப்படியான அதிகாரப் பகிர்வினையும் இன்னும் செய்யவில்லை என்ற உண்மையும் சொல்லப்படும். இல்லை என்றால், அரசு எப்படியோ தேர்தலை காட்டி நல்ல பிள்ளை வேடம் போடத்தான் போகிறது.

அரசுக்கு விக்கியர் என்ன விதமாய் தேவைப்பட்டாலும், விக்கியர் என்ன சொல்லுவார் என்பதை பொருத்தே அதன் பலன் அமையும். அரசுக்கு தெரியும் இது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் கதை என்று. ஆகவே விக்கியர் அழைக்கப்படார்.

போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் இருந்து யாரும் கோர முடியாது. விக்கியர் அதைகோரப்போவதில்லை. விக்கியர் கடந்த காலத்தின் விசாரணைகளை விட்டு, எதிர் காலத்தில் தரவேண்டியதையே கோரலாம். சம்ஸ்டி குதிரையில் தான் வாக்காளர்கள் பெருவாரியாக பணத்தை கட்டியுள்ளனர் எனவே அந்த குதிரையைதான் விக்கியர் ஓட்ட முடியும், வேண்டும்.

மல்லை - ஹக்கீமுக்கு இருக்கும் தழைகள் விக்கியருக்கு/கூட்டமைபுக்கு இல்லை. எனவே ஹக்கீமை போல் இவர்கள் அடிமைசேவகம் செய்ய வேண்டியதில்லை. அடிமைசேவகம் வேறு, நெகிழ்வுத்தன்மை வேறு. போர்க்குற்ற விசாரணை பர்ரி கூட்டமைப்பு பேசாமல் இருப்பதற்க்கு விலையாக ஒருசமஸ்டி திட்டத்தை நாம் பெற முடிந்தால் அது நல்லதொரு பேரமாகவே அமையும். போரில் இறந்தோரின் சாவுக்கும் ஒரு அர்த்தம் வரும்.

இதுதான் நாம் எப்போதும் விடும் தவறு. அவர்கள் என்ன நோக்கத்துக்காக கூப்பிட்டாலும், நாம்போய் நம் நோக்கத்தை, நம் நிலையை சொல்லி வந்தால், நம் பக்க நியாயமும் தெரியவரும், அதே நேரத்தில், தேர்தலே கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது, நாம் இவ்வளவு இறங்கி வந்தும் அரசு ஒரு உருப்படியான அதிகாரப் பகிர்வினையும் இன்னும் செய்யவில்லை என்ற உண்மையும் சொல்லப்படும். இல்லை என்றால், அரசு எப்படியோ தேர்தலை காட்டி நல்ல பிள்ளை வேடம் போடத்தான் போகிறது.

அரசுக்கு விக்கியர் என்ன விதமாய் தேவைப்பட்டாலும், விக்கியர் என்ன சொல்லுவார் என்பதை பொருத்தே அதன் பலன் அமையும். அரசுக்கு தெரியும் இது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் கதை என்று. ஆகவே விக்கியர் அழைக்கப்படார்.

போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் இருந்து யாரும் கோர முடியாது. விக்கியர் அதைகோரப்போவதில்லை. விக்கியர் கடந்த காலத்தின் விசாரணைகளை விட்டு, எதிர் காலத்தில் தரவேண்டியதையே கோரலாம். சம்ஸ்டி குதிரையில் தான் வாக்காளர்கள் பெருவாரியாக பணத்தை கட்டியுள்ளனர் எனவே அந்த குதிரையைதான் விக்கியர் ஓட்ட முடியும், வேண்டும்.

மல்லை - ஹக்கீமுக்கு இருக்கும் தழைகள் விக்கியருக்கு/கூட்டமைபுக்கு இல்லை. எனவே ஹக்கீமை போல் இவர்கள் அடிமைசேவகம் செய்ய வேண்டியதில்லை. அடிமைசேவகம் வேறு, நெகிழ்வுத்தன்மை வேறு. போர்க்குற்ற விசாரணை பர்ரி கூட்டமைப்பு பேசாமல் இருப்பதற்க்கு விலையாக ஒருசமஸ்டி திட்டத்தை நாம் பெற முடிந்தால் அது நல்லதொரு பேரமாகவே அமையும். போரில் இறந்தோரின் சாவுக்கும் ஒரு அர்த்தம் வரும்.

