Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான்: ப.சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் இன்று (30ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது.

 

 

அதேவேளையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாது.

நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பா.ஜ.க. ஆதரவு தரவில்லை. இலங்கை தமிழர்கள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று முதல்வர் விக்னேஷ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்'' என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21829

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் அவனவனுக்கு தேர்தல் வருகிறதென தெரிந்தவுடன் என்னவெல்லாம் நா பிறழ்ந்து பேசத் தோன்றுகிறது? :o

இதே ப.சி தேர்தல் முடிந்தவுடன் என்ன பேசுகிறாரென பார்ப்போம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்
அது ஆறு அறிவு உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்!
 
இவளவு காலம் கழிச்சு உங்களுக்கு தெரிந்திருக்கிறதே ............ நீங்கள் என்ன இனம்?
இதுதான் யாருக்கும் தெரியவில்லை. மானிடமாக தெரியவில்லை 

13-ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கையின் சீர்குலைப்பு முயற்சியை முறியடிப்போம்:சிதம்பரம்
 
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகையில் உள்ள சட்டத் திருத்தத்தை சீர்குலைக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்தியா p.sidambaram.jpgமுறியடிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 
"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
 
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அதனை நிறுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதன் விளைவாக போரின் முடிவில் சுமார் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மத்திய அரசின் முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் செவி சாய்த்திருந்தால் இப்போது பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்.
 
இராஜதந்திரம் 
இலங்கைப் பிரச்னையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் சம உரிமையைப் பெற முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யவதற்காக, இந்தியாவின் முயற்சியால் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன. சிங்களத்துக்கு இணையாக தமிழுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து, மாகாண அரசுகளை ஏற்படுத்துவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது ஆகியவை இந்த சட்டத் திருத்தத்தில் முக்கியமானவை.
 
இதனை அமல்படுத்துவோம் என முன்னாள் அதிபர் ஜெயவர்த்தன முதல் இப்போதைய அதிபர் ராஜபக்ஷ வரை அனைவரும் உறுதி அளித்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ராஜபக்ஷ உறுதி அளித்தார். ஆனால், இதனை இலங்கை அரசு அமல்படுத்தவில்லை.
 
13-ஆவது சட்டத் திருத்தத்தைச் சீர்குலைக்க அந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தடுத்து சட்டத் திருத்தத்தைக் காப்பாற்ற வேண்டும்; அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு ராஜ தந்திரத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில இலங்கையின் முயற்சிகளை உறுதியாக முறியடிப்போம். இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு ஒருநாளும் கைவிடாது.
 
விசாரணை நடத்த வேண்டும்: 
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஓர் ஆணையத்தை இலங்கை அரசு அமைத்தது. ஆனால், தொடர் நடவடிக்கை இல்லை.
 
இனப்படுகொலை குறித்து உலக நாடுகள் ஒப்புக் கொள்ளும் அளவில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்காக உலக அரங்கில் குரல் கொடுப்போம். இலங்கை அரசையும் வற்புறுத்துவோம்.
 
மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

 

 

 

எது நடக்கிறதோ, 

அது நன்றாகவே நடக்கிறது. 

எது நடக்க இருக்கிறதோ, 

அதுவும் நன்றாகவே நடக்கும். 

உன்னுடையதை எதை இழந்தாய்? 

எதற்காக நீ அழுகின்றாய்? 

எதை நீ கொண்டு வந்தாய், 

அதை இழப்பதற்கு? 

எதை நீ படைத்திருந்தாய், 

அது வீணாவதற்கு? 

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, 

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. 

எதை கொடுத்தாயோ, 

அது இங்கேயே கொடுக்கப்பட்டது. 

எது இன்று உன்னுடையதோ, 

அது நாளை மற்றொருவருடையதாகிறது. 

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். 

 

=பகவத் கீதை 

காங்கரஸ் தனது கடைசி கட்ட தேர்தல் திட்டத்தை வகுத்து விட்டது.

ஏற்கனவே சொன்னது போல மோடியின் சாயலை ஒத்த நபரின் வீடியோ சில நாட்களில் வெளிவர உள்ளது .தமிழ் நாட்டை பொறுத்தவரை, தமிழினத்தின் கால்களில் விழ காங்கரஸ் தயார்நிலையில் உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சிதம்பரம் அவர்கள் சமிபத்தில் பேசியுள்ளார்.

 

மேலும் ஒரு தகவல், மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இந்தியா, இலங்கை விஷயத்தில் ஒரு "அந்தர் பல்டி" அடிக்கப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.காமன்வெல்த் மாநாட்டைஒட்டி நடந்த சர்வதேச அரசியல் மாறுதல் மற்றும் டேவிட் காமேரூனுக்கு நாம் கொடுத்த வரவேற்ப்புக்கு பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் மீண்டும் இலங்கை உறவை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பலவகையான இன்டர்நெட் ஊடுருவல்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

 

Andez Raj A Fernando

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.