Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியாவின் இறுதிக் கணங்கள்: இராஜதந்திர வட்டாரங்கள் அதிர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றன

Featured Replies

news_01-11-2013_83Isai.jpg
 

இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
 
இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை  சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை  கொண்டுவருவது தொடர்பாக ஆராய்வதாக பரிஸ்தமிழ்.கொம்மின் இராஜதந்திர தொடர்புகளுக்கான செய்தியாளர் தெரிவிக்கின்றார். 
 
சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த காணொளியை வழக்கம் போல திரிவுபடுத்தப்பட்ட வீடியோ என சிங்கள இனஅழிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆமா இவளவு நாளும் வராத அதிர்ச்சி இப்பதான் வருகுது என்று நீங்கள் செய்தி புனைவது எங்களை ஏமாற்றும் செயல். இதை விட இன்னொரு வீடியோ கொன் காலத்தில் வரும். அதுவும் அவர்களுக்கு அதிர்ச்சியை ஊட்டும் பின்னர் அவர்கள் பேசாமல் பிஸ்நெஸ் ஆஸ் யூஷுவல் (business as usual) என்ற கதை தான். இந்திய மாறாத வரை சோகங்கள் தொரட்தான் போகிறது. 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸ்தமிழ்.கொம்மின் இராஜதந்திர தொடர்புகளுக்கான செய்தியாளரின் பெயர் என்ன??  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸ்தமிழ்.கொம்மின் இராஜதந்திர தொடர்புகளுக்கான செய்தியாளரின் பெயர் என்ன??  :)  :)

 

இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான... பத்திரிகையாளர்களின் பெயரை, லேசில்... வெளியே கசிய, விடமாட்டார்கள் :D

அடுத்த கட்டத்திற்குத் தயாராகின்றன என்றால் சிறிலங்காவைக் காப்பாற்றுவதற்கு என்ன வழிகள் உண்டு என ஆராயப் போகின்றார்களாம். இது கூடப் புரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வீடியோ பார்த்த கணத்தில் இருந்து பெரும் சோகத்தில், தூக்கம் வராமல் டேவிட் கமரூன் தவித்ததாகவும், இலங்கைக்கு போகத்தான் வேண்டுமா என்று வெளியுறவு அமைச்சர் வில்லியம் கெயிக் கைக் அழைத்து கேட்டுள்ளதாகவும், அவர் போகத்தான் வேண்டும் என்று சொல்ல, ஆத்திரத்தில், அந்த வீடியோ வை போய் பாருங்கள், பார்த்தால் இப்படி போகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டீர்கள் என்று குறிப்பிட்டதாகவும் எமது இராசதந்திர செய்தியாளர், 'ஒட்டுக்கேப்பான் ஒன்டியப்பன்' தெரிவிக்கிறார்.
 
.... அட போங்கப்பா !!!!!   

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

பரிஸ்தமிழ்.கொம்மின் இராஜதந்திர தொடர்புகளுக்கான செய்தியாளரின் பெயர் என்ன??  :)  :)

 

எந்த செய்தி கவர்ச்சியான சொல்லாடலுடன் இல்லை எல்லாம் வியாபார யுத்தி ஒரு விஷயம் ஒன்பதா சொல்லப்படும் அவளவுதான் அண்ணே . :rolleyes:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன..."

 

இது முதல் கட்ட செய்தி மட்டுமே.. அடுத்தடுத்த கட்ட செய்திகள் விரைவில் ‘கிடைக்கம்’ என்கிறார்கள்... stay tune மக்களே..

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோ பார்த்த கணத்தில் இருந்து பெரும் சோகத்தில், தூக்கம் வராமல் டேவிட் கமரூன் தவித்ததாகவும், இலங்கைக்கு போகத்தான் வேண்டுமா என்று வெளியுறவு அமைச்சர் வில்லியம் கெயிக் கைக் அழைத்து கேட்டுள்ளதாகவும், அவர் போகத்தான் வேண்டும் என்று சொல்ல, ஆத்திரத்தில், அந்த வீடியோ வை போய் பாருங்கள், பார்த்தால் இப்படி போகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டீர்கள் என்று குறிப்பிட்டதாகவும் எமது இராசதந்திர செய்தியாளர், 'ஒட்டுக்கேப்பான் ஒன்டியப்பன்' தெரிவிக்கிறார்.
 
