Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது. (கடற்புறா என்ற பெயரில் என்று நினைக்கிறோம்.)
  • 1990 களில் தாக்குதல் அணியாக (கடற்புலிகளாக) வடிவம் பெற்றது. (சூசை இதற்கு தலைமை தாங்கினார் என்று நினைக்கிறோம்.)

கடற்புலிகள் பற்றிய வரலாறு>>>> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

இந்த வரலாற்றியல் நிகழ்வை.. உறுதிசெய்யக் கூடிய வேறு ஆதாரங்கள் அல்லது சாட்சியங்களாக யாழ் உறவுகள் இருப்பின் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 

 

 

“கடற்புலிகள்”

“தமிழீழக் கடல்”

தமிழீழத்தைப் பொறுத்தளவில், இது மிக மிகப் பிரதானமானது.

எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது. தமிழீழ நிலப்பகுதியை எங்கள் கடல் மூன்று பக்கங்களில் அரவணைத்தபடி உள்ளது.

பலர் நினைப்பதைப்போல் எமது பாரம்பரிய வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழ தாயகம் அல்ல. பெருமையும் பழமையும் செழுமையும் கொண்ட இந்தக் கடலும் நிலமும் இணைந்ததுதான் எமது தமிழீழதாயகம் ஆகும்.

 

“இது எங்கள் கடல்”

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எமது முன்னோர்களின் சமுக, பொருளாதார வாழ்வோடு இது பின்னிப் பிணைந்து நிற்கின்றது.

எமது முன்னோர்களின் கட்டுமரங்களும் வாணிபக் கப்பல்களும் போர்ப்படகுகளும் இக்கடலன்னையின் மடியில்தான் தவழ்ந்து திரிந்தன.

தமிழீழக்கடல் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வெளி உலக வர்த்தகத் தொடர்புகளுக்காகவும் முக்கியம் பெறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக தமிழீழத்தின் பாதுகாப்புக்கு இக்கடல் மிக மிகப் பிரதானமானது. இக்கடல் எமது கட்டுப்பாட்டில் உள்ளவரை மட்டும்தான் அதனால் வரும் பொருளாதார நன்மைகளையும் அரசியல் நன்மைகளையும் எமது மக்கள் அனுபவிக்கமுடியும். ஆகவே எமதுகடல் எமது தேசத்தின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.

 

தமிழீழம் தரைத்தொடரில் தனது எல்லையாக சிறீலங்காவை மட்டுமே கொண்டிருக்கின்றது. ஏனைய திசைகளில் கடலிலேயே எமது எல்லைகள் இருக்கின்றன. எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

 இச் சூழ்நிலையிலேயே 1984 ஆம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் படைப் பிரிவுக்கு அதன் வரலாற்றுரீதியான பிறப்பைக் கொடுத்து, ஆரம்பத்தில் அதற்கு “கடற்புலிகள் எனப் பெயரும் சூட்டினார்.

 

ஆரம்பத்தில் கடற்புலி அணியினருக்கு கடல் சம்பந்தமான அறிவு ஊட்டப்பட்டதுடன் கடற்சண்டைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. ஆனாலும் கடற்புலி அணியினர் எதிரியிடம் வலிந்துசென்று கடற்சண்டைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தார்கள்.

 

1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து 6 வருடங்களாகப் பெரிய அளவிலான கடற் சண்டைகள் எதிலுமே ஈடுபடாதிருந்த கடற்புலி அணியினர், 1990ஆம் ஆண்டு மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் போர் ஆரம்பமாகிய போது கடற் சண்டைகளில் ஈடுபடத்தொடங்கினர். இக் கடற்போரில் கரும்புலித் தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு கடற்போர் ஒரு புதிய பரிமாணத்திற்குள் சென்றது.

 

இந்த வகையில் சிறீலங்காக் கடற்படை மீதான தனது முதலாவது பாரிய தாக்குதலை 10.07.1990 அன்று வல்லைக் கடலில் கடற்கரும்புலிகள் மேற்கொண்டனர். விடிமருந்து நிரப்பிய அடகொன்றுடன் சென்ற கடற்கரும்புலிகளான “மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் சிறீலங்கா கடற்படையின் ஒரு போர்க் கப்பலை சேதாமாக்கி இந்த வீர சாதனையைப் படைத்தார்கள்.