கூட்டமைப்பும் இரட்டை வேடம் போடுவதை ஒப்புக்கொள்கிறீர், விக்கியாரும் விதிவிலக்கிலை என்பதை எற்று கொண்டுவிட்டீர். சரி நல்ல பிள்ளையாக வேடம் போடுபவரை தோலுரித்துக் காட்ட வேண்டியது யாருடைய கடமை ? இறந்த காலத்தை விடுத்து எதிர் காலத்தை பெற வேண்டியதை கோரலமா ? வேர்களை விடுத்து பூக்களை மலர செய்யுங்கள் என்பதை போன்று உள்ளது. எப்படி என்று தான் விளங்கவில்லை... பேரம் என்பது இருதரப்பினருக்கிடையே ஆன ஒப்பந்தம் தானே. கால மாற்றத்தில் காலாவதியாக கூடிய அத்தகைய பேரம் எப்படி நிரந்தர தீர்வாகலாம். இழந்த உயிர்களை அர்த்தமுள்ள ஈடு செய்யக்கூடிய பேரம் என்னவாக இருக்கும்!!! ? நீங்களே அறிய தாருங்கள்....

விக்கியர் அங்கோ போனாலும் போகாவிட்டாலும் சொல்ல வேண்டியதை சொல்லவதற்கு இடம் ஒரு பொருட்டு இல்ல.

 

விக்கி தலைமையில் இருக்கும் மாகானசபைக்கு இருக்கும் அதிகாரத்துக்கு மேலாக படம் காட்டப்படுகிறது.

 

 

இது சிங்கள அரசின் நாடகத்தின் ஒருபகுதி, வடக்கு மாகாண தேர்தல் வைத்ததில் உள்ள நன்மைகளை அறுவடை செய்யத்துக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு போடுவது இரட்டை வேடம் என்றும் எடுக்கலாம் அல்லது எந்தவித பாதுகாப்பும் இன்றி கையறு நிலையில், நட்டாற்றில் 2009இல் விடப்பட்ட ஒரு இனக்குழுவின் பிரதிநிதிகள் எடுக்கும் சமயோசிதம் சேர் நெகிழ்வுப்போக்கு என்றும் எடுக்கலாம். இதில் எது சரி என்பதை காலம்தான் சொல்லும்.

நமக்குத்தேவை சமஸ்டி. யாரையும் பழிவாங்கும் எண்ணமோ அல்லது அவர்களின் செயல்களுக்கு தண்டனை வாங்கிகொடுக்கும் எண்ணமோ அல்லது அவர்களை தோலுரிக்கும் எண்ணமோ நமக்கு இரண்டாம் பட்சம். இருப்பவர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் ஒரு நிரந்தர சம்ஸ்டித்தீர்வு, சர்வதேச மேற்ப்பார்வையில் அமையுமாயின், அதற்க்காக என்ன விலையையும், கொடுப்பதில் தப்பில்லை.

கடந்த காலத்தை விடச்சொல்லி நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்காலத்தின் வளம் கருதி கடந்த காலத்தின் சில விடயங்களை பேசாமலிருப்பதில் தப்பில்லை. அப்படிச்செய்வதால் நமக்கு நாம் வேண்டும் சமஸ்டித்தீர்வு கிடைக்குமாயின்.

என்ன செய்தாலும்போன உயிர்கள் வரப்போவதில்லை. அவர்களின் பெயரால் பழிவாங்கும் படலத்தை நடத்துவதை விட, அவர்களின் இழப்புக்கான மாற்றீடாக அல்லது அதை பற்றி நாம் பேசாமல் இருப்பதற்க்கான விலையாக, ஒரு நிரந்தர சமஸ்டித்தீர்வை கோருவது, சாணக்கியமான நகர்வே.

இந்தப்பேரம் காலாவதியாகாமல் ஒரு சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை இந்திய அனுசரணையில் ஏற்படுத்த பட வேண்டும்.

தேர்தல் இந்தியா விட்ட திருகுதாளம். இதில் தமிழருக்கு நன்மை இல்லை. இந்தியா தமிழ் நாட்டை தேர்தலுக்கு கூலாக்க பாவிக்கலாம். இதையும் இந்தியாவின் அரசுடனான பக்க சார்பு என்று எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அரசை நோகவிடாமல் தமிழகத்தை கூலாக்கும் முயற்சி.

 

மேற்குநாடுகள் திரிசங்கு நிலையில் நிற்கின்றன. வெளிப்படையாக போர்க்குற்றம், இனவழிப்பு என்று கூற ஆயத்தம் இல்லை. பொறுப்பு கூறல் என்கின்றன. அது நடத்தால் சிங்களத்துக்கு தாக்கம் இருக்காது. மகிந்தா குடும்பம் கஷ்டப்படலாம். போர்க்குற்றமோ அல்லது இனவழிப்போ என்றார்களாயின் தமிழர்கள் நன்மை அடையச் சந்தர்ப்பம் இருக்கு. சிங்களவர்கள் இழக்கலாம். மேற்குநாடுகளின் சிங்களம் இழக்கக்கூடாது, ஆனால் பொறுப்பு கூறலால் தமிழருக்கு நீதி மட்டும் கிடைத்தால் போதும் என்ற திரிசங்கு நிலை இன்னொரு முள்ளிவாய்க்காலை இன்னொரு நாள் கொண்டுவரலாம்.

