Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சிங்களவர் குடியேற கூடாதெனில், விக்னேஸ்வரனும் கொழும்பு வர முடியாது: இராவணா பலய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
iththekanthe%20saththathissa%20therar-se

மாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் வடக்கில் முன்னர் குடியிருந்த சிங்கள மக்களை அங்கு குடியேற்ற வேண்டும். அவர்களை குடியேற்றுவதன் மூலம் இனப் பரம்பலில் மாற்றங்கள் ஏற்படாது.

  

வீடுகள், காணிகள் கொள்ளையிடப்பட்டு ஏற்கனவே அப்படியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புலிகளுக்கு ஆதரவான இந்த குழுவினர் வடக்கில் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது அரசாங்கத்துடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசாங்கம் தமது நிர்வாகத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதாக உலகத்திற்கும் மக்களுக்கும் சுட்டிக்காட்ட முயற்சித்து வருகின்றனர். அழுவதற்கு தருணம் பார்த்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கின் கண்ணை குத்தி அழ வைப்பதற்காக விக்னேஸ்வரன் அவசரமாக இந்தியாவுக்கு போகிறார். நாட்டில் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என அவரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக சத்தாதிஸ்ஸ தேரர் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96009&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவு

 

முதல் தெற்கில் இருக்கும் தமிழர் பூரா வடக்கு வந்தாலே காணும் சிங்களவன் குடியேற இடம் இருக்காது என்று நினைக்கிறன் . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் சைவ கோயில்களை இடிக்கலாம் எனில் பன்சாலையையும் இடிக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

புத்த தர்மத்தைப் போதிப்பதிலிருந்து தேரர்களைத் தூக்கிப்போட்டினமோ....? :o   இப்போ யார் போதிக்கிறார்கள்....? :icon_mrgreen: 

 

கொழும்பில் காணிகளை சிங்களவர்களிடம் இருந்து பிடுங்கி தமிழர்களுக்கு இலவசமாக கொடுக்கும் அரசின் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கிலுள்ள..... அத்தனை இராணுவத்தையும், புத்த விகரைகளையும் மீளப் பெற்றால்.
இராண்வ பலய, பிக்கு சொல்வது சரியாக இருக்கும்.
எதுகும்... ஒரு சமன் பாட்டில்.. கதைப்பதை... சிங்கள அரசாங்கமோ, புத்த பிக்குகளோ விரும்புவதில்லை.
தமிழர்களை... அடிமைமையாக, வைத்திருப்பதே... இவர்களின் நீண்ட கால நோக்கம். அது, சரி வராது.
இவர்களுக்கு... புலி, தான்... சரியான மருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் காணிகளை சிங்களவர்களிடம் இருந்து பிடுங்கி தமிழர்களுக்கு இலவசமாக கொடுக்கும் அரசின் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும்....

 

இதென்ன  புதுக்கதையாக்கிடக்கு........

புலியின்  நடவடிக்கை என்றாலும் ஒத்துக்கொள்ளலாம்

 

ஒருவேளை

மகிந்தவுக்கு .......... வைக்க இப்படியும் ஒரு வழியிருக்கோ........... :lol:  :D

(வெட்டுவிழும் என்பதால் புள்ளிகள் போட்டு சுயதடை  அமுல்படுத்தப்பட்டுள்ளது :) )

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன்: வாசு­

 
Submitted by ceditor on Tue, 10/29/2013 - 10:59
அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ் மக்­க­ளா­கட்டும் அனை­வரும் சுய­வி­ருப்­ப­தோடு எங்கும் வாழலாம். அதனை தடை­செய்ய முடி­யாது என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
 
வடக்கில் மக்கள் வாழும் இடங்­களில் இரா­ணுவ நடமாட் டத்தைத் தடை­செய்ய வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.vasudeva_nanayakkara.jpg
 
இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,
 
சிங்­கள மக்கள் தமது வர்த்­தகம் மற்றும் தொழில்கள் நிமித்­தமும், சுய­வி­ருப்­பத்­து­டனும் வடக்கில் குடி­யே­று­வதை தடுப்­பதும் எதிர்ப்புத் தெரி­விப்­பதும் ஏற்­றுக்­கொள்ள முடி யாதது.
 
முத­ல­மைச்­சரின் அந்த நிலைப்­பாட்டை எதிர்க்­கின்றேன். வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக அவ்­வா­றான ஒரு நிலை உரு­வானால் தெற்­கிலும் தமிழ் மக்கள் வந்து குடி­யேற முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புக்கள் கிளம்பும்.
 