 

கடலில் இதேபோல் பல வீர சாதனைகள் தொடர்ந்தன

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

கரும்புலி கப்டன் சிதம்பரம், மற்றும்  கரும்புலி கப்டன் ஜெயந்தன்  ஆகியோர் வீரகாவியமாகிய தாக்குதல்,

 எங்கு எப்பொழுது நடைபெற்றது?

186,1995ம்  ஆண்டு

நந்தன் ஆண்டு சரி ஆனால் எனக்கு சுமார் 141 அளவில் தான் பொது மக்கள் இறந்ததாக ஞாபகம்
 
யாராவது சரியாகத் தெரிந்தால் உதவி செய்யவும்
 
நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

கரும்புலி கப்டன் சிதம்பரம், மற்றும்  கரும்புலி கப்டன் ஜெயந்தன்  ஆகியோர் வீரகாவியமாகிய தாக்குதல்,

 எங்கு எப்பொழுது நடைபெற்றது?

அபிதா என்னும் கடற்படைக் கப்பல் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வைத்து நிர்மூலமாக்கப்பட்ட தாக்குதல்.
 
04.05.1991

முதன் முதலில் தமிழீழ வைப்பகம் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் தமிழீழ வைப்பகம் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆண்டு எது?

1994

http://en.wikipedia.org/wiki/Bank_of_Tamil_Eelam

கரும்புலி மேஜர் நகுலன் நடிச்ச திரைப்படம் எது ?

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சில் இறந்தோர் தொகை எவ்வளவு? குண்டுவீச்சு நடைபெற்ற ஆண்டு யாது?

 

125 civilians, 

 

http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மேஜர் நகுலன் நடிச்ச திரைப்படம் எது ?

 

கரும்புலி மேஜர் நகுலன் நடித்த "உயிர்ப்பூ" திரைப்படப் பாத்திரம் போலவே கரும்புலியாகி புல்மோட்டையில் எதிரியின் இஸ்ரேலிய தயாரிப்பு டோரா கடற்கலத்தை அழித்து கரும்புலி மாவீரரும் ஆனார். தமிழ் சினிமாக்களில் வரும் பெண்களைச் சுற்றி வளைத்து தாலி கட்டப் போராடும்.. போலிக் கீரோக்கள் போலன்றி... எடுத்து நடித்த பாத்திரமாகவே மாறி நிஜத்தில் வாழ்ந்தவர்களில் ஈழத்தமிழ் விடுதலைப் புலிப் போராளிகள் புதிய புறநானூற்றுக்குரிய வியத்தகு மனிதர்களாக வாழ்ந்தும் வழிகாட்டியும் சென்றுள்ளனர்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எத்தினையாவது வயதில் போராட்ட உந்துதுலை பெற்றார்..?! அவரைப் போராடத் தூண்டிய சிறீலங்கா சிங்கள அரசபடைகள் செய்த தமிழ் மக்கள் மீதான அட்டூழியம் என்ன..?! அது எங்கே எப்போது நிகழ்ந்திருந்தது..?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(இந்தத் தலைப்பில் அவதானித்த ஓர் விடயம்..  எம் தேசத்திற்காக உயிர் தந்து போன.. போராடிப் போன.. 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் வரலாறுகளில் இன்னும் எத்தனையோ ஆயிரம் போராளிகளின் வரலாறுகளில்.. நடந்த நடக்கின்ற விடயங்களில் பலவற்றை... எமது போராட்ட கால வரலாற்றில்..நடந்தவற்றை எல்லாம்..  நாம் தேடி அறிந்து பதில் சொல்லும் நிலையில் தான் இருக்கிறோம். இவர்களின் இந்தக் காலத்தில் நிகழ்ந்த... வரலாறுகளை வரலாற்று நிகழ்வுகளை.. ஒரு பெரும் ஆவணமாக்க வேண்டியதும் அது மக்களை இலகுவாக போய் சேர வேண்டியதும்.. எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் தலைப்பு உணர்த்தி நிற்கிறது. புயல்.. நந்தன்.. அஞ்சரன்... தயாண்ணா போன்ற உறவுகளின் பங்களிப்பு இங்கு உண்மையில் வியக்க வைக்கிறது. தொடருங்கள் உறவுகளே. பல தெரியாத அறியாத விடயங்களைக் கூட இங்கு தான் அறியவும் முடிகிறது. இவை அறியப்பட வேண்டிய விடயங்கள் என்பதையும் உணர முடிகிறது..! இவற்றை விட்டு நாம் தூர விலகிப் போகிறோமோ என்ற அச்சமும் கூட எழுந்து நிற்கிறது.)