 

மேலும் ஐ.நா.வில் மேற்கு நாடுகளும், பொது நலவாயத்தில் இந்தியாவும் தமது கைகளை மேலாக வைத்து பயன் படுத்த முயல்கிறார்கள். எனவே பொது நலவாத்தில் தமிழருக்கு வரும் தோல்வி ஐ.நா வில் தமிழருக்காக செயல்ப்படவும் இடம் உண்டு. பொது நலவாயத்தோல்வி, ஐ,நாவில் திரிசங்கு நிலையில் இருக்கும் காய்க்கு புகை போட்டது போல அது பழமாவை ஊக்குவிக்கும். பொது நலவாயத்தில் இந்தியாவுக்கு வரும் வெற்றி ஐ.நாவில் இந்தியா இந்த வெற்றியை காட்டி திரிசங்கு நிலையில் இருக்கும் காய் பழுப்பதை இன்னமும் நாள் எடுக்க வைக்கலாம். 

 

நல்ல மனத்தோடு சென்றும் பொது நலவாயத்தில் விக்கியால் ஒன்றும் செய்ய முடியாவிட்டால் எல்லாம் நன்மைக்குத்தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். :(

கூட்டமைப்பு போடுவது இரட்டை வேடம் என்றும் எடுக்கலாம் அல்லது எந்தவித பாதுகாப்பும் இன்றி கையறு நிலையில், நட்டாற்றில் 2009இல் விடப்பட்ட ஒரு இனக்குழுவின் பிரதிநிதிகள் எடுக்கும் சமயோசிதம் சேர் நெகிழ்வுப்போக்கு என்றும் எடுக்கலாம். இதில் எது சரி என்பதை காலம்தான் சொல்லும்.

நமக்குத்தேவை சமஸ்டி. யாரையும் பழிவாங்கும் எண்ணமோ அல்லது அவர்களின் செயல்களுக்கு தண்டனை வாங்கிகொடுக்கும் எண்ணமோ அல்லது அவர்களை தோலுரிக்கும் எண்ணமோ நமக்கு இரண்டாம் பட்சம். இருப்பவர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் ஒரு நிரந்தர சம்ஸ்டித்தீர்வு, சர்வதேச மேற்ப்பார்வையில் அமையுமாயின், அதற்க்காக என்ன விலையையும், கொடுப்பதில் தப்பில்லை.

கடந்த காலத்தை விடச்சொல்லி நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்காலத்தின் வளம் கருதி கடந்த காலத்தின் சில விடயங்களை பேசாமலிருப்பதில் தப்பில்லை. அப்படிச்செய்வதால் நமக்கு நாம் வேண்டும் சமஸ்டித்தீர்வு கிடைக்குமாயின்.

என்ன செய்தாலும்போன உயிர்கள் வரப்போவதில்லை. அவர்களின் பெயரால் பழிவாங்கும் படலத்தை நடத்துவதை விட, அவர்களின் இழப்புக்கான மாற்றீடாக அல்லது அதை பற்றி நாம் பேசாமல் இருப்பதற்க்கான விலையாக, ஒரு நிரந்தர சமஸ்டித்தீர்வை கோருவது, சாணக்கியமான நகர்வே.

இந்தப்பேரம் காலாவதியாகாமல் ஒரு சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை இந்திய அனுசரணையில் ஏற்படுத்த பட வேண்டும்.

ஆகா.

 

அப்படி இல்லை, நடந்த கொடுமைக்கும் அநீதிக்கும் நீதி செய்யப்படவே வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், இது மீண்டுமொருமுறை இப்படி நடக்காமல் இருக்க நிச்சயம் உதவும்.

 

இழந்த இழப்புக்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். எப்பிடி அடிச்சாலும் தமிழ் தாங்குவான் இரு சிங்களவன் இனி சிந்திக்க கூடாது. நாங்கள் இதை கைவிடவேண்டும் என்றுதான் சிங்கள கடும்போக்கு கட்சிகளும் இடைக்கிடை வெருட்டல் அறிக்கையும் விடிகிறார்கள்.

 

நீக்கள் சொவதைப்போல கூட்டமைப்பால் இதை அதிகமாக எங்கிருந்து அழுத்தக்க முடியாது இருந்தாலும் ஒரு பொருத்தமான தீர்வோடு இதுவும் நடந்தே ஆகவேண்டும்.

 

புலத்தில் இருந்து நிலத்தில் நடக்கும் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்காமல் பொறுப்புக்கூறும் விடயத்தில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.