.... அட போங்கப்பா !!!!!   

 

 

ஹிஹீஹி.... அப்படியும், கேட்டிருப்பாய்ங்களோ....

முடியல... நாதமுனி. :D

நாதமுனியின்.... கருத்தைப் பார்த்தாவது, நாலு இணையச் செய்தி தளங்களுக்காவது, புத்தி வந்தால்... நல்லது. :rolleyes:

ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும்

 

 

இலக்கணத்தவறு மாதிரி நடித்து அப்பாவிகளை ஏமாற்றும் முயற்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த செய்தி கவர்ச்சியான சொல்லாடலுடன் இல்லை எல்லாம் வியாபார யுத்தி ஒரு விஷயம் ஒன்பதா சொல்லப்படும் அவளவுதான் அண்ணே . :rolleyes:

 

 

 

கவர்ச்சி மட்டும் தான் முக்கியம்.சேவை எந்த பட்சமும் இல்லை.வளர்க. தமிழர் ஊடக சேவை.  :mellow:

இலக்கணத்தவறு மாதிரி நடித்து அப்பாவிகளை ஏமாற்றும் முயற்சியா?

 

அண்ணா, நீங்கள் தான் சேர்த்து படிக்காமல் பிரித்து படிக்கிறீர்கள். :D அதிலுள்ள வசனம்,

"ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து" என்றுள்ளது.

அதாவது  இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் பின்னர் அவருக்கு இறுதிக்கணங்களில் இடம்பெற்ற கொடூரமும் நேற்றைய தினம் பின்னிரவு வெளிவந்ததை தொடர்ந்து என்று சொல்லப்பட்டுள்ளது. :D

 

இந்த வீடியோ பார்த்த கணத்தில் இருந்து பெரும் சோகத்தில், தூக்கம் வராமல் டேவிட் கமரூன் தவித்ததாகவும், இலங்கைக்கு போகத்தான் வேண்டுமா என்று வெளியுறவு அமைச்சர் வில்லியம் கெயிக் கைக் அழைத்து கேட்டுள்ளதாகவும், அவர் போகத்தான் வேண்டும் என்று சொல்ல, ஆத்திரத்தில், அந்த வீடியோ வை போய் பாருங்கள், பார்த்தால் இப்படி போகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டீர்கள் என்று குறிப்பிட்டதாகவும் எமது இராசதந்திர செய்தியாளர், 'ஒட்டுக்கேப்பான் ஒன்டியப்பன்' தெரிவிக்கிறார்.
 
.... அட போங்கப்பா !!!!!   

 

 

அதுதான் அண்ணா, உண்மையில் வெளிநாட்டவர்களுக்கு இக்காணொளி 1000 இல் ஒன்று. போர் முடிந்த நாடுகளில் இவ்வாறு நடப்பது வழமை என நினைத்து விட்டு அவர்கள் தம் அலுவலை பார்க்க போய் விடுவார்கள். நாம் தான் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து எமக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

Edited by துளசி

துள்சி:

 

துளசி நீங்கள் சொல்வது சரி என்றதை ஒத்துக்கொண்டுதான், நானே அந்த வசனத்தை மட்டும் பிரித்து அதில் பரிசுத்தமிழ் ஆடமுயலும் திருதாளத்தை பற்றி குறிப்பிட்டேன். அந்த வசனத்தை பரிசுத்தமிழ் திர்க்காவிட்டால் பரிசுத்தமிழ் எழுதும் அப்பட்டமான சோடனைக கதையாக காணப்படும் "இறுதிக்கணத்தில் இழை பிரியாவுக்கு நடந்தவை" என்பது அங்கு வரவே இடமில்லாமல் போயிருக்கும். 