தமிழர்களின் கடந்து போன வரலாறுகள் போல இதுவும் ஆவணங்கள் அற்ற சாட்சிகள் அற்ற வரலாறு ஆகிடுமோ என்ற அச்சமே மேலிடுகிறது.

எனக்கு பெரிதாக ஈழ வரலாறு தெரியாததால் இதில் பங்கு கொள்ளவில்லை. எனினும் பங்கு கொள்ளும் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இத்திரியின் மூலம் என்னைப்போன்றவர்கள் பல தகவல்களை அறிய முடியும்.

கரும்புலி மேஜர் நகுலன் நடித்த "உயிர்ப்பூ" திரைப்படப் பாத்திரம் போலவே கரும்புலியாகி புல்மோட்டையில் எதிரியின் இஸ்ரேலிய தயாரிப்பு டோரா கடற்கலத்தை அழித்து கரும்புலி மாவீரரும் ஆனார். தமிழ் சினிமாக்களில் வரும் பெண்களைச் சுற்றி வளைத்து தாலி கட்டப் போராடும்.. போலிக் கீரோக்கள் போலன்றி... எடுத்து நடித்த பாத்திரமாகவே மாறி நிஜத்தில் வாழ்ந்தவர்களில் ஈழத்தமிழ் விடுதலைப் புலிப் போராளிகள் புதிய புறநானூற்றுக்குரிய வியத்தகு மனிதர்களாக வாழ்ந்தும் வழிகாட்டியும் சென்றுள்ளனர்.

 

மிக சரியான பதில் நெடுக் அண்ணா வாழ்த்துக்கள் .

 

அத்துடன் நீங்க குறிப்பிட்ட விடையம் விளக்கம் மிக அவசியம் ஆனது சிலர்  நகுலனை நடிகானா பார்த்து இருப்பார்கள் உண்மையில் அவன் ஒரு கரும்புலி போராளி என்பது தெரியாமல் கூட பலருக்கு இருக்கும் உங்கள் விளக்கத்துக்கு நன்றி .

 

தமிழீழ தேசிய தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எத்தினையாவது வயதில் போராட்ட உந்துதுலை பெற்றார்..?! அவரைப் போராடத் தூண்டிய சிறீலங்கா சிங்கள அரசபடைகள் செய்த தமிழ் மக்கள் மீதான அட்டூழியம் என்ன..?! அது எங்கே எப்போது நிகழ்ந்திருந்தது..?!

பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

16 வயதில் போராட்ட உந்துதலை பெற்று இருக்க வேணும் .

1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

 

தவளை பாய்ச்சல் நடவடிக்கை எந்த இராணுவ முகாம் மீது நடத்தப்படாது ? எந்த ஆண்டு ?

தமிழீழ தேசிய தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எத்தினையாவது வயதில் போராட்ட உந்துதுலை பெற்றார்..?! அவரைப் போராடத் தூண்டிய சிறீலங்கா சிங்கள அரசபடைகள் செய்த தமிழ் மக்கள் மீதான அட்டூழியம் என்ன..?! அது எங்கே எப்போது நிகழ்ந்திருந்தது..?!