இது மீண்டும் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும். இன­வா­தத்­திற்கு சாத­க­மாக அமைந்­து­விடும்.
எனவே, சிங்­கள மக்கள் தமது சுய­வி­ருப்பின் பேரில் வடக்கில் மட்­டு­மல்ல எங்கும் வாழ­மு­டியும். அதே­போன்று தமிழ் மக்­களும் தமது சுய­வி­ருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடை­போட எவ­ருக்கும் அதி­காரம் இல்லை.
 
 
அர­சாங்கம்
ஆனால், அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வடக்கில் தொகை தொகை­யாக சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க்கின் றேன்.
 
அதே­போன்று, தமிழ் மக்­களை சிங்­களப் பிர­தே­சங்­களில் குடி­யேற்­று­வ­தையும் எதிர்க்­கின்றேன். வடக்கில் மக்கள் குடி­யி­ருக்கும் பிர­தே­சங்­களில் இரா­ணு­வம நட­மா­டு­வதை தடை­செய்ய வேண்டும்.
 
இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளுக்­கு­ரிய இடங்­களில் இருக்க வேண்டும். அத்­தோடு, சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தினரின் தலை­யீட்டை இல்­லாது செய்ய வேண்டும். தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரி­வினர் நட­மா­டலாம். ஆனால், இரா­ணுவச் சீரு­டை­யுடன் மக்கள் மத்­தியில் நட­மா­டு­வ­தென்­பது, மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும், தாம் இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் சிக்­கி­யி­ருக்­கின்றோம் என்ற உணர்வை ஏற்­ப­டுத்தும்.
 
வடக்­கிற்கு இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை வழங்­கி­யுள்­ளது. அதனை சுவா­சிக்க மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.
 
 
பொலிஸ் அதி­காரம்
எந்­த­வொரு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே, வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும் அதே நிலைதான்.
பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வதா? இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்.
 
 
ஆளுநர்
இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுயமுயற்ச்சியில், தொழில் நிமித்தம் தம் சுய சம்பாத்தியத்தில் சிங்கள மக்கள் வடக்கில் குடியேறுவதை தமிழ் மக்களோ சீவீயோ ஒருபோதும் எதிர்க்கவில்லை.

நாம் எதிர்ப்பதெல்லாம் இன அடையாளத்தை மாற்றும். அரச அனுசரணையுடனான குடியேற்றங்களையே. வாசு இவ்வளவு காலம் அரசியல் செய்றாரார் இது கூட புரியாமலா?

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் மற்றும் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு

சிங்களத்திற்கு பயத்தை ஏற்படுத்துகின்றது.
எல்லாப்பக்கமும் புலம்பலாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் மற்றும் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு

சிங்களத்திற்கு பயத்தை ஏற்படுத்துகின்றது.

எல்லாப்பக்கமும் புலம்பலாக இருக்கின்றது.

சிங்கள தேசம் இந்தியாவை கண்டு பயப்படும் காலம்மெல்லாம் மலையேறிவிட்டது. இந்திய நிலமை இப்போ ஆப்பிலுத்த குரங்கின் நிலை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது."

 

விக்னேஷ்வரனுக்கு இரு பகுதிகளிளும் குடியேற தடை இல்லை. அவரின் மருமக்கள் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள். அவரின் வாழ்க்கை முழுவதும் சிங்கள பகுதியில் தான் வாழ்ந்தவர்......மேலும் அவருக்கு தமிழை விட சிங்களத்தில் தான் புலமை அதிகம் என்றும்.

அவர் சிங்களத்தில் தான் படித்தாரா????????????????????????

விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் மற்றும் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு

சிங்களத்திற்கு பயத்தை ஏற்படுத்துகின்றது.

எல்லாப்பக்கமும் புலம்பலாக இருக்கின்றது.

வாத்தியார் நீங்கள் பகிடி விடவில்லையே. இந்தியாவின் நிலை வடிவேலு மாதிரி. " நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்ஙகிக்குவோம்" என்பது போல்.

விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் மற்றும் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு

சிங்களத்திற்கு பயத்தை ஏற்படுத்துகின்றது.

எல்லாப்பக்கமும் புலம்பலாக இருக்கின்றது.

வாத்தியார் நீங்கள் பகிடி விடவில்லையே. இந்தியாவின் நிலை வடிவேலு மாதிரி. " நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்ஙகிக்குவோம்" என்பது போல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் 
 
நீங்களும் எல்லையை தாண்டக்கூடாது நாங்களும் தாண்டமாட்டோம் அப்படியே எல்லையை பிரித்தால் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.