 

எல்லாப்பத்திரிகைகளும் இசைப்பிரியா உயிருடந்தான் ஆமிகளால் பிடிபட்டிருந்தார் என்றதை மட்டும்தான் எழுதுகின்ற்ன. அந்த வழியில் பரிசுத்தமிழ் எழுதப் போயிருந்தால் இந்த பிழையை பரிசிசுத்தமிழ் விட்டிருக்காது. இதில் சின்ன இலக்கணத்தை திரித்து பாவிப்பது பரிசுத்தமிழ் தனக்கு தெரியாததை தெரியும் மாதிரிக்காட்ட வெளிக்கிடுவதால் மட்டுமே. ஆனால் நான் அதை விவாத்திக்க விரும்ப வில்லை என்றதால் தான் பரிசுத்தமிழ் நேர்கோட்டில் எழுதியிருக்கலாம் என்று கூறியிருந்தேன்.

 

உங்களுக்கே தெரியும் இழைப்பிரியா உயிருடன் பிடிபட்டது மட்டும்தான் சனெல் -4 மூலம் வெளிவந்தது என்பதும், இறுதிக்கணங்களில் இசைப்பிரியாவுக்கு நடந்தவை யாங்க்கும் இதுவரையில் தெரியாது என்பதும். இலக்கணத்தை திரித்துவிட்டு அந்த வீடியோவில் பல காட்சிகள் இருப்பதாக பரிசுத்தமிழ் நாடகமாடுகிறது.

 

நான் பார்க்க விரும்பாதவர்களிடம்  பார்க்க சொல்லவில்லை. நானே இதுவரையில் கொலைக்களம் ஒன்று மட்டும்தான் பார்த்தேன். மற்றவையும் அதே மாதிரி இருக்கும் என்பதால் தேவை இல்லாத வலி என்று பார்க்கவில்லை. ஆனால் இதை பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள் நீங்கள் பதிந்த படங்களில் இருக்கும் அளவு கொடூரம் அந்த வீடியோவில் காட்டப்படவில்லை என்பது. அந்த வீடியோ என்ன நடந்திருந்தால் இசைப்பிரியாவின் முடிவு நீங்கள் பதிந்த படங்களாகியிருக்கும் என்பதை எந்த குழந்தையையும் அனுமானிக்க வைக்கும் என்பது மட்டும்தான் உண்மை. பரிசுத்தமிழ் சொல்வது போல இறுதிக கணத்தில் நடந்தவை அல்ல அந்த வீடியோ. அந்த வீடியோவனது கைதுக்கு தயாரான நிலையில் நீர்த்தேக்க கரையில் மர்த்திவைக்கப்பட்டிருக்கும் வைக்கபட்டிருக்கும் இசைப்பிரியாவை ஆமி கைது செய்து செல்வது மட்டுதான். இதற்கு மேல் பரிசுத்தமிழின் உபயோகமில்லாத திரிப்புகளை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. 

 

முக்கியமானது:

இதை வைத்து மக் ரேயின் வாதம்  பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் பதிந்துவைத்திருத்துப்பது போலஇசைப்பிரியா போரில் இறக்கவில்லை என்பது.

 

இசைப்பிரியா போரில் இல்லா சூழ்நிலையில் ஆமிகள் பாதுகாப்பாக காணப்படும் இடத்தில் வைத்து ஆமிகளால் கைது செய்யபபட்டார் என்பதை நாம் மக் ரேயின் கானொளியில் பார்க்கிரோம். இதனால் அவர் ஆமிகளால் இறந்தார் என்பது  நமது துணிபு. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், அது  தனக்குபோரில் இறந்தவர்களை தெரியும் மாதிரி நடித்து செய்திருக்கும் நிரலில் பலர் உயிருடன் பிடிபட்டமையால்தான்  அந்த நிரலில் ஆமி தைரிமாக அவர்கள் போரில் இறந்தவர்கள் என்று  பொய்யாக போட்டு வைத்திருக்கிறது என்பதை இசைப்பிரியாவின் உதாரணம் சொல்கிறது. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.