 

தனது 16 வது வயதில் ( மட்டக்களப்பில் இருந்து வடமராட்சிக்கு  குடும்பமாக வல்வெட்டி துறைக்கு மீண்டும் குடிபெயர்ந்த இருந்த காலமாக இருக்க வேண்டும்... )   தந்தையுடன் வீதியில் நடந்து செண்று கொண்டு இருந்த போது  இராணுவத்தினர் ஒருவன் காரணமே இல்லாது  சைக்கிள் ரயர் ஒட்டும் கடை வைத்து இருந்த ஒருவரை  சப்பாத்துகாலால் உதைப்பதையும்  அந்த தமிழர் மூக்கில் இருந்து இரத்தம் வளிவதையும் அவர் இவங்களை கேக்க யாரும் இல்லையோ எண்டு அலறுவதை கேட்டு துடித்து போன தலைவர்  இவங்களுக்கு நாங்கள் யார் எண்டு காட்ட வேண்டும் எண்டு  உறுதி கொண்டதாக பேட்டி ஒண்றில் சொன்னார்... 

 

மிகுதி விடயங்களை அஞ்சரன் சொல்லி இருக்கிறார்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தவளைப்பாய்ச்சல்? பூநகரி,1993

தவளை பாய்ச்சல் நடவடிக்கை  பூநகரி கூட்டு படை முகாமின் மேலான ஈரூடக தாக்குதல் நடவடிக்கை ஆகும்.. 

 

கடல் வளியாலும் தரை வளியாலும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு இருந்தாலும்  கடலிலும்  கடற்புலிகளின் ஆதிகம் இருந்த ஒரு கூட்டு படை நடவடிக்கை ஆகும்...   

 

மட்டக்களப்பு போராளிகள் பலர் முன்னர் வடக்கு வந்து இருந்தாலும்...  ஜெயந்தன் படைப்பிரிவினர்  வடக்கில்  பிடித்த முதலாவது சண்டையும் இதுவே... 

கரும்புலி மேஜர் நகுலன் நடித்த "உயிர்ப்பூ" திரைப்படப் பாத்திரம் போலவே கரும்புலியாகி புல்மோட்டையில் எதிரியின் இஸ்ரேலிய தயாரிப்பு டோரா கடற்கலத்தை அழித்து கரும்புலி மாவீரரும் ஆனார். தமிழ் சினிமாக்களில் வரும் பெண்களைச் சுற்றி வளைத்து தாலி கட்டப் போராடும்.. போலிக் கீரோக்கள் போலன்றி... எடுத்து நடித்த பாத்திரமாகவே மாறி நிஜத்தில் வாழ்ந்தவர்களில் ஈழத்தமிழ் விடுதலைப் புலிப் போராளிகள் புதிய புறநானூற்றுக்குரிய வியத்தகு மனிதர்களாக வாழ்ந்தும் வழிகாட்டியும் சென்றுள்ளனர்.

 

வடக்கில் இருக்கு கிழக்குக்கு போன அனைத்து வளங்கல்களுக்கும்  பாதுகாப்பு கொடுக்கும் வேலையே நகுலனும் கண்ணாளனும் செய்து வந்தனர்...  

 

வளமையான எல்லா கரும்புலிகள் போல இல்லை  நகுலனதும் , கண்ணாளனதும் நிலை...  இண்று போகிறோம் வெடிக்கிறோம் எண்று இல்லாமல்  நாளையா எண்று தெரியாமல் போனது காலம்...   

 

வடக்கில் இருந்து கிழக்கு போன கருணா வுக்கு பாதுக்காப்பாக  போன நகுலன்  புல் மோட்டையை  தாண்டும் போது  திருகோண மலை துறைமுக வாசலில் காத்திருத டோறாபடகணியை நிலை குலைய வைக்க  அவனுக்கு அருகில் போய் போக்கு காட்டி கருணாவின் படகை பாதுகாப்பாக  கெவளியா வெளிச்சகூட்டை தாண்ட வைக்கை டோறாமீது  மோதவைத்து வீரகாவியமானான்... 

Edited by தயா

தமிழீழ தேசிய தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எத்தினையாவது வயதில் போராட்ட உந்துதுலை பெற்றார்..?! அவரைப் போராடத் தூண்டிய சிறீலங்கா சிங்கள அரசபடைகள் செய்த தமிழ் மக்கள் மீதான அட்டூழியம் என்ன..?! அது எங்கே எப்போது நிகழ்ந்திருந்தது..?!

1958ல் நடைபெற்ற தமிழ் சிங்கள இனக்கலவரத்தின் போது பாணந்துறையில் எமது இந்து மதகுரு ஒருவர் உயிருடன்

 

தீமூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், மற்றும் ஒரு தமிழ் மழலை உயிருடன் கொதிக்கும் தாருக்குள் வீசப்பட்ட சம்பவம்

 

போன்றவை தான் ஆயுதமேந்தலுக்கு உந்துதலாக இருந்தது என எம் மேதகு தலைவரே ஒரு பத்திரிகை நிருபருக்கு

 

நேரடியாகப் பேட்டி கொடுத்தது நான் படித்திருக்கிறேன்.

மிகச் சரியான பதில் 23.05.1994

 

மீராவுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயர் தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு மாதம் திகதி யாவற்றையும் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் முதன் முதலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய பதினொரு இராணுவ நடவடிக்கைகளுக்குப்

 

பகிரங்கமாக உரிமை கோரிய ஆண்டு, மாதம், திகதி போன்றவற்றையும் தருக.

Edited by Puyal

புதிய தமிழ் புலிகள் "தமிழீழ விடுதலைப்புலிகளாக"   மாறியது  1976 ம் ஆண்டு வைகாசி மாதம் 5 ம் நாள் ...    உமாமகேஸ்வரன் தலைமை பொறுப்பிலும்  இராணுவ பிரிவுக்கு  தலைமை பொறுப்பில் தலைவர் பிரபாகரன் நியமிக்க பட்டார்... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இறுதி வினாவுக்கு பதில் தந்த அஞ்சரன், தயாண்ணா, புயல் ஆகியோருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். உங்களுக்கு இச்சிலையை பரிசளிக்கிறோம்.

 

panndara-vanniyan.jpg

 

இவர் யார் தெரியுமா..??!. முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

 

பண்டாரவன்னியனின் வன்னி இராய்ச்சிய மக்களின் வீரமிகு வரலாறு இங்கு>>>> http://www.tamil.com/2013/10/31/6010

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மேஜர் நகுலன் நடிச்ச திரைப்படம் எது ?

 

 

 உயிர்ப்பூ.

புதிய தமிழ் புலிகள் "தமிழீழ விடுதலைப்புலிகளாக"   மாறியது  1976 ம் ஆண்டு வைகாசி மாதம் 5 ம் நாள் ...    உமாமகேஸ்வரன் தலைமை பொறுப்பிலும்  இராணுவ பிரிவுக்கு  தலைமை பொறுப்பில் தலைவர் பிரபாகரன் நியமிக்க பட்டார்... 

மிகச் சரியான பதில்

தயாவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

மிகச் சரியான பதில் 23.05.1994

 

மீராவுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயர் தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு மாதம் திகதி யாவற்றையும் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் முதன் முதலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய பதினொரு இராணுவ நடவடிக்கைகளுக்குப்

 

பகிரங்கமாக உரிமை கோரிய ஆண்டு, மாதம், திகதி போன்றவற்றையும் தருக.

இதில் இரண்டாவது வினாவிற்கான விடை இதுவரை வரவில்லை

மிகச் சரியான பதில்

தயாவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

இதில் இரண்டாவது வினாவிற்கான விடை இதுவரை வரவில்லை

25.04.1978 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்  தமது 11 நடவடிக்கைகளுக்கு உரிமை கோரியிருந்தனர்.

Edited by சிறி

25.04.1978 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்  தமது 11 நடவடிக்கைகளுக்கு உரிமை கோரியிருந்தனர்.

மிகச் சரியான பதில்

சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா விமானப்படை விமானம் ஒன்றிற்கு எதிராக மேற்கொண்ட முதல் தாக்குதல் எது எங்கே எப்போது நிகழ்த்தப்பட்டது..?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.