Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்க அரசுடமையாக்கப்படும்! - அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
srilankaflag.gif

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  

1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

போர் காரணமாக வடக்கில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீடுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்ததுடன் பின்னர் இராணுவத்தினர் அவற்றை கைப்பற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98142&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் சார்பாக உடனடியாக ஹை கோர்ட் இல் ஒரு வழக்கு தொடருமாறு சுமந்திரன் பா உ அவர்களை கேட்டு கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் இருப்பு புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை எவ்வளவுக்கு பாதுகாத்திருக்குது என்று இப்ப விளங்கனும் எம்மவருக்கு. புலிகள் சும்மா கிடந்த ஒரு வீட்டை போராளிகளைப் பராமரிக்க எடுத்தால்... கொய்யோ முறையோ என்று கத்தினவைக்கு இப்ப விளங்கனும்..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

சர்வதேச விசாரணை வேணும் என்றே அட்ம்பிடிக்கிரான்கப்பா ..... :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சீனாவும் பாகிஸ்தானும்.. சோனியாவும் உள்ள துணிவில தான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனி வீட்டைப் பாக்க உறுதி மாத்த எண்டு "சிறி லங்கனில" ஏறி சில ஆயிரம் தமிழ்ச்சனம் ஓடும். அங்க போனாப் பிறகு கடத்திக் காசு வாங்கச் சிங்களவன் காத்திருப்பான். எந்த வழியில பாத்தாலும் சிங்களவனுக்கு எங்களால வருமானம் தான்! இதில பாண் சாப்பிட்டாப் போதுமெண்டு வேற ஒரு கூட்டம் திரியுதாம். தலை தான் சுத்துது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ..... ஐயோ ......, குளிரிலையும், பனியிலையும், தின்னாமல், குடிக்காமல் சேர்த்த காசு எல்லாத்தையும் கொண்டுபோய் ஊரில சொத்து சேர்த்து கடைசியில காகம் வடையை கொத்திக்கொண்டுபோனமாதிரி கொண்டுபோக பார்க்கிறாங்கள் படுபாவிகள். :o  

  • கருத்துக்கள உறவுகள்
நல்லா சொல்றாங்கையா, டீடெயிலு!!!
 
எங்க இருந்து தான் இவர்கள் செய்திகளை பெறுகிறார்களோ தெரியவில்லை.
 
புலிகள் தலைவரதும், புலிகள் சம்பந்தப் பட்டவர்களினதும் வீடுகள் குறித்துத் தான் கருத்துத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
 
சாதாரண மக்களது வீடுகள், வெளிநாடுகளில் வாழ்ந்தால் பறிக்க சட்டம் இலங்கையில் இல்லை. அதேவேளை தமிழர்களை இலக்கு வைத்து சட்டம் இயற்ற முடியாது. இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.
 
மத்திய கிழக்கிலும், வேறு இடங்களிலும் வாழும் சிங்களவர்களும் பாதிக்கப் படுவார்கள் ஆகையால் இந்த வகை சட்டம் வர முடியாது. 
 
எனினும் புலிகள் சம்பந்தப் பட்ட வீடுகள் என விருப்பமான வீடுகளை காட்டிப் பறிக்கலாம்.

எடுக்கணும் அப்ப தான் இங்க உள்ளவ திருந்துவீனம் தாங்களும் போகமாட்டின அங்க உள்ளதுகளுகும் எழுதி கொடுக்க மாட்டினம் ஆயிரத்து எட்டு லொள்ளு கதை சுவரை கட்டுங்கோ ...கொமட்டை கட்டுங்கோ என்று வேலை வாங்கிறது எதோ காசு அனுப்பினா சரி என்கிற கணக்கா அங்க உள்ள உறவுகளை மதிப்பது இல்லை விற்று விடுங்கோ அல்லது உறவுகளுக்கு எழுதி கொடுங்கோ உண்ணா சொத்து மண்ணா போகும் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டிலை வாழுற  ஈழத்தமிழ் அகதிகளை புலியள் எண்டுதான் சிறீலங்கா சொல்லுது..

எடுக்கணும் அப்ப தான் இங்க உள்ளவ திருந்துவீனம் தாங்களும் போகமாட்டின அங்க உள்ளதுகளுகும் எழுதி கொடுக்க மாட்டினம் ஆயிரத்து எட்டு லொள்ளு கதை சுவரை கட்டுங்கோ ...கொமட்டை கட்டுங்கோ என்று வேலை வாங்கிறது எதோ காசு அனுப்பினா சரி என்கிற கணக்கா அங்க உள்ள உறவுகளை மதிப்பது இல்லை விற்று விடுங்கோ அல்லது உறவுகளுக்கு எழுதி கொடுங்கோ உண்ணா சொத்து மண்ணா போகும் :icon_idea:

அஞ்சரன், உங்கட இந்த கருத்து சரி.

இந்த வீட்டு சொத்துக்களை திருப்பி பெற தம்மை சிறி லங்கன் என்று புகழ்பாடி திரிந்தவர்கள் தான் பாவம்.

கொழும்பில் வீடு வேண்டி போட்டு வாடகைக்கு விடுவோரும் பாவம்.

செய்தியில் தவறு இருந்தாலும் வெகுவிரைவில் ராஜபக்சே மாபியா தட்டி பறிக்கும்.

 

நல்லா சொல்றாங்கையா, டீடெயிலு!!!
 
எங்க இருந்து தான் இவர்கள் செய்திகளை பெறுகிறார்களோ தெரியவில்லை.
 
புலிகள் தலைவரதும், புலிகள் சம்பந்தப் பட்டவர்களினதும் வீடுகள் குறித்துத் தான் கருத்துத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
 
சாதாரண மக்களது வீடுகள், வெளிநாடுகளில் வாழ்ந்தால் பறிக்க சட்டம் இலங்கையில் இல்லை. அதேவேளை தமிழர்களை இலக்கு வைத்து சட்டம் இயற்ற முடியாது. இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.
 
மத்திய கிழக்கிலும், வேறு இடங்களிலும் வாழும் சிங்களவர்களும் பாதிக்கப் படுவார்கள் ஆகையால் இந்த வகை சட்டம் வர முடியாது. 
 
எனினும் புலிகள் சம்பந்தப் பட்ட வீடுகள் என விருப்பமான வீடுகளை காட்டிப் பறிக்கலாம்.

 

 

 

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமான ஆதனங்களை பறிமுதல் செய்ய முயற்சிக்கிறாங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.