Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்குச் சொல்லி அழ?: புலிகளின் தியாகத்தின் மேல் ஏறி நின்று "தேசியத் தலைவரின் வாரிசு தானே என" ? புரட்சி செய்யக் கிளம்பியிருக்கும் சீமான்.?

Featured Replies

  • தொடங்கியவர்

ஓகே அடுத்த ஆய்வு கட்டுரைக்கு போவம் :D

 

அரசியலும் வரலாறுகளும் படியுங்கள் தெரிந்து வைப்பது ஒன்றும் குற்றம் அல்ல பின்னாளில் ஒ அப்படியா என்கிற கேள்விக்கு விடையா இருக்கும் என்பது எமது எதிபார்ப்பு .

 

சீமான் எமக்கு தேவையானவரா என்பதை காலம் முடிவு எடுக்கும் நாங்கள் சண்டை பிடித்து பயன் அல்ல :lol:

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே அடுத்த ஆய்வு கட்டுரைக்கு போவம் :D

 

அரசியலும் வரலாறுகளும் படியுங்கள் தெரிந்து வைப்பது ஒன்றும் குற்றம் அல்ல பின்னாளில் ஒ அப்படியா என்கிற கேள்விக்கு விடையா இருக்கும் என்பது எமது எதிபார்ப்பு .

 

சீமான் எமக்கு தேவையானவரா என்பதை காலம் முடிவு எடுக்கும் நாங்கள் சண்டை பிடித்து பயன் அல்ல :lol:

 

சீமானை விட மலை விழுங்கிகள் ஐரோப்பா, அமெரிக்க கண்டத்தில் சொகுசாக வாழுகிறார்கள். அவர்களை வெளிக்கொணர வேண்டும். யாரும் தீங்கு செய்யாத வரை விரலை நீட்டுவது குடுகுடுப்பை சாத்திரம் போன்றது. :lol:  :lol:

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

 

 

ஒட்டுக்குழுக்கள் தமிழீழம் எடுத்து தந்தது தெரியாதோ??

  • கருத்துக்கள உறவுகள்
சீமான் வானத்தில் இருந்து வந்த தேவதை .............. அவர் தவறே செய்யமாட்டார்.
அவர் தமிழரின் கடவுள்.
அப்படி என்று யாராவது இங்கு எழுதுகிறார்களா??
 
சீமான் தவறு செய்திருந்தால்...
அதை தட்டி கேட்கவேண்டும். அதை இங்கே இணையுங்கள். அதை பற்றி பேச நிறைய இருக்கிறது என்றுதான் எழுதுகிறார்கள்.
 
இவளவு நாளும் நீங்கள் எழுதியது....
அவரும் தவறு செய்வார். அதோடு நிற்காமல் சேறு பூசும் ஒரு அநாகரிக வேலையை இரவு பகலாக திரிகள் தேடி செய்து விட்டு.
 
இங்கு பலரும் எழுதிய....
காலம் வரும்போது பார்ப்போம் என்று. இப்போது எழுதுகிறீர்கள். இதையே மற்றவர்கள் எழுதியபோது வாசித்து புரிந்திருக்கலாமே?
 
சீமான் தவறு செய்யலாம் ... துரோகம் செய்யலாம் ...
அப்போதுதான் அதை பற்றி பேசலாம்.
 
இவர் பின்னாளில் கொலை செய்வார் .... என்று இன்றே மரதண்டை கொடுப்பது.
இவர்கள் நாளை புலியாகலாம்  என்று சிங்களவன் தமிழ் இளைஞரை கொலை செய்வது 
 
உங்களுக்கும் 
காடை சிங்களவனுக்கும் வித்தியாசம் என்று எதுவும் இல்லை.

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

 

இந்த ஆள் எங்கட கட்சி போல கிடக்கு .

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கின்றார் .

 
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் உங்களின் கட்சியில் தொண்டனாக இருந்திருப்பாரோ ???


என்ன அவர் அடிமட்ட தொண்டன் என்பதால் .... வாய் பேச்சு குறைவு.
செயலில் அதிகம் கவனம் செலுத்திவிட்டார்.
 
தலைவர்கள் இப்போதும் வாய்  பேச்சில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாயை வைத்து 30 வருடம் ஓட்டியாச்சு 
இன்னுமொரு 10 வருஷம் ஓட்ட வயது வந்துடும்.
  • 4 weeks later...

இது முழுக்க முழுக்க திராவிட கட்சிகளுக்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரை. சீமானின் போராட்டங்கள் எதுவும் பெரிய அளவில் ஊடகங்களில் வருவதில்லை. அவரது போராட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் youtube.com இல் தேடவும். மக்கள் மத்தியில் போராட்டங்களை கொண்டு சேர்ப்பதற்க்காகவே காணொளிகள் எடுக்கப்படுகின்றன. கூடங்குளம் மக்களும் காணொளிகளை சமூக தளங்களில் பதிக்கின்றார்கள். 2016 இல் நாம் தமிழர் நிச்சயமாக ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருக்கும். நாம் தமிழர் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது. அடுத்த தமிழக முதல்வர் ஒரு தமிழனாக இருக்க வேண்டுமென்றால் நாம் தமிழரை ஆதரிக்கவேண்டும். நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் மீண்டும் திராவிடர்களே வெல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒருவன் தலைவன் ஆனால் எமக்கென்ன என்று நாங்கள் தமிழர் எங்குமே சும்மா இருக்கமாட்டோம். அப்படியிருக்க சீமான் தலைவனாக விட்டுவிடுவோமா!  

 

சீமானைத் தூற்றி இத்திரியும் அதன் பல பின்னூட்டங்களும் மிக்க பிரகாசமாக கொழுந்துவிட்டு எரிகிறது!. கொண்டாட்டம்தான்!!.

 

 

அதுசரி!, சீமானால் தமிழினத்துக்கு ஏற்பட்ட இழப்பையோ, பின்னடைவையோ பற்றி ஒரு பொறியைக்கூடக் காணவில்லையே ஏன்? எழுத அப்படி எதுவுமே இல்லையா??.   

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:-

--------------------------------------------------------------------------

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது.

10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது.

10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது.

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது.

09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம்.

07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம்.

08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது.

07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது.

07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது.

06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம்.

05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம்.

04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம்.

01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம்.

01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது.

29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது.

29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம்.

27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம்

25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்..

22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது.

21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது.

20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம்.

20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்..

19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு.

17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்..

16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது.

15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம்.

08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்.

# போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி.

 

இதில் காது என்று அடையாளம் இடப்பட்ட நாட்களில் எல்லாம் சீமான் கைது செய்யப்பட்டாரா????இதில் அடுத்தடுத்தும் நாட்கள் வருகின்றன. ஒவ்வொரு நாட்களும் கைது செய்துவிட்டு விடுதலை செய்தார்களா??? அல்லது அங்கேயே தொடர்ந்து வைத்துவிட்டு கைது கைது  என்று  அறிவித்தார்களா. எனக்கு ஒண்டும் வினக்கேல்ல. விளக்கமா ஆரும் சொல்ல மாட்டியளோ ??